திங்கள், 20 அக்டோபர், 2014

ஆப்பிள் கன்னங்களும் ....... அபூர்வ எண்ணங்களும் !

இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்

விமர்சனம்

இளம் வயதில் ஏற்படும் உறவுகள் பல பரிமாணங்களில் ஏற்படும். அறியாப் பருவ சிநேகிதம் கால ஓட்டத்தில் எப்படி பரிணமிக்கும் என்று யூகிக்க முடியாது. சகோதர பாசமாகவோ அல்லது காதலாகவோ மாறும் சாத்தியக் கூறுகள் சூழ்நிலையைப் பொருத்தே அமையும்.

இந்தக் கதையில் அவன் அதைக் காதலாக எண்ணுகிறான். ஆனால் அந்தப் பெண்ணோ அதை சகோதர பாசமாக எண்ணிக் கொண்டிருக்கிறாள். இதற்கு காரணம் பெண்களின் மன வளரச்சி ஆண்களை விட துரிதமாக ஏற்பட்டு விடுகிறது. பெண் தன் எதிர் காலத்தை துல்லியமாகத் திட்டமிடுகிறாள். ஆணுக்கு அந்த திறமை வெகு நாட்களுக்குப் பிறகே ஏற்படுகிறது.

இந்த நுணுக்கமான உணர்ச்சிப் போராட்டத்தை வெகு நாசூக்காக கதாசிரியர் சொல்லியிருக்கும் விதம் பாராட்டுதலுக்குரியது. எந்த விதமான விரசங்களும் இல்லாமல் ஒரு காதல் கதையை சொல்வது மிகவும் சிரமம். திரு வை.கோ. அதை நிறைவாக செய்திருக்கிறார்.

தன் கற்பனைகள் சிதையும்போது கதாநாயகன் அதை மிகவும் நாகரிகமாக எடுத்துக் கொள்கிறான். இந்தக் கதை ஐம்பது வருடங்களுக்கு முன்  இருந்த சமூக சூழ்நிலையில் நடக்கக் கூடிய கதை. இன்று காலம் மாறி விட்டது. கதாநாயகன் கதாநாயகிக்கு தான் வரைந்த அவளுடைய ஓவியத்தை பரிசாக தருவதற்குப் பதில் முகத்தில் ஆசிட் வீசியிருப்பான்.

ஒரு நல்ல எளிமையான கதை. மனதிற்கு இதமாக இருந்தது.


5 கருத்துகள்:

  1. இன்றைய காதலன் தரும் பரிசு ஆசிட்தான்
    சரியாகச் சொன்னீர்கள் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள ஐயா, வணக்கம்.

    தங்களின் இந்த விமர்சனம் சுருக்கமாகவும் சுவையாகவும் உள்ளது.

    தங்கள் தள வாசகர்களையும், அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.

    தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

    அன்புடன் கோபு [VGK]

    ooooooooooooooooooooooooooo

    பதிலளிநீக்கு
  3. //இன்று காலம் மாறி விட்டது. கதாநாயகன் கதாநாயகிக்கு தான் வரைந்த அவளுடைய ஓவியத்தை பரிசாக தருவதற்குப் பதில் முகத்தில் ஆசிட் வீசியிருப்பான்.//

    காலம் மாறியுள்ள கொடுமையை, ஓரிரு வார்த்தைகளில் சுருங்கச்சொல்லி விளங்க வைத்துள்ளீர்கள்.

    //ஒரு நல்ல எளிமையான கதை. மனதிற்கு இதமாக இருந்தது.//

    சந்தோஷம் ..... மிக்க நன்றி, ஐயா. - VGK

    பதிலளிநீக்கு

  4. நேரில் காணும் நிகழ்வுகளை இரசிக்கும் விதம் கதையாகத் தருவதில் திரு வைகோ அவர்களுக்கு நிகர் அவரேதான். இளம் வயதில் ஏற்படும் இனக் கவர்ச்சியை இதைவிட விரசமில்லாமல் நளினமாக சொல்லமுடியாது. அவரது கதை அருமையென்றால் அதைவிட அருமை தங்களது மதிப்புரை.இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. இந்தக் கதையை அவரது வலை தளத்தில் படித்திருக்கிறேன். அக்கதையை வலைசரச் சரப் பதிவில் குறிப்பிட்டும் இருந்தேன். எனக்கும் பிடித்த கதை

    பதிலளிநீக்கு