செவ்வாய், 24 ஜனவரி, 2017

தியாராஜ ஸ்வாமிகள் பற்றிய சில குறிப்புகள்.

எனக்கு வயதாகிவிட்டபடியால் என் மூளை துருப்பிடித்து விட்டது. அந்த துருவை எடுக்கக் கூடிய சாதனங்கள் ஏதும் என்னிடம் கைவசம் இல்லை. அதனால் நான் பெரும்பாலும் சுயமாக சிந்திப்பதை விட்டு விட்டேன். பதிவுகள் எழுதுவதற்கு சுய சிந்தனை வேண்டுமல்லவா? அதற்கு என் மூளை ஒத்துழைப்பதில்லை.
ஆகவே மற்றவர்களுடைய கருத்துக்களை திருட வேண்டிய நிலையில் இருக்கிறேன். சிலர் பெரிய மனது பண்ணி திருடிக்கொள்ள பர்மிஷன் கொடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பரந்த விசால மனப்பாங்கு கொண்டவர்கள் இருவர்.

   1.   திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள். இவரை அறியாதவர்கள் பதிவுலகில் யாரும் இருக்கமாட்டார்கள். சமீப காலங்களில் அவர் அதிகமாகப் பதிவுகள் எழுதாவிட்டாலும் முகநூலில் அவ்வப்போது அவர் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அவைகளை ஒரு தொகுப்பாகச் சேர்த்துப் படிப்பது அலாதி இன்பம்.  
   
   2. திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்கள். வைகோவிற்கு இவரை சிஷ்யர் என்று சொல்லலாம்.

இருவரும் திருச்சி வாசிகள். காவிரித் தண்ணீரைக் குடித்து வளர்ந்தவர்கள். அதனால் காவிரித் தாயின் விசால மனப்பாங்கு இவர்களுக்கும் வந்து விட்டது. இவர்களுக்கு இடையே நடந்த ஒரு முகநூல் பரிமாற்றத்தை உங்கள் முன் வைக்கிறேன்.

தியாகி சித்தரஞ்சன் தாஸ் தன் தந்தை கடனாக விட்டுச் சென்ற தொகையை  (அந்த காலத்தில் மிகப் பெரிய தொகை அது) கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் அதை ஒரு வரமாக கருதி அடைத்தது ஒரு நிகழ்வு.

கஸபியன்கா என்ற பெயருடைய அந்த கப்பல் மாலுமியின் மகன்,கப்பல் தீப்பற்றி எரிந்த
 போது,'இங்கே இரு' என்று தந்தை சொன்னதை, தீயின் கோரப் பற்கள் அவனை முத்த மிட்ட போதும் தந்தையின் சொல் மதித்து, அசையாமல் நின்று, தீக்கு தன் இன்னுயிரை ஈந்து அழியாப்புகழ் பெற்றது மற்றொரு நிகழ்வு.

அது போல இதுவும் ஒன்று.
 முலக நாடு என்ற இருப்பிடத்தை பூர்வீகமாகக் கொண்டவர் வாழ்வில் நடந்த
நிகழ்வு இது.

திருவையாறு திருமஞ்சன வீதியில் இருந்த அந்த வீடு அவருடைய பிதாமகருக்கு தஞ்சை மராட்டிய மன்னனால் மான்யமாக்க் கொடுக்கப் பட்டது. நந்தவனத்திலிருந்து பூக்களை கொய்து,
 புண்ய நதியாம் காவிரியிலிருந்து, தீர்த்தம் எடுத்து வந்து, தன் அஹத்தில் உள்ள விக்ரஹத்துக்கு பூஜை செய்யும் அவருக்கு உபகாரமாக அவருடைய இளைய மகன் வருவான்.

அவர் பூஜை செய்யும் போது,
 கிடைத்த இடைவெளியில், புரந்த தாஸரின் கிருதிகளை  அந்த குழந்தை பாடுவான். அவர் பூஜை செய்த ஸ்ரத்தை அவனுக்கு பிதா மீதான பக்தியை  அதிகரிக்கச் செய்தது.அவனுடைய நாதானுபாஸனை...அந்த பூஜானுபவம், அவன் கண்களில் பாஷ்யமாக பெருகி,அவனை உத்தம வாக்கேயனாக்கியது.அவனுக்கு ராமன் மீது உள்ள பக்தி...அவன் கீர்த்தனங்களின் உட்பொருளாய் உள்ள அந்த ராம ஆராதனை ...எல்லாம் அந்த ராமன் சுகபோக ராஜ வாழ்வைத் துறந்து, 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை'
என்று வனமேகியதால் கூட இருக்கலாம்..ஆனால் அந்த சிறுவனுக்கு அவன் பிதா மீதுள்ள பக்தியை...ஈர்ப்பைப் பார்க்கும் போது,
 உட்பொருளாய் அவன் ராமனை துதி செய்தாலும், மறை பொருளாய் அவன் பிதா ராம பரம்மத்தை தான் துதி செய்கிறானோ என்று எனக்கு ஒரு ஐயம் உண்டு, எப்போதுமே!

இன்று
 Father's Day இல்லை.....தியாகையர் ஆராதனை இல்லை....ஶ்ரீராம நவமி இல்லை....ஏதோ எழுதத் தூண்டியது...எழுதினேன்....

எப்பவுமே காமெடியாகத் தான் இவன் எழுதுவான் என்று யாரும் நினைத்து விடக் கூடாது,
 பாருங்கள்!


Vai Gopalakrishnan தேசபந்து சித்தரஞ்சன் தாஸின் 100-வது பிறந்தநாளான 05.11.1970 அன்று நம் BHEL உள்பட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும், மத்திய அரசால் ஸ்பெஷல் விடுமுறை அளிக்கப் பட்டிருந்தது. அவரின் பிறந்த நாள்: 05.11.1870. அவர் தன் 55-வது வயதில் மறைந்த நாள்: 16.06.1925. இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குருவும் ஆவார்.
Image may contain: 1 person, closeup

Aaranyanivas R Ramamoorthy ஆஹா ...தன்யனானேன் ஸார்..
-=-=-=-=-

Vai Gopalakrishnan தியாகப்பிரும்மம் வாழ்ந்த காலம்: 1767 முதல் 1848 வரை

தியாகப்பிரும்மத்தின் தகப்பனார் பெயர் ராமப்பிரும்மம். அவர் மிகப்பிரபலமான கோதண்டராம ஸ்வாமிகளின் சிஷ்யர் ஆவார். அவரிடமிருந்துதான் ஸ்ரீ பாதுகைகளையும், சூத்ரானுக்கிரஹமும் (மாலையை வைத்துக்கொண்டு தினமும் ஒரு லக்ஷத்து எட்டாயிரம் முறை ராமநாம ஜபம் செய்தல்) பெற்றுக் கொண்டவர், ராமப்பிரும்மம்.
 

திருவாரூரில் இருந்த இவர்களின் குடும்பம் பிறகு காவிரி ஸ்நானத்திற்காகவோ என்னவோ பஞ்சநத க்ஷேத்ரமான திருவையாறு திருமஞ்சன வீதிக்கு இடம் பெயர்ந்தது.
 

அவர்களின் குலதெய்வம் ஸ்ரீ கோதண்டராமர். ஸ்ரீ ராம பக்தி அதிகம் உள்ள குடும்பம். உஞ்சவிருத்தி எடுப்பதும், பாகவதாள்களுடன் சேர்ந்து, பகவத் பஜனைகள் செய்வதும் இவர்கள் குல வழக்கம். இவர்கள் தெலுங்கு பிராமணாளில் காகர்லவாலு என்ற ஒருவிதப் பிரிவினை சேர்ந்தவர்கள்.
 

ராமப் பிரும்மத்திற்கு மொத்தம் மூன்று பிள்ளைகள்.
 

மூத்த பிள்ளையின் பெயர்: ஜப்ஜேஷன் என்பதாகும். அங்கு மட்டும் கோயிலிலுள்ள தக்ஷிணாமூர்த்தியின் பெயர் இது. (உலகில் உள்ள மற்ற அனைத்துக் கோயில்களிலும் தக்ஷிணா மூர்த்திக்கு வேறு குறிப்பிட்ட பெயர்கள் கிடையாது. சில இடங்களில் தக்ஷிணா குரு மூர்த்தி என்று மட்டுமே அழைப்பார்கள்). இவர் மந்திரித்தல், மாந்தரீகம் செய்தல், வருவோருக்கெல்லாம் வேப்பலை அடித்தல் போன்ற தொழில்கள் செய்து வந்ததாகக் கேள்வி. ஹார்மோனியப் பெட்டியை முடுக்கி விட்டு உரக்க இசையும் பாடுவாராம். ஆனால் இவருக்கு பாகவத சம்பிரதாயங்கள் ஏதும் தெரியாதாம். அந்தவழிக்கே இவர் வருவது இல்லையாம்.
 

இரண்டாவது பிள்ளை பெயர்: சுந்தரேசன். அவர் ஏதோ காரணங்களால் வீட்டை விட்டே ஓடிப்போய் விட்டதாகக் கேள்வி. அவர் பிறகு எங்கு போனார், என்ன ஆனார் என்பது யாருக்குமே தெரியாது. ராமப்பிரும்மத்திற்கு அப்போதே இந்த புத்ர சோகம் உண்டு.

மூன்றாவது கடைக்குட்டிப் பிள்ளையே சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகப் பிரும்மம் என்னும் தியாகராஜர். இவரின் பத்னிக்குப் பெயர்: கமலாம்பாள். பொதுவாக மஹாலக்ஷ்மிக்குத்தான் கமலாம்பாள் என்று பெயர் இருக்கும். ஆனால் திருவாரூர் கோயிலிலுள்ள தியாகராஜராகிய சிவனின் பத்னியான பார்வதி அம்பாளின் பெயர் கமலாம்பாள் என்பது.

ஸ்ரீ ராமப் பிரும்மம் காலமாகும் முன்பு, ஸ்ரீ தியாகராஜர் தன் தந்தையிடம் சொல்கிறார்:
 

நான் அந்தக் கோதண்டபாணியை சாக்ஷாத்தாக நேரில் பார்க்கணும் என ஆசைப்பட்டேன். தாங்கள் தான் என் குருநாதர். வேறு யாரையும் எனக்கு குருவாக ஏற்றுக்கொள்ள என் மனசுக்கு இஷ்டம் இல்லை. தங்கள் மூலம் ஸ்ரீ ராமனை நேரில் பார்த்து விடலாம் என மிகவும் ஆசையாக இருந்தேன். இப்படி திடீரென்று கிளம்பி ஸ்ரீராமனின் திருவடிகளை அடையப் போவதாகச் சொல்லுகிறீர்களே, இனி நான் என் ஆசையை யாரிடம் சொல்லி பூர்த்தி செய்து கொள்வேன்?” என தன் தந்தையாரிடம் அழுது புலம்புகிறார்.

இதைக்கேட்டு மிகவும் சந்தோஷப்பட்ட ராமப்பிரும்மம், தியாகுவை தன் அருகில் அழைத்து அவன் காதில் ராம, ராம, ராம, ராம, ராம, ராம எனச் சொல்லி, தான் அதுவரை செய்து வந்த சூத்தரத்தைக் (ஜப மாலையைக்) கொடுத்து இதுபோல 100 கோடி தடவை ராம நாம ஜபம் சொல்லிக்கொண்டே இரு. என்றைக்கு உனக்கு 100 கோடி பூர்த்தியாகிறதோ, அன்றைக்கு ஸ்ரீ ராமபிரான் பிரத்யக்ஷமாக உன் முன் தோன்றி காட்சியளிப்பார்எனச் சொல்லிக்கொண்டே தன் கண்ணை மூடி பிராணனை விடுகிறார்.
 

இவையெல்லாம் நான் சமீபத்தில் ஒரு உபன்யாசத்தில் கேட்ட தகவல்களாகும்.

-=-=-=-=-

Palaniappan Kandaswamy அருமையான தகவல்கள். தங்கள் ஞாபக சக்தியைப் பாராட்டிக் கொள்கிறேன்.
-=-=-=-=-

Aaranyanivas R Ramamoorthy ஆஹா...அருமை..vai Vai Gopalakrishnan Sir!

-=-=-=-=-

Vai Gopalakrishnan இன்னும் நகைச்சுவை கலந்து அந்த உபன்யாசகர் பல விஷயங்கள் சொன்னார். நான் சுருக்கோ சுருக்கென சுருக்கி இங்கு ஏதோ கொஞ்சம் மட்டுமே கொடுத்துள்ளேன். அதிலும் தியாகராஜரின் அண்ணாவைப் பற்றி அவர் சொன்னதெல்லாம் மிகவும் சிறப்பாகவும், சிரிப்பாகவும் இருந்தன. அதைப்பற்றி மட்டும் கொஞ்சூண்டு சொல்லி விடுகிறேன். (தொடரும்)

-=-=-=-=-

Vai Gopalakrishnan குடும்பத்தின் மூத்த பிள்ளையான ஜப்ஜேஷனை மூர்க்கன் என்று நாம் சொல்கிறோமே தவிர, கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் குடும்பப் பொறுப்பை ஏற்று நிர்வகிப்பவர்களுக்குத்தான் அந்தக் கஷ்டம் தெரியும். ஒருவன் கஷ்டப்பட்டு, ஏதோ வருபவர்களுக்கெல்லாம் வேப்பிலை அடித்து, மந்திரித்து, சம்பாதிக்கும் காசில் எப்படி பலபேர்கள் சாப்பிட முடியும்? அதுபோன்றவர்களுக்கு கோபம் வரத்தான் வரும். 

அவனுக்கு இந்த பஜனைகள், தேவையில்லாமல் தன் வீட்டில் கூடி வரும் பாகவதாளின் வருகை, அவர்கள் கோவிந்தாசொல்லிக் கூத்தடிப்பது போன்றவைகள் சுத்தமாகப் பிடிக்காது. வரும் பாகவதாளை எல்லாம் கன்னா பின்னான்னு திட்டுவான். அங்கு அவன் இருக்கும் போது வருவோருக்கெல்லாம் மிகவும் கூச்சமாக இருக்கும்.

மற்ற பாகவதாள் எல்லோரும், தியாகராஜரின் அன்புக்காகவும், பக்திக்காகவும், பாண்டித்தத்திற்காகவும் வருகிறவர்கள். எல்லோரும் பஜனை + பூஜைகள் முடிந்து, அந்த வீட்டிலேயே பிரஸாதம் சாப்பிட்டு விட்டுத்தான் போவார்கள்.
 

தன் தம்பியான தியாகராஜரை திட்டுவான் .... மொட்டுவான். நீ உஞ்சவிருத்தி எடுத்து அரிசி, பருப்பு கொண்டு வந்தால் போதுமா? நெய் எங்கிருந்து வரும்? நேற்று பகவதாளுக்கெல்லாம் ஒரு முட்டை நெய் கூடுதலாக ஊற்றச் சொன்னாயாமே. உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது. நீ வீட்டை விட்டு தனியே போய் விடுஎனக் கடுமையாகக் கத்துவானாம்.
 

பாட்டுச் சொல்லிக்கொடுத்தால், வருவோரிடமெல்லாம் அதற்கான சில்லரையைக் கறக்க வேண்டாமா, சும்மாவா சொல்லிக்கொடுப்பதுஎன தியாகராஜரைத் திட்டுவான். 

காலணா சம்பாதிக்கத் துப்பு இல்லாமல் வீட்டில் வெட்டிச் சோறு தின்றுகொண்டிருக்கிறாய்என்பான். இதில் உன்னுடன் கும்பலாக கோவிந்தா சொல்ல வெட்டியாகப் பத்து பேரு. அவாளுக்கும் இங்கே சாப்பாடுஎனக் கத்துவானாம்.

>>>>>

Vai Gopalakrishnan தியாகராஜர் சுதந்திரமாக பக்தி செய்ய முடியாமல் இடைஞ்சல் செய்வானாம். அவர் பூஜை செய்யும் போது, மோசமான பெண்களை வீட்டுக்குள் கூட்டிவந்து, தன் ஹார்மோனியப்பெட்டியை முடுக்கிவிட்டு பலக்க கத்த விட்டு அவர்களுக்குப் பாட்டு சொல்லித்தருவானாம். 

