புதன், 2 நவம்பர், 2011

சிறு குழந்தையை இம்சிப்பது எப்படி?


நான் மூன்று நாட்களுக்கு முன் என் நண்பருடைய ஊருக்குப் போயிருந்தேன். அங்கு அவருடைய மச்சினன் பையனுடைய குழந்தைக்கு காது குத்தும் விழா நடந்தது. அந்த விழாவில் கலந்து கொள்வதற்காகத்தான் நான் போயிருந்தேன்.

இந்து மத சம்பிரதாயங்களில் காது குத்துதல் ஒரு முக்கிய சடங்காகும். குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் இந்த சடங்கை முடிக்கவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் இரண்டு வருடம் தாள்ளிப்போட வேண்டும். ஆகவே பெரும்பாலான குடும்பங்களில் இந்த விழாவை ஒரு வருடத்திற்குள் முடித்து விடுவார்கள். பொதுவாக அவரவர்கள் குல தெய்வக் கோயிலில்தான் இந்த வைபவம் நடக்கும்.


முதலில் குழந்தைக்கு மொட்டை போடவேண்டும். குழந்தையை தாய் மாமன் மடியில் வைத்துக்கொள்ள, தலை ஆடாமல் இருக்க ஒரு நாலு பேர் பிடித்துக்கொள்வார்கள். குழந்தைக்கு இந்த அனுபவம் புதிதாகையால் முடிந்த மட்டும் அழும். இந்த அழுகையைப் பொருட்படுத்தாமல் நாவிதர் கருமமே கண்ணாக தன் வேலையை முடிப்பார். இந்தக்காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.


அடுத்தது குழந்தையைக் குளிப்பாட்டுவார்கள். குளிப்பாட்டும்பொது சாதாரணமாகவே குழந்தைகள் அழுவார்கள். அதுவும் பலர் வேடிக்கை பார்க்க, புது இடத்தில் குளிப்பாட்டும்போது கேட்கவே வேண்டாம்.


அப்புறம் காது குத்துதல். இப்பொதும் குழந்தையை நாலு பேர் பிடித்துக்கொள்ள, ஆசாரியார் காது குத்தி தளுக்கனைப் போட்டு விடுவார். இப்போதும் குழந்தை அழும்.

இந்தக் கூத்தெல்லாம் முடிந்த பிறகு குழந்தையைப் பார்க்க சகிக்காது. முகமெல்லாம் சிவந்து வீங்கி அலங்கோலமாக இருக்கும். நான்கு நாள் போனால் இதே குழந்தை தன் தளுக்கைப் பார்த்து சந்தோஷப்படும். அது வேறு கதை.


9 கருத்துகள்:

  1. மலேசியால இருந்தீங்க.. இப்ப திடீர்னு காதுகுத்துக்குப்போயிட்டீங்க!!!!..

    திரும்பவும் எப்ப சார் வர்றீங்க?...

    பதிலளிநீக்கு
  2. //பட்டாபட்டி.... said...
    மலேசியால இருந்தீங்க.. இப்ப திடீர்னு காதுகுத்துக்குப்போயிட்டீங்க!!!!..

    திரும்பவும் எப்ப சார் வர்றீங்க?//

    நீங்க எப்ப வர்றீங்க?

    பதிலளிநீக்கு
  3. //கோவை நேரம் said...
    காது குத்தி விட்டீர்கள் ..//

    உங்களுக்கு இன்னுமா காது குத்தல? எத்தன தடவ சார் காது குத்துவாங்க?

    பதிலளிநீக்கு
  4. குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதுதான் பெரிய இம்சை. இப்போதெல்லாம் காது குத்துவதற்கு”கன்” வைத்திருக்கிறார்கள். “இம்”எனும் முன்பே காது குத்தல் நடந்து விடுகிறது.

    பதிலளிநீக்கு
  5. காது குத்தும் போது அவங்க (குழந்தை) அழுவாங்க. அடுத்த வருஷத்துலேர்ந்து விதவிதமான “கம்மல்” வாங்கச் சொல்லும் போது “அப்பா” அழுவாரு.

    பதிலளிநீக்கு
  6. பட்டாபட்டி

    வருவார் ஆனா எப்ப வருவார்ன்னு அவருகே தெரியாது?

    காது குத்தும் நிகழ்ச்சியில் குழந்தைகள் படும் அவஸ்த்தையை விட சுற்றி நிற்கும் கூட்டங்கள் கொடுக்கும் கட்டளைகள் இருக்குதே அது தான் கொடும?

    ஏறக்குறைய மஞ்சிவிரட்டு களேபரம் போலவே இருக்கும்.

    எப்படியே இதையெல்லாம் தாண்டி வந்தாச்சு.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஐயா,
    நலமா?

    காது குத்தல் பற்றி சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீங்க.

    பதிலளிநீக்கு
  8. சார் தலைப்பே இப்படி வயலாண்டா இருக்கே. அப்புறம் என் அண்ணன் பையன் மொட்டை அடிக்கும்போது தூங்கி விட்டான். (நாவிதர் கைப்பக்குவம் அப்படி). காது குத்தும்போது மட்டும் கொஞ்சம் அழுதான்.

    பதிலளிநீக்கு