வியாழன், 8 டிசம்பர், 2011

சில தனிப்பாடல்கள்



திருவண்ணாமலை தீபத்திருநாளாம் இன்று மூன்று முத்தான பாடல்களைத் தந்துள்ளேன். படித்து பலன் பெறுக.

மெய் வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொளார்
கருமமே கண்ணா யினார்.

கல்லாப் பிழையும் கருதாப் பழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின்னஞ்செழுத்தை
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.

மானங்குலங் கல்வி வண்மை அறிவுடைமை தானந்
தவம் முயற்சி தாளாண்மை தேனின் கசிவந்த
சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் பசி வந்திடப்
பறந்து போம்.


9 கருத்துகள்:

  1. முத்தான மூன்று பாடல்களின் பகிர்வு அருமை. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. மூன்றும் முத்துக்கள் சார். ஒரு சின்ன மாற்றம் செய்யலாமே.
    //படுத்து பலன் பெறுக.//
    படித்து பலன் பெறுக.
    பகிர்விற்கு நன்றி சார்!
    இதையும் படிக்கலாமே :
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன். தவறு நடந்துவிட்டது. குறிப்பிட்டமைக்கு நன்றி. திருத்தி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  4. மூன்றுமே நல்ல பாடல்கள் ஐயா. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அட... நீங்களே எழுதலாமே சார்...இப்படி பாட்டுகளை எல்லாம்?

    அன்புடன்,
    ஆர்.ஆர்.ஆர்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான பாடல்கள் ,பகிர்வுக்கு மிக்க நன்றி
    தமிழ்மணம் 4 வது வாக்கு

    பதிலளிநீக்கு