பரம ஸாத்வீகரான தியாகராஜருக்கு தலைவேதனையாக இருக்குமாம். சுவாதந்தரியமாக அவரால் பக்தி செய்ய முடியாதாம். தியாகராஜர் மிகவும் மரியாதையாக இருப்பாராம். தன் அண்ணாவாகவும் போய்விட்டதால், அவரை துஷ்டன் என்றும் அவரால் சொல்லவும் முடியாதாம். அண்ணாவுடன்தான் தான் சேர்ந்து இருக்கணும். நம்மால் தனியாக வாழ முடியாது. தானாகவே தனியாகப் பிரிந்து போறேன் என்றும் சொல்ல முடியாது. இதுபோன்ற தர்ம சங்கடத்தில் தியாகராஜர் இருந்து வந்துள்ளார்.

குடும்பத்தில் வறுமை. தினமும் தியாகராஜரைப் பார்க்க வருவோர் போவோர் பலபேருக்கு அதிதி சத்காரம். போதிய வருமானம் இல்லாததால், ஒரு நாள் சண்டை முற்றி வீட்டை விட்டு வெளியே போடாஎனச் சொல்லி விட்டானாம் அவரின் அண்ணா.
 

ராவணன் உன்னால்தான் குலம் கெட்டதுஎன் விபீஷனனைப் பார்த்து சொன்னானாம். அதுபோல உள்ளது இதுவும்.
 

>>>>>

Vai Gopalakrishnan வேறு வழியே இல்லாமல், அப்போது அவரும் அவர் மனைவியும் தன் அண்ணா வீட்டைவிட்டு வெளியேறி தனி ஜாகை பார்த்துக்கொண்டு போகும் போதும், தன் அண்ணாவிடம் வேறு எதுவும் உதவிகள் கேட்கத்தோன்றாமல், “அண்ணா, நம் அப்பா பூஜை செய்துவந்த ராமனை மட்டும் நான் எடுத்துக்கொண்டு போய் விடுகிறேன் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டாராம். அவருக்குத் தெரிந்தது + அவருக்கு வேண்டியது அது மட்டும்தான். 

அவனும் சரியென்று சொல்லி அதை மட்டும் எடுத்துக்கொண்டு, சீக்கரமாக வீட்டை விட்டு வெளியே போய்த்தொலைஎன்றானாம். வீட்டை விட்டு வெளியேறி விட்டார். தனி ஜாகையில் போய் அமர்ந்தும் விட்டார்.
 

நித்தியப்படி சாப்பாட்டுக்கு உஞ்சவிருத்தி உள்ளது. அவர் புகழ் மேலும் மேலும் பரவப் பரவ ரத்னமான சிஷ்யர்கள் அவருக்கு, அவரிடம் வந்து சேர்ந்தார்கள்.
 

அவர்களில் வாலாஜா பேட்டையிலிருந்து வந்து சேர்ந்த வெங்கட்ராம பாகவதர் என்பவர் மிகவும் முக்கியமானவர். நன்னா தளதளன்னு குண்டா இருப்பாராம். ஸ்வாமிகளிடம் அபார பக்தி அவருக்கு. ஸ்ரீராமருக்கு ஆஞ்சநேயர் போல நம் தியாகராஜ ஸ்வாமிகளுக்கு இந்த வாலாஜா பேட்டை வெங்கட்ராம பாகவதர். விநயத்திலும் அவர் மிகவும் சிறந்தவர்.
 

அவருக்கு கட்டைத் தொண்டையாக இருந்து சங்கீதம் வராததால் கோட்டு வாத்யம்வாசிக்க தியாகராஜரே சொல்லிக்கொடுத்தாராம். இந்த வெங்கட்ராம பாகவதர்தான், தியாகராஜர் மேல் தியாகராஜ அஷ்டகம்ஒன்று வெளியிட்டுள்ளார். அது மிகவும் சிறப்பானதாகும்.
 

தியாகராஜருக்கும், இந்த வாலாஜா பேட்டை வெங்கட்ராம பாகவதருக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பினை மிகச் சுவையாகவும், நகைச்சுவையாகவும், மிகச் சிறப்பாகவும், சிரித்து மகிழும் படியும் அந்த உபன்யாசகர் சொல்லியிருந்தார். அதையெல்லாம் சொல்லிக் கொண்டே போனால் இங்கு இடமே இருக்காது.
 



Palaniappan Kandaswamy இடத்தைப் பற்றி கவலைப் படாதீங்கோ. என்ன விலையானாலும் வாங்கி விடலாம். எங்களுக்கு உங்களின் முழுக்கதையும் நிச்சயமாக வேண்டும். 

Aaranyanivas R Ramamoorthy இங்கேயே எழுதுங்கோ ஸார்...
தாஸனா கேட்க காத்துக் கொண்டு இருக்கிறோம்...
-=-=-=-=-

Vai Gopalakrishnan :) //Aaranyanivas R Ramamoorthy இங்கேயே எழுதுங்கோ ஸார்... தாஸனா கேட்க காத்துக் கொண்டு இருக்கிறோம்...//

:) அடாடா .... தங்கள் ஸித்தம் ..... என் பாக்யம் :)தொடர்கிறேன். :) :)


-=-=-=-=-

Vai Gopalakrishnan 1)

தன் அண்ணாவிடமிருந்து பிரிந்து, தனி ஜாகை பார்த்து வந்து விட்ட தியாகராஜரின் புகழ் எங்கும் பரவ ஆரம்பித்து விட்டது. அவர் செய்துவரும் நித்தியப்படி ஸ்ரீராம பூஜைக்காகவும், அவருடைய சங்கீத கீர்த்தனைகளை கேட்டு ரஸிப்பதற்காகவும், பெரிய மஹானாகிய அவரை நேரில் தரிஸிப்பதற்காகவும் பல ஜனங்கள் வர ஆரம்பித்து விட்டார்கள்.
 

>>>>>

Vai Gopalakrishnan 2)

அவருடன் கூடவே உஞ்சவிருத்திக்குச் செல்வதற்காகவும், அவருடன் சேர்ந்தே பூஜை பஜனை முதலியவற்றில் கலந்துகொண்டு, அதன்பிறகு அவர் வீட்டிலேயே தங்கிக்கொண்டு, வேளாவேளைக்கு பிரஸாதங்கள் சாப்பிடுவதற்காகவுமாக, குருவுக்கு ஏற்ற ரத்னமாக பல சிஷ்யர்களும் வந்து சேர்ந்து விட்டார்கள்.
 

கண்ணுக்கு விருந்து, காதுக்கும் விருந்து, வயிற்றுக்கும் விருந்து என அவர் வீடே சிஷ்ய சம்பத்துக்களால் நிறைந்து வழிந்து ஜே ஜே என இருந்து வந்தது.
 

>>>>>

Vai Gopalakrishnan 3)

அவரும் மிகுந்த சந்தோஷமாக, ஸதா ஸர்வகாலமும் ஸ்ரீ ராம நிஷ்டையுடன், தனது நித்ய அனுஷ்டானங்களைச் செய்துகொண்டு இருந்து வரலானார். காலையில் எழுந்ததும் பெருமாளுக்கு ஸுப்ரபாதம், அதன்பின் ஸ்ரீராம நாம ஜபம், காவிரி ஸ்நானம், பஜனை செய்துகொண்டு உஞ்சவிருத்திக்குச்
 சென்று வருதல், ஸ்ரீராமருக்கு நித்யப்படி பூஜை, வந்திருக்கும் பாகவதாள் + பக்தர்கள் அனைவருக்கும் அதிதி சத்காரம் முதலியன தினமும் குறைவில்லாமல் நடைபெற்று வந்துகொண்டிருந்தன. 

>>>>>

Vai Gopalakrishnan 4)

அதன் பின் மத்யான வேளையில் தன் சிஷ்யப்பிள்ளைகளுக்கும், மற்றும் வேறு சில விரும்பி பாட்டுகள் கற்க விரும்புவோருக்கும், ராக ஆலாபனைகளுடன் வாய்ப்பாட்டு, கீர்த்தனைகள் சொல்லித் தருவது அவரின் வழக்கமாகும். சாயங்காலம் காவிரியில் நித்யப்படி அனுஷ்டானம். திரும்ப
 சாயங்கால பஜனைகள், பூஜைகள், இரவு டோலோத்ஸவம் என அவருக்கு தினமும் காலை எழுந்தது முதல் இரவு படுக்கும்வரை, இவ்வாறு ஸ்ரீராமனுடன் செலவழிக்க மட்டுமே நேரம் சரியாக இருந்து வந்தது. 

>>>>>

Vai Gopalakrishnan 5)

தியாகராஜர் வெறும் வாய்ப் பாட்டுப்பாடுபவர் மட்டுமல்ல. இவர் ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார். வேதம் படித்துள்ளார், சாஸ்திரங்கள் யாவும் படித்துள்ளார். வியாகரணத்தில் மஹா பண்டிதர். அவர் கிருதிகளைப் பார்த்தாலே தெரியும். சில சொற்களை சம்ஸ்கிருதத்தில் அவரே சொந்தமாகத் தயாரித்து உபயோகித்துள்ளார். ஸங்கீத ஞானத்திலோ கேட்க வேண்டியதே இல்லை. சாஹித்யத்தில் இவருக்கு ஈடு இணையே கிடையாது. ஜோஸ்யத்திலும் சிறந்தவர். எல்லாவற்றிற்கும் மேலே விநயத்தில் சிறந்தவர். வித்தைகளை விட விநயமே (தான் என்ற கர்வம் இல்லாத தன்னடக்கம் + பெளவ்யம்) மிகவும் சிறந்தது. விநயத்தில் இவர் ஆஞ்சநேய ஸ்வாமி போன்றவர்.
 

>>>>>

Vai Gopalakrishnan 6)

இவர் புகழ் பரவப் பரவ நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இவரைக் காணவும், இவரின் பஜனைப் பாடல்களைக் கேட்டு மகிழவும், இவர் செய்யும் ஸ்ரீராம பூஜையைக் கண்டு களிக்கவும் தினசரிக் கூட்டம் கூடிக்கொண்டே வந்தது.
 

அதுபோல வந்து சேந்தவர்களில் ஒருவர்தான் வாலாஜா பேட்டை வெங்கடரமண பாகவதர். ஒரு மாதமாகவே தியாகராஜர் அருகிலேயே நின்று மெய்மறந்து அவரின் கீர்த்தனைகளைக் காதால் கேட்டுக்கொண்டு, அவர் செய்யும் பூஜைகளைக் கண்ணால் கண்டு களித்துக்கொண்டு இருந்து வருகிறார். அவருடன் உஞ்சவிருத்திக்கும் சென்று வருகிறார். காலையிலேயே வந்து விடுவார். வரும்போதே வீட்டிலிருந்து சாப்பாடு கட்டிக்கொண்டு வந்து விடுவார். மத்யானம் காவிரிக்கரையில் சாப்பிட்டு விட்டு, இரவும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு, அதன் பின் திருவையாறு அருகேயுள்ள ஏதோவொரு ஊரில் உள்ள தன் கிராமத்து ஜாகைக்குக் கிளம்பிப் போய் விடுவார். ஆனால் அவர் தியாகராஜரை இன்னும் நெருங்கி வரவே இல்லை. தியாகராஜரும் இவரை சரியாக கவனிக்கவும் இல்லை.
 

>>>>>

Vai Gopalakrishnan 7)

ஒருநாள் நல்ல கடும் வெயில் காலம். தன் வீட்டின் பெரிய முற்றத்தில் தன் சிஷ்ய பிள்ளைகளுக்கு பாட்டு சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருக்கும் போது சொல்கிறார்:

பிள்ளைகளே, வெயில் ஜாஸ்தியாக உள்ளது. இந்த முற்றத்தில் வெயில் அடிக்காமல் ஓர் கோடைப் பந்தல் போட்டால் தேவலாம். யாரிடமாவது சொல்லி கொஞ்சம் பணம் கடனாக வாங்கி ஓர் பந்தல் போட ஏற்பாடு செய்யுங்கோ. நான் அடுத்த 2-3 நாட்களுக்கு மட்டும் திருவாரூர் செல்ல வேண்டியுள்ளது. அங்கு குத்தகைக்காரரிடம் கொஞ்சம் நிலம் கொடுத்துள்ளேன். அவர் நெல் தருவார். அதைத் தூக்கி வர முடியாததால் அங்கேயே விற்று விட்டு, கொஞ்சம் பணத்துடன் வருவேன். நான் கொண்டுவரும் பணத்தில் அந்த மூங்கில், கீற்று பந்தலுக்கான பணத்தைக் கொடுத்து கடனை அடைத்துவிடலாம்என்று சொல்லுகிறார். அவ்வளவு ஒரு நேர்மையானவர். யாரையும் அவர் செலவிலேயே பந்தல் போடச்சொல்லி கேட்கவும் மாட்டார். வற்புருத்தவும் மாட்டார்.
 

>>>>>

Vai Gopalakrishnan 8)

2-3 நாட்கள் கழித்துத் திரும்பி வந்தார். கையில் நியாயமாக ஏதோ கொஞ்சம் பணமும் கிடைத்து எடுத்து வந்திருந்தார். புதிதாக பந்தல் போட்டுள்ளதைப் பார்த்தார். சந்தோஷத்துடன் பிள்ளைகளை அழைத்தார்.
 

பந்தல் யார் போட்டார்கள்? அதற்கு எவ்வளவு பணம் ஆச்சு? அந்தக்கணக்கு எங்கே?” என்று கேட்டார்.

>>>>>

Vai Gopalakrishnan 9)

ஒரே நாளில் ஒருத்தரே கொண்டு வந்து இங்கே இந்தப் பந்தலைப் போட்டு விட்டார். அவர் பணம் ஏதும் கேட்டு வாங்கிக்கொள்ளவே இல்லைஎன்றனர் சிஷ்யப்பிள்ளைகள்.

ஒரே நாளில் அதுவும் ஒருத்தரே போட்டாரா? யார் அவர்?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் தியாகராஜர்.

கடந்த ஒரு மாசமாக இங்கே வந்து ஒரு ஓரமாக நின்று கொண்டு இருக்கிறாரே, குண்டாக ஒருத்தர் .... நம்முடன் உஞ்சவிருத்திக்குக்கூட வந்து கொண்டிருக்கிறாரே, அவர்தான் இந்தப் பந்தலைப் போட்டார்என்றனர் சிஷ்யப் பிள்ளைகள்.

ஒரு மாதமாக வருகிறாரா? நான் யாரென்று கவனிக்கவே இல்லையே. இன்று வந்தால் என்னிடம் சொல்லுங்கோஎன்றார், தியாகராஜர்.

>>>>>

Vai Gopalakrishnan 10)

ஒதுங்கி ஓரமாக நின்று கொண்டிருந்த வெங்கடரமணன், தியாகராஜர் அருகே வந்து, மிகவும் விநயத்துடன் அவரை வணங்கி நமஸ்கரித்து விட்டு அடியேன் பெயர் வெங்கடரமணன் என்று சொல்லுவார்கள். என் ஊர் காஞ்சீபுரம் அருகேயுள்ள வாலாஜா பேட்டை. ஸ்வாமிகளின் புகழைக் கேள்விப்பட்டு இங்கு வந்துள்ளேன். தாங்கள் சிஷ்யப்பிள்ளைகளிடம், கோடைப் பந்தல் போட வேண்டும் என்று அன்று சொல்லிக் கொண்டிருந்தது அடியேன் காதினில் விழுந்தது. இந்த ஒரு சின்ன கைங்கர்யத்தை, நானே செய்யணும் என நினைத்துக்கொண்டு செய்து விட்டேன்என்று மிகவும் அடக்கத்துடன் சொல்லி முடித்தார்.
 

>>>>>

Vai Gopalakrishnan 11)

நீ ஏன் ஒண்டியாகப் பண்ணனும்? எப்படிப்பண்ணினாய்?” என்று கேட்டார் தியாகராஜர்.

என் சொந்த ஊர் தான் வாலாஜா பேட்டை. என் வேட்டாம் (மாமனார்-மாமியார்-மனைவியின் வீடும் ஊரும்) இங்குள்ள அய்யம்பேட்டை என்ற கிராமம். அங்கு என் வேட்டாத்து .... அவாத்து வாசலில் (அவர்கள் வீட்டு வாசலில்) புதிதாகக் கோடைப் பந்தல் போட்டிருந்தார்கள். அதைப் பிரித்து வந்து இங்கு போட்டுட்டேன். அங்கு எதற்கு அநாவஸ்யமாக ஒரு பந்தல் என நினைத்து, அதைப்பிரித்து வந்து இங்கு போட்டு விட்டேன்என்று அடக்கத்துடன் சொன்னார்.

