செவ்வாய், 15 டிசம்பர், 2015

பிச்சையெடுத்தானாம் பெருமாளு, பிடுங்கித்தின்னானாம் அனுமாரு

   

                                         Image result for அனுமார்

இதுதான் நடக்குது இப்போ சிங்காரச் சென்னையிலே. அராஜகம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இப்போது சென்னை சென்றால் அளிந்து கொள்ளலாம்.

வெள்ளத்தில் அல்ல்லுற்றவர்களுக்காக மாவட்டங்கள்தோறும் பல நிவாரணப்பொருட்களைச் சேகரித்து சென்னைக்கு லாரி லாரியாக அனுப்புகிறார்கள். இவைகளை ஊர் எல்லையிலேயே வழிமறித்து கொள்ளை அடிக்கிறது ஒரு கும்பல். இதைக் கேட்பாரில்லை.

தலைமையே அப்படி இருக்கும்போது யாரையும் குறை சொல்லிப் பலன் இல்லை.

13 கருத்துகள்:

  1. குறை சொல்லிப் பலன்தான் இல்லை
    மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி
    தம+1

    பதிலளிநீக்கு
  2. முத்தாய்ப்பாக தாங்கள் சொல்லியதை நானும் வழிமொழிகின்றேன்.

    பதிலளிநீக்கு
  3. சரியாகச்சொன்னீர்கள்...எனக்கும் ஒரு அனுபவம்..கிட்டியது..http://naanselva.blogspot.com/2015/12/blog-post_12.html

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப லேட். இது முன்னாடியே நடக்க ஆரம்பித்து விட்டது.

    பதிலளிநீக்கு
  5. மனம் வருத்தம் தரும் நிகழ்வுகள்
    கேட்கவே சங்கடமாகத்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  6. வேதனையான விடயமே இனியெனும் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வழியுண்டா ?
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  7. இதைத்தான் மனித நேயம் வெளிப்படும்போது மனிதனின் ஈன குணமும் வெளிப்படுகிறது என்று சொல்லி வருகிறேன்

    பதிலளிநீக்கு
  8. அது மட்டும் இல்ல அப்பா...இங்கிருந்து கடலூருக்கு நிவாரணப்பொருட்கள் எடுத்துசென்றவர் கை எலும்பு பிசகி உள்ளது..அந்த அளவு வன்முறையோடு அவர்கள் உள்ளனராம்..

    பதிலளிநீக்கு
  9. அய்யா ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னீர்கள். இந்த பதிவிற்குப் பொருத்தமான இன்னும் சில பழமொழிகள்.

    ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
    எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
    கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
    கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
    காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
    சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.
    செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
    தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
    நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.

    பதிலளிநீக்கு
  10. நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடுகள் கேட்காமலிருக்குமா?

    நாட்டாமை கொடுத்தது நாட்டுமக்கள் தவறு..

    நன்றாக அனுபவிக்கிறோம்.

    பதிலளிநீக்கு