வெள்ளி, 21 அக்டோபர், 2011

சொர்க்கத்தைப் பார்த்தேன்

கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு பஸ்சில் வந்தோம். 400 கி.மீ. தூரம். பஸ்கள் சொகுசானவை. ஏசி பொருத்தப்பட்டவை. ரோடுகள் 6 வழி எக்ஸ்பிரஸ் வே. ரோடுகளில் எந்த குண்டு குழிகளும் கிடையாது. பஸ்கள் ரோடுகளில் அப்படியே வழுக்கிக்கொண்டு போகின்றன.  ஒரு குலுங்கல் இல்லை. 400 கி.மீ. தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்து விட்டோம். 100 கி.மீ. தூரத்துக்கு ஒரு இடத்தில் கடை, பாத்ரூம் வசதிகள் இருக்கின்றன. பாத்ரூம்கள் அவ்வளவு சுத்தமாக இருக்கின்றன. யாரும் காசு கேட்பதில்லை.

ரோடில் வருபவர்களுக்காக சுங்கச்சாவடி, குடிஉரிமைச் சோதனைச்சாவடி ஆகியவை “வுட்லேண்ட்” என்னுமிடத்தில் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குத் தனித்தனியாக இருக்கின்றன. இரண்டு இடங்களிலும் நம் பாஸ்போர்ட், விசா ஆகியவைகளைக் காண்பித்து “சாப்பா” (ரப்பர் ஸ்டாம்ப்) குத்திக்கொள்ளவேண்டும். இவைகளை தவறு இல்லாமல் செய்யவேண்டும். எங்காவது தவறு நடந்து விட்டால் அடுத்த குடியுரிமைச் சோதனையில் நம்மை ஒரு வழி ஆக்கிவிடுவார்கள். ஒரு சிறுவன் இம்மாதிரி ஒரு தவற்றினால் ஒன்றரை மணி நேரம் போராடி அவனை மீட்டு எடுத்து வருவதற்குள் டூர் ஏஜென்டுக்கு தாவு தீர்ந்து விட்டது. எங்கேயோ ஒரு இடத்தில் அவனுடைய பாஸ்போர்ட்டில் சீல் வைக்காமல் வந்துவிட்டான். அவ்வளவுதான். அவனை தீவிரவாதிகள் ரேன்ச்சுக்கு விசாரித்து அவனை விட அவ்வளவு நேரம் ஆயிற்று.

டூர் போவதென்றால் யாரும் வழிச்செலவுக்கு பணம் எடுத்துக்கொள்ளாமல் புறப்பட மாட்டார்கள். டூரிஸ்ட் கம்பெனியே எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொள்வதால் நாம் கொண்டுபோன பணம் அப்படியே இருக்கிறது. அதை திரும்பக் கொண்டு வந்து இங்கே என்ன செய்யப்போகிறோம்? அதற்குத்தான் சிங்கப்பூருக்கு கூட்டி வருகிறார்கள். எவ்வளவு பணம் இருந்தாலும் அத்தனையையும் செலவு செய்ய இங்கே வசதிகள் செய்து வைத்திருக்கிறார்கள். அதிக அலைச்சல் கூட இல்லை. ஒரே கடையில் நீங்கள் கொண்டுபோன அனைத்துப் பணத்தையும் செலவு செய்ய சாமான்கள் வைத்திருக்கிறார்கள். “முஸ்தபா சென்டர்” என்று அதற்குப் பெயர். அம்மா, அப்பா தவிர அனைத்துப் பொருட்களும் அங்கே கிடைக்கும். நான் 20 வருடத்திற்கு முன்பு பார்த்ததை விட பல மடங்கு வளர்ந்திருந்ததைப் பார்த்தேன். இதைத் தவிர இன்னும் ஏராளமான கடைகள் இருக்கின்றன. அத்தனையிலும் ஜனங்கள் மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் சிங்கப்பூரை “வாங்குபவர்களின் சொர்க்கம்” என்று கூறுகிறார்கள்.

சிங்கப்பூரில் நாங்கள் பார்த்த முக்கிய இடங்களின் லிஸ்ட்டும் போட்டோவும் மட்டும் கொடுத்திருக்கிறேன். ஏனென்றால் வாசகர்களில் அநேகர் சிங்கப்பூரைப் பார்த்திருப்பார்கள்.

1.   சென்டோஸா தீவு





2.   
சிங்கப்பூர் ஃப்லையர்


3.   சங்கி ஏர்போர்ட்


4.   சிங்கப்பூர் சிங்கம்


5.   மாரியம்மன் கோவில்
  
   
   கொசுறு; கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். சென்டோசா லேசர் ஷோவைப் பார்க்கலாம்.
  
  http://www.youtube.com/watch?v=AuCVmyxXO4Y









14 கருத்துகள்:

  1. very good experience.i like the way of writing and photos.thanks for sharing them..