>>>>>

Vai Gopalakrishnan 12)

அப்படியா, பரவாயில்லை. சந்தோஷம். உமது பெயர் என்னவென்று சொன்னீர்?” எனத் தியாகராஜர், சிரித்துக்கொண்டே மீண்டும் கேட்டுக்கொண்டு, அன்றுமுதல் அவரைத் தன் நெருங்கிய சிஷ்யர் ஆக்கிக் கொண்டு விட்டார்.

தியாகராஜ ஸ்வாமிகள் மேல் அபரிமிதமான பக்திகொண்டவர் இந்த வெங்கடரமணர். ஸ்ரீராமருக்கு ஆஞ்சநேயர் போல தியாகராஜருக்கு இந்த வெங்கடரமணர்.
 

அன்றுமுதல் அங்கேயே தியாகராஜர் வீட்டிலேயே தங்கிக்கொண்டு, அவரின் பிரதான சிஷ்யராகவும் ஆகி, அவர் வீட்டிலேயே தியாகராஜப் பிரஸாதங்கள் சாப்பிட்டுக்கொண்டு, அவர் மேல் தியாகராஜாஷ்டகம்என்ற ஒரு மிகச்சிறப்பான பாடலை மிக அருமையாக எழுதியுள்ளார்.
 

இது போதுமா ஸ்வாமீ ! 
 :) 

-oOo-

Aaranyanivas R Ramamoorthy ஆஹா....அற்புதமாக இருக்கு சார்!


 


112 கருத்துகள்:

  1. நல்லதைப் பகிர்ந்துகொண்டுள்ளீர்கள். மகிழ்ச்சி. மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா .... என் அருமை நண்பர் ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி அவர்களின் ஃபேஸ்-புக் பக்கத்தில் நான் எழுதியிருந்த என் பின்னூட்டங்களில் தாங்கள் லயித்துப்போய், அவற்றையே இங்கு ஓர் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளது காண, எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது.

    அதற்காக தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இதே சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகளில் வாழ்க்கைச் சரித்திரத்தில் நிகழ்ந்துள்ள, மேலும் ஒருசில சுவாரஸ்யமான செய்திகளை, என் நினைவுக்குக் கொண்டு வந்து இங்கு பின்னூட்டங்களாகக் கொடுக்கவும் ஆசைப் படுகிறேன்.

    அதற்கு அந்த பரமாத்மாவான சாக்ஷாத் ஸ்ரீராமன் எனக்கு க்ருபை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  3. நீட்டி முழக்கிய தியாகராஜர் கதை. தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. நான் எழுதிய பின்னூட்டம் மாயமாகிவிட்டது. அப்போது கொஞ்ச நேரம் இந்த இடுகையும் மாயமாகிவிட்டது.

    நல்லனவற்றைப் பகிர்ந்துகொண்ட கந்தசாமி சாருக்கு நன்றி. தினசரிகளைப் படித்தாலே, அதையொட்டி தன் வாழ்க்கையில் அல்லது தான் படித்த செய்திகள் நினைவுக்கு வந்து, அதையே ஒரு இடுகையாக எழுதலாமே. நினைக்க நினைக்க, எண்ணச் சுழல்களில் ஆழ்ந்துவிடலாமே.

    ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்கள் சொன்ன மூன்று செய்திகளும் அருமை. 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை'யை நினைவுபடுத்திவிட்டார். அவர் நகைச்சுவையாக எழுதுவதை எப்போதும் ரசிப்பேன்.

    கோபு சார்.. இதையே ஒரு பெரிய கதையாக (தொடராக) எழுதலாம் நீங்கள். ரொம்ப நல்லா இருந்தது. (ஆனா ஒரு ப்ராப்ளம். நீங்கள் அய்யம்பேட்டை என்று எழுதியிருந்ததைப் படிக்கும்போது, தியாகராஜர் கதையிலிருந்து மனம், நல்ல கத்திரிக்காய் கிடைக்கும் என்று சொல்வாரே அந்த ஊரா என்று தாவிவிட்டது.)

    நான் படித்தவரையில், 3 1/2 கோடி ராம நாம ஜபம் முடித்தால் ராமன் தரிசனம் தருவான் என்று படித்துள்ளேன். இள வயதில், கணக்குப்போட்டு, ஒரு நாளைக்கு 2 மணி நேரம் செலவழித்தாலும், 25 வருடங்களாகும், அதிலும் 2 மணி நேரமும் அந்த எண்ணத்திலேயே இருக்கணும், அது நமக்கு முடியாது என்று எண்ணியிருக்கிறேன். 100 கோடி நாம ஜபம்னா, ஆயுள் பத்தாது. அப்படி ஜபம் பண்ணுபவரே ராமமயமாக ஆகிவிடுவார். அவருக்கு ராம தரிசனமே தேவையிருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கம்ப்யூட்டரில் கொஞ்சம் குளறுபடி ஆகி விட்டது. மன்னிக்கவும்.

      நீக்கு
    2. கோபு >>>>> நெல்லைத் தமிழன்

      //கோபு சார்.. இதையே ஒரு பெரிய கதையாக (தொடராக) எழுதலாம் நீங்கள். ரொம்ப நல்லா இருந்தது.//

      பக்த துக்காராம், பக்த இராமதாஸர், புரந்தரதாஸர், தியாகப்பிரும்மம், சுதாமா என்கிற குசேலர் ஆகிய கதைகளை, பல பிரபலங்கள், பலவிதமாகச் சொல்லியுள்ள பிரவசனங்கள் மூலம் கேட்டு அறிந்து மகிழ்ந்து என் நினைவிலும் பசுமையாகவே வைத்துள்ளேன்.

      இவற்றையெல்லாம் என் பாணியில் இன்னும் நகைச்சுவையாக என் வலைத்தளத்தினில் மிகப்பெரிய தொடராக எழுத வேண்டும் என்ற ஆசையும் இருந்து வந்தது. ஏனோ அதற்கான என் முயற்சிகள் இதுவரை தொடர முடியாமலேயே போய் விட்டன. ப்ராப்தம் இருந்தால் பிறகு பார்ப்போம்.

      அந்த என் மனக்குறையின் ஓர் சிறு முயற்சியாக மட்டுமே இதில் நான் இன்னும் நிறைய பின்னூட்டங்கள் அளிப்பதாக உள்ளேன். நாளைக்குள் அனுப்பி விடுவேன். மீண்டும் வருகை தந்து படித்துப்பாருங்கோ, ப்ளீஸ்

      >>>>>

      நீக்கு
    3. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)

      //(ஆனா ஒரு ப்ராப்ளம். நீங்கள் அய்யம்பேட்டை என்று எழுதியிருந்ததைப் படிக்கும்போது, தியாகராஜர் கதையிலிருந்து மனம், நல்ல கத்திரிக்காய் கிடைக்கும் என்று சொல்வாரே அந்த ஊரா என்று தாவிவிட்டது.)//

      கத்திரிக்காய்க்குப் புகழ்பெற்ற அது அய்யம்பேட்டை அல்ல. திருச்சி அருகேயுள்ள ஐயம்பாளையமாகும்.

      ஆஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      உங்களுக்காவது நல்லவேளையாக கத்தரிக்காய் ஞாபகம் மட்டுமே வந்துள்ளது. எனக்கு என்ன ஞாபகம் வந்துள்ளது என்பதை இதோ இந்த என் பதிவினில் http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html திரு. அப்பாதுரை அவர்களின் கேள்விக்கு நான் அளித்துள்ள பின்னூட்ட பதில்களில் படித்து அறிந்துகொள்ளவும். :)

      நீக்கு
  5. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (3)

    //100 கோடி நாம ஜபம்னா, ஆயுள் பத்தாது. அப்படி ஜபம் பண்ணுபவரே ராமமயமாக ஆகிவிடுவார். அவருக்கு ராம தரிசனமே தேவையிருக்காது.//

    நீங்கள் சொல்லுவது மிகவும் கரெக்ட். நானும் இதனையெல்லாம் கணக்குப் போட்டுப்பார்த்து அதன்பின் கைவிட்டு விட்டவன் மட்டுமே. :)

    பிரத்யக்ஷமாக எனக்குக் காட்சியளிக்காவிட்டாலும், ஸ்ரீராமன் என்னைக் கைவிடாமல் இருந்தால் ஓக்கே.

    பதிலளிநீக்கு
  6. 1)

    வீட்டை விட்டு தியாகராஜனைத் துரத்தி விட்ட பின்னும், அவரின் அண்ணா ஜப்ஜேஷன் தன் தம்பி இப்படிப் பிழைக்கத் தெரியாதவனாக இருக்கிறானே எனத் தனக்குள் நினைக்கிறான்.

    பணம் சம்பாதிக்க சாமர்த்தியமே இல்லாத, அசடான அவனுக்கு உள்ள குரல் வளம், பணம் சம்பாதிக்க சாமர்த்தியமுள்ள தன்னிடம் இல்லாமல் போய் விட்டதே எனவும் நினைத்து வருந்துகிறான்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  7. 2)

    அடிக்கடி தியாகராஜனை அவரின் வீட்டுக்குப்போய் சந்தித்து, பணம் சம்பாதிக்க என்னென்ன வழிகள் என்ற புத்திமதிகளும் கூறி வருகிறான்.

    பாட்டுக்கற்றுக் கொள்ள வருவோரிடமெல்லாம் பணம் வாங்கிக்கொண்டு மட்டும் பாட்டும், கீர்த்தனைகளும் சொல்லித்தரச் சொல்லியெல்லாம் வற்புருத்துகிறான்.

    பொது இடங்களில் கச்சேரி செய்து, புகழ் அடைந்து, நிறைய பொன்னும் பொருளும் பணமும் ஈட்டிக்கொண்டு வரலாமே என ஆலோசனைகள் பலவும் சொல்லுகிறான்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  8. 3)

    ”பிழைக்கத்தெரியாமல் சும்மாவாவது ‘ராமா, ராமா, ராமா, ராமா, ராமா’ என ராமனைக்கட்டிக்கொண்டு அழாதே” என்கிறான்.

    “பிச்சை எடுப்பது போல தினமும் வீடு வீடாக உஞ்சவிருத்திக்குப் போகாதே. நம் தாத்தா உஞ்சவிருத்தி எடுத்தார் ..... நம் அப்பா உஞ்சவிருத்தி எடுத்தார் ..... இப்போ பேரன் தியாகு ..... நீ உஞ்சவிருத்தி எடுக்கிறாய். இப்படியே போனால் நம் பரம்பரையே உஞ்சவிருத்திக் குடும்பமாகவே போய்விடும். பிழைக்கும் வழியைப் பாரு” என்றெல்லாம் அவ்வப்போது ஏதேதோ போதனைகள் செய்துகொண்டே இருக்கிறான் ஜப்ஜேஷன்.

    இதையெல்லாம் பற்றிக் கவலையே படாமல், தியாகராஜர் எப்போதும் போலவே மிகவும் சந்தோஷமாக, நிம்மதியாக ராமபக்தி செய்துகொண்டு அதிலேயே பெரும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் கொண்டவராக இருந்து வருகிறார்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  9. 4)

    தான் எழுதிய தியாகராஜாஷ்டகத்தில், தியாகராஜரை, பக்தி விஷயத்தில் பிரகலாதனுடன் ஒப்பிடுகிறார் அவரின் பரம சிஷ்யரான வாலாஜா பேட்டை வெங்கடரமண பாகவதர் அவர்கள்.

    ஏன் பிரகலாதனுடன் நம் தியாகராஜரை இவர் ஒப்பிட வேண்டும் என்று யோசித்தால் நமக்கு ஒன்று விளங்கும்.

    விஷ்ணு பக்தியில் சிறந்த சின்னஞ்சிறு பாலகனான பிரகலாதனுக்கு, அவனின் சொந்த அப்பாவும், தனக்கு மரணமே இல்லாத பல்வேறு வரங்கள் பெற்ற மஹா ராக்ஷஸனும், அந்த நாட்டின் ராஜாவாகவும் இருந்த ஹிரண்யகசிபு பலவிதமான தொந்தரவுகள் கொடுத்தும்கூட, அவன் உயிரைப்பறிக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும்கூட, பகவத் க்ருபையால் அந்தக் குழந்தை பிரகலாதனின் விஷ்ணு பக்தியை, கடைசிவரை யாராலும், எப்படியும் மாற்றவே முடியவில்லை.

    தன் தீவிர பக்தன் பிரகலாதன் என்ற குழந்தைக்காகவே, ஸ்ரீ மஹாவிஷ்ணு நரசிம்ஹ மூர்த்தியாகத் தூணில் தோன்றி ஹிரண்யனை வதம் செய்கிறார் என்ற கதை நம் எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.

    அந்த ’ஹிரண்யகசிபு’வுக்கு எந்த விதத்திலும் குறைந்தவன் இல்லையாம் இந்த தியாகராஜரின் அண்ணா ’ஜப்ஜேஷன்’, என்பவன். :)

    >>>>>

    பதிலளிநீக்கு
  10. 5)

    ஒருநாள் .... நம் தியாகராஜ ஸ்வாமிகள் அவர்களின் பக்தியும், புகழும், பிராபல்யமும், தஞ்சையை ஆண்டு வந்த மஹாராஷ்ட்ர மன்னரான இரண்டாம் சரபோஜி ராஜாவின் காதுகளுக்கு, எட்டி விடுகிறது.

    அவரைத் தன் அரண்மனைக்கு வரவழைத்து பாடச்சொல்லி கெளரவிக்கணும் என நினைத்து, அவரை அழைத்து வர வேண்டி, அவரின் வீட்டுக்கே, தன் ஆட்களுடன் அழகிய ரதம் (தேர்) ஒன்றை அனுப்பி வைக்கிறார், மஹாராஜா.

    >>>>>

    பதிலளிநீக்கு
  11. 6)

    தன் வீட்டுத் திண்ணையில் வெட்டியாக அமர்ந்துகொண்டு ஊர் வம்புகள் பேசிவரும் ஜப்ஜேஷன் கண்களில் முதலில் அந்த ரதம் படுகிறது. இது நம் ராஜாவின் ரதம் போல உள்ளதே, இங்கு நம் தெருவுக்கு ஏன் வந்துள்ளது? என பலவிதமான குழப்பங்களுடன், ரதத்தை நெருங்கி விசாரிக்கிறான்.

    ”தியாகராஜ ஸ்வாமிகளின் வீடு எது? அவரை ராஜாவிடம் அழைத்துச் செல்ல நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்” என்கின்றனர் ரதத்தில் உள்ள சிப்பந்திகள்.

    மிகவும் சந்தோஷப்பட்ட ஜப்ஜேஷன் “தியாகு என் தம்பிதான். வாங்கோ, நான் அவனிடம் அழைத்துச் செல்கிறேன்” எனச் சொல்லி தியாகு வீட்டுக்கு அவர்களுடன் புறப்பட்டுச் செல்கிறான்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  12. 7)

    இதனைக் கேள்விப்பட்ட தியாகராஜருக்கு தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்றே புரியவில்லை. தியாகராஜர் மீண்டும் தன் அண்ணாவால் அங்கு நன்கு மூளைச்சலவை செய்யப்படுகிறார்.

    ”இது யாருக்குமே கிடைக்காத அருமையான சான்ஸ். உன் குரலோ கோகில கண்டமாக இருக்கிறது. உடனே தேரில் புறப்பட்டு ராஜாவிடம் போய்ப் பாடு. அவர் பொன்னும் பொருளும் தருவார். இனி நீ உஞ்சவிருத்தி எடுத்துச் சாப்பிட வேண்டாம்” என எவ்வளவோ எடுத்துச் சொல்லி மன்றாடியும், தியாகராஜர் ராஜாவைப் போய்ப் பார்க்க சம்மதிக்கவே இல்லை.

    இந்த இடத்தில் தான் தன் மனசாட்சியான ஸ்ரீ ராமனுடன் ‘நிதி கால சுகமா’ என்ற அருமையானதொரு கீர்த்தனத்தை மெய்மறந்து பாடுகிறார், தியாகராஜர்.

