வெள்ளி, 12 ஏப்ரல், 2013

16.தலைவருக்கும் வட்டத்திற்கும் ஆப்பு


இரண்டு நாளில் மூவரும் திரும்பி வந்தார்கள். செக்கை கொஞ்சம் அலைய விட்டிருக்கிறார்கள். ஆனால் செக்கு சுதாரிப்பாக இருந்ததால் அவரை ஏமாற்ற முடியவில்லை. நான் தலையைப் பார்த்து இனி என்ன செய்வதாக உத்தேசம் என்றேன். இனி நான் பிச்சைதான் எடுக்கவேண்டும் என்றார். நல்லது, நானே அதைத்தான் சொல்லலாமென்று இருந்தேன், அதற்குள் நீயே சொல்லி விட்டாய். எந்தக் கோயிலுக்குப் போக விருப்பம், அதைச் சொன்னால் அந்தக் கோவில் அதிகாரிக்கு ஒரு லெட்டர் தருகிறேன் என்றேன்.

அதற்குள் பொது என் முதுகைச் சுரண்டினான். என்ன என்று திரும்பிக் கேட்டதற்கு குசுகுசுவென்று, இவர்களை இருவரையும் நாம் ஏன் நம் எடுபிடி வேலைகளுக்கு வைத்துக் கொள்ளக்கூடாது, இருவருக்கும் நல்ல அனுபவம் இருக்கிறது, நாம் அதை உபயோகப் படுத்திக் கொள்ளலாமே என்றார். பரவாயில்லையே, நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது, எதற்கும் அவர்கள் அபிப்பராயத்தையும் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.

அவர்களை நீயே கேள் என்று பொதுவிடம் சென்னேன். பொது அவர்களை அந்தப் பக்கமாகத் தள்ளிக்கொண்டு போனார். என்ன டீல் போட்டாரோ தெரியவில்லை. திரும்பும்போது தலைக்கும் வட்டத்திற்கும் வாயெல்லாம் பல். மந்திரி ஐயா, " அவர்கள் ஒத்துக் கொண்டார்கள். எனக்கு தலையும் செக்குவிற்கு வட்டமும் பி.ஏ. வாக இருப்பார்கள் " என்றார். சரி, ஆனால் அவர்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன்.

அவர்களைப் பார்த்து யமலோகம் பார்த்ததை மறக்காதீர்கள். இன்னொரு முறை போனால் திரும்பி வரமுடியாது, ஜாக்கிரதையாயிருங்கள், உங்கள் பழைய வேலைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிடுங்கள் என்று சொல்லி அவர்களை அனுப்பினேன்.

இப்படி நடந்து கொண்டிருக்கும்போதே ரெண்டு தடவை போன். யாரென்று பார்த்தால் நம் நிதி மந்திரி. என்னவென்று கேட்டேன். அதற்கு அவர், வரப்போகின்ற தேர்தல் விஷயமாக பி.எம். உங்களைப் பார்க்க விரும்புகிறார். உங்களுக்கு எப்ப சௌகரியப்படும் என்று கேட்கச்சொன்னார், என்றார். நாளைக்கு நான் ப்ரீதான். நீங்கள் மூவரும் பத்து மணிக்கு வந்து விடுங்களேன். அப்படியே லஞ்ச் இங்கேயே சாப்பிட்டுவிடலாம் என்றேன். சரி என்றார்.

மறுநாள் சரியாக பத்து மணிக்கு மூவரும் வந்து விட்டார்கள். என்ன விஷயம் என்று கேட்டேன். தேர்தல் வருகிறது. கட்சியில் இருந்த பணத்தைப் பூராவும் எடுத்து ரிசர்வ் வங்கி கஜானாவில் சேர்த்து விட்டோம். இப்பொழுது தேர்தல் செலவிற்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை என்று கையைப் பிசைந்தார்கள்.

இதற்கா கவலைப் படுகிறீர்கள்? ஒரு கட்சிக்காரனிடத்திலும் காசு இல்லை. போய்க் கேட்டால் ஒருவனும் கொடுக்க மாட்டான். ஆகவே எல்லோரும் ஓட்டாண்டிகள்தான். ஆனால் உங்களுக்கு நான் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள். ஆனால் நான் சொன்ன மாதிரிதான் தேர்தலை நடத்தவேண்டும் என்றேன்.

மூவரும் சாமி மாடு மாதிரி தலையை ஆட்டினார்கள்.

இந்த தேர்தலில் பிரதம மந்திரி மற்றும் நிதி மந்திரி ஆகிய நீங்கள் இருவர் மட்டும்தான் பழைய ஆட்கள். கட்சித்தலைவர் ஏதோ ஆசை வைத்திருக்கிறேன் என்றாரே, அது என்ன என்றேன். அது ஒண்ணும் இல்லீங்க, அவங்க மகனை கொஞ்சம் மேலுக்கு கொண்டு வரவேண்டும், அவ்வளவுதானே, செஞ்சுடுவோம். அவர் இப்போதைக்கு உதவி பிரதம மந்திரியாக இருக்கட்டும். மற்ற மந்திரிகளைப் பற்றி தேர்தல் முடிந்த பிறகு பேசுவோம்.

இப்போது நாம் அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும். பஞ்சாயத்து தேர்தல், உள்ளாட்சித்தேர்தல் இரண்டையும் முதலில் முடித்து விடுவோம். அப்போது நமக்கு ஓரளவு ஜனங்களை எடை போட்டுவிடலாம். இந்த அடிமட்ட தேர்தல்களில் இது வரைக்கும் அரசியலில் ஈடுபடாதவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கவேண்டும். அதற்கு நாம் நம் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவேண்டும். இந்த வேலையை அடிமட்ட கிராமங்களிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு துடிப்பான இளைஞனைத் தேர்ந்தெடுத்து, அவனுக்கு நல்ல பயிற்சி கொடுக்கவேண்டும். ஒரு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் பயிற்சி கொடுக்கவேண்டும். நீதி, நேர்மை, நியாயம். சட்டம், ஒழுங்கு, சமூக முன்னேற்றம், தனிநபர் ஒழுக்கம், கல்வி, தொழில், விவசாயம் ஆகிய துறைகளில் அவர்களை சிறந்தவர்களாக மாற்றவேண்டும்.

இவர்கள்தான் இனிமேல் இந்தியாவை நிர்வகிப்பார்கள். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியைத் தழுவுவார்கள். இவர்களைத்தான் பஞ்சாயத்திற்கும் உள்ளாட்சிகளுக்கும் வரப்போகும் தேர்தலில் நிற்கவைத்து ஜெயிக்கவைக்கப் போகிறோம். இன்னும் இருபது ஆண்டுகளுக்கு எதிர்க் கட்சிகள் எந்தப் பொறுப்பிற்கும் வரக்கூடாது. அதை நான் கவனித்துக் கொள்கிறேன்.

இந்தத் தேர்தல்கள் இவர்களின் பயிற்சி முடிந்ததும் வைத்துக் கொள்ளலாம். பயிற்சி நடக்கும்போதே அவர்களின் திறமைகளை கவனித்து அவரவர்களின் தகுதிக்கு ஏற்ற பதவிகளுக்கு நிற்க வைப்போம். நாம் நிறுத்தும் அனைத்து வேட்பாளர்களும் ஜெயிப்பார்கள். ஏனெனில் அவர்கள் அந்தந்த கிராம மக்களின் ஆதரவு பெற்றவர்கள். இந்தப் பயிற்சிக்கு உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்.

இந்த தேர்தல்கள் முடிந்த பிறகு அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் பாராளுமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் வைத்துக்கொள்ளலாம். இந்தப் பாராளுமன்றத் தேர்தலுக்கு பதிவர்கள் என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் நல்லவர்கள். நீதி,நேர்மைக்குப் பேர் போனவர்கள். அவர்களை முடிந்த மட்டில் வேட்பாளர்களாக நிறுத்துவோம். எதிர்க்கட்சி என்பதே இந்த தேர்தலுக்கு அப்புறம் இருக்கக் கூடாது.  பாராளுமன்றத்திற்கு இனி யமகிங்கரர்ளை  காவலுக்குப் போட்டுவிடலாம். தகராறு பண்ணுகிறவர்களை அவர்கள் நேராக யமபட்டணமே தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள்.

மிச்சம் இருக்கும் பதிவர்களை சட்டசபை உறுப்பினர்களாக்கி விடுவோம்.

 சரியென்று சொல்லிவிட்டு மூவரும் சாப்பிட்டுவிட்டு சென்றார்கள்.

பின் குறிப்பு: இந்த பயிற்சி மற்றும் தேர்தல்கள் நடந்து முடிய கொஞ்ச நாட்கள் ஆகும். அது வரையில் நாம் வேறு பொருட்களைப் பற்றி சிந்திப்போம்.

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

ஒரு நாடு எப்படி முன்னேறும்?


ஒரு நாட்டின் முன்னேற்றம் எப்படி நிகழும்? ஏன் இந்திய நாடு முன்னேற்றமடைவதில் இவ்வளவு இடர்ப்பாடுகள்? நம் நாடு சுதந்திர நாடாகி ஏறக்குறைய 65 ஆண்டுகள் ஆகியும் மற்ற நாடுகளின் முன்னேற்றத்தை அடைய முடியவில்லையே, ஏன்?

இந்த மாதிரி கேள்விகள் அடிக்கடி என் மூளையில் தூக்கம் வராத இரவுகளில் பிராண்டுவதுண்டு. நம் நாட்டில் பல துறைகளிலும் திறமை மிக்கவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களால் நம் நாடு வல்லரசாவதற்குத் தேவையான பல திட்டங்களைத் தயார் செய்ய முடியும். ஆனால் அவைகளை செயல்படுத்துவதற்குத் தேவையான Political Will இல்லை. ஏன்? ஆதிகாலத்திலிருந்தே நாம் கர்மா, கர்ம வினை, பாவ புண்ணியம், மறுபிறவி ஆகியவைகளில் ஆதீத நம்பிக்கை வைத்திருக்கிறோம். ஒருவன் ஒரு தொழில் செய்து நஷ்டமடைந்தால் அது அவன் விதி என்று வெகு சுலபமாக கூறி ஆறுதல் அடைந்து விடுகிறோம்.

அவன் அந்த தொழிலை எவ்வாறு நடத்தினான், காரணம் இல்லாமல் ஒரு தொழில் நஷ்டமடையாதே, அவன் தொழில் ஏன் நஷ்டமடைந்தது? என்று ஒருவரும் சிந்திப்பதில்லை. நல்ல நிபுணர்களைக் கொண்டு அந்த சம்பவத்தை ஆராய்வதில்லை. என் தலையெழுத்து என்று விதியின் பேரில் பழி போட்டுவிட்டு தூங்குவான்.

இந்த மக்களில் சிலர் புத்தி கூர்மையுள்ளவர்கள். அவர்கள் கைதேர்ந்த சுயநலவாதிகள். மற்றவர்களை எப்படி கொள்ளையடித்து நாம் மட்டும் வசதியாக வாழலாம் என்று திட்டமிடுவதில் வல்லவர்கள்.

ஏன் அப்படி சிலர் இருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால் எனக்கு நம் புராணக் கதைகள்தான் நினைவிற்கு வருகிறது. அவைகளில் பல நியாயமற்ற செயல்கள் தடைபெற்றிருக்கின்றன. ஆனால் அவைகளை நியாயப் படுத்தியிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு ஒரு கதை. தேவர்களின் பலம் குறைந்து விட்டது. அவர்களின் மந்திரி யோசனை சொல்லுகிறார். நீங்கள் பாற்கடலை கடைந்தால் அதிலிருந்து அமிர்தம் கிடைக்கும், அதை நீங்கள் பருகினால் மீண்டும் நீங்கள் பலசாலியாகிவிடுவீர்கள் என்கிறார். திட்டத்தில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதை நடைமுறைப்படுத்திய விதத்தைப் பாருங்கள்.

தேவர்களுக்கு தாங்கள் மட்டுமே இந்த வேலையைச் செய்து முடிக்க முடியுமா என்ற சந்தேகம் வருகிறது. கூட்டுச் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். யாரைக் கூட்டுச் சேர்க்கலாம் என்று யோசனை செய்யும்போது அசுரர்களின் நினைவு அவர்களுக்கு வருகிறது.

ஆனால் அசுரர்கள் அவர்களின் பரம்பரை எதிரிகள். அவர்களை அழிப்பதற்காகத்தான் தேவர்கள் தாங்கள் பலசாலிகளாக மாறவேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் தாங்களே தனியாக அந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது. அப்போது அவர்களின் மந்திரி சொல்லுகிறார். ஆபத்திற்கு பாவமில்லை. நாங்கள் அசுரர்களிடம் போய் நைசாகப் பேசி கூட்டுக்கு ஒப்புக்கொள்ள வையுங்கள் என்கிறார்.


அப்படி கூட்டு வைத்தால் அமிர்தத்தில் அவர்களுக்கும் பங்கு கொடுக்கவேண்டுமே, அப்படி அவர்களும் அமிர்தம் சாப்பிட்டால் அவர்கள் நம்மை விட பலசாலியாய் விடுவார்களே, அப்புறம் நாம் எந்தக் காலத்தில் அவர்களை ஜெயிப்பது? என்று ஆட்சேபணை தெரிவிக்கிறார்கள். அப்போது அவர்கள் மந்திரி சொல்லுகிறார். முதலில் அமிர்தத்தை எடுங்கள், அப்புறம் அதை அசுரர்களுக்கு கொடுக்காமல் எப்படி ஏமாற்றலாம் என்று நான் யோசித்து வைக்கிறேன் என்று சொல்கிறார்.


மக்களே, இங்கு என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். ஒரு திட்டம் தீட்டும்போதே, கூட்டாளியை ஏமாற்றலாம் என்று திட்டம் போடுகிறார்கள். மீதி கதை உங்களுக்குத் தெரியும்.

இந்தக் கதையை படித்து வளரும் ஒருவன் இந்த உலகில் எப்படி நியாயமாக நடந்துகொள்வான்? அதுதான் இந்தியாவில் இப்போது நடக்கிறது.

திங்கள், 8 ஏப்ரல், 2013

15. தூதரகத்தில் ரெய்டு


அன்று இரவு தூங்கிக்கொண்டு இருக்கும்போது திடீரென்று ஏதோ சத்தம் கேட்டு விழித்தேன். மணியைப் பார்த்தேன். மணி காலை 2. இன்னேரத்தில் என்ன சலசலப்பு என்று வாயில் காவலாளியைக் கூப்பிட்டுக் கேட்டேன். அவன் ஐயா. நிறைய போலீஸ், மற்றும் பல அதிகாரிகள் வந்து உள்ளே விடும்படி சத்தம் போடுகிறார்கள் ஐயா, என்றான்.

அப்படியா அதில் முக்கிய அதிகாரியை மட்டும் உள்ளே விடு. நான் என் ஆபீசுக்கு வருகிறேன் என்றேன். அவன் சிறிது நேரம் கழித்து, ஐயா, எல்லோரும் ஒன்றாகத்தான் உள்ளே வருவார்களாம், என்னை கேட்டைத் திறக்கச்சொல்லி வற்புறுத்துகிறார்கள் ஐயா, என்றான். ஒரு நிமிஷம் இருக்கச்சொல்லு, நானே வருகிறேன் என்று சொல்லிவிட்டு நான் வாசலுக்குப் போனேன்.

அங்கு நான் கண்ட காட்சி இரண்டாம் உலகப் போரை நினைவு படுத்தியது. நூற்றுக்கணக்கான ஜீப்புகள், டாங்கிகள், லாரிகள், ஆயிரக்கணக்கில், பலரேங்கில்  போலீஸ்காரர்கள் மற்றும் சிவில் டிரஸ்சில் பல அதிகாரிகளும் அங்கு கூடியிருந்தார்கள். கொஞ்சம் நடுத்தர ரேங்கில் இருக்கும் போலீஸ்காரர்கள் காவலாளியுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.

ஆஹா, தலை (அந்த அரசியல்வாதி) பெரிய வேலை செய்திருக்கிறான் போல் இருக்கிறது. அவனைத் தனியாக கவனிப்போம். இப்போது இவர்களைக் கவனிப்போம் என்று முடிவு செய்து வெளியில் வந்தேன். நீங்கள் எல்லாம் யார், எதற்காக இந்நேரத்தில் இங்கே வந்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அதில் முக்கியமாகத் தென்பட்ட அதிகாரி, நாங்கள் இந்த தூதரகத்தை ரெய்டு பண்ண வந்திருக்கிறோம் என்றார்.

அப்படியா, சந்தோஷம், தூதரகத்திற்கு சில விதிகள் உண்டல்லவா? அதன் பிரகாரம் பிரதம மந்திரி அல்லது ஜனாதிபதி உத்திரவு இல்லாமல் யாரும் உள்ளே நுழையக் கூடாது என்பது தெரியுமா என்றேன். அது எல்லாம் எங்களுக்குத் தெரியும், எங்களை உள்ளே விடப்போகிறாயா இல்லையா என்று மிரட்டும் தொனியில் கேட்டார். விடச்சொல்லுகிறேன், ஆனால் இதனால் வரும் விளைவுகளுக்கெல்லாம் நீங்களேதான் பொறுப்பு, நான் உங்களை எச்சரிக்கை பண்ணவில்லை என்று பிறகு சொல்லக்கூடாது என்றேன்.

எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்றார் அந்த அதிகாரி. எல்லோரையும் உள்ளே அனுமதிக்கச் சொன்னேன். எல்லோரும் முதலில் எல்லோரும் ஒரு இடத்தில் உட்காரலாம், உங்களுக்கு என்ன வேண்டுமோ, கேளுங்கள், அதை செய்கிறேன் என்றேன். எல்லோரும் கான்பரன்ஸ் ஹாலில் உட்கார்ந்தார்கள். சுமார் ஐயாயிரம் பேர் இருக்கும். எங்கள் பக்கம் நான், பொது, செக்கு, நாலைந்து காவலாளிகள் இவ்வளவு பேர்தான்.

எல்லோரும் உட்கார்ந்த பிறகு நீங்கள் எல்லாம் எந்தெந்த துறைகளைச் சேர்ந்தவர்கள் என்றேன். அவர்கள் சொன்னதிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால், இந்திய அரசின் விவசாயத் துறை நீங்கலாக மற்ற அனைத்துத் துறைகளிலிருந்தும் அதிகாரிகளும், குட்டித்தேவதைகளும் வந்துள்ளார்கள்.

நீங்கள் எல்லோரும் ஒன்றாக வந்த காரணம் என்னவோ என்றேன். நாங்கள் இந்தத் தூதரகத்தை முழுமையாக ரெய்டு பண்ணவேண்டும் என்றார்கள். நான் கேட்டேன், அப்படி ஒரு அயல்நாட்டுத் தூதரகத்தை ரெய்டு பண்ணவேண்டுமென்றால் அதற்கு இந்நாட்டு மந்திரி சபை ஒப்புதல் கொடுத்து ,இந்தத் தூதரகத்திற்கு முன் அறிவிப்பு கொடுத்த பின்தானே செய்ய முடியும். அப்படி எதுவுமில்லாமல் திடீரென்று வந்திருக்கிறீர்களே, இதற்கு யார் உங்களுக்கு உத்திரவு கொடுத்தார்கள் என்றேன்.

எங்கள் மேலதிகாரிகள் ஒப்புதல் கொடுத்த பிறகுதான் நாங்கள் வந்துள்ளோம் என்றார்கள். அப்படியானால் அந்த மேலதிகாரிகளை வரச்சொல்லுங்கள், நான் அவர்களுடன் பேச வேண்டும் என்றேன். அங்கிருந்த சீனியர் அதிகாரிக்கு கோபம் வந்து விட்டது. நீ எங்களை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நான் நினைத்தால் உன்னை இப்போதே அரெஸ்ட் பண்ண முடியும் என்றார். பிறகு எல்லோரும் புறப்பட்டு அவரவர்கள் வேலைகளைப் பாருங்கள் என்று பின்னால் திரும்பி உத்திரவு போட்டார்.

எல்லோரும் எழுந்திருக்க ஆரம்பித்தார்கள். நான் ஒரு நிமிடம் என்று அவர்களைக் கையமர்த்தி உட்கார வைத்து விட்டு சொன்னேன். நீங்கள் அனைவரும் ஒரு அயல் நாட்டுத் தூதரகத்திற்குள் அத்து மீறி நுழைந்திருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் அனைவரும் இந்நாட்டின் கைதிகள். என் அனுமதியின்றி நீங்கள் அசையக்கூட முடியாது. பேசாமல் நான் சொல்லுகிற மாதிரி நடந்து கொள்ளுங்கள். தவறினால் நீங்கள் உங்கள் பிள்ளை குட்டிகளை இந்த ஜன்மத்தில் பார்க்க முடியாது என்றேன்.

எல்லோரும் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார்கள். அவரவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்கள எடுத்து என் மேல் பிரயோகிக்க தயார் ஆகிவிட்டார்கள். என் ஒரு கையசைப்பில் அத்தனை ஆயுதங்களும் என் மேஜைக்குப் பின்னால் வந்து விழுந்தன. ஒருவராலும் அவர்கள் ஆசனத்தை விட்டு எழுந்திருக்க முடியவில்லை.

இதற்குள் ஒரு கிங்கரனை அனுப்பி அந்த தலையையும் வட்டத்தையும் பிடித்து வரச்சொன்னேன். அவர்கள் இந்தக் கூட்டத்தைப் பார்த்து புன்முறுவல் பூத்தார்கள். இது அவன் வேலை என்று சொல்லாமல் சொல்லி விட்டான். தலை என்னைப் பார்த்து எதற்காக என்னை இங்கு தூக்கிக்கொண்டு வந்தீர்கள் என்று சத்தம் போட்டான். நான் அவனைப் பார்த்து நீ நேற்று என் காலில் விழுந்ததைப் பார்த்து நான் ஏமாந்து போனேன். ஆனாலும் நீ கெட்டிக்காரன் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

இந்த ரெய்டை நீ யார் மூலமாக ஏற்பாடு செய்தாய் என்று சொன்னால் அவர்களுடன் பேச சௌகரியமாக இருக்கும் என்றேன். அந்த மடையன் எனக்கு இந்த ரெய்டு பற்றி ஒன்றுந் தெரியாது என்றான். அப்படியா என்று சொல்லிவிட்டு, ஒரு கிங்கரனைக் கூப்பிட்டு தலைவரை சித்திரகுப்பதனிடம் கூட்டிக்கொண்டு போய் நம் பாணியில் கொஞ்சம் கவனித்து இந்த விவகாரத்தில் யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ, அவர்களை எல்லாம் இவன் வாயிலிருந்து வர வழைத்து அனைவரையும் இங்கே கூட்டி வாருங்கள் என்றேன்.

அரை மணி நேரத்தில் அனைத்து நபர்களும் வந்து விட்டார்கள். இந்த தலைவனுக்கு பிஎம் ஆபீசில் ஒரு பிஏ வைத்தெரியும். அவனிடம் சொல்லி அனைத்து துறைத் தலைவர்களுடனும் சொல்லி இந்த ரெய்டை ஏற்பாடு பண்ணியிருக்கிறான். துறைத் தலைவர்களை எல்லாம் முன் வரிசையில் உட்கார வைத்து அவர்களைக் கேட்டேன்.

தூதரகத்திற்கு என்று சில பாதுகாப்புகள் உண்டல்லவா? அந்த விதிகளின் படி தூதரகத்தை ரெய்டு பண்ண வேண்டுமென்றால் பிரதம் மந்திரி நேரடியாக உத்திரவு கொடுக்கவேண்டுமல்லவா? அப்படி உங்களுக்கு உத்திரவு கிடைத்துத்தான் உங்கள் ஆட்களை இங்கே அனுப்பினீர்களா? பதில் சொல்லுங்கள் என்றேன். பிரதம மந்திரி இந்த ரெய்டை அப்ரூவ் பண்ணியிருக்கிறார் என்று இந்த பிஏ சொன்னார், அதனால் ரெய்டை அனுமதித்தோம் என்றார்கள்.

அந்தப் பிஏ வைக் கேட்டேன். இந்த ரெய்ட் நடக்கும் விஷயம் பிரதம மந்திரிக்கு தெரியுமா என்றேன். அவன் சொன்னான், இந்த தலைவன் என்ன கேட்டாலும் அதைச் செய்யும்படி பிஎம் சொல்லியிருக்கிறார் என்றான். அப்படியானால் இந்தத் தலைவன் ஒருவனைக் கொலை செய்யும்படி கேட்கிறான், அப்படி செய்வாயா என்று கேட்டேன். "பெப்பெப்பே" என்று முழித்தான். சரி இருக்கட்டும், பிரதம மந்திரியையே வரச்சொல்லுவோம், அவரே வந்து இதை விசாரிக்கட்டும் என்று சொல்லி பிரதம மந்திரிக்குப் போன் போட்டேன்.

அவரிடம் உங்கள் ஆபீசர்கள் எல்லாம் தேவலோக தூதரகத்தை ரெய்டு பண்ணுவதற்காக வந்திருக்கிறார்கள். நீங்கள்தான் இந்த ரெய்டுக்கு பர்மிஷன் கொடுத்ததாக உங்கள் பிஏ சொல்லுகிறான் என்றேன். அவர் போனிலேயே மன்னிப்பு கேட்டுவிட்டு பத்து நிமிடத்தில் நிதி அமைச்சர், உள்துறை, வெளி உறவுத்துறை மந்திரிகள் புடை சூழ வந்து விட்டார். அவரைப் பார்த்துத் அனைவரும் பேயறைந்தது போல் ஆனார்கள்.

அவருடைய பிஏ வைக்கூப்பிட்டு இது எப்படி ஏற்பட்டது என்று கேட்டார். அவன் இந்த தலை சொன்னதை செய்யவேண்டும் என்று முன்பு நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள், அதனால் செய்தேன் என்றான். அப்படியா, அவன் என்னைக் கொல்லும்படி சொல்லுகிறான், அப்படியே செய்வாயா என்று கேட்டார். அவன் பதில் சொல்ல முடியாமல் விழித்தான்.

பிறகு அவர் துறை அதிகாரிகளைப் பார்த்து தூதரக "டிப்ளொமேடிக் இம்யூனிடி" சட்டங்கள் உங்களுக்குத் தெரியுமல்லவா, தெரிந்தும் ஒரு பிஏ சொல்வதைக் கேட்டு இந்த மாதிரி செய்திருக்கிறீர்களே, உங்களுக்கு சொந்தமாக மூளை இல்லையா? என்று சகட்டு மேனிக்கு அவர்களைச் சாடினார். எல்லாப் பயல்களும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பிறகு என்னைப் பார்த்து இந்தப் பயல்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்றார்.

நியாயமாக அனவரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆனால் எல்லோரும் பிள்ளைகுட்டிக் காரர்களாய்த் தெரிகிறது. அதனால் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு இன்கிரிமென்ட்டை நிறுத்தி ஆர்டர் போட்டு விடுங்கள் என்றேன். அப்போதே உள்துறை செயலரை விட்டு அந்த ஆர்டர்களை டைப் செய்து ஒவ்வொருவருக்கும் கையிலேயே கொடுக்கப்பட்டது.

பிறகு எல்லோருக்கும் காலை டிபன் கொடுக்கச்சொன்னேன். பிரதம மந்திரியும் நிதி அமைச்சரும் என்னிடம் பலமுறை மன்னிப்புக் கேட்டார்கள். அவர்கள் புறப்பட்டுப் போனதும்  இந்த அதிகாரிகள் தங்கள் ஆயுதங்களை திருப்பிக் கேட்டார்கள். அவைகள் உங்கள் ஞாபகார்த்தமாக  இங்கேயே இருக்கட்டுமே என்றேன். அவர்களை ஐயோ, ஐயோ, இவை எங்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட ஆயுதங்கள், அவைகள் இல்லாவிட்டால் எங்கள் வேலையே போய்விடும் என்று மூக்கால் அழுதார்கள்.

எடுத்துக் கொண்டு போங்கள். ஆனால் உங்கள் ஆயுளுக்கும் இந்தப் பாடம் மனதில் இருக்கட்டும் என்று சொல்லி அவர்களை அனுப்பினேன். இந்த சந்தடியில் தலையும் வட்டமும் தப்பிக்கப் பார்த்தார்கள். அவர்களை நீங்கள் போகவேண்டாம் இருங்கள் என்று சொல்லி ஒரு கிங்கரனைக் காவலுக்குப் போட்டேன்.

எல்லோரும் போன பிறகு அவர்கள் இருவரையும் தனியாகக் கூப்பிட்டேன். என்னைப் பாரத்ததும் அவர்களுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நான்தான் தலையைப் பார்த்து இனி என்ன செய்வதாக உத்தேசம் என்றேன். ஐயா எங்களை மன்னியுங்கள் என்று கேட்கக்கூட எங்களுக்கு அருகதை இல்லை, இனி நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறோம் என்றார்கள்.

முதலில் அந்த நிலங்களை எல்லாம் ஒழுங்காக எங்கள் பெயருக்கு மாற்றிவிடுங்கள். பிறகு தலை வைத்திருக்கும் எல்லா சொத்துக்களையும் அரசுக்கு எழுதிக் கொடுத்து விடுங்கள். தலை வைத்திருக்கும் அனைத்து ரொக்கங்களும் ஏற்கனவே அரசு கஜானாவில் சேர்க்கப்பட்டு விட்டன. இரண்டு நாளில் இவைகளை எல்லாம் முடித்து விட்டு இருவரும் இங்கே வாருங்கள். இந்தத் தடவை ஒன்றும் கோல்மால் பண்ணமாட்டீர்கள் என்று நம்புகிறேன். எதற்கும் செக்கு உங்கள் கூடவே இருப்பார். போய் வாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

14.வட்டத்திடம் மாட்டிக்கொண்டோம்.


வட்டத்திடம் பணம் கொடுத்தனுப்பி ஒரு வாரம் இரு வாரமாகி, ஒரு மாதமும் ஆகிவிட்டது. அவரிடமிருந்து ஒழுங்கான பதில் கிடைக்கவில்லை. எப்போது செல்லில் கூப்பிட்டாலும் பிசி என்றே வந்தது. கடைசியில் செக்கை அனுப்பி என்ன விவரம் என்று பார்த்துவிட்டு வரச்சொன்னேன்.

அவர் போய் விசாரித்து விட்டு வந்து சொன்ன தகவல் கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது. நாம் சொன்னது போல் 1000 ஏக்கர் நிலம் பேசி வாங்கி விட்டாராம். ஆனால் அதை முழுவதுமாகத் தலைவர் பேரில் (அதாவது அன்று வந்த அரசியல்வாதி) ரிஜிஸ்டர் ஆகி, சுவாதீனம் எடுத்து, தற்பொழுது சுற்றிலும் வேலி போட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்.

வட்டத்திடம் கேட்டதற்கு, இதுதான் மாமூலுங்க, நிலம் உங்களுதுதானுங்க, கிரயம் யார் பேரில் இருந்தால் என்னங்க? என்றாராம். அப்படியா என்று கேட்டுக் கொண்டு, பொதுவை அந்த அரசியல்வாதியிடம் அனுப்பினேன். அவர் பொதுவை மிரட்டியிருக்கிறார். இத பாரு பொது, எங்ககிட்ட வம்பு வச்சுக்காதீங்க, அப்புறம் இந்தப் பணம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது, இதுக்கு இன்கம்டாக்ஸ் கட்டீருக்கீங்களா. இப்படியெல்லாம் கேள்வி கேட்கவைப்பேன். அப்புறம் நீங்கள் எல்லோரும் ஜெயிலில் களி திங்க வேண்டி வரும் என்று சொல்லியிருக்கிறார்.

நான் அவருடன் போனில் பேச முயற்சி செய்தேன். போனை எடுக்கவே இல்லை. ஓஹோ, இதெல்லாம் காரியத்திற்கு உதவாது என்று நேரடி நடவடிக்கை எடுத்தேன். இரண்டு யமகிங்கரர்களை விட்டு வட்டத்தைத் தூக்கி வந்தேன். வட்டத்திற்கு என்னைப் பார்த்ததும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவருக்கு குடிக்க பானம் கொடுத்து ஆசுவாசப் படுத்திய பிறகு பேச ஆரம்பித்தார்.

என் பேரில் எந்த தப்பும் இல்லைங்க, தலைவர் (அந்த அரசியல்வாதி) இப்படித்தானுங்க, நிலம் வாங்கித் தாரேன் அப்படீன்னு, யாரு பணம் கொடுத்தாலும் வாங்கி தன் பெயரில் நிலம் வாங்கி ரிஜிஸ்டர் பண்ணீப்பாருங்க. ஏனுங்க இப்படீன்னு கேட்டா, தம்பி, இதப்பாருங்க, நிலம் உங்க பேர்ல இருந்தா என்ன, என் பேரில இருந்தா என்ன. நெலம் எங்க போயிடப்போகுது, உங்க பேர்ல நெலம் இருந்திச்சின்னு வையுங்க, இந்த இன்கம்டாக்ஸ்காரன் ஆயிரத்தெட்டு கேள்வி உங்களைக் கேட்பான், அதுக்கு உங்களால பதில் சொல்ல முடியாது. என்னைக் கேள்வி கேட்க ஒரு பயலுக்கும் திராணி கிடையாது.

இப்படியே இருக்கட்டும், உங்களுக்கு தேவைப்படும்போது சொல்லுங்க, மாத்தி எழுதீடலாம் என்பார். இதுதானுங்க இப்ப நடைமுறை. நான் என்ன பண்ணுட்டுங்க என்று வட்டம் சொன்னான். சரி இப்ப அந்த தலைவரைப் பார்க்கணுமே, அதுக்கு என்ன வழி என்றேன். வட்டம் சொன்னார், இந்த மாதிரி டீல் ஒண்ணை முடிச்சா, அவரு ஆறு மாசம் ஊர்லயே இருக்க மாட்டாருங்க. அவருக்குப் பல ஊர்களிலே பங்களாக்கள் இருக்குதுங்க, எங்க இருக்காருன்னு யாருக்கும் தெரியாதுங்க என்றான்.

அப்படியா என்று நாரதரைக் கூப்பிட்டு விவரத்தைச் சொல்லி அந்த ஆள் எந்த லோகத்தில் இருந்தாலும் இழுத்துக் கொண்டு வாருங்கள் என்றேன். துணைக்கு இரண்டு கிங்கரர்களை அழைத்துக்கொண்டு போங்கள் என்றேன். வட்டம் நான் போகட்டுங்களா என்றான். "அடே வட்டம், நீயும் அவனோட கூட்டுக் களவாணிதானே, அவன் வரும்போது நீ இல்லாவிட்டால் எப்படி?" என்று அவனை இருக்கவைத்தேன்.

அரை மணி நேரத்தில் நாரதரும் அந்த அரசியல்வாதியும் வந்து விட்டார்கள். வந்தவுடன் அவன் தாம்தூம் என்று குதித்தான். என்னை யாரென்று நினைத்தீர்கள், இப்போதே பிரதம மந்திரிக்குப் போன் போட்டு உன்னை என்ன செய்கிறேன் பார், உன்னை இன்கம்டாக்ஸ் கேஸ் போட்டு, ஜெயில் களி திங்க வைக்கிறேன் பார் என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணினான். வட்டத்தைப் பார்த்து என் சக்தியைப் பற்றி இவர்களிடம் நீ ஒன்றும் சொல்லவில்லையா என்று சத்தம் போட்டான்.

அவன் ஆர்ப்பாட்டம் அடங்கட்டும் என்று காத்திருந்தேன். அரை மணி நேரம் கத்திவிட்டு ஓய்ந்து போனான். அப்புறம் நான் அவனைக்கேட்டேன். நாங்கள் யாரென்று உனக்குத் தெரியுமா என்றேன். "நீ யாராயிருந்தால் எனக்கென்ன, என்னை இப்போதே நான் இருந்த இடத்திற்குக் கொண்டுபோய் விடாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா" என்றான்.

"என்ன நடக்கும், பார்க்க எனக்கு ஆசையாய் இருக்கிறது" என்றேன். யார் யாருக்கோ போன் பேசினான். ஒன்றும் நடக்கவில்லை. உனக்கு யார் வேண்டும் என்றேன். பிரதம மந்திரியிடம் பேசவேண்டும் என்றான். நான் ஹாட்லைனில் பிரதம மந்திரி அலுவலகத்தைக் கூப்பிட்டு விவரத்தைச் சொல்லிவிட்டு போனை அவனிடம் கொடுத்தேன். பிரதம மந்திரியின் உதவியாளர் பேசினார்.

அவர் அவனிடம் என்ன சொன்னாரோ தெரியவில்லை, அவன் தடாலென்று என் காலில் விழுந்து காலைப் பிடித்துக் கொண்டான். தெய்வமே, நான் தெரியாமல் தப்பு பண்ணிவிட்டேன். இப்போதே அந்த நிலத்தையெல்லாம் நீங்கள் சொல்லுகிற மாதிரி மாற்றி எழுதி விடுகிறேன். இந்த விவகாரத்தைப் பற்றி பிரதம மந்திரியிடம் ஏதும் சொல்லிவிடாதீர்கள், நீங்கள் யாரென்று தெரியாமல் இந்தத் தப்பை செய்து விட்டேன் என்று அழுதான்.

சரி, ரொம்பவும் அழுகிறானே என்று அவனை மன்னிக்கிறேன் என்று சொல்லி எழுப்பி, நான் முதலில் சொன்ன பிரகாரம் பத்திரங்களை ரிஜிஸ்டர் செய்து அனுப்பு என்று சொல்லி அவர்கள் இருவரையும் திருப்பி அனுப்பினேன்.

இங்குதான் நான் ஒரு பெரிய தவறு செய்து விட்டேன்.

அடுத்த பதிவைப் பாருங்கள்.

புதன், 3 ஏப்ரல், 2013

13. இமிக்ரேஷன் விசா

முதல் ட்ரிப்பில் போய் வந்த அனைத்துப் பதிவர்களும் தங்கள் தங்கள் தளங்களில் தேவலோகத்தை வானளாவப் புகழ்ந்திருந்தார்கள். அதைப் படித்த மற்ற பதிவர்கள் தங்களை ஏன் கூப்பிடவில்லை என்று கோபமாக பதிவுகள் போட்டார்கள். இப்படியாக ஒரு வாரம் முழுவதும் தேவலோகத்தைப் பற்றிய பதிவுகள்தான் இடப்பட்டன.  சினிமா விமர்சனப் பதிவுகள் காணாமல் போய்விட்டன.

ஓரிரு நாளில் இமிக்ரேஷன் விசாவிற்காக ஜனங்கள் வரத்தொடங்கினார்கள். ஒவ்வொருவராக உள்ளே அழைத்து வரப்பட்டு என் ரூமுக்கு கொண்டுவரப்பட்டார்கள். அவர்களைப் பற்றி நன்கு விசாரித்து விட்டு, எனக்கு திருப்தியானவுடன், அவர்களிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினேன். பிறகு அவர்களை பேங்குக்கு சென்று பணத்தைக் கட்டி விட்டு அந்த செலானைக் கொண்டுவரச்சொன்னேன்.

அவர்கள் பணம் கட்டி வந்தவுடன் செலானை வாங்கி அவர்களுடைய ஒப்பந்தத்தில் பின் பண்ணி  தேவலோகத்திற்குப் போகும் தபால் பையில் போட்டேன். அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை இமிக்ரேஷன் விசா பற்றிய விபரங்களைக் கூறிவிட்டு, அவர்களுக்கு விருந்து கொடுத்து, பிறகு அவர்களைத் திருப்பி அனுப்பினேன்,

முதல் நாள் பத்துப் பேர்கள் மட்டுமே வந்தார்கள். நாளாக நாளாக கூட்டம் அதிகமாக வர ஆரம்பித்ததைப் பார்த்ததும், இன்டர்நெட்டில் இமிக்ரேஷன் விசாவிற்காக ஒரு தளம் ஆரம்பித்தோம். இமிக்ரேஷன் விசா வேண்டுபவர்கள் இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும். அவர்களுக்கான நாள் மற்றும் நேரம் அலாட் செய்யப்பட்டு இன்டர்நெட்டில் வெளியிடப்படும். அதன்படிதான் வரவேண்டும் என்று நிர்ணயித்தோம்.

இப்படியாக ஆறு மாதத்தில் 1500 பேர்களுக்கு விசா கொடுத்திருப்போம். வரவு செலவு கணக்குகளைப் பார்த்தோம். மொத்த வரவு 1,50,000 கோடி அதாவது ஒன்றரை லட்சம் கோடி. இதில் இந்திய அரசுக்கு வரி கட்டினது 75,000 கோடி. மீதி 75,000 கோடியில் எங்கள் ஊதியமாக எடுத்துக் கொண்டது  15,000 கோடி. இதில் என் பங்கு 7500 கோடி. பொதுவிற்கும் செக்குவிற்கும் ஆளுக்கு 3750 கோடி.

இப்படி கணக்குப் பார்த்ததில் எங்கள் ஊதியத்தொகையைக் கண்டு மலைத்துப் போய் விட்டோம். இந்தப் பணத்தை என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. பொதுவைக் கூப்பிட்டு, வெளியில் போய் ஒரு நல்ல ஆடிட்டர், அனுபவம் மிக்க ஒரு வக்கீல், இவ்வளவு பணத்தை டீல் பண்ணக்கூடிய ஒரு அரசியல்வாதி ஆகியோரைக் கூட்டிக்கொண்டு வரும்படி அனுப்பினேன்.

அவர்கள் வந்தவுடன் அவர்களை வரவேற்று உபசரித்த பிறகு விவரங்களைச் சொன்னோம். அரசியல்வாதி எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். நாங்கள் தொகையைச் சொன்னவுடன் அவர் "பூஊஊஊ, இவ்வளவுதானா, இதற்கா என்னை வரச்சொன்னீர்கள், முதலிலேயே விவரத்தைச் சொல்லியிருந்தால் நான் என் வட்டச் செயலரை அனுப்பியிருப்பேனே, அவரே இந்த மாதிரி தொகைகளை எல்லாம் டீல் பண்ணியிருப்பாரே என்றார்.

அப்படீங்களா, எங்களுக்கு அனுபவம் போதாதாகையால் உங்களை வரவழைத்து விட்டோம், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவரைத் தாஜா பண்ணினேன். பிறகு எல்லோரும் கலந்து ஆலோசித்தோம். இந்தப் பணத்தில்  எனக்கு 500 ஏக்கர் நிலமும், மற்றவர்கள் இருவருக்கும் ஆளுக்கு 250 ஏக்கர் நிலமும் அவரவர்கள் ஊர்களில் வாங்கிப்போடுவது என்று முடிவு செய்தோம்.

அரசியல்வாதி ஊருக்குப் போனதும் தனது வட்டத்தை அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லிவிட்டு மூவரும் கிளம்பிப் போனார்கள். மறுநாள் "வட்டம்" தனது எடுபிடிகளுடன் வந்தார். விஷயத்தைக் கேட்டார். இவ்வளவுதானே. ஒரு வாரத்தில் முடித்துக் கொடுத்து விடுகிறேன். கவலைப் படாதீர்கள் என்று சொல்லி விட்டுப் பணத்தைக் கொடுக்கும்படி கேட்டார்.

பேங்க் மேனேஜரைக் கூப்பிட்டு எங்கள் பணத்தை முழுவதையும் வட்டத்திடம் கொடுக்கச் சொன்னோம். அவர் அந்தப் பணத்தை இரண்டு லாரிகளில் ஏற்றி வட்டத்துடன் அனுப்பினார்.

பிறகு நடந்ததுதான் நாங்கள் எதிர்பாராதது! விவரங்கள் அறியக் காத்திருங்கள்.

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

பழைய ஞாபகந்தான் பேராண்டி


பெயரில்லா1 ஏப்ரல், 2013 4:14 PM
இன்றைய குழந்தைகளுக்கு அந்த கால ஆசாமியின் ஒரு கடிதம்.
நாங்கள் நினைப்பதெல்லாம் 'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF



• தனி படுக்கையில் அல்ல, அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

• புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததில்லை.

• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்nkட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை

• எங்களுக்கு நல்ல கதை சொல்ல அன்பான தாத்தா பாட்டி இருந்தார்கள். கலாச்சாரத்தை கெடுக்கும் மெகா சீரியல்கள் டஹ்ரும் டிவி பெட்டிகள் இல்லை

• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

• சிறு விளக்கு (குண்டு பல்புதான், மண்ணெண்ணெய் விளக்குதான்) வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

• உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம். ஆமாம் பேப்பர் காத்தாடிகள் தீப்பெட்டி ரயில்கள் பாண்டி விளையாட்டு கில்லி தாண்டல் போன்றன ஆனால் இன்றோ அனைத்தும் ப்ரொவிசனல் ஸ்டோர்களிலும் வீடியோ கேம்ஸ்களிலும். எனவே எங்கள் ஜிம்கள் எல்லாம் எங்கள் வீதிகளிலிலேயே இருந்தன (காசு பறிக்காமல்)
• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை .

• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

• இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

• முக்கியமாக பெண்களை நம் தாயாக மற்றும் கூட பிறந்தவர்களாக நினைக்கும் நல்ல பழக்கம் இருந்ததால் டெல்லி நியூஸ் போன்றவற்றை படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது
• இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்

குருச்சந்திரன்
பதிலளிநீக்கு
பதில்கள்
  1. பெயரில்லா1 ஏப்ரல், 2013 4:19 PM

    எங்கேயோ படித்த ஞாபகம் என்று என் நண்பன் எனக்கு அனுப்பிய ஒரு கடிதம்.
    குருச்சந்திரன் அவர்கள் சொல்வது சரிதான் என்று தோன்றுகிறது.

    செல் போன் டவர்களால் தொலைந்து போன சிட்டு குருவிகளின் கீச் கீச் குரல்கள் 

    நானும் வீரன்தான் என்று காட்ட, பயந்து பயந்து மாடு விரட்டிய நம் ஊர் மஞ்சு விரட்டு மைதானம் 

    பெரிது பெரிதாக தொங்கிய விழுதுகளில் ஊஞ்சல் ஆடி மனம் களித்த நம் ஊர் பள்ளிகூடத்திலிருந்த ஓங்கி வளர்ந்த ஆலமரம் 

    காத்திருக்கும் போது வராமல் பாதி தூரம் நடந்த பிறகு நம்மை கடந்து போகும், ஒரே ஒரு முறை நம் ஊருக்கு எட்டிப்பார்க்கும் பேருந்து 

    யாயும் நீயும் யாராகியரோ என்று இருந்த நம்மை பின்னர் செம்புல பெய நீர் போல நண்பர்களாக்கிய நம்மூர் திருவிழாக்கள் 

    தூக்கி போடு நீச்சல் தன்னாலே வந்துடும் என்று சொல்லி தள்ளி விட , நெஞ்சில் சிலீர் என்று நீர் தெளித்த ஆழ் கிணறுகள் 

    அக்கம்பக்கத்து நண்பர், நண்பிகளுடன் சேர்ந்து விளையாடும்போது மரத்தடியில் நெருப்பு மூட்டி ஆக்கிய கூட்டாஞ்சோறு 

    பாங்குல இருக்கோ இல்லையோ எப்போதும் காசு வைத்திருக்கும் எங்க வீட்டு ஆயாவின் இடுப்பிலிருக்கும் சுருக்குப்பை 

    பாம் பாம் என்ற சத்ததுதுடன் வந்த காரை மார்க் 1,2,3 என்றுவகை பிரித்த பணக்கார வீட்டு பையன் 

    மூன்று பைசாவுக்கு தெரு முனை கடைக்காரன் கை நிறைய அள்ளி கொடுக்கும் கொடுக்காபுளி 

    முகத்தை மட்டும் விட்டுட்டு உடம்புலே எங்கே வேணுமானாலும் விளாசலாம், பையன் மட்டும் நல்லா படிக்கணும்னு வாத்தியாருக்கு அனுமதி தந்த அப்பா அம்மா

    இதெல்லாம் நான் உனக்கு எப்படி காட்டுவேன்?
    எல்லாமே என் கண் முன்னாலேயே காணாமல் போய் விட்டதே

    திருச்சி அஞ்சு

திங்கள், 1 ஏப்ரல், 2013

கோந்து தயாரிப்பது எப்படி?


தற்காலத்திய சிறுவர்களிடம் கோந்து தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள், கோந்தா, அப்படீன்னா என்னங்க, என்று கேட்பார்கள். அது வந்து Gum  அப்படீன்னு நீங்க உபயோகிக்கிறீங்களே அதுதான் என்றால், மொதல்லயே ஒழுங்கா Gum  னு கேட்டிருந்தா சொல்லியிருப்போம்ல என்று பதில் வரும்.

நான் சின்னப் பையனா இருக்கறப்ப கோந்து வேணும்னா வேப்ப மரத்தைத் தேடிப்போவோம்.  அதில் ஏற்பட்டுள்ள சிறு காயங்களிலிருந்து வேப்பம் பிசின் வழிந்து காய்ந்து இருக்கும். அதை எடுத்து வந்து தொட்டாங்குச்சியில் (அதாங்க தேங்காய் தொட்டி அல்லது சிரட்டை) போட்டு தண்ணீர் ஊற்றி வைத்தால் மூன்று நாளில் கோந்து தயார்.

அந்தக் தொட்டாங்குச்சி சாய்ந்து விடாமல் பக்கத்தில் சிறு கற்களினால் அணைப்பு கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் தொட்டாங்குச்சி சாய்ந்து கோந்து சிந்திப்போகும். இந்தக் கோந்தை எடுக்க ஒரு பென்சில் தடிமனான குச்சியை அதில் போட்டு வைக்கவேண்டும்.

இப்படித்தான் அந்தக்காலத்தில் நாங்கள் கோந்து தயாரித்து உபயோகப்படுத்தி வந்தோம். அந்தக் காலத்தில் கோந்தின் முக்கியமான உபயோகம் என்னவென்றால் பட்டம் விடுவதற்கான நூலுக்கு மாஞ்சா போடுவதுதான். நூலுக்கு மாஞ்சா போடுவது என்பது ஒரு கலை. அதைப்பற்றி பிறகு தனியாக ஒரு பதிவு போடுகிறேன். மாஞ்சா நூல் ஒரு கொலைக் கருவியாக தற்காலத்தில் மாறிவிட்டது காலத்தின் கோலம்.

தற்காலத்தில் கோந்து பல விதங்களில் வந்து விட்டன. செயற்கை கோந்துகள் ஏறக்குறைய இயற்கை கோந்துகளை மறக்கடிக்க வைத்துவிட்டன. ஆனாலும் என்னைப் போன்றவர்கள் இன்னும் அந்தக் காலத்து பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

இப்போது நகர வாழ்க்கையில் வேப்ப மரங்களைப் பார்க்க முடிவதில்லை. ஆனாலும் நாட்டு மருந்துக் கடைகளில் இப்பொழுதும் கோந்து கிடைக்கிறது. 100 கிராம் 15 ரூபாய். அதை வாங்கிக்கொண்டு வந்து பழைய மருந்து பாட்டிலில் ஊறவைத்துப் பயன்படுத்திக்கொண்டு வந்தேன். இப்போது ஒரு பழைய காலி கேம்லின் கோந்து பாட்டில் என் பேரனின் தயவால் கிடைத்தது. அதை உபயோகப் படுத்துகிறேன். கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் கோந்துகள் இதை விட விலை குறைவாக இருக்கலாம். ஆனால் இந்தக் கோந்தை உபயோகப்படுத்தும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தி, ரெடிமேட் கோந்துகளினால் கிடைப்பதில்லை.

பழைய ஆட்களைத் திருத்துவது மகாக் கடினம்.

சனி, 30 மார்ச், 2013

12. தேவலோகத்திற்கு சுற்றுலா






இந்தியாவில் தனிமனித வாழ்க்கை சுபிட்சமாக மாறத்தொடங்கியது. எங்கும் எதிலும் முன்னேற்றம் தென்பட்டன. அமெரிக்கா, இந்தியாவைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தது. அனைத்து வெளிநாடுகளும் இந்தியாவுடன் சுமுக உறவை நீட்டித்தன. இந்தியாவின் அனைத்து எல்லைகளிலும் வெளிநாட்டிலிருந்து யாரும் ஊடுறுவ முடியாதபடி வேலிகள் அமைக்கப்பட்டன.

பாகிஸ்தான் தன் உளவு வேலைகளையும் சதித்திட்டங்களையும் நிறுத்திக்கொண்டு விட்டது. காஷ்மீரில் அதிக அளவில் டூரிஸ்ட்டுகள் வர ஆரம்பித்தார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் அதிக இணக்கம் காட்டினார்கள். தீவிர வாதம் அடியோடு மறைந்து விட்டது.

வடகிழக்கு மாகாணங்களில் சைனா தன் தலையீட்டை நிறுத்தி விட்டது. அந்த மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது.

ராஜபக்க்ஷே வாலைச்சுருட்டிக்கொண்டு, இலங்கையில் வசிக்கும் எல்லோருக்கும் சம உரிமை கொடுத்துவிட்டார். வெளி நாடுகளுக்கு குடிபெயர்ந்த அனைத்து இலங்கை அகதிகளும் தாய்நாடு திரும்பிவிட்டார்கள். பிரபாகனுக்கு ஆங்காங்கே நினைவுச்சின்னங்கள் வைக்கப்பட்டு வை.கோ. வைக்கொண்டு திறந்து வைக்கப்பட்டன. பிரபாகரன் நினைவாக ஒரு தபால் தலை வெளியிடப்பட்டது.

பொதுவைக் கூப்பிட்டு, இனி நம் சொந்த வேலைகளைக் கவனிக்கலாமா என்றேன். அவர்கள் என்னவென்று தெரியாமல் விழித்தார்கள்.

நான் சொன்னேன், பொது, நம் நாட்டில் ஏகப்பட்ட பேர் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார்கள். நாம் எப்பேர்ப்பட்ட முட்டாள்தனமான திட்டம் சொன்னாலும் பணத்தைக் கொட்டிக்கொடுக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

என்னுடைய திட்டம் இதுதான். நமது தூதரகத்திலிருந்து இந்தியர்களுக்கு தேவலோகத்திற்கு செல்ல இரண்டு விதமான விசா கொடுக்கப்படும்.

ஒன்று: டூரிஸ்ட் விசா. மூன்று பகல், இரண்டு இரவு அவர்களைத் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு நாம் போட்டிருக்கும் நகர்களைக் காட்டுவோம். அங்கு தங்க, சுற்றிப் பார்க்க எல்லா வசதிகளும் செய்து தரப்படும். விசா சார்ஜ் ஒரு கோடி ரூபாய். இதில் 50 சதம் வரியாக இந்திய அரசுக்கு கொடுத்துவிடுவோம்.

இந்த டூர் நமது தேவ்லோக் ஏர்லைன்ஸ் மூலமாக ஏற்பாடு செய்யப்படும். வாரத்தில் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை கோயமுத்தூர் ஏர் போர்ட்டிலிருந்து புறப்படும். திங்கட்கிழமை செல்பவர்கள் புதன்கிழமை திரும்புவார்கள். வியாழக்கிழமை புறப்படுபவர்கள் சனிக்கிழமை திரும்புவார்கள். இதற்கான விமானக் கட்டணம் மற்றும் ஊர் சுற்றிப் பார்க்கும் செலவுகள், உணவு, தங்கும் வசதிகள் எல்லாவற்றிற்கும் மொத்தமாக பத்து கோடி ரூபாய். இதற்கு உள்ளூர் வரிகள் தனி.

ஒரு ட்ரிப்புக்கு 200 பேர் வீதம் வாரத்திற்கு 400 பேர் மட்டுமே செல்ல முடியும். டிக்கெட்டுகள் அந்த அளவிற்குத்தான் கொடுப்போம். அதிகப் பேர் வந்தால் அவர்களுக்கு அட்வான்ஸ் புக்கிங்க் செய்யப்படும். டூர் கட்டணத்தை வாங்க கோவையில் தேவலோக பேங்கின் கிளை ஒன்றை ஆரம்பிப்போம். இதற்காக ஒரு 50 ஏக்கர் நிலம் வாங்கி, மயனை விட்டு ஒரு காம்ப்ளெக்ஸ் கட்டி விடலாம்.                                                      

இரண்டாவது இமிக்ரேஷன் விசா: இது ஒருவருடைய ஆயுள் காலத்திற்குப் பின்தான் அமுலுக்கு வரும். ஒருவர் தன் ஆயுள்காலம் முடிந்தவுடன் யமலோகம் போய் தனக்குண்டான பாவபுண்ணிய பலன்களை அனுபவித்த பின், இந்த விசா அமுலுக்கு வரும். அவர்களுக்கான குடியிருப்பு ரெடியாக இருக்கும். அங்கு அவர்களை அழைத்துச் சென்று, குடியமர்த்தப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு தேவலோக கிரீன் கார்டு கொடுக்கப்படும்.

இந்த குடியிருப்புக்கான விலை மற்றும் விசா சார்ஜ் மொத்தம் 100 கோடி ரூபாய். பணம் முழுவதையும் ரொக்கமாக இந்திய ரூபாயிலோ அல்லது அமெரிக்க டாலராகவோ அல்லது ஐரோப்பிய யூரோவாகவோ கட்டலாம். வேறு எந்தக் கரன்சியும் வாங்கப் படமாட்டாது. செக்குகள், பாங்க் டிராப்டுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

இந்தப் பணத்தை ரொக்கமாக நமது தூதரகத்திலுள்ள தேவலோகப் பேங்கில் கட்டவேண்டும். பணம் கட்டும்போது ஒரு ஒப்பந்தம் போடப்படும். அந்த ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்துகள்.

1. எக்காரணம் கொண்டும் விசா கட்டணம் திருப்பித்தரமாட்டாது.

2. இந்த விசா வாங்கிய செய்தியை யாரிடமும் சொல்லக் கூடாது.

3. இந்த சமாசாரத்தில் எக்காரணம் கொண்டும் காவல் துறைக்கு புகார் கொடுக்கக் கூடாது.

4. அப்படி யாராவது புகார் கொடுக்கலாம் என்று நினைத்தவுடனேயே அவர்கள் யமலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

5. தினம் பத்து பேருக்கு மட்டுமே விசா வழங்கப்படும். அதிகம் பேர் விண்ணப்பித்தால் அவர்கள் வெய்ட்டிங்க் லிஸ்டில் வைக்கப்படுவார்கள்.

6.  75 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விசாவிற்கு தகுதியானவர்கள்.

இந்த ஒப்பந்தத்தில்  ஒவ்வொருவரிடமும் கையெழுத்து வாங்கி விடுங்கள். ஒப்பந்தத்தின் காப்பி அவர் யமலோகம் சென்றவுடன் கொடுக்கப்படும். இங்கு அதன் காப்பி இருக்கக் கூடாது.


இமிக்ரேஷன் விசாவில் 50 சதம் இந்திய அரசுக்கு வரியாக செலுத்தி விடுவோம். மீதியுள்ள விசா கட்டணத்தில் நம் ஊதியம் போக மிச்சமிருக்கும் பணத்தை அன்றன்று  தேவலோக பிராஞ்சிற்கு அனுப்பி விடவேண்டும்.

இந்த இமிக்ரேஷன் விசா கட்டணத்தில் 10 சதம் நம்முடைய உழைப்பிற்கான ஊதியமாக எடுத்துக்கொள்வோம். அதாவது ஒரு விசாவிற்கு 10 கோடி. அதில் எனக்கு 50 சதம். உங்களுக்கு, ஆளுக்கு 25 சதம். அவரவர்கள் பங்கை அன்றன்றே எடுத்துக் கொண்டு விடவேண்டும். நாம் தூதரக அதிகாரிகளானதால் நமக்கு வருமான வரி கிடையாது. இந்தப் பணத்தை இங்கேயுள்ள தேவலோகப் பேங்கில் அவரவர்கள் அக்கவுன்ட்களில் போட்டு வைப்போம்.

முதலில் டூரிஸ்ட் விசா மட்டுமே கொடுங்கள். இமிக்ரேஷன் விசா பற்றிய விஷயம் தேவலோகத்தில் டூர் வருபவர்களுக்கு மட்டும் வாய் வார்த்தையாக பரவட்டும்.

மறுநாள் இந்திய தினசரிகள் அனைத்திலும் இந்த டூரிஸ்ட் விசா பற்றிய விளம்பரம் முதல் பக்கத்தில் முழு பக்க விளம்பரமாக வெளி வந்தது.

விளம்பரம் வெளிவந்து சிறிது நேரத்திலேயே ஜனங்கள் தூதரகத்திற்கு வர ஆரம்பித்தார்கள். தங்களுக்கு டூரிஸ்ட் விசா வேண்டும் என்றார்கள். வந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு உடனடியாக ஒரு பந்தல் போட்டு எல்லோரையும் உட்காரவைத்தோம். அவர்களுக்குத் தேவையான சிற்றுண்டிகள், பானங்கள், டி.வி. அனைத்து வசதிகளும் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டன.

யமனிடமிருந்து தேவையான ஆட்களை வரவழைத்து ஜரூராக விசாக்கள் கொடுக்கப்பட்டன. முதல் நாளே 5000 பேருக்கு டூரிஸட் விசா கொடுத்தோம்.

கோவையில் பேங்கும் விமான சர்வீசின் ஆபீசும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. இந்திய விமானப் போக்குவரத்து அதிகாரியிடம் தேவலோகப் போக்குவரத்துக்கான அனுமதிகள் வாங்கப் பட்டுவிட்டன. தேவலோகப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது.

முதல் வெள்ளோட்டப் பயணத்தில் பிரதம மந்திரி, நிதி அமைச்சர், கட்சித்தலைவர். முக்கிய அதிகாரிகள் மற்றும் தமிழ் மணத்தில் முதல் 20 ரேங்க் வைத்திருக்கும் பதிவர்கள் இவர்களை ஏற்றிக்கொண்டு போனோம்.

அங்கு அவர்களுக்கு ராஜோபசாரம் நடந்தது. இதுவரை பூலோகத்தில் யாரும் சாப்பிட்டிராத உணவு வகைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டன. அவர்கள் தங்குவதற்கு கொடுக்கப்பட்ட அறைகள் அரேபிய சுல்தான்கள் தங்கும் அறைகள் போலிருந்தன. அந்த விடுதிகளில் இல்லாத சௌகரியங்களே இல்லை.

அவர்கள் தேவலோகத்தை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ்களைப்போல் அவர்கள் தங்கள் ஆயுளில் பார்த்ததில்லை என்னும்படியாக இருந்தன. ஒவ்வொரு பஸ்சிலும் முப்பது பேர்கள்தான். வழிகாட்டுவதற்கு ஒவ்வொரு பஸ்சிற்கும் ஒரு தேவலோக அப்சரஸ்ஸை ஏற்பாடு பண்ணியிருந்தோம். அவ்வப்போது குடிப்பதற்கும் கொறிப்பதற்கும், வறுத்த முந்திரி, பாதாம்பருப்பு, ஆல்மண்ட், நல்ல திராக்ஷை ரசம், ஆப்பிள் ஜூஸ், மேங்கோ ஜூஸ், இப்படி  ஏதாவது கொடுத்துக்கொண்டிருந்தோம்.

இரவானதும் அவர்கள் தங்கும் விடுதிகளில் பலவிதமான கேளிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவைகளில் முக்கியமானவை ரம்பை-ஊர்வசி நாட்டியம்தான். இரவு விருந்தில் நூற்றுக்கணக்கான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ஒவ்வொன்றையும் ருசி பார்ப்பதற்குள்ளேயே பசி தீர்ந்து விட்டது. பல விதமான தீர்த்தங்கள் கொடுக்கப்பட்டன.


இவைகளை எல்லாம் சாப்பிட்டு முடித்தவுடன்  90 சதம் பேர்கள் (பதிவர்களில் 100 சதம்) அங்கேயே படுத்து விட்டார்கள். காரணம் நான் சொல்ல வேண்டியதில்லை. அவர்களை எல்லாம் யம கிங்கரர்கள் தூக்கிக்கொண்டுபோய் அவரவர்கள் அறையில் படுக்க வைத்தார்கள்.

அவர்கள் புறப்படும் நாள் வந்தது. ஒருவருக்கும் புறப்படவே மனது இல்லை. இங்கேயே இருந்து விடுகிறோமே என்றார்கள். அப்போது அவர்களுக்கு "இமிக்ரேஷன் விசா" வைப்பற்றி நாரதர் ஒரு வகுப்பு எடுத்தார். அன்வரும் ஒரே குரலில் நாங்கள் திரும்பிப் போனதும் முதல் வேலையாக இந்த விசாவை வாங்குவோம் என்று பதிவர்களைத் தவிர மற்ற எல்லோரும் ஏகமனதாகச்சொன்னார்கள்.

 இப்படியாக அனைவரையும் பூலோகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தோம்.

வெள்ளி, 29 மார்ச், 2013

நான் ஜெயிலுக்குப் போனேன்.


நான் ஏதோ கொலைக்குற்றம், வழிப்பறி அல்லது பாலியற்குற்றம் புரிந்து விட்டு ஜெயிலுக்குப் போனதாக கற்பனை செய்யவேண்டாம். அதற்குத் தேவையான உடல், மன தைரியம் எனக்கில்லை. எனக்குத் தெரிந்த ஒரு பையன் ஒரு சிறு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விசரணைக் கைதியாக சிறைக்கு அனுப்ப்பபட்டான். ஜாமீன் வாங்குவதில் பல சிக்கல்கள். போலீஸ், கோர்ட்டு, சிறைச்சாலை, வக்கீல்கள் இவர்கள் பக்கம் போகாமல் இருந்தால் நீங்கள் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் பெரும்பாலானோருக்கு இது தெரியாது.

ஆனால் நரகத்தைப் பார்த்தால்தான் சொர்க்கம் என்றால் என்ன என்று புரியும்.  இந்த நான்கு இடங்களையும் பார்த்தால் நரகம் என்றால் என்ன என்பது தெளிவாகப் புரியும்.

அந்தப் பையனின் பெற்றோர்களைப் பார்த்து ஆறுதல் சொல்லலாமென்று அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர்கள் வெளியில் புறப்படுவதற்கான ஆயத்தத்தில் இருந்தார்கள். வெளியில் புறப்படுகிறமாதிரி இருக்கிறதே என்றேன். ஆமாங்க, பையனைப் பார்த்து விட்டு வரலாமென்று புறப்படுகிறோம் என்றார்கள். அந்தப்பையனை நன்றாகத் தெரியுமாதலால் நானும் வரட்டுமா என்றேன். அவர்கள் வாங்களேன் என்று சொன்னார்கள். நாங்கள் மூவரும் அவர்கள் காரில் சென்றோம்.

கார் முதலில் ஒரு பழக்கடைக்கு சென்றது. இங்கு எதற்கு செல்கிறார்கள் என்று யோசிக்கும்போது, பையனுக்கு கொஞ்சம் தின்பண்டங்கள் வாங்கி கொடுப்பதற்காக இங்கே வந்தோம் என்றார்கள். அப்படியா என்று நினைத்துக்கொண்டேன். எனக்கும் ஒரு பழஜூஸ் வந்தது. அவர்கள் ஏதேதோ வாங்கிக்கொண்டு வந்தார்கள்.

பிறகு எல்லோரும் சிறைச்சாலைக்குப் போனோம். அங்கு முதல் கேட்டில் ஒரு விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்தோம். அதை ஒரு ரிஜிஸ்டரில் பதிவு செய்து எங்கள் மூவருடமும் கைரேகை வாங்கினார்கள். ஒருவன் என்ன படித்திருந்தாலும் அவர்களைப் பொருத்தவரையில் அவன் கைநாட்டுதான்.

அங்கே இருக்கும் இன்னொரு ரூமில் நாம் வாங்கிக்கொண்டு போயிருக்கும் தின்பண்டங்களைப் பரிசோதித்து, சிலவற்றை ஏற்றுக்கொள்ளாமல், மீதி இருப்பவற்றை ஒரு ஜெயில் பையில் போட்டு, அதற்கு ஒரு நெம்பர் கொடுத்து, நம்மிடம் ஒரு டோகன் கொடுக்கிறார்கள்.

பிறகு அங்கே இருக்கும் இன்னொரு ரூமில் நம்மிடம் ஏதாவது வெடிகுண்டு இருக்கிறதா என்று தடவித்தடவி பரிசோதிக்கிறார்கள். அவர்கள் சந்தேகம் தீர்ந்தவுடன் நம்மைப் போக அனுமதிக்கிறார்கள். பணம் 50 ரூபாய் மட்டுமே கொண்டு செல்லலாம். இந்தப் பணத்தை நாம் பார்க்கப் போகிறவர்களுக்கு கொடுத்துவிட்டு வரலாம். இதற்கென்று ஒருவர் இருக்கிறார். அவர் அந்தப் பணத்தை இந்தப் பக்கம் இருந்து வாங்கி அந்தப் பக்கம் கொடுப்பதற்கு சிரம பரிகாரமாக 20 ரூபாய் எடுத்துக்கொள்வார்.

அங்கிருந்து இரண்டு பர்லாங் தூரத்தில் இன்னொருவர் மேஜை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அவரிடம் போய் நம் விண்ணப்பத்தைக் கொடுத்தால் அவர் இன்னொரு ரிஜிஸ்டரில் எழுதி நம்மிடம் இன்னொரு முறை கைநாட்டு வாங்குவார்.

எந்த இடத்திலும் ஜனங்கள் உட்காருவதற்கு பெஞ்ச் அல்லது வேறு இருக்கைகளோ இல்லை. ஒரு வேப்பமரமும் ஒரு புளியமரமும் இருக்கின்றன. அதன் நிழலில் மண் தரையில் உட்கார்ந்து கொண்டு நம் விதியை நொந்தபடி இருக்கவேண்டியதுதான்.

அந்த விண்ணப்பங்களை எல்லாம் அவர் உள்ளே இருக்கும் காவலருக்கு அனுப்புகிறார். அவர் நாம் பார்க்கப்போகும் நபர் அந்த இன்டர்வியூ ஹாலுக்கு வந்து விட்டாரா என்று செக்கப் செய்வார். இதற்கு எப்படியும் அரை அல்லது ஒரு மணி நேரம் ஆகின்றது. நாம் பார்க்கப்போகும் நபர் ரெடியானவுடன் நம்மைக் கூப்பிடுகிறார்கள்.

இன்னொரு முறை வெடிகுண்டு சோதனை நடைபெறுகின்றது. பிறகு ஒரு நடைபாதை வழியே போனால் இன்டர்வியூ ஹால் வருகிறது. மீன்கடை இரைச்சல் என்று சொல்லுவார்கள். அந்த மாதிரி இரைச்சல் அந்த ஹாலில் இருக்கிறது.


ஏனென்றால், அந்த ஹாலில் இரண்டு இரும்புத் தடுப்புகள் போட்டிருக்கிறார்கள். இரண்டுக்கும் இடையே நான்கு அடி இடைவெளி. விசாரணைக் கைதிகள் ஒரு பக்கம். பார்க்கப்போகிறவர்கள் இந்தப் பக்கம். நாங்கள் போகும்போது கைதிகள் பக்கம் ஒரு நூறு பேரும் பார்வையாளர்கள் பக்கம் ஒரு இருநூறு பேர்களும் இருந்தார்கள். அவர்கள ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

அந்த இரைச்சலில் ஒருவர் பேசுவதும் அடுத்தவர்களுக்கு சரியாக காதில் விழுவதில்லை. ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் குரலை உயர்த்திப் பேசுகிறார்கள். மொத்தத்தில் சந்தைக்கடைதான். என்னால் எதுவும் பேட முடியவில்லை. நான் பார்க்கப்போன பையனைப் பார்த்து கையசைத்ததோடு சரி. ஒரு ஓரமாக நின்றுகொண்டு வேடுக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

வந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மனநிலை. புருஷனைப் பார்க்க வந்திருக்கும் கைக் குழந்தைக்காரி. மகனைப் பார்க்க வந்திருக்கும் நடக்கமுடியாத பாட்டி. அரசியல்வாதியைப் பார்க்க வந்திருக்கும் கட்சிக்காரர்கள். இப்படி பலதரப்பட்ட மக்கள். எல்லோர் முகங்களிலும் சோகம். ஒருவர் முகத்திலாவது மலர்ச்சி என்பது மருந்துக்குக் கூட இல்லை.

வாழ்கையின் மறு பக்கத்தை இங்கே பார்த்தேன். மனது மிகவும் கனமாகிப்போனது. இவர்களுக்கெல்லாம் எப்போது விசரணை நடந்து முடிந்து எந்த விதமான தண்டனை கிடைக்கும் என்று கற்பனை செய்ய முடியவில்லை. அப்படி தண்டனை பெற்றவர்கள் தண்டனைக் காலம் முடிந்து சிறையை விட்டு வெளியில் வரும்போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?உலகம் அவர்களுக்கு எந்த விதமான வரவேற்பு கொடுக்கும்? அவர்களின் எதிர்காலம் என்னவாகும்?

பதில் சொல்ல முடியாத கேள்விகள்.

வியாழன், 28 மார்ச், 2013

கள்ளக்காதலை எதிர்கொள்வது எப்படி?

நாட்டில் அவலங்கள் அதிகப்பட்டு வருகின்றன. நம் மனதிற்கு அவை பிடிக்கவில்லை என்பதற்காக அவைகளை புறக்கண்ப்பதால் அவை மறைந்து விடப்போவதில்லை. அவைகளை நாம் எவ்வகையிலாவது சந்திக்க நேரிடும்.

கள்ளக்காதல் என்பது ஒரு முக்கூட்டுப் பிரச்சினை. கணவன், மனைவி, கள்ளக்காதலன் அல்லது காதலி. இது இன்று அல்லது நேற்று முளைத்த பிரச்சினை இல்லை. காலங்காலமாக இருந்து வரும் பிரச்சினை. இதை சாதாரண மனிதன் எப்படி எதிர்கொள்ளுகிறான் என்று பார்ப்போம்.

ஆண் என்றால் இதை மூன்று வழிகளில் கையாளுகிறான்.

1. கள்ளக்காதலனைப் போட்டுத்தள்ளுவது.

இதுதான் வழக்கமாக நடக்கும் ஒன்று. அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் இதை ஒரு குற்றமாகவே கருத மாட்டார்கள். ஆனால் இந்தியாவில் இது ஒரு கொலைக்குற்றமாக கருதப்படுகிறது. இந்தக் குற்றம் புரிபவன் குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை பெறுவான். ஜெயிலில் களி சாப்பிடும்போதுதான் அவனுக்கு யோசனை வரும்.

நாம் ஏன் இப்படி செய்தோம் என்று யோசிப்பான். குற்றம் செய்தது அவன் பெண்டாட்டி. இதற்கு நான் தண்டனை அனுபவிக்கிறேனே, அவள் வெளி உலகில் சுதந்திரமாக வாழ்கிறாளே என்று எண்ணி வருந்துவான்.

2. கள்ளக்காதலனையும் பெண்டாட்டியையும் போட்டுத் தள்ளுவது.

மிகவும் உணர்ச்சி வசப்படும் ஆண் செய்யும் காரியம் இதுதான். குற்றம் புரிந்தது இருவர் என்பதால் ஒருவரை மட்டும் தண்டிப்பது சரியல்ல என்பது இவர்கள் எண்ணம். ஆனால் விளைவு என்னமோ ஒன்றுதான். இரட்டைக் கொலைக்காக இவன் தண்டனை பெறுவான்.

ஜெயில் தண்டனை என்பது சாதாரணமானதல்ல. ஒருவன் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகள் முடிந்து தண்டனை பெற்று அதை அனுபவித்து முடித்து வெளியில் வரும்போது அவன் மனநிலை எப்படி இருக்கும் என்று சொல்லமுடியாது.

3. இருவரையும் போட்டுத் தள்ளிவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வது.

இதுதான் உச்சகட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடு. இதில் உள்ள ஒரே சௌகரியம் என்னவென்றால் கதை உடனடியாக முடிந்து விடுகின்றது. போலீஸ்காரர்களுக்கும் நீதிபதிகளுக்கும் வேலை குறைவு. பிரேதப் பரிசோதனை முடித்து அடக்கம் செய்தால் கேஸ் முடிந்துவிடும்.

இந்த மூன்று வழிகளிலும் உள்ள ஒரே வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், அவர்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களுடைய எதிர்காலம் என்ன ஆகும் என்பதே.

புதன், 27 மார்ச், 2013

11. விவசாய மகாநாட்டின் தீர்மானங்கள்


ஐந்தாம் நாள் எல்லோரும் காலை பத்து மணிக்கு மகாநாட்டுப் பந்தலில் கூடினோம். ஏறக்குறைய அனைத்து முதல் மந்திரிகளும் தங்கள் தங்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். அந்தந்த மாநில விவசாய அதிகாரிகளும் விவசாயிகளும் மட்டுமே பந்தலில் இருந்தார்கள். ஓரிரு விவசாய மந்திரிகள் கண்ணில் பட்டார்கள்.

நான் பிரதம மந்திரியைப் பார்த்து நம் நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயத்தின் மேல் நமது முதலமைச்சர்களுக்கு உண்டான அக்கறையைப் பார்த்தீர்களா என்றேன். அவர் தலையில் அடித்துக் கொண்டு நீங்கள் ஒரு முறை இவர்களைப் பார்த்ததுமே இப்படி அலுத்துக் கொள்கிறீர்களே, நான் அன்றாடம் இவர்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டு இருக்கிறேனே, என்னுடைய நிலையை யோசித்துப் பாருங்கள் என்றார். ஆமாங்க, உங்கள் நிலை உண்மையிலேயே பரிதாபத்திற்கு உரியதுதான் என்றேன்.

 மகாநாட்டு அலுவல்கள் தொடங்கின. பிரதம மந்திரி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்து சொன்னதாவது. இப்போது நாம் இங்கு ஓரு விவசாயப் புரட்சி செய்யப் போகிறோம். இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் வெறும் பேச்சாக நின்று விடப்போவதில்லை. அவைகள் உடனடியாக அமுலுக்கு வரப்போகின்றன. அதில் சந்தேகம் வேண்டாம். இப்போது தீர்மானங்களை நிதி மந்திரி முன்மொழிவார்.

நிதி மந்திரி எழுந்து தீர்மானங்களை ஒவ்வொன்றாக முன் மொழிந்தார்.

1. நம் தேவலோகத் தூதுவர் வருண பகவானிடம் போட்டுள்ள ஒப்பந்தப்படி இனிமேல் இந்தியாவில் மாதம் மும்மாரி பெய்யும். அனைத்து ந்திகளிலும் வருடம் முழுவதும் தண்ணீர் வற்றாமல் ஓடும். எந்த ஆற்றிலும் நகரக் கழிவு நீரோ அல்லது தொழிற்சாலைக் கழிவு நீரோ கலக்காது. அவற்றிற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன.

2. விவசாயம் தொழில்துறையாக அறிவிக்கப்படுகிறது. தொழில் துறை நிறுவனங்கள் செயல்படும் விதத்திலேயே இனிமேல் விவசாயமும் செயல்படும். அதில் முக்கியமான செயல்பாடு, உற்பத்திப் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்தல். உற்பத்திச் செலவுகளுக்கு மேல் 20 சதம் அதிகம் வைத்து விலை நிர்ணயிக்கப்படும். இந்தியா முழுவதும் விளை பொருட்களின் விலை ஒரே மாதிரி இருக்கும். வியாபாரிகள் கொள்முதல் விலைக்கு மேல் 20 சதம் மட்டுமே லாபம் வைக்கலாம்.

3. விவசாய விளை பொருட்களை சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் வாங்குவதற்கு வியாபாரிகள் முன் வராவிட்டால் அந்தப் பொருட்களை அரசே நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு கொள்முதல் செய்து கொள்ளும். அதிக விளைச்சல் வரும்போது விலை இல்லையே என்று எந்த விவசாயியும் கவலைப்படவேண்டியதில்லை.

4. விவசாயம் இனி நவீன தொழில் நுட்பங்களுடன் நடைபெறும்.வேலைகளை சுலபமாக்கும் நவீன கருவிகள் உபயோகிக்கப்படும். விவசாய வேலைகள் இனிமேல் நன்கு பயிற்சி பெற்ற தொழில் நிபுணர்களால் செய்யப்படும். அவர்களை பயன்படுத்த அந்தந்த கிராமங்களில் சேவை மையங்கள் அமைக்கப்படும்.

5. இயற்கை வழி விவசாயமே இனி கடைப்பிடிக்கப்படும். நச்சு கலந்த பூச்சிக்கொல்லிகள் உபயோகப் படுத்தப்படமாட்டாது. மண்வளம் பாதுகாக்கப்படும். காடுகளை எக்காரணம் கொண்டும் யாரும் அழிக்க முடியாது. அவைகளின் பரப்பளவு அதிகரிக்கப்படும். விவசாய நிலங்களை இனி வேறு எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தக் கூடாது.

6. வருடம் முப்போகம் விளைவதில், ஒரு போகம் பசுந்தாள் உரப் பயிர்களுக்காக ஒதுக்கப்படும். இதற்கான செலவை அரசு ஏற்றுக்கொள்ளும்.

7.இயற்கை உரங்களை அரசே தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கும்.
குறிப்பாக மனிதக் கழிவுகள் வீணாகாமல் உரம் தயாரிப்புக்கு உபயோகப்படுத்தப்படும்.

8. மக்ளுக்கு வேண்டிய தரமான, கலப்படமில்லாத உணவுப்பொருட்கள் ஆங்காங்கே நிறுவப்படும் அரசு அங்காடிகள் மூலமாக விற்கப்படும்.

9. முக்கியமான மற்றொரு தீர்மானம். விவசாயிகளின் கடன்கள், அவர்கள் எங்கு வாங்கியிருந்தாலும் சரி, அவைகள் மொத்தமாக ரத்து செய்யப்படுகின்றன.  இனிமேல் அவர்களுக்கு விவசாய வேலைகளுக்குத் தேவையான நிதி வட்டியில்லாக் கடனாகக் கொடுக்கப்படும்.

மத்திய விவசாய மந்திரி இந்தத் தீர்மானங்களை வழி மொழிந்தார்.

இந்தத் தீர்மானங்களைக் கேட்ட மகாநாட்டுக்கு வந்திருந்த அனைத்து மக்களும் எழுந்து நின்று கரகோஷம் செய்த சத்தம் கேட்டு வானத்திலிருந்து மும்மூர்த்திகளும் வந்து விட்டார்கள். நல்ல விஷயங்கள்தான் நடக்கிறது என்று அறிந்து கொண்டு ஊர் திரும்பினார்கள்.

இப்படியாக மாநாட்டுத் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேறின.

கடைசியில் பேசிய பிரதம மந்திரி கூறியதாவது.

அனைத்து விவசாய மந்திரிகளும் விவசாய அதிகாரிகளும் இந்த தீர்மானங்களை அமுல் படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுப்பார்கள். இந்த நடைமுறைகளில் வரும் பிரச்சினைகளை சமாளிக்க விவசாய நிபுணர்கள் கொண்ட அனைத்திந்திய கமிட்டி ஒன்று 24 மணி நேரமும் செயல்படும்.

இவ்வாறு விவசாய மகாநாடு முடிவுக்கு வந்தது.

மகாநாடு முடிந்தவுடன் சில பத்திரிகை நிருபர்கள் சில சந்தேகங்களை கேட்டார்கள். விவசாயப்பொருட்களுக்கு இவ்வாறு விலை வைத்தால் அந்தப் பொருட்களை மக்களை வாங்குவார்களா என்று கேட்டார்கள். அதற்கு நிதி மந்திரி சொன்னார். இப்போதுள்ள லகுவாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறையில் இருப்பதால் மக்களின் தனிப்பட்ட பொருளாதாரம் வெகுவாக முன்னேறியுள்ளது.

விவசாயம் தவிர அனைத்துத் துறைகளிலும் பொருட்களின் விலை, வேலையாட்களின் கூலி ஆகியவை பன்மடங்கு உயர்ந்துள்ளன. ஆனால் விவசாயத்துறையில் மட்டும் இந்த மாற்றங்கள் ஏற்படவில்லை. ஏனென்றால் இன்றைய சந்தை நிலவரப்படி விவசாயி ஆட்களுக்கு கூலி கொடுக்க முடிவதில்லை. ஏன்? அவன் விளைவிக்கும் பொருளுக்கு சந்தையில் கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை. இப்படியே இருந்தால் விவசாயம் அழிந்து போய்விடும்.

ஏன் விவசாயம் மட்டும் இப்படி இருக்கவேண்டும்? கணினித்துறையில் ஒருவன் 50000 ரூபாய் சாதாரணமாக சம்பளம் வாங்குகிறான். தொழில் துறையில் மேலாளராக இருப்பவனுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறார்கள். கட்டிடத்துறையில் சாதாரண மேசனுக்கு 600 - 700 என்று சம்பளம். அவன் நான் ஏன் வாரம் முழுவதும் வேலைக்குப் போகவேண்டும்? இரண்டு நாள் போனால் என்னுடைய ஒரு வாரத்தேவைக்கான பணம் கிடைத்துவிடுகிறது என்கிறான்.

விவசாயிதான் ஊருக்கு இளைத்தவனா? அவன் எப்பொழுதும் கிழிந்த வேட்டியுடன்தான் இருக்கவேண்டுமா? அவன்தானே எல்லோருக்கும் உணவு உற்பத்தி செய்து கொடுக்கிறான்? அவன் உற்பத்தியை நிறுத்தி விட்டால் மக்கள் எதைச் சாப்பிடுவார்கள்?

மற்ற தொழில்களில் உற்பத்தி செய்ய்ப்படும் பொருட்களின் விலையை மட்டும் அவ்வப்பொழுது அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு செல்போனின் விலை 40000 ரூபாய் என்கிறார்கள். பெட்ரோல் விலை வாரத்திற்கு ஒரு முறை ஏறுகிறது. எங்காவது வாகன நெருக்கடி குறைந்துள்ளதா?

இதற்கெல்லாம் செலவு செய்யத் தயங்காத மக்கள் தாங்கள் உண்ணும் உணவுப் பொருட்களுக்கு, கட்டுப்படியாகும் விலை கொடுக்க ஏன் தயங்கவேண்டும். ஒரு கிலோ அரிசி 100 ரூபாய் என்றால் 50000 ரூபாய் சம்பளம் வாங்குபவர் கொடுப்பதற்கென்ன? மார்க்கெட்டில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் முருங்கைக் காயை விவசாயியிடமிருந்து வியாபாரிகள் என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு ரூபாய்க்கு வாங்குகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

முந்தின நாள் இரவு குடித்த பானங்களின் வயிற்றெரிச்சல் தீர தினமும் காலையில் ஒரு இளனி 20 ரூபாய்க்கு வாங்கிக் குடிக்கிறார்களே, அதில் அதை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு எவ்வளவு சேருகிறது என்று தெரியுமா? வெறும் ஐந்து ரூபாய மட்டுமே.

தக்காளி சீசனில் அமோகமாக விளைந்துவிட்டால் அதைப் பறித்து மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் செலவிற்கு கூட வியாபாரிகள் விலை கொடுப்பதில்லை என்று எத்தனை பேருக்குத் தெரியும்?

விவசாயியும் ஒரு மனிதன்தானே? இந்திய நாட்டின் குடிமகன்தானே? ஒரு கட்டிடத்தொழிலாளி வாங்கும் கூலியாவது அவனுக்குக் கிடைக்கவேண்டாமா? அவனும் மானமாக வாழ வழி வேண்டாமா? தற்கொலை செய்து கொள்ளத்தான் அவன் பிறந்தானா?

மக்களே யோசியுங்கள்.


இப்படியாகவே தொழில் துறை, கல்வித்துறை ஆகியவற்றிற்கும் அடுத்தடுத்து மகாநாடுகள் நடத்தப்பட்டன. தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அவைகளை விவரமாக இங்கே விவரிக்காததிற்குக் காரணம் பதிவுலக மக்களின் ஆர்வக்குறைவே.

ஆகவே பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லப்போகிறேன்.

எதிர் பாருங்கள் - தேவலோக சுற்றுலா

திங்கள், 25 மார்ச், 2013

10. மறுமலர்ச்சிகள் - விவசாயம்

அடுத்த வாரம் மீட்டிங் கூட்டினபோது பிரதம மந்திரியின் முகம் வாட்டமடைந்திருந்தது. ஏன் இப்படி டல்லாக இருக்கிறீர்கள் என்று கேட்டேன். மக்கள் எல்லோரும் என்னைக் குறை கூறுகிறார்கள் என்றார். பெரும்பான்மை மக்களுக்கு நன்மை செய்யும்போது சிறுபான்மையினர் வருத்தப்படுவது இயற்கைதானே, நீங்கள் இதற்கெல்லாம் வருந்தலாமா, எது வந்தாலும் நான் இருக்கிறேன், உங்களை ஒரு பயலும் ஒன்றும் செய்ய முடியாது, சிறிது நாட்கள் கழித்து எல்லாம் சரியாகிவிடும் என்று அவருக்கு ஆறுதல் சொன்னேன்.

நிதி மந்திரியிடம் நாம் இப்போது மூன்று விஷயங்களை ஆலோசித்து தீர்மானங்கள் எடுக்கவேண்டும். அவை விவசாயம், கல்வி, தொழில் ஆகியவை. இந்த மூன்றிலும் நாம் சிறந்து விளங்க வேண்டும். அப்போதுதான் இந்தியா வல்லரசாக முடியும் என்றேன். அவர்களும் ஒத்துக்கொண்டார்கள்.


முதலில் விவசாயத்தைப் பார்ப்போம். இதில் முக்கியமான சங்கடம் என்னவென்றால், விவசாயத்திற்கு வேண்டிய நீர்வளம் இல்லை. இரண்டாவது விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. மூன்றாவது விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை கிடைப்பதில்லை. இது தவிர வேறு பிரச்சினைகள் உண்டா என்றேன். நிதி மந்திரி, சில சமயங்களில் அதிகமாக விளையும் பொருட்களுக்கு மார்க்கெட் இல்லாமல் போகிறது என்றார்.

இவை எல்லாவற்றிற்கும் நாமே தீர்வு கண்டுபிடிப்பதை விட விவசாய நிபுணர்கள், விவசாயிகள், அந்தந்த மாநில விவசாய அதிகாரிகள் மற்றும் விவசாய மந்திரி ஆகியவர்கள் இருந்தால் நலமாக இருக்குமே என்றேன். பிரதம மந்திரி அதுதான் சரியாக இருக்கும் என்றார். அப்டியானால் டில்லி போனதும் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்புங்கள். அந்தந்த மாநிலங்களில் இருக்கும் பிரச்சினைகளையும் அவற்றிற்கு என்ன தீர்வு இருக்கிறது என்றும் அவர்கள் மீட்டிங் போட்டு தீர்மானிக்கட்டும். அடுத்த வாரம் இங்கு நமது தூதரகத்தில் அதில் முக்கியமானவர்களை எல்லாம் வரச்சொல்லி முடிவு எடுப்போம் என்றேன்.

அவர்கள் அதற்கு சரி, இது நல்ல யோசனை என்றார்கள். நான் அப்படியே கல்வி, தொழில் இது சம்பந்தமாகவும் மீட்டிங்குகள் போட்டு அதைப்பற்றி கான்பரன்ஸ் போடவும் ரெடியக இருக்கச்சொல்லுங்கள். விவசாய கான்பெரன்ஸ் முடிந்ததும், அடுத்தடுத்து இந்த இரண்டு கான்பெரன்ஸ்சுகளையும் வைத்துக்கொள்ளலாம் என்றேன்.

அவர்கள் சரி என்றார்கள். அவர்களைப் போகச் சொல்லிவிட்டு, நான் ஓய்வு எடுக்கப்போனேன்.

மறுவாரம் விவசாய மகாநாடு தேவலோக தூதரகத்தில் தொடங்கியது. அனைத்து மத்திய மந்திரிகள், மாநில முதலமைச்சர்கள், விவசாய மந்திரிகள், விவசாயத்துறை முக்கிய அதிகாரிகள், விவசாயிகள்,  விவசாயப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள், விவசாய விஞ்ஞானிகள், நீர்ப்பாசனத்துறை மந்திரிகள், அதிகாரிகள், கால்நடைத்துறை மந்திரிகள், அதிகாரிகள், இப்படியாக ஏறக்குறைய பத்தாயிரம் பேர் வந்து விட்டார்கள்.

இத்தனை பேரை வைத்துக்கொண்டு என்ன உருப்படியான முடிவுகள் எடுக்க முடியும் என்ற சந்தேகம் வந்தது. சரி பார்ப்போம் என்று மகாநாட்டைத் துவங்கினோம். பொது வரவேற்புரை வாசித்தார். நான் மகாநாட்டின் நோக்கத்தைக்குறித்து பேசினேன்.

அப்போது நான் சொன்னேன். இந்த மகாநாடு கூட்டப்பட்டதன் நோக்கம் இந்தியா விவசாய நாடென்று சொல்லப்பட்ட பொதும் விவசாயத்தில் மிகவும் பின் தங்கியிருக்கிறது. விவசாயம் செய்து ஒரு விவசாயி தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறான். இப்படியே போனால் இந்தியவில் விவசாயமே அழிந்து போய்விடும்போல் இருக்கிறது.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவுகள் எடுப்பதற்காகவே இந்த மகாநாட்டைக் கூட்டினோம். நீங்கள் எல்லோரும் இதைப் பற்றி உங்கள் மாநிலத்தில் பேசி சில முடிவுகளுடன் வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களும் அவர்கள் மாநிலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றி எடுத்துரைப்பார்கள். ஒவ்வோருவரும் 15 நிமிடங்களில் அவர்கள் சொல்லவேண்டியதை சொல்லி முடித்தால் நல்லது.

பிறகு பிரதம மந்திரியின் தலைமையில் மகாநாடு தொடங்கியது. மாநில முதலமைச்சர்கள் பேசினார்கள். ஒவ்வொருவரும் 1 மணி நேரம் முதல