    பதிலளிநீக்கு
  2. //Powder Star - Dr. ஐடியாமணி said...
    very good experience.i like the way of writing and photos.thanks for sharing them..//

    வாங்க, ஐடியாமணி, மொத போணி நீங்கதான்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பயண அனுபவக் கட்டுரை ஜயா....வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கு

    பதிலளிநீக்கு
  4. அய்யா உங்க பதிவு எனக்கு உபயோகமா இருக்கும்னு நெனைக்கிறேன்..ஏன்னா நானும் அடுத்த மாதம் குடும்பத்துடன் போகால்ம்னு இருக்கேன் நன்றி!

    பதிலளிநீக்கு
  5. நல்ல அனுபவங்கள் சார். கூடிய விரைவில் நானும் ஒரு சுற்றுலா சென்று வந்து அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. சிங்கப்பூரை சுத்தி பாத்தா மாதிரியும் ஆச்சு !!!! உங்க பதிவ படித்தமாதிரியும் ஆச்சு!!!!! பென்டாஸ்டிக் டூர் !!கங்கிராட்ஸ்,,,,,,

    பதிலளிநீக்கு
  7. ///வாசகர்களில் அநேகர் சிங்கப்பூரைப் பார்த்திருப்பார்கள்///

    நானெல்லாம் தமிழ்நாட்டையே தாண்டினது இல்லை அய்யா எதோ உங்க புண்ணியத்துலே படத்திலாவுது பாத்துக்கரம்ங்கோ

    பதிலளிநீக்கு
  8. //veedu said...
    ///வாசகர்களில் அநேகர் சிங்கப்பூரைப் பார்த்திருப்பார்கள்///

    நானெல்லாம் தமிழ்நாட்டையே தாண்டினது இல்லை அய்யா எதோ உங்க புண்ணியத்துலே படத்திலாவுது பாத்துக்கரம்ங்கோ//

    தம்பி, உங்களுக்கு இன்னும் வயதிருக்கின்றது. கண்டிப்பாக ஒரு நாள் சிங்கப்பூரைப் பார்ப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. அருமையான அனுபவப் பகிர்வுகளுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. சிங்கப்பூர் சிங்கம்.

    அப்ப தாராபுரம் தங்கமா?

    நானும் ஒரு காலத்தில் இந்த வெளிநாட்டு பயணங்கள் என்றால் நண்பர் சொன்னது போல ஆஆஆஆ வென்று பொளந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தேன்.

    ஆனால் சரியான எரிச்சல். பாருங்க வூட்ல உட்கார்ந்துகிட்டு இடைவெளி விடாம மென்னுகிட்டு இருக்கிற சொகமே தனி. என்னவொன்று காசை சேமித்து வைக்கும் அளவுக்கு வருமானம் இருக்கனும்.

    பதிலளிநீக்கு
  11. சுவையான பயணத்தில் எங்களையும் அழைத்துச் சென்றதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. //JOTHIG ஜோதிஜி said...
    சிங்கப்பூர் சிங்கம்.

    அப்ப தாராபுரம் தங்கமா?

    ஆனால் சரியான எரிச்சல். பாருங்க வூட்ல உட்கார்ந்துகிட்டு இடைவெளி விடாம மென்னுகிட்டு இருக்கிற சொகமே தனி. என்னவொன்று காசை சேமித்து வைக்கும் அளவுக்கு வருமானம் இருக்கனும்.//

    உண்மையிலேயே அந்த சொகத்துக்கு ஈடு இணை எதுவுமில்லீங்க. ஆனா, ஒடம்பு ஒத்துக்கோணுமுங்க.

    அப்புறம் காசை நாம மேல போறப்ப கொண்டு போலாமான்னு பல பேங்குகள்ல விசாரிச்சனுங்க. ஒரு பயலும் ஒத்துக்க மாட்டேன்கறான். அப்புறம் பேரன்களுக்கு உட்டுட்டுப் போகலாம்னு பார்த்தா, அவனுக, தாத்தா நீங்க வச்சுக்கிட்டிருக்கறதெல்லாம் ஒரு பணமா, நீங்களே செலவழிச்சுட்டுப் போயிடுங்க, அப்படீங்கறாங்க. அதான் சரி, இப்படி கொஞ்சம் காசைத் தீர்க்கலாம்னு போய்ட்டு வந்தமுங்க.

    பதிலளிநீக்கு