    ”ராமா ! சாஸ்வதமான தயாநிதியான உன் கருணையைவிட (நிரந்தரமான உன் பரம அனுக்கிரஹத்தை விட), இந்த சாஸ்வதமே இல்லாத ராஜா எனக்குத் தர நினைக்கும் நிதி (அழியக்கூடிய பொன்னும் பொருளும்) எனக்கு சுகம் தருமா என்ன?” என தனது கீர்த்தனத்தின் மூலம் கேட்கிறார்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  13. 8)

    இன்று இவர் ராஜாவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு, அரண்மனைக்குச் செல்வாரானால், பிறகு எப்போதெல்லாம் அவர் அழைக்கிறாரோ அப்போதெல்லாம் இவர் அங்கு செல்ல வேண்டிய நிர்பந்தங்கள் ஏற்படும்.

    ஸ்ரீ ராமனைப் பாடிய வாயால் ராஜாவைப் புகழ்ந்து, நரஸ்துதி செய்ய வேண்டிய சூழ்நிலைகளுக்கும் அடிமையாகலாம்.

    இதையெல்லாம் யோசித்து அவர் அங்கு அரண்மனைக்கு வர மறுத்ததே புத்திசாலித்தனமாகும்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  14. 9)

    இதைப்பார்த்த ஜப்ஜேஷனுக்கு கோபம் மிகவும் அதிகமாகி விடுகிறது. ராஜாவின் அழைப்பைக்கூட ஏற்க மறுக்கும் தன் தம்பியைக் கெடுப்பது ’இந்த ராமன்’ தானே என நினைத்து, அந்த ஆத்திரத்தில், அவர் பூஜை செய்துவரும் ஸ்ரீராம விக்ரஹத்தை யாருக்குமே தெரியாமல், தன்னுடன் கடத்திக்கொண்டு வெளியே எங்கோ ஓடிப் போய் விடுகிறான்.

    ஸ்ரீராமனைக் காணாத தியாகராஜர் மனம் வாடி வதங்கி, துக்கத்துடன் பல கீர்த்தனைகள் பாடிக்கொண்டே இருக்கிறார்.

    சிஷ்யர்களில் ஒவ்வொருவராக அழைத்து “என் ராமன் எங்கே? என் ராமன் எங்கே?” என அழுது புலம்பிக் கேட்டு வருகிறார்.

    இறுதியாகத் தன் அண்ணாவிடமும் போய் கெஞ்சிக் கேட்டுப்பார்த்து விட்டார். பலனில்லை.

    அதே தாபத்துடன் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  15. 10)

    ஸ்ரீராம பிரான் இவருக்கு ஒருநாள் சொப்பணத்தில் காட்சி தருகிறார். ஆறுதல் வார்த்தைகள் சொல்லுகிறார்.

    ”என்னால் உன்னை விட்டு எங்கு போக முடியும்? நான் எங்கும் போகவில்லை. உன்னுடன் கூடவேதான் இருக்கிறேன். நீ என் பிரிவால் வாடி வதங்கிப் பாடி வரும் கீர்த்தனைகளை மிகவும் லயித்துக்கொண்டு கேட்டு மகிழ்ந்து வருகிறேன். உன்னை என்னிடமிருந்து பிரித்துள்ளது உன் அண்ணாதான். உன்னிடமிருந்த என் விக்ரஹத்தைத் தூக்கிக்கொண்டு போய் காவிரியில் போட்டு விட்டான். காவிரி ஆற்றில் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் நான் நீருக்கு அடியில், மணல் திட்டு ஒன்றின் மேல் மிகவும் பத்திரமாகவே இருக்கிறேன்” என சொல்லி மறைந்து விட்டார்.

    இவர் ஸ்ரீராம விக்ரஹத்துடன் சந்தோஷமாகப் பாடியுள்ள கீர்த்தனைகளைவிட, இவர் ஸ்ரீராமனைப் பிரிந்து அழுது புலம்பி, உள்ளம் உருகிப் பாடியுள்ள கீர்த்தனைகளில்தான், ஸ்ரீராமருக்கு இஷ்டம் போலிருக்கிறது. அதனால் அவற்றில் மயங்கி, சற்றே தாமதமாக, சில நாட்கள் கழித்து மட்டுமே இவருக்கு காட்சியளித்துள்ளார்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  16. 11)

    சொப்பணம் கண்ட தியாகராஜர் கண் விழித்தார். சிஷ்யர்களுடன் காவிரி நதிக்குச் சென்றார். ஸ்ரீ ராமன் சொன்ன இடத்தில் நீருக்கு அடியில் பலரும் தேடினார்கள். கடைசியாக ஸ்ரீராமர் விக்ரஹம் தியாகராஜர் கைகளுக்கே கிடைத்து விட்டது. தியாகராஜர் உள்பட அனைவரும் சந்தோஷப்பட்டார்கள். வீட்டில் பூஜைகள் + பஜனைகள் வழக்கம்போல நடைபெற்றன.

    இதைக்கேள்விப்பட்ட தியாகராஜரின் அண்ணாவும் மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டு, அன்று முதல் தானும் ஒரு ராம பக்தனாகவே ஆகி விட்டான். தன் பரம பக்தனான தியாகராஜரின் புகழ் அனைவருக்கும் தெரியவேண்டி, இவையெல்லாம் ஸ்ரீராமபிரான் செய்த லீலைகள் மட்டுமே என்பதை நாம் அறிய முடிகிறது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  17. 12)

    04.05.1767-இல் பிறந்துள்ள தியாகராஜர் தன் வாழ்க்கையின் இறுதிக் காலக் கட்டத்தில் சந்நியாஸம் மேற்கொள்கிறார்.

    மற்றொரு நாள் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் தள்ளாத 79+ வயதில், ஸ்ரீ ராமபிரான் அவருக்கு மீண்டும் காட்சி கொடுத்து, ”அடுத்த பத்து நாட்களில் உன்னை என் திருவடிகளுக்கு அழைத்துச் செல்லப்போகிறேன்” என்பதையும் சொல்லி, அந்தத் திருநாளின் கிழமை, நக்ஷத்திரம், திதி முதலியவற்றை முன்கூட்டியே சொல்லி விடுகிறார்.

    ஸ்ரீராமபிரான் சொல்லிச்சென்ற அதே நாளில், தியாகராஜர் ஸ்ரீராமரின் திருவடிகளை அடைந்து விட்டார். அவர் முக்தி பெற்ற நாள்: 06.01.1847 புதன் கிழமை - மார்கழி மாதம் - கிருஷ்ணபக்ஷ பஞ்சமி திதி.

    >>>>>

    பதிலளிநீக்கு
  18. 13)

    இன்றிலிருந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு நம்முடன், நம் தமிழ்நாட்டிலேயே வாழ்ந்துள்ள, உலகப் பிரஸித்தி பெற்ற மிகப்பெரிய மஹான் இந்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகப்பிரும்மம்.

    இன்றும் தன்னுடைய இனிமையான கர்நாடக சங்கீதங்களால் நம்முடன் வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக அவருக்கான பிரும்மோத்ஸவங்களும், ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.

    இவர் இயற்றியது மொத்தம் 24000 கிருதிகள் என்றும், அவற்றில் நமக்கு இப்போது, இதுவரை கிடைத்துள்ளது 700 கிருதிகள் மட்டுமே என்றும் சொல்லப்படுகின்றது.

    தியாகப் பிரும்மமும், அவரின் தகப்பனாராகிய ராமப் பிரும்மமும் பூஜித்து வந்த ஸ்ரீராமரின் விக்ரஹங்கள் இன்றும் தமிழ்நாட்டில் தஞ்சை மாநகரில் ஓர் இல்லத்தில் அப்படியே பூஜை செய்யப்பட்டு வருகின்றது என்பது நம்மில் சிலர் மட்டுமே அறிந்துள்ள தகவலாகும்.

    -oOo-

    பதிலளிநீக்கு
  19. புதிய பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

    //வித்தையைவிட விநயம் முக்கியம்// ஆஹா..

    பின்னாளில் ஒரு கவிஞர் கூட "பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் தோழா" என்று இதையே அடிப்படையாக வைத்துப் பாடியுள்ளாரோ!

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
      அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்

      உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
      அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்

      கடமை அது கடமை
      கடமை அது கடமை

      அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
      அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்

      உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
      அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்

      பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
      துணிவும் வரவேண்டும் தோழா

      பாதை தவறாமல் பண்பு குறையாமல்
      பழகி வரவேண்டும் தோழா

      பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
      துணிவும் வரவேண்டும் தோழா

      பாதை தவறாமல் பண்பு குறையாமல்
      பழகி வரவேண்டும் தோழா

      அன்பே உன் அன்னை
      அறிவே உன் தந்தை

      உலகே உன் கோவில்
      ஒன்றே உன் வேதம்

      மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
      அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்

      உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
      அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்

      கடமை அது கடமை
      கடமை அது கடமை

      வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
      கோழை குணம் மாற்று தோழா

      நாளை உயிர் போகும் இன்று போனாலும்
      கொள்கை நிறைவேற்று தோழா

      வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
      கோழை குணம் மாற்று தோழா

      நாளை உயிர் போகும் இன்று போனாலும்
      கொள்கை நிறைவேற்று தோழா

      அன்பே உன் அன்னை
      அறிவே உன் தந்தை

      உலகே உன் கோவில்
      ஒன்றே உன் வேதம்

      மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
      அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்

      உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
      அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்

      கடமை அது கடமை
      கடமை அது கடமை

      நீக்கு
    2. இதன் பாடலாசிரியர் : வாலி

      படம்: MGR நடித்த “தெய்வத்தாய்”

      வெளியான ஆண்டு: 1964

      இசை: விஸ்வநாதன் இராமமூர்த்தி

      பாடியவர்: T M செளந்தர ராஜன்

      நீக்கு
    3. வாங்கோ ’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !’ வணக்கம்.

      //பின்னாளில் ஒரு கவிஞர் கூட "பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் தோழா" என்று இதையே அடிப்படையாக வைத்துப் பாடியுள்ளாரோ!//

      அதே .... அதே .... தங்களின் நேயர் விருப்பமாக அந்தப் பாடலை முழுவதுமாக நான் மேலே கொடுத்துள்ளேன்.

      நீக்கு
  20. பதிவும் அருமையாக இருக்கிறது. வைகோ சாரின் பின்னூட்டங்களும் அருமையாக இருக்கிறது. தியாகப்பிரம்மம் வைத்துப் பாடிய சுருதிப்பெட்டி இப்போ எங்கே இருக்கிறது என்பதையும் அறிவேன். கவியோகி சுத்தானந்த பாரதியார் தியாகப்பிரம்மம் அவர்களின் உறவு என்றும் கேள்விப் பட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராத்திரி படுத்துக்கப் போற அவசரத்திலே தம்புராவை சுருதிப்பெட்டினு எழுதிட்டேன். நல்லவேளையா யாரும் கவனிக்கலை! :)

      நீக்கு
    2. இரண்டும் செய்யும் வேலை ஒன்றுதானே!

      நீக்கு
    3. இரண்டும் செய்யும் வேலை ஒன்றுதானே!

      நீக்கு
    4. Geetha Sambasivam

      வாங்கோ, மேடம். வணக்கம்.

      //பதிவும் அருமையாக இருக்கிறது. வைகோ சாரின் பின்னூட்டங்களும் அருமையாக இருக்கிறது.//

      மிக்க மகிழ்ச்சி .... மேடம். :)

      //தியாகப்பிரம்மம் வைத்துப் பாடிய சுருதிப்பெட்டி இப்போ எங்கே இருக்கிறது என்பதையும் அறிவேன். கவியோகி சுத்தானந்த பாரதியார் தியாகப்பிரம்மம் அவர்களின் உறவு என்றும் கேள்விப் பட்டிருக்கேன்.//

      தாங்கள் அறியாத விஷயங்களோ கேள்விப்படாத விஷயங்களோ எதுவுமே இருக்க முடியாது என்பது என் நம்பிக்கையாகும்.

      இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
    5. //தாங்கள் அறியாத விஷயங்களோ கேள்விப்படாத விஷயங்களோ எதுவுமே இருக்க முடியாது என்பது என் நம்பிக்கையாகும்./ஹாஹாஹா! நன்றி. உண்மையில் இந்தத் தம்புராவை நான் அவங்க வீட்டில் பூஜை அறையில் வைத்திருப்பதையும் பார்த்திருக்கேன். இந்த வலை உலகில் நான் அடியெடுத்து வைத்தபோது முதல் நண்பர் ஆனவர் தான் சத்குரு அவர்களின் வழி வந்தவர். சுத்தானந்த பாரதியாரின் பேரன் ஆவார்! :) மரபூர் சந்திரசேகரன் என்னும் இளைய நண்பர் தான் அவர்! இப்போது அதிகம் பதிவுகள் எழுதவில்லை என்றாலும் தன்னால் இயன்றவரை மக்கள் சேவையிலும் ஆலயங்களில் உழவாரப் பணிகள் செய்வதிலும் ஈடுபட்டிருக்கிறார். :)

      நீக்கு
    6. ஆஹா, எப்படியோ ஸத்குரு அவர்களின் வழியில் வந்ததோர் ஸத்சங்கத்தில் தாங்களும் உள்ளீர்கள் என்பது கேட்க மிகவும் மகிழ்ச்சியே.

      நீக்கு
  21. பதில்கள்
    1. middleclassmadhavi

      வாங்கோ MCM Madam, வணக்கம்.

      //Super super!! rasithen... thanks//

      இவ்விடம் தங்கள் வருகைக்கும், ரஸித்துப் பார்த்து நன்றியுடன் எழுதியுள்ள சூப்பர் சூப்பரான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  22. பதிவு அருமை. இன்னும், பல பகுதிகளை விட்டுவிட்டீர்களே... பெரிய தொடருக்குத் தகுதியான வரலாறு. 'தெரதீயகராதா', 'ராம லக்ஷ்மணர்கள்' அவருடைய சிவிகைக்குக் காவலாக வந்தது என்று பல பகுதிகள் உண்டே.

    "இவற்றையெல்லாம் என் பாணியில் இன்னும் நகைச்சுவையாக என் வலைத்தளத்தினில் மிகப்பெரிய தொடராக எழுத வேண்டும் என்ற ஆசையும் இருந்து வந்தது. " - இப்போது அதற்கான நேரமும் வந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டு ஆரம்பித்துவிடுங்கள். அதற்குப் பின் அதுவாகவே நல்லதொரு தொடராக மாறிவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபு >>>>> 'நெல்லைத் தமிழன்

      வாங்கோ, வணக்கம்.

      //பதிவு அருமை.//

      மிக்க மகிழ்ச்சி.

      //இன்னும், பல பகுதிகளை விட்டுவிட்டீர்களே... பெரிய தொடருக்குத் தகுதியான வரலாறு. 'தெரதீயகராதா', 'ராம லக்ஷ்மணர்கள்' அவருடைய சிவிகைக்குக் காவலாக வந்தது என்று பல பகுதிகள் உண்டே.//

      இருக்கலாம். அவற்றை நான் உபன்யாசத்தில் கேட்கும் பாக்யம் எனக்கு இல்லாமல் போய் இருந்திருக்கலாம். அல்லது நான் கேட்டபோது அந்த உபன்யாசகர் அன்று இதனை சொல்லாமலும் சாய்ஸில் விட்டிருந்திருக்கலாம். அவசரத்தில் அவர் கதையை முடித்துக்கொண்டு தன் சிவிகையில் (பல்லாக்கில்) ஏறிச் சென்றிருக்கலாம்.

      //"இவற்றையெல்லாம் என் பாணியில் இன்னும் நகைச்சுவையாக என் வலைத்தளத்தினில் மிகப்பெரிய தொடராக எழுத வேண்டும் என்ற ஆசையும் இருந்து வந்தது. " - இப்போது அதற்கான நேரமும் வந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டு ஆரம்பித்துவிடுங்கள். அதற்குப் பின் அதுவாகவே நல்லதொரு தொடராக மாறிவிடும்.//

      நேற்றுகூட ஸ்ரீரங்கத்திற்கு ஒரு ’அஷ்டாவதானி’ அவர்களின் அருமையான நிகழ்ச்சிக்குச் சென்று வந்தேன். அவரின் தனித் திறமைகளையும், நினைவாற்றலையும் கண்டு பிரமித்துப்போனேன். அதைப்பற்றிகூட எழுதணும் என்ற ஆசையும் உள்ளது.

      ஸத்குருவின் க்ருபை இருந்தால் பார்ப்போம் ..... ஸ்வாமீ.

      இங்கு அன்புடன் மீண்டும் வருகை தந்து கருத்தளித்துள்ள தங்களுக்கு மீண்டும் என் இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  23. இங்கே பகிர்வைப் பதிந்துள்ள இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    கோபு அண்ணன் குட்டிக் குட்டியா 12 பாகமா கதை சொல்லியிருக்கும் விதம் அருமை. 12 பாகம் மட்டும்தான் இப்போ படிக்க முடிந்திருக்கிறது, நேரம் கிடைக்கையில் மீண்டும் வந்து பின்னூட்டங்கள் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira புதன், 25 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 5:08:00 IST

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      //இங்கே பகிர்வைப் பதிந்துள்ள இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //கோபு அண்ணன் குட்டிக் குட்டியா 12 பாகமா கதை சொல்லியிருக்கும் விதம் அருமை.//

      குட்டியா ????? அதுவும் அருமையான 12 குட்டிகளா ?????

      அஞ்சூஊஊஊஊ உடனே ஓடியாங்கோ .... ப்ளீஸ். உங்க அதிரா என்னென்னவோ சொல்லுகிறாள். ஒன்னுமே புரியலே :)

      //12 பாகம் மட்டும்தான் இப்போ படிக்க முடிந்திருக்கிறது, நேரம் கிடைக்கையில் மீண்டும் வந்து பின்னூட்டங்கள் படிக்கிறேன்.//

      இப்படிச் சொல்லிச்சென்று .... பிறகு ஆளையே காணும். எனக்கு இப்போ ஒரே கவலையாக்கீதூஊஊஊஊ.

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்போ எதுக்கு சும்மா இருக்கிற அஞ்சுவைக் கூப்பிடுறீங்க:))... நான் உங்களுக்கு ஒரு லொறி “தண்ணி” அனுப்பி வைக்கிறேன் பிளீஸ்ஸ் அஞ்சுக்கு சொல்லிட வாணாம்ம்ம்:))

      நீக்கு
    3. athira

      //கர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்போ எதுக்கு சும்மா இருக்கிற அஞ்சுவைக் கூப்பிடுறீங்க:))...//

      அஞ்சு ஒன்றும் சும்மா இல்லையாக்கும். தினமும் சர்ச்சுக்குப் போய் ஏதேதோ ஆன்மீக விஷயங்களை சர்ச் செய்து வருவதாகக் கேள்வி.

      //நான் உங்களுக்கு ஒரு லொறி “தண்ணி” அனுப்பி வைக்கிறேன்.//

      ஒரு லாரி ’தண்ணி’ என்று மொட்டையாகச் சொன்னால் எப்படி? எல்லாமே ஃபுல்லா, ஹாஃப்பா, குவார்டரா? COGNAC or SCOTCH எனத் தெளிவாகச் சொன்னால் என்னவாம் !

      //பிளீஸ்ஸ் அஞ்சுக்கு சொல்லிட வாணாம்ம்ம்:))//

      SCOTCH என்றால் நிச்சயமாக/சத்தியமாகச் சொல்லவே மாட்டேன். :))

      102

      நீக்கு
  24. இப்போவெல்லாம் இப்படியான கதைகளை எங்கு போய்க் கேட்பதென தெரியாது, மிக அழகாக இப்படி பேச்சுத்தமிழில் சொல்லும்போது புரிந்து கொள்வது ஈசியாக இருக்குது கோபு அண்ணன், இவ்ளோ நேரமெடுத்து இதை எல்லாம் ரைப் பண்ணுறீங்கள் என நினைக்க மிகவும் சந்தோசமாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira புதன், 25 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 5:10:00 IST

      //இப்போவெல்லாம் இப்படியான கதைகளை எங்கு போய்க் கேட்பதென தெரியாது, மிக அழகாக இப்படி பேச்சுத்தமிழில் சொல்லும்போது புரிந்து கொள்வது ஈசியாக இருக்குது கோபு அண்ணன், இவ்ளோ நேரமெடுத்து இதை எல்லாம் ரைப் பண்ணுறீங்கள் என நினைக்க மிகவும் சந்தோசமாக இருக்கு.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, அதிரா. நீங்க இப்படி ஈஸியாகப் புரிந்துகொள்வதாக சந்தோஷமாகச் சொல்வது கேட்டவுடன், கஷ்டப்பட்டு டைப் அடித்த என் விரல்களுக்கு, ஆயிண்மெண்ட் தடவி சுடுதண்ணியில் ஒத்தடம் கொடுத்தது போல இதமாக உள்ளது.

      உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், அதிரா.

      நீக்கு
  25. இப்போ காலம் மிகவும் வேகமாக நகர்வதால் நமக்கு, வீடு வேலை, குடும்பம் குழந்தைகள் எனக் கவனிக்கவே நேரம் போதாமலிருக்கு, இதில் நேரம் ஒதுக்கி வாசிப்பதற்கு நேரம் இருப்பது குறைவு, பெரும்பாலும் வேலை செய்யும்/ கார் ஓடும் நேரங்களில் காதால் கேட்க மட்டும் முடிகிறது...
    அதனால இப்படியானவற்றை ஒரு மேடைப்பேச்சு/பிரசங்கம் போல செய்து யூ ரியூப் ல அப்லோட் பண்ணினால் விரும்புவோர் கேட்பதற்கு இன்னும் இலகுவாகவும் இருக்கும், நிறையப் பேருக்கு தேடாமலே இவை கிடைக்க இலகுவாகும் அதனால கோபு அண்ணன் நீங்க ஏன் இதை முயற்சிக்கக்கூடாது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira புதன், 25 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 5:13:00 IST

      //இப்போ காலம் மிகவும் வேகமாக நகர்வதால் நமக்கு, வீடு வேலை, குடும்பம் குழந்தைகள் எனக் கவனிக்கவே நேரம் போதாமலிருக்கு, இதில் நேரம் ஒதுக்கி வாசிப்பதற்கு நேரம் இருப்பது குறைவு,//

      ’ஸ்வீட் சிக்ஸ்டீன் மட்டுமே’ எனச் சொல்லிவிட்டு, இப்போ வீட்டு வேலை, குடும்பம், குழந்தைகள் கவனிப்பு என ஏதேதோ சொல்லுகிறீர்களே அதிரா.

      அப்போ ஒருமுறை உங்களுக்கு அந்த http://gopu1949.blogspot.com/2013/09/45-2-6.html ரெட்டைக் குழந்தைகள் பிறந்ததும் உண்மை தானோ? :)))))

      //பெரும்பாலும் வேலை செய்யும் / கார் ஓடும் நேரங்களில் காதால் கேட்க மட்டும் முடிகிறது... அதனால இப்படியானவற்றை ஒரு மேடைப்பேச்சு/பிரசங்கம் போல செய்து யூ ரியூப் ல அப்லோட் பண்ணினால் விரும்புவோர் கேட்பதற்கு இன்னும் இலகுவாகவும் இருக்கும், நிறையப் பேருக்கு தேடாமலே இவை கிடைக்க இலகுவாகும் அதனால கோபு அண்ணன் நீங்க ஏன் இதை முயற்சிக்கக்கூடாது?..//

      இது மிகவும் நல்ல யோசனைதான், அதிரா. ஆனால் எனக்கு அதற்கான தொழில்நுட்பங்கள் எதுவுமே தெரியாது அதிரா. லண்டன் வரும்போது உங்களிடமே நான் கற்றுக்கொள்கிறேன். என்னிடம் ஃபீஸ் ஏதும் கேட்கக்கூடாது ...... முன்னெச்சரிக்கையாக இப்போதே சொல்லி விட்டேன். இதற்கு நம் அஞ்சுவே சாட்சி :)

      நீக்கு
    2. யாரோ என்னை அழைத்த மாதிரி இருந்ததே !!!

      நீக்கு
    3. Angelin செவ்வாய், 31 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 5:15:00 IST

      //யாரோ என்னை அழைத்த மாதிரி இருந்ததே !!!//

      கரெக்டூஊஊஊஊஊ. இவ்வளவு நாட்களாக அஞ்சு மூலம் அதிராவை அழைப்பது என் வழக்கமாக இருந்து வந்தது.

      ஆனால் இன்று 31.01.2017 ஒரு நல்ல நாள்.

      நம் மேதகு பிரித்தானியா மஹாராணியின் பேத்தியும், ஒரே வாரிசும், எனக்குத்தெரிந்து கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக என்றுமே ஸ்வீட் சிக்ஸ்டீன் எனத் தன்னைத்தானே பெருமையாக சொல்லிக்கொண்டு திரியும், அதிரடி, அதிஸய, அதிரஸ, அழும்புக்காரி அதிராவே பெரிய மனது பண்ணி, தனது ஈ-கொசு மெயில் ஐ.டி.யைக் கொடுத்து என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டார்கள். :)

      இனி அந்த அதிரா மூலமே அஞ்சுவுக்கு தகவல்கள் வந்து சேர்ந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கு இல்லை.

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !!!!!

      நீக்கு
  26. இது விஷயம் எல்லாம் எனக்குப் புதியது
    இதுவரை அறியாதது
    சொல்லிய விஷயமும்
    சொல்லிக் கொண்டு போனவிதமும்
    வெகு வெகு அற்புதம்
    இப்படி விஷய ஞானத்தோடு
    சொற்கட்டோடு ஒரு பதிவாவது
    எழுத முடியுமா என யோசிக்க
    பிரமிப்பே மிஞ்சியது

    அதற்கு ஞானம் மட்டும் போறாது
    அருளும் அல்லவா வேண்டும் ?

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S புதன், 25 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 5:39:00 IST

      வாங்கோ Mr. Ramani Sir, வணக்கம்.

      //இது விஷயம் எல்லாம் எனக்குப் புதியது. இதுவரை அறியாதது.//

      எனக்கும் அப்படியேதான் ஸார். எனக்கும் இவையெல்லாம் புதியது + நான் இதுவரை அறியாதது மட்டுமே.

      //சொல்லிய விஷயமும், சொல்லிக் கொண்டு போனவிதமும் வெகு வெகு அற்புதம்//

      இவையெல்லாம் வேறு சிலர் சொல்லி என் காதுகளால் கேட்டு, நான் எனக்குள் கிரஹித்துக் கொண்டுள்ளது, பிறகு என்னால் எழுதப்பட்டது மட்டுமே.

      //இப்படி விஷய ஞானத்தோடு சொற்கட்டோடு ஒரு பதிவாவது எழுத முடியுமா என யோசிக்க பிரமிப்பே மிஞ்சியது.//

      தலை சிறந்த படைப்பாளியும் பதிவருமான, தங்களுக்கே பிரமிப்பு என்றால் நாங்களெல்லாம் என்னத்தைச் சொல்வது? எங்கே போவது?

      //அதற்கு ஞானம் மட்டும் போறாது .... அருளும் அல்லவா வேண்டும் ?//

      தங்களுக்கு இயற்கையாகவே பிறவியிலேயே அபார ஞானமும் அருளும் அருளப்பட்டுள்ளன. பதிவுலகில் திறமைமிக்க அறிவிலும் அதே சமயம் விநயத்திலும் தாங்கள் ஒருவரே தியாகராஜ ஸ்வாமிகள் போலக் காட்சியளிக்கிறீர்கள்.

      நாங்களெல்லாம் தான் ஆங்காங்கே பிறர் சொல்லிக் கேட்டது, பார்த்தது, படித்தது என பதிவிட மிகவும் யோசித்து யோசித்து மண்டை காய வேண்டியுள்ளது.

      //வாழ்த்துக்களுடன்...//

      இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
  27. பல தெரியாத கதைகள் இந்தப் பதிவில் கிடைத்தது . கோபு சார் இதுப் போன்றக் கதைகளை பதிவாக்கலாம். பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்பது என் கருத்து.
    பகிர்விற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //பல தெரியாத கதைகள் இந்தப் பதிவில் கிடைத்தது. கோபு சார் இது போன்றக் கதைகளை பதிவாக்கலாம். பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்பது என் கருத்து. பகிர்விற்கு நன்றி சார்.//

      இவ்விடம் நல்லாசிரியையான தங்களின் அன்பான வருகைக்கும், என்னை மறக்காமல் இங்கு சொல்லியுள்ள உபயோகமான ஆலோசனைக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  28. தியாகையர் பற்றிய இத்தனை தகவல்கள் தொகுத்து வழங்கியதற்கு நன்றி....
    வை.கோபு சார் தந்துள்ள தகவல்கள் அருமை...திருவையாறு ஆராதனை முடிந்து சிலநாட்களுக்குள் இவைகளை படிக்க மனம் நிறைந்தது...மீண்டும் நன்றி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Usha Srikumar

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //தியாகையர் பற்றிய இத்தனை தகவல்கள் தொகுத்து வழங்கியதற்கு நன்றி.... வை.கோபு சார் தந்துள்ள தகவல்கள் அருமை... திருவையாறு ஆராதனை முடிந்து சிலநாட்களுக்குள் இவைகளை படிக்க மனம் நிறைந்தது... மீண்டும் நன்றி....//

      இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும், ‘அருமை’ என்று தாங்கள் அருமையாகச் சொல்லியுள்ள மனம் நிறைந்த கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  29. தியாகராஜர் கதையை இன்று தான் அறிந்து கொண்டேன். இதை ஒரு தனிப்பதிவாகவே கோபு சார் அவர் தளத்தில் போடலாம். பகிர்வுக்கு மிகவும் நன்றி கோபு சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞா. கலையரசி

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //தியாகராஜர் கதையை இன்று தான் அறிந்து கொண்டேன்.//

      நானும் சமீபத்தில்தான், அதுவும் யாரோ ஒரு பண்டிதர் சொன்ன உபன்யாசக் கதையைக் கேட்டதன் மூலம், ஏதோ கொஞ்சமாக அறிந்து கொண்டேன். அதில் வந்த நகைச்சுவையான பகுதிகளை மட்டுமே இங்கு நான் எடுத்துக் கையாண்டுள்ளேன்.

      //இதை ஒரு தனிப்பதிவாகவே கோபு சார் அவர் தளத்தில் போடலாம்.//

      அவர் சரித்திரம் பற்றிய முழுக்கதையும் எனக்கு சரிவரத் தெரியாது மேடம். இவர் போன்ற பிரபலங்களின் சரித்திரத்தை முழுமையாகத் தெரிந்து கொண்ட பிறகு மட்டும்தான் நாம் நம் வலைத்தளப் பதிவுகளில் துணிந்து எழுத முடியும்.

      //பகிர்வுக்கு மிகவும் நன்றி கோபு சார்!//

      இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  30. அறியாத பல அரிய விஷயங்களை அறிந்தோம்.
    //பக்த துக்காராம், பக்த இராமதாஸர், புரந்தரதாஸர், தியாகப்பிரும்மம், சுதாமா என்கிற குசேலர் ஆகிய கதைகளை, பல பிரபலங்கள், பலவிதமாகச் சொல்லியுள்ள பிரவசனங்கள் மூலம் கேட்டு அறிந்து மகிழ்ந்து என் நினைவிலும் பசுமையாகவே வைத்துள்ளேன்.

    இவற்றையெல்லாம் என் பாணியில் இன்னும் நகைச்சுவையாக என் வலைத்தளத்தினில் மிகப்பெரிய தொடராக எழுத வேண்டும் என்ற ஆசையும் இருந்து வந்தது. ஏனோ அதற்கான என் முயற்சிகள் இதுவரை தொடர முடியாமலேயே போய் விட்டன. ப்ராப்தம் இருந்தால் பிறகு பார்ப்போம்.
    //
    விரைவில் தொடர்வீர்கள்! தொடர் வழியே உமைத் தொடர ஆசை!

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s.

      வாங்கோ ஸார், வணக்கம்.

      //அறியாத பல அரிய விஷயங்களை அறிந்தோம்.//

      மிக்க மகிழ்ச்சி !

      **பக்த துக்காராம் .............. பிறகு பார்ப்போம்.**

      //விரைவில் தொடர்வீர்கள்! தொடர் வழியே உமைத் தொடர ஆசை!//

      இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
  31. 'பதிவும் அருமையாக இருக்கிறது. வைகோ சாரின் பின்னூட்டங்களும் அருமையாக இருக்கிறது' என்று கீதாம்மா சொன்னதைப் படித்துக் குழம்பிப் போய்விட்டேன்.

    கோபு சாரின் பின்னூட்டங்கள் தானே இங்கு ஒரு பதிவாகத் தோற்றமளிக்கிறது. சின்ன சின்னதாய் பின்னூட்டங்கள் போடுவதைப் போல தியாகப்ப்ரம்மத்தின் வாழ்க்கை சரிதத்தின் ஒரு பகுதியை கதை போலச் சொல்லி விட்டாரே, அவர்!

    குழந்தைக்குச் சொல்வது போல குழைவாக எளிய மொழியில் கோர்வையாக விவரிப்பது தான் கோபு சாரின் வெற்றிப் பாணி.
    சுயமாக இவரே வரித்துக் கொண்ட அலுங்காத குலுங்காத கொஞ்சஞ்கூட நெருடாத ஒரு நடை.. இந்தத் திறமை தான் இவர் எதை எழுதினாலும் ஆர்வத்துடன் படிக்கத் தூண்டுகிறது. இன்னும் இன்னும் எழுத மாட்டாரா என்று ஏங்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி வெள்ளி, 27 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 9:46:00 IST

      வாங்கோ ஸார், அடியேனின் நமஸ்காரங்கள் + வணக்கங்கள்.

      //'பதிவும் அருமையாக இருக்கிறது. வைகோ சாரின் பின்னூட்டங்களும் அருமையாக இருக்கிறது' என்று கீதாம்மா சொன்னதைப் படித்துக் குழம்பிப் போய்விட்டேன்.

      கோபு சாரின் பின்னூட்டங்கள் தானே இங்கு ஒரு பதிவாகத் தோற்றமளிக்கிறது. சின்ன சின்னதாய் பின்னூட்டங்கள் போடுவதைப் போல தியாகப்ப்ரம்மத்தின் வாழ்க்கை சரிதத்தின் ஒரு பகுதியை கதை போலச் சொல்லி விட்டாரே, அவர்!//

      நம் கீதா மாமி அவர்கள் இப்போது இந்தியாவில் திருச்சியில் ஸ்ரீரங்கத்தில் இல்லாமல், எங்கோ ஏதோ ஒரு வெளிநாட்டில் இருப்பதால், இரவு-பகல், தேதி-கிழமை, தம்பூரா-ஸ்ருதிப்பெட்டி போன்ற குழப்பங்களுடன், இதிலும் கொஞ்சம் குழம்பியிருக்கலாம் என நாம் எடுத்துக்கொள்வோம், ஸார்.

      //குழந்தைக்குச் சொல்வது போல குழைவாக எளிய மொழியில் கோர்வையாக விவரிப்பது தான் கோபு சாரின் வெற்றிப் பாணி. சுயமாக இவரே வரித்துக் கொண்ட அலுங்காத குலுங்காத கொஞ்சஞ்கூட நெருடாத ஒரு நடை.. இந்தத் திறமை தான் இவர் எதை எழுதினாலும் ஆர்வத்துடன் படிக்கத் தூண்டுகிறது. இன்னும் இன்னும் எழுத மாட்டாரா என்று ஏங்க வைக்கிறது. //

      ஆஹா, இதனைத் தங்கள் வாயால் இப்படிக்கேட்க அடியேன் என்ன தவம் செய்தேனோ!!!!! தன்யனானேன், ஸார்.

      இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும், மிக அழகான ரத்தினமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
    2. //நம் கீதா மாமி அவர்கள் இப்போது இந்தியாவில் திருச்சியில் ஸ்ரீரங்கத்தில் இல்லாமல், எங்கோ ஏதோ ஒரு வெளிநாட்டில் இருப்பதால், இரவு-பகல், தேதி-கிழமை, தம்பூரா-ஸ்ருதிப்பெட்டி போன்ற குழப்பங்களுடன், இதிலும் கொஞ்சம் குழம்பியிருக்கலாம் என நாம் எடுத்துக்கொள்வோம், ஸார். //
      ஹாஹாஹாஹா! நான் அம்பேரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் இருக்கேன். இப்போப் பொண்ணு வீட்டில் இருக்கேன். அடுத்த வாரம் திரும்பப் பையர் வீட்டுக்குப் போவோம். :) என்னோட பதிவுகளைத் தொடர்ந்து படிக்கிறவங்களுக்குப் புரியும்! :))))) ஹிஹிஹி, ஒரு விளம்பரந்தேன்!

      நீக்கு
    3. Geetha Sambasivam

      //ஹாஹாஹாஹா! நான் அம்பேரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் இருக்கேன். இப்போப் பொண்ணு வீட்டில் இருக்கேன். அடுத்த வாரம் திரும்பப் பையர் வீட்டுக்குப் போவோம். :) என்னோட பதிவுகளைத் தொடர்ந்து படிக்கிறவங்களுக்குப் புரியும்! :))))) ஹிஹிஹி, ஒரு விளம்பரந்தேன்!//

      சுய தம்பட்டமே இல்லாத மிகவும் எளிமையான + அருமையான விளம்பரம். வாழ்த்துகள்.

      103

      நீக்கு
  32. தியாகையர் வரலாற்றில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஜப்ஜேஷன். ஜப்ஜேஷனை வைத்துக் கொண்டு இறைவன், தியாக்ராஜர் அவதாரமெடுத்த காரணத்தைத் துவக்கி வைக்கிறார். இறைவன் படைப்பில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கைப் பாத்திரம். தமையானார் வீட்டை விட்டுத் துறத்த தம்பியின் இறைப்பணி உச்சத்திற்குப் போகிறது. கடைசி கட்டத்தில் அண்ணனை தம்பியிடமே கொண்டு வந்து சேர்த்து அண்ணனும் தம்பியுமாய் சேர்ந்து இறைப்பணியில் ஈடுபட வைத்த அருள் அது!

    இராமசரிதத்தில் கைகேயி எப்படியோ, அப்படி தியாகையர் சரிதத்தில் ஜப்ஜேஷன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி வெள்ளி, 27 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 10:26:00 IST

      வாங்கோ ஸார். தங்களின் மீண்டும் வருகை மீண்டும் எனக்கு மகிழ்வளிக்கிறது.

      //தியாகையர் வரலாற்றில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஜப்ஜேஷன்.//

      எனக்கும் இந்த உபன்யாசத்தில், என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் ஜப்ஜேஷன் மட்டுமே.

      ஏனென்றால் அவர் என்னைப்போல ஒரு யதார்த்தவாதி. என்னைப்போலவே அன்றாட குடும்ப நிர்வாகம் + வரவு செலவுகளைப்பற்றியே எப்போதும் கவலைப்படுபவராகவும் உள்ளார்.

      மேலும் அவரைப்பற்றி உபன்யாசகர் சொல்லியுள்ள நகைச்சுவை காட்சிகளுக்காக மட்டுமே, இதே கதையை நான் பலமுறை ஆடியோவாகப் போட்டுப் போட்டு கேட்டுள்ளேன் என்பதையும் உண்மையாக நானும் இங்கு வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறேன்.

      நகைச்சுவைக் காட்சிகள் இல்லாத எதையும் நான் படிப்பதோ / கேட்பதோ / ரஸிப்பதோ / எழுத எடுத்துக்கொள்வதோ கிடையவே கிடையாது.

      //ஜப்ஜேஷனை வைத்துக் கொண்டு இறைவன், தியாகராஜர் அவதாரமெடுத்த காரணத்தைத் துவக்கி வைக்கிறார். இறைவன் படைப்பில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கைப் பாத்திரம். தமையானார் வீட்டை விட்டுத் துறத்த தம்பியின் இறைப்பணி உச்சத்திற்குப் போகிறது. கடைசி கட்டத்தில் அண்ணனை தம்பியிடமே கொண்டு வந்து சேர்த்து அண்ணனும் தம்பியுமாய் சேர்ந்து இறைப்பணியில் ஈடுபட வைத்த அருள் அது! இராமசரிதத்தில் கைகேயி எப்படியோ, அப்படி தியாகையர் சரிதத்தில் ஜப்ஜேஷன்!.. //

      அருமையாக சிந்தித்து உணர்ந்து மிகச்சிறப்பாக ஒப்பிட்டுச் சொல்லியுள்ளீர்கள்.

      இதில் என் பார்வையும் ரஸனையும் வேறு .... தங்கள் பார்வையும் ரஸனையும் வேறு :)

      மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
  33. //பக்த துக்காராம், பக்த இராமதாஸர், புரந்தரதாஸர், தியாகப்பிரும்மம், சுதாமா என்கிற குசேலர் ஆகிய கதைகளை, பல பிரபலங்கள், பலவிதமாகச் சொல்லியுள்ள பிரவசனங்கள் மூலம் கேட்டு அறிந்து மகிழ்ந்து என் நினைவிலும் பசுமையாகவே வைத்துள்ளேன்.

    இவற்றையெல்லாம் என் பாணியில் இன்னும் நகைச்சுவையாக என் வலைத்தளத்தினில் மிகப்பெரிய தொடராக எழுத வேண்டும் என்ற ஆசையும் இருந்து வந்தது. ஏனோ அதற்கான என் முயற்சிகள் இதுவரை தொடர முடியாமலேயே போய் விட்டன. ப்ராப்தம் இருந்தால் பிறகு பார்ப்போம். //

    எழுத ஆரம்பித்துவிடுங்கள்.இறைவனை பற்றி ஒரு வரி எழுத ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் அப்புறம் அவர் பார்த்துக் கொள்வார்.

    தியாகையர் வரலாறு படித்து இருந்தாலும் உங்கள் மூலம் மீண்டும் படித்து தெரிந்து கொண்டேன்.
    ஜீவி சார் சொல்வது போல் ஒவ்வொருவர் புகழுக்கும் ஒருவரை காரணமாய் இறைவன் படைக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு சனி, 28 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 5:32:00 IST

      வாங்கோ மேடம், வணக்கம்.

      **பக்த துக்காராம், பக்த இராமதாஸர், புரந்தரதாஸர், தியாகப்பிரும்மம், சுதாமா என்கிற குசேலர் ஆகிய கதைகளை, பல பிரபலங்கள், பலவிதமாகச் சொல்லியுள்ள பிரவசனங்கள் மூலம் கேட்டு அறிந்து மகிழ்ந்து என் நினைவிலும் பசுமையாகவே வைத்துள்ளேன். இவற்றையெல்லாம் என் பாணியில் இன்னும் நகைச்சுவையாக என் வலைத்தளத்தினில் மிகப்பெரிய தொடராக எழுத வேண்டும் என்ற ஆசையும் இருந்து வந்தது. ஏனோ அதற்கான என் முயற்சிகள் இதுவரை தொடர முடியாமலேயே போய் விட்டன. ப்ராப்தம் இருந்தால் பிறகு பார்ப்போம்.**

      //எழுத ஆரம்பித்துவிடுங்கள்.இறைவனை பற்றி ஒரு வரி எழுத ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் அப்புறம் அவர் பார்த்துக் கொள்வார்.//

      தங்களின் நம்பிக்கைக்கும், என்னை உற்சாகப்படுத்த வேண்டி சொல்லியுள்ள இந்த வரிகளுக்கும் மிக்க நன்றி மேடம். ஆனால்
      நான் எழுதும் எந்தவொரு தொடரையும், பல சிறுசிறு பகுதிகளாக, முழுவதுமாக DRAFT ஆக COMPOSE செய்து என்னிடம் தயாராக வைத்துக்கொண்ட பிறகே அதன் முதல் பகுதியை வெளியிடுவது வழக்கம் ..... ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளைப் பற்றி நான் 2013-இல் எழுதிய 108 பகுதிகள் கொண்ட மெகா பதிவு உள்பட.

      இப்போதெல்லாம் எனக்கு எதுவும் ஓடாமல், ஏதோ ஒரு அலுப்பும், சோம்பேறித்தனமும் என்னுள் புகுந்து கொண்டு விட்டது, மேடம்.

      //தியாகையர் வரலாறு படித்து இருந்தாலும் உங்கள் மூலம் மீண்டும் படித்து தெரிந்து கொண்டேன்.//

      மிக்க மகிழ்ச்சி மேடம்.

      //ஜீவி சார் சொல்வது போல் ஒவ்வொருவர் புகழுக்கும் ஒருவரை காரணமாய் இறைவன் படைக்கிறார்.//

      இவ்விடம் அடுத்தடுத்து பலமுறை தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  34. இவர் ஸ்ரீராம விக்ரஹத்துடன் சந்தோஷமாகப் பாடியுள்ள கீர்த்தனைகளைவிட, இவர் ஸ்ரீராமனைப் பிரிந்து அழுது புலம்பி, உள்ளம் உருகிப் பாடியுள்ள கீர்த்தனைகளில்தான், ஸ்ரீராமருக்கு இஷ்டம் போலிருக்கிறது. அதனால் அவற்றில் மயங்கி, சற்றே தாமதமாக, சில நாட்கள் கழித்து மட்டுமே இவருக்கு காட்சியளித்துள்ளார். //

    குழந்தை அழுதாள் தாய் உள்ளம் பொறுக்காது அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குழந்தை அழுதாள் தாய் உள்ளம் பொறுக்காது அல்லவா?//

      கரெக்ட்.

      ‘அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்’ என்றும் ஏதோ நான் கேள்விப்பட்டுள்ளேன். அதுபோலவும் இவர் ’பால்’ என்ற ஸ்ரீராமரின் க்ருபையை வேண்டி அழுது புலம்பி பல கீர்த்தனைகள் பாடியிருப்பார் போலிருக்கிறது. :)

      நீக்கு
  35. ”இது யாருக்குமே கிடைக்காத அருமையான சான்ஸ். உன் குரலோ கோகில கண்டமாக இருக்கிறது. உடனே தேரில் புறப்பட்டு ராஜாவிடம் போய்ப் பாடு. அவர் பொன்னும் பொருளும் தருவார். இனி நீ உஞ்சவிருத்தி எடுத்துச் சாப்பிட வேண்டாம்” என எவ்வளவோ எடுத்துச் சொல்லி மன்றாடியும், தியாகராஜர் ராஜாவைப் போய்ப் பார்க்க சம்மதிக்கவே இல்லை.

    இந்த இடத்தில் தான் தன் மனசாட்சியான ஸ்ரீ ராமனுடன் ‘நிதி கால சுகமா’ என்ற அருமையானதொரு கீர்த்தனத்தை மெய்மறந்து பாடுகிறார், தியாகராஜர்.

    ”ராமா ! சாஸ்வதமான தயாநிதியான உன் கருணையைவிட (நிரந்தரமான உன் பரம அனுக்கிரஹத்தை விட), இந்த சாஸ்வதமே இல்லாத ராஜா எனக்குத் தர நினைக்கும் நிதி (அழியக்கூடிய பொன்னும் பொருளும்) எனக்கு சுகம் தருமா என்ன?” என தனது கீர்த்தனத்தின் மூலம் கேட்கிறார். //

    தியாகையரின் அண்ணாவால் அருமையான கீர்த்தனை கிடைத்து இருக்கிறதே!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தியாகையரின் அண்ணாவால் அருமையான கீர்த்தனை கிடைத்து இருக்கிறதே!//

      இருக்கலாம் .... இருக்கலாம் .... அப்படியும் இருக்கலாம். :) மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  36. அற்புதமான கீர்த்தனைகளுடன் தியாகையர் வரலாற்றை இங்கே பார்க்கலாம்!
    https://www.youtube.com/watch?v=emCLc-qtpp0

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அற்புதமானதொரு திரைப்படத்தினைக் காண இங்கு இணைப்புக் கொடுத்து உதவியுள்ளதற்கு, தங்களுக்கு என் கோடானுகோடி நன்றிகள்.

      நீக்கு
    2. Dear Mr N Packirisamy Sir, வணக்கம்.

      தாங்கள் கொடுத்திருந்த யூ-ட்யூப் இணைப்பின் மூலம் அந்தத் தெலுங்குப் படத்தை முழுவதுமாகப் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றேன். படம் மிகவும் நன்றாகவும், உருக்கமாகவும், தெய்வீகமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.

      வேற்று மொழிப்படமாகினும் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. கீழே ஆங்காங்கே ஆங்கிலத்திலும் போடுவதால் மேலும் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது.

      நான் தியேட்டருக்குப்போய் பார்த்துள்ள தெலுங்கு திரைப்படம் ’சங்கராபரணம்’ ஒன்று மட்டுமே. இப்போது கம்ப்யூட்டர் மூலம் யூ-ட்யூப்பில் இந்த தியாகராஜர் படம். இரண்டுமே சூப்பர். தங்களுக்கு மீண்டும் என் நன்றிகள், ஸார்.

      நீக்கு
    3. Dear Mr N Packirisamy Sir,

      மீண்டும் வணக்கம்.

      இந்தத் திரைப்படத்தைப் பார்த்ததனால் நான் புதிதாக சில செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அதனையும் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

      1)

      தியாகராஜருக்கும், அவர் மனைவியான கமலாம்பாளுக்கும் ஓர் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவளின் பருவ வயதினில் சாக்ஷாத் ஸ்ரீ ராம பிரானின் அருளால் மட்டுமே, ஸ்ரீ ராமர் சந்நதியிலேயே சிம்பிளாகவும், மிகச் சிறப்பாகவும் அவளுக்குத் திருமணம் நடக்கிறது.

      புது மணப்பெண்ணையும், மாப்பிள்ளையையும் சாக்ஷாத் ஸ்ரீராமன் + ஸீதையாக தன் மனதில் பாவித்து பல கீர்த்தனைகள் பாடுகிறார், தியாகராஜர்.

      தன் ஒரே மகளின் இந்தக் கல்யாணத்திற்கு, தன் அண்ணாவின் வீடு தேடிச் சென்று, தியாகராஜர் அழைத்தும்கூட, அவரின் அண்ணாவும் அண்ணியும் அவரை வீட்டுக்குள் நுழையவே விடவில்லை. திருமணத்திலும் கலந்துகொள்ளவே இல்லை.

      >>>>>

      நீக்கு
    4. 2)

      சரபோஜி மஹாராஜாவின் அழைப்பினையும், பரிசுப்பொருட்களையும் ஏற்றுக்கொள்ளாத தியாகராஜர் மஹாராஜாவின் கோபத்திற்கு முதலில் ஆளாகி விட்டாலும்கூட, பிறகு அந்த மஹாராஜா அவர்களே, இவரின் தீவிரமான ராம பக்தியையும், பெளவ்யத்தையும் எண்ணி மகிழ்ந்து மெச்சி, இவரை வந்து நேரில் சந்தித்து, மன்னிப்புக்கேட்டு, நமஸ்கரித்து விட்டுப்போகிறார்.

      >>>>>

      நீக்கு
    5. 2)

      சரபோஜி மஹாராஜாவின் அழைப்பினையும், பரிசுப்பொருட்களையும் ஏற்றுக்கொள்ளாத தியாகராஜர் மஹாராஜாவின் கோபத்திற்கு முதலில் ஆளாகி விட்டாலும்கூட, பிறகு அந்த மஹாராஜா அவர்களே, இவரின் தீவிரமான ராம பக்தியையும், பெளவ்யத்தையும் எண்ணி மகிழ்ந்து மெச்சி, இவரை வந்து நேரில் சந்தித்து, மன்னிப்புக்கேட்டு, நமஸ்கரித்து விட்டுப்போகிறார்.

      >>>>>

      நீக்கு
    6. 3)

      தன்னிடமிருந்த, தான் பூஜைகள் செய்துவந்த, ஸ்ரீராமர் விக்ரஹம் காணாமல் போனதும், அதிலேயே மனம் வருந்தி, தியாகராஜர், தன் வீட்டைவிட்டு வெளியேறி, கால் போன போக்கில் எங்கெங்கோ அலைகிறார். வீட்டிலிருக்கும் அவர் மனைவிக்கு மிகவும் வருத்தமாகி விடுகிறது.

      >>>>>

      நீக்கு
    7. 4)

      இவ்வாறு அலைந்தவர் ஓரிடத்தில் சோர்ந்து கீழே விழ நேரிடுகிறது. அதனைக்கண்ட சிலர் இவரை ஓர் பல்லக்கில் அமருமாறு கேட்டுக்கொள்கிறனர். அவரின் வீட்டில், அவரைக் கொண்டு சேர்த்து விட நினைக்கின்றனர். அவ்வாறு பல்லக்கில் அவர் வரும் வழியில், கொள்ளைக்கூட்டத்தினர் தடுக்கின்றனர். ஸ்ரீராமரை நினைத்து இவர் கீர்த்தங்கள் பாட, சாக்ஷாத் ஸ்ரீ ராம லக்ஷ்மணர்களே வில்லுடனும் அம்புடனும் தோன்றி, சரமாரியாக ராமபாணத்தால் அவர்களை வீழ்த்த, துடிதுடித்த அவர்கள் தியாகராஜரின் காலில் விழுந்து கும்பிடு போடுகின்றனர்.

      >>>>>

      நீக்கு
    8. 5)

      இல்வாழ்க்கையில் வறுமையில் கொஞ்சம் வாடியும், ஸத்குணவதியான இவரின் மனைவி கமலாம்பாள், உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிடுகிறாள். அப்போது அவளின் அவஸ்தைகள் நீங்க, இவர் ஸ்ரீராமர் மேல் கீர்த்தனைகள் பாடிக்கொண்டிருக்கும்போது, ஒருநாள் இவர் மடியில் படுத்துக்கொண்டே சுமங்கலியாக, பூவும் பொட்டுமாக, காலகதி அடைந்து விடுகிறாள்.

      >>>>>

      நீக்கு
    9. 6)

      ஸ்ரீராமர் விக்ரஹத்தை காவிரியில் போட்டுவிட்ட இவரின் தமையனார் ஜப்ஜேஷன் அவர்களுக்கு கடைசி காலத்தில் கைகள் இரண்டும் இழுத்துக்கொண்டு மிகவும் சிரமம் ஏற்பட்டுவிடுகிறது.

      தன் தம்பியாகவே இருப்பினும் அவனிடம், தான் செய்துள்ள பாவங்களுக்கெல்லாம் மன்னிப்புக் கேட்டு அழுகிறார்.

      அவருக்காகவும் ஸ்ரீ ராமனிடம் ஓர் கீர்த்தனை தியாகராஜர் பாட, அவன் கைகளும் உடனே சரியாகி விடுகின்றன.

      -oOo-

      நீக்கு
    10. ஐயா, தயவு செய்து "சார்" வேண்டாம், பக்கிரிசாமி போதுமே!

      நீக்கு
    11. Packirisamy N

      //ஐயா, தயவு செய்து "சார்" வேண்டாம், பக்கிரிசாமி போதுமே!//

      தாங்கள் சொல்லி நான் தியாகராஜர் கதையைத் திரைப்படமாகப் பார்த்த பிறகு, அவர் அளவுக்கு எனக்கு ஞானம் வராவிட்டாலும், அவரைப்போலவே அன்புடனும், பண்புடனும், பிறருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதைகளைக் கொடுத்துக்கொண்டு, தான் என்ற அகந்தை இல்லாமல் பிறருடன் ஒருவித விநயத்துடன் பழகலாம் என நினைத்தேன், ஸார். :)

      104

      நீக்கு
  37. தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் ..எனக்கு இப்படிப்பட்ட சிறு கதைகள் மிக விருப்பம் ..
    முழு உபன்யாசம் கேட்டார் போன்ற உணர்வு ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Angelin

      வாங்கோ அஞ்சு ..... வணக்கம்.

      //தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் .. எனக்கு இப்படிப்பட்ட சிறு கதைகள் மிக விருப்பம் .. முழு உபன்யாசம் கேட்டது போன்ற உணர்வு ..//

      ஆஹா, மிக்க மகிழ்ச்சி + தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி. :)

      நீக்கு
  38. பாவம் தியாகராஜர் ..அவருக்குமா இந்த பெரியண்ணா பிரச்சினை ..
    திட்டுவது மொட்டுவதை பல வதைகள் இன்க்ளூடிங் ஏழரைக்கட்டை பாட்டு மற்றும் பெண்கள் இவ்வளவையும் தாங்கி இறைவனை மட்டும் பிடித்துக்கொண்டாரே ..க்ரேட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Angelin

      //பாவம் தியாகராஜர் .. அவருக்குமா இந்த பெரியண்ணா பிரச்சினை .. திட்டுவது மொட்டுவதை பல வதைகள் இன்க்ளூடிங்//

      ஆமாம். வீட்டுக்கு வீடு வாசல்படி போல, வீட்டுக்கு வீடு இதுபோன்ற பிரச்சனைகளும் இருந்திருக்கும்தான்.

      //ஏழரைக்கட்டை பாட்டு மற்றும் பெண்கள் இவ்வளவையும் தாங்கி இறைவனை மட்டும் பிடித்துக்கொண்டாரே ..க்ரேட் //

      ஏழரைக்கட்டு எனத் தாங்கள் இங்கு சொல்லும், அவரின் அண்ணாவின் ஹார்மோனியப்பெட்டியை ஏழரை நாட்டுச் சனியாக எடுத்துக்கொண்டேன். அவர் தன் வீட்டுக்கே கூட்டி வந்து கூத்தடித்த பெண்கள் ராகு+கேது போல என நாம் கற்பனையில் வைத்துக்கொள்ளலாம்.

      இந்த ஏழரைச்சனி+ராகு+கேது போன்ற கெட்ட ’கிரஹங்கள்’ எல்லாம் கொஞ்சம் தியாகராஜரை ஆட்டிப் படைத்தாலும்கூட, ஸ்ரீராமரின் அனுக்’கிரஹம்’ அவருக்குக் கடைசிவரை இருந்து அவரை ரக்ஷித்து உள்ளது. :)))))

      நீக்கு
  39. ஒரு மனிதர் இறையருளை பெற எவ்வளவு போராடியுள்ளார் ..வீட்டை விட்டு துரத்தப்பட்டாலும் அவருக்கு தேவையானதை (ராமர் சிலை )மட்டுமே எடுத்துக்கொண்டு சென்றதனால் தான் இதனை அருளும் புகழும் அவரை கிட்டியுள்ளது என நினைக்கிறேன் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Angelin

      //ஒரு மனிதர் இறையருளை பெற எவ்வளவு போராடியுள்ளார் ..//

      தூய்மையான பக்தனுக்கு பல்வேறு சோதனைகளுக்குப் பின்பே இறையருள் கிட்டுகிறது.

      //வீட்டை விட்டு துரத்தப்பட்டாலும் அவருக்கு தேவையானதை (ராமர் சிலை) மட்டுமே எடுத்துக்கொண்டு சென்றதனால் தான் இத்தனை அருளும் புகழும் அவரை கிட்டியுள்ளது என நினைக்கிறேன் ..//

      ஆமாம். அதே .... அதே .... சபாபதே !

      நம் அதிரா பாஷையில் அதிரபதே !! :))))))

      நீக்கு
  40. ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை சமயத்தில் அமிர்தம் போன்றதொரு பதிவு..

    ஸ்ரீ தியாகராஜர் பற்றிய இத்தனை தகவல்களைத் தொகுத்து வழங்கிய தங்களுக்கு என்றென்றும் அந்த ஸ்ரீ ராமசந்த்ர மூர்த்தி நற்றுணையாக வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜூ

      வாங்கோ பிரதர், வணக்கம்.

      //ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை சமயத்தில் அமிர்தம் போன்றதொரு பதிவு.. //

      ஆஹா, மிக்க மகிழ்ச்சி. :)

      //ஸ்ரீ தியாகராஜர் பற்றிய இத்தனை தகவல்களைத் தொகுத்து வழங்கிய தங்களுக்கு என்றென்றும் அந்த ஸ்ரீ ராமசந்த்ர மூர்த்தி நற்றுணையாக வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கின்றேன்..//

      மிகவும் சந்தோஷம்,. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பிரார்த்தனைகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், பிரதர்.

      நீக்கு
  41. /// ஜப்ஷேசன் - தட்சணாமூர்த்தி/// இப்போதான் கேள்விப்படுகிறேன்... புதுத் தகவலுக்கு நன்றி கோபு அண்ணன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      அதிராவின் மீண்டும் வருகையால் இந்த வலைத்தளமே சும்மா அதிரப்போகுது. பின்னூட்ட எண்ணிக்கைகள் ராக்கெட் வேகத்தில் எங்கேயோ போகப்போகிறது. மிக்க மகிழ்ச்சி.:)

      **ஜப்ஷேசன் - தட்சணாமூர்த்தி**

      //இப்போதான் கேள்விப்படுகிறேன்... புதுத் தகவலுக்கு நன்றி கோபு அண்ணன்.//

      திருவையாறு கோயிலில் உள்ள தக்ஷிணாமூர்த்திக்கு மட்டுமே இந்தப் பிரத்யேகமான பெயர் அமைந்துள்ளது. வேறு எந்தக் கோயில்களிலும் தக்ஷிணாமூர்த்திக்கு தனிப்பட்ட பெயர்கள் ஏதும் கிடையாது.

      நீக்கு
  42. ஜப்ஷேசனின் மூர்க்கத் தனங்கள் படிக்க நன்றாக இருக்கு, தொடர்ந்து படிக்கிறேன் இப்போ போனில் இருந்து பதிகள்போடக் கஸ்டமாக இருக்கு கோபு அண்ணன், ஸ்கூல் ஆல் வந்து தொடர்கிறேன்ன்ன்...
    இன்று பரிசு எனக்குத்தான், :) அத்தோடு புளொக் ஓனரிடம் சொல்லி கடலைச் சுண்டல் ரெடி பண்ணி வைங்கோ வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira

      வாங்கோ அதிரா .....

      //ஜப்ஷேசனின் மூர்க்கத் தனங்கள் படிக்க நன்றாக இருக்கு,//

      ஆம். எனக்கும் அதுதான் இந்த வரலாற்றுக் கதையில் மிகவும் பிடித்தமான கதாபாத்திரமாக உள்ளது .. எங்கட அதிரா போலவே :)

      //தொடர்ந்து படிக்கிறேன்.//

      வெரி குட். சந்தோஷம் :)

      //இப்போ போனில் இருந்து பதில்கள் போடக் கஸ்டமாக இருக்கு கோபு அண்ணன், ஸ்கூல் ஆல் வந்து தொடர்கிறேன்ன்ன்...//

      ஓக்கே .... ஓக்கே .... நோ ப்ராப்ளம் அட் ஆல். மெதுவாகவே வாங்கோ, போதும்.

      பின்னூட்ட சிறப்பு எண்ணிக்கைகளான 100, 101, 108 எல்லாமே எங்கட அதிராவுக்கே கிடைக்க என் வாழ்த்துகள்.

      //இன்று பரிசு எனக்குத்தான், :) அத்தோடு புளொக் ஓனரிடம் சொல்லி கடலைச் சுண்டல் ரெடி பண்ணி வைங்கோ வருகிறேன்.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! வைர நெக்லஸ் பரிசுடன், நல்ல தேறிய ருசியான நிலக்கடலைச் சுண்டல், நிறைய தேங்காய் துருவிப்போட்டு, காரசாரமாக செய்து வைக்கச் சொல்லியிருக்கிறேன்.

      நம் இருவருக்கும் ஆளுக்கு ஒரு கிலோவாவது வேண்டும் எனச் சொல்லி இருக்கிறேன். போதும்தானே அதிரா? :)))))))

      [நம் அஞ்சுவுக்கு மட்டும் கொஞ்சம் கொடுக்கலாமா?]

      நீக்கு
    2. எங்கே சுண்டல்? தந்தால்தானே தொடர்ந்து படிக்க முடியும்... அஞ்சுவுக்கு காரம் குறைச்சுப் போட்டுத்தரச் சொன்னா:)

      நீக்கு
    3. ///பின்னூட்ட சிறப்பு எண்ணிக்கைகளான 100, 101, 108 எல்லாமே எங்கட அதிராவுக்கே கிடைக்க என் வாழ்த்துகள்///
      வாழ்த்துச் சொல்வது இருக்கட்டும்.. முதலில் பரிசைக் கொடுங்கோ நான் போகோணும் ஸ்கூலுக்கு:))

      நீக்கு
    4. athira

      //எங்கே சுண்டல்?//

      என்ன கிண்டலா?

      //தந்தால்தானே தொடர்ந்து படிக்க முடியும்...//

      எனக்கும் இதுவரை முனைவர் ஐயா கொடுக்கவே இல்லை. இப்போ நாம் என்ன செய்யலாம்?

      //அஞ்சுவுக்கு காரம் குறைச்சுப் போட்டுத்தரச் சொன்னா:) //

      சந்தடி சாக்கில் ..... இது வேறயா ?

      105

      >>>>>

      நீக்கு
    5. athira

      **பின்னூட்ட சிறப்பு எண்ணிக்கைகளான 100, 101, 108 எல்லாமே எங்கட அதிராவுக்கே கிடைக்க என் வாழ்த்துகள்**

      //வாழ்த்துச் சொல்வது இருக்கட்டும்..//

      என்ன அப்படிச் சொல்லிப்புட்டீங்கோ. தியாகராஜ ஸ்வாமிகள் பற்றிய பதிவினைப் பக்தியுடன் படிக்க வந்திருக்கீங்கோ. ஸ்ரீ ராம பிரஸாதமான வாழ்த்துகள் முக்கியமில்லையோ !

      //முதலில் பரிசைக் கொடுங்கோ நான் போகோணும் ஸ்கூலுக்கு:)) //

      பெரியவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா திருக்கரங்களால் கிடைக்கப்போகும் வைர நெக்லஸ் முக்கியமா அல்லது ஸ்கூல் ஆயா வேலை முக்கியமா?

      அஞ்சு ......... நீங்களே வந்து நியாயம் சொல்லுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

      106

      நீக்கு
  43. ///இவற்றையெல்லாம் என் பாணியில் இன்னும் நகைச்சுவையாக என் வலைத்தளத்தினில் மிகப்பெரிய தொடராக எழுத வேண்டும் என்ற ஆசையும் இருந்து வந்தது. ஏனோ அதற்கான என் முயற்சிகள் இதுவரை தொடர முடியாமலேயே போய் விட்டன. ப்ராப்தம் இருந்தால் பிறகு பார்ப்போம்.///

    ஏன் கோபு அண்ணன் கடந்த சில காலமாக எதுவுமே எழுதாமல்தானே இருந்தீங்க? அப்போ இதை ஒரு நோட் புக்கில் எழுதி வந்திருக்கலாமெல்லோ... இப்பவும் ஒன்றும் குறைந்து விடவில்லை.. எழுத ஆரம்பியுங்கோ... ஆனா ஒரு கண்டிஷன்... பென்னாஆஆஆஆம் பெரிய தொகுப்பாகப் போட்டால் நான் பாதிதான் படிப்பேன்ன்... என்னிடமுள்ள குட்டிக் கிட்னியால:) பெரிய பெரிய பரா எல்லாம் ஒரே நேரத்தில படிக்க முடியாது, அதனால சிறு பகுதியாக்கி எழுதும்படி மேன்மைமிக்க பிரித்தானிய நீதிபதி அவர்கள் ஆணையிடுகிறார்ர்(அது நாந்தேன்ன்ன்:)).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira

      **இவற்றையெல்லாம் என் பாணியில் இன்னும் நகைச்சுவையாக என் வலைத்தளத்தினில் மிகப்பெரிய தொடராக எழுத வேண்டும் என்ற ஆசையும் இருந்து வந்தது. ஏனோ அதற்கான என் முயற்சிகள் இதுவரை தொடர முடியாமலேயே போய் விட்டன. ப்ராப்தம் இருந்தால் பிறகு பார்ப்போம்.**

      //ஏன் கோபு அண்ணன் கடந்த சில காலமாக எதுவுமே எழுதாமல்தானே இருந்தீங்க?//

      அதிரடியாகப் பின்னூட்டமிடும் அதிரா போன்ற நல்லவர்களைக் காணுமே என்பதற்காகத்தான் நான் எழுதாமல் விட்டு விட்டேன்.

      //அப்போ இதை ஒரு நோட் புக்கில் எழுதி வந்திருக்கலாமெல்லோ...//

      கையால் பேனா பிடித்து நோட் புக்கில் எழுதுவதையெல்லாம் நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சு, அதிரா.

      //இப்பவும் ஒன்றும் குறைந்து விடவில்லை.. எழுத ஆரம்பியுங்கோ...//

      என்னதை ஆரம்பித்து .... என்னத்தை எழுதி ....

      (’நான்’ என்ற தமிழ் திரைப் படத்தில் ‘என்னத்தைக் கண்ணைய்யா’ என்ற நகைச்சுவை நடிகர் சொல்லுவது போல இதைச் சொல்லிப் படியுங்கோ)

      //ஆனா ஒரு கண்டிஷன்...//

      ஹைய்ய்ய்ய்ய்ய்ய்யோ ! அது என்னவோ?

      //பென்னாஆஆஆஆம் பெரிய தொகுப்பாகப் போட்டால் நான் பாதிதான் படிப்பேன்ன்... என்னிடமுள்ள குட்டிக் கிட்னியால:) பெரிய பெரிய பரா எல்லாம் ஒரே நேரத்தில படிக்க முடியாது, அதனால சிறு பகுதியாக்கி எழுதும்படி மேன்மைமிக்க பிரித்தானிய நீதிபதி அவர்கள் ஆணையிடுகிறார்ர்(அது நாந்தேன்ன்ன்:)). //

      உத்தரவு ...... மகாகனம் (124 Kgs. according to our அஞ்சு) பொருந்திய பிரித்தானிய நீதிபதி அவர்களே !

      107

      நீக்கு
  44. ////வை.கோபாலகிருஷ்ணன்வியாழன், 26 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 2:46:00 IST
    இதன் பாடலாசிரியர் : வாலி

    படம்: MGR நடித்த “தெய்வத்தாய்”

    வெளியான ஆண்டு: 1964

    இசை: விஸ்வநாதன் இராமமூர்த்தி

    பாடியவர்: T M செளந்தர ராஜன்///

    நல்லாத்தானே போய்க்கொண்டிருந்துது:) இடையில என்னாச்சு கோபு அண்ணனுக்கு?:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira

      **இதன் பாடலாசிரியர் : வாலி
      படம்: MGR நடித்த “தெய்வத்தாய்”
      வெளியான ஆண்டு: 1964
      இசை: விஸ்வநாதன் இராமமூர்த்தி
      பாடியவர்: T M செளந்தர ராஜன்**

      //நல்லாத்தானே போய்க்கொண்டிருந்துது:) இடையில என்னாச்சு கோபு அண்ணனுக்கு?:)) //

      இதுவும் ஸ்ரீ ராமரின் லீலை :) ......

      ஐ மீன் நம்ம ’ஸ்ரீராம்’-இன் லீலை :))

      பூஜை வேளையில் கரடியை நுழைத்து விட்டார். :)))

      108

      நீக்கு
  45. ///வை.கோபாலகிருஷ்ணன்செவ்வாய், 24 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 8:31:00 IST
    8)

    இன்று இவர் ராஜாவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு, அரண்மனைக்குச் செல்வாரானால், பிறகு எப்போதெல்லாம் அவர் அழைக்கிறாரோ அப்போதெல்லாம் இவர் அங்கு செல்ல வேண்டிய நிர்பந்தங்கள் ஏற்படும்.

    ஸ்ரீ ராமனைப் பாடிய வாயால் ராஜாவைப் புகழ்ந்து, நரஸ்துதி செய்ய வேண்டிய சூழ்நிலைகளுக்கும் அடிமையாகலாம்.

    இதையெல்லாம் யோசித்து அவர் அங்கு அரண்மனைக்கு வர மறுத்ததே புத்திசாலித்தனமாகும்////

    ஹா ஹா ஹா இது முன்னமே என் கண்ணில் படாமல் போச்ச்ச்சேஎ:)).. கொமெண்ட்ஸ் போட அழைச்சால் போயிடக்கூடாது:), புத்திசாலித்தனமா போகாமல் இருக்கோணும் ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira

      **இன்று இவர் ராஜாவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு, அரண்மனைக்குச் செல்வாரானால், பிறகு எப்போதெல்லாம் அவர் அழைக்கிறாரோ அப்போதெல்லாம் இவர் அங்கு செல்ல வேண்டிய நிர்பந்தங்கள் ஏற்படும்.

      ஸ்ரீ ராமனைப் பாடிய வாயால் ராஜாவைப் புகழ்ந்து, நரஸ்துதி செய்ய வேண்டிய சூழ்நிலைகளுக்கும் அடிமையாகலாம்.

      இதையெல்லாம் யோசித்து அவர் அங்கு அரண்மனைக்கு வர மறுத்ததே புத்திசாலித்தனமாகும்**

      //ஹா ஹா ஹா இது முன்னமே என் கண்ணில் படாமல் போச்ச்ச்சேஎ:)).. கொமெண்ட்ஸ் போட அழைச்சால் போயிடக்கூடாது:), புத்திசாலித்தனமா போகாமல் இருக்கோணும் ஹா ஹா ஹா..//

      நீங்களும் புத்திசாலியாக இருப்பதால், இது முன்னமேயே உங்கள் கண்களில் படாமல் இப்போது பட்டுள்ளது. இனி ராஜாவிடமிருந்து அழைப்பு வர அநேகமாக சான்ஸே இருக்காது. போதுமா !

      (ஏதேதோ சொல்லி இந்தமுறை எப்படியோ சமாளித்து விட்டேன் .... ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா)

      109

      நீக்கு
  46. ///ஸ்ரீராமர் விக்ரஹத்தை காவிரியில் போட்டுவிட்ட இவரின் தமையனார் ஜப்ஜேஷன் அவர்களுக்கு கடைசி காலத்தில் கைகள் இரண்டும் இழுத்துக்கொண்டு மிகவும் சிரமம் ஏற்பட்டுவிடுகிறது.

    தன் தம்பியாகவே இருப்பினும் அவனிடம், தான் செய்துள்ள பாவங்களுக்கெல்லாம் மன்னிப்புக் கேட்டு அழுகிறார்///

    அவ்வளவு மிடுக்காக இளமைக் காலத்தில் இருந்தவரின் நிலைமை முடிவில் இப்படி ஆச்சே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira

      **ஸ்ரீராமர் விக்ரஹத்தை காவிரியில் போட்டுவிட்ட இவரின் தமையனார் ஜப்ஜேஷன் அவர்களுக்கு கடைசி காலத்தில் கைகள் இரண்டும் இழுத்துக்கொண்டு மிகவும் சிரமம் ஏற்பட்டுவிடுகிறது. தன் தம்பியாகவே இருப்பினும் அவனிடம், தான் செய்துள்ள பாவங்களுக்கெல்லாம் மன்னிப்புக் கேட்டு அழுகிறார்**

      //அவ்வளவு மிடுக்காக இளமைக் காலத்தில் இருந்தவரின் நிலைமை முடிவில் இப்படி ஆச்சே... //

      நிஜமாலுமே இளமையாக இருப்பவர்களும், என்றும் இளமையோ இளமைதான் என மிடுக்காகவும் போலியாகவும் இன்று சொல்லித் திரிபவர்களும் இதைப் படித்து உணர வேண்டும்.

      110

      நீக்கு
  47. //நான் எழுதும் எந்தவொரு தொடரையும், பல சிறுசிறு பகுதிகளாக, முழுவதுமாக DRAFT ஆக COMPOSE செய்து என்னிடம் தயாராக வைத்துக்கொண்ட பிறகே அதன் முதல் பகுதியை வெளியிடுவது வழக்கம் ..... ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளைப் பற்றி நான் 2013-இல் எழுதிய 108 பகுதிகள் கொண்ட மெகா பதிவு உள்பட. ///

    ஓஒ உங்கள் சிதம்பர ரகசியத்தை... என் இந்த 100 ஆவது கொமெண்ட் க்காகப் படிச்சு தெரிஞ்சு கொண்டேன்ன்... நான் எல்லாம் எதையும் ஏற்கனவே தயார் செய்து வைப்பதில்லை...

    மனதில் நினைத்து வைப்பேன்ன்... வந்து கொம்பியூட்டர் முன் அமர்ந்து கடகடவெனத் தட்டி.. உடனேயே போட்டு விட்டு உடனேயே கொமெண்ட்ஸ் ஐ எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் ஹா ஹா ஹா.. என் பரிசை அஞ்சுவிடம் கொடுத்தனுப்பவும்... யூ நோஒ.. ம்மீ இஸ் அ பிஸி கேர்ள்:)).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira

      **நான் எழுதும் எந்தவொரு தொடரையும், பல சிறுசிறு பகுதிகளாக, முழுவதுமாக DRAFT ஆக COMPOSE செய்து என்னிடம் தயாராக வைத்துக்கொண்ட பிறகே அதன் முதல் பகுதியை வெளியிடுவது வழக்கம் ..... ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளைப் பற்றி நான் 2013-இல் எழுதிய 108 பகுதிகள் கொண்ட மெகா பதிவு உள்பட.**

      //ஓஒ உங்கள் சிதம்பர ரகசியத்தை... என் இந்த 100 ஆவது கொமெண்ட் க்காகப் படிச்சு தெரிஞ்சு கொண்டேன்ன்... நான் எல்லாம் எதையும் ஏற்கனவே தயார் செய்து வைப்பதில்லை...

      மனதில் நினைத்து வைப்பேன்ன்... வந்து கொம்பியூட்டர் முன் அமர்ந்து கடகடவெனத் தட்டி.. உடனேயே போட்டு விட்டு உடனேயே கொமெண்ட்ஸ் ஐ எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் ஹா ஹா ஹா..//

      நீங்கள் யாரு ... உங்கள் சாமர்த்யம் என்ன ... செல்வாக்கு என்ன ... எப்போதுமே ஸ்வீட் சிக்ஸ்டீனாகவே இருப்பதாகச் சொல்லி வரும் (கதைவிடும்) இளமைத் துள்ளல் என்ன ... உங்களுடனெல்லாம் இந்த மிகச் சாதாரணமானவனால் போட்டிபோட முடியுமா?

      //என் பரிசை அஞ்சுவிடம் கொடுத்தனுப்பவும்...//

      வரும் நபர் அஞ்சு தான் என்பதை எப்படி நான் அடையாளம் காண்பது? ஆதரிஸேஷன் லெட்டர் கொடுத்தனுப்புங்கோ, ப்ளீஸ்.

      //யூ நோஒ.. ம்மீ இஸ் அ பிஸி கேர்ள்:)). //

      தட் ...... ஐ நோ ...... ஐ நோ ...... ஐ மீன் தாங்கள் ஒரு ஃபீமேல் என்பதை :))

      இங்கு வெற்றிகரமாக 100-வது பின்னூட்டமிட்டுள்ள அதிரா, மேலும் 100 ஆண்டுகளோ அல்லது 200 ஆண்டுகளோ, ஸ்வீட் சிக்ஸ்டீன் ஆகவே இளமையுடன் + பேரெழுச்சியுடன் இருக்கட்டும் என மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம்.

      111

      நீக்கு
    2. இந்த ஒரே பதிவுக்கு, பூனைக்குட்டி போல, பதுங்கிப் பதுங்கி இதுவரை 14 முறைகள் பாய்ந்து பாயந்து, வருகை தந்து கருத்தளித்துள்ள ‘அதிரா மியாவ்’ அவர்களுக்கு நம் ஸ்பெஷல் பாராட்டுகள். எல்லோரும் ஜோராகக் கைத்தட்டுங்கோ. :)

      அதிரடி அதிராவின் இந்தச் செயலாலேயே பின்னூட்டங்களின் எண்ணிக்கை இன்று 100-ஐ த்தொட்டு, பின்பு 101-யும் தொட்டு, பின்பு 108-ஐ யும் தாண்டி இப்போது சற்று முன்பு 111 ஆகி இப்போது இத்துடன் 112 எனக் காட்டுகிறது.

      இங்கு பின்னூட்டமிட்டுள்ள அனைவருக்கும், ஸீதா லக்ஷ்மண பரதச் சத்ருக்கண ஹனூமத் ஸமேத ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தியின் அருளும் அனுக்கிரஹமும் கிடைத்து, வாழ்க்கையில் ஸகல க்ஷேமங்களும், செளக்யங்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

      எல்லோருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      112

      நீக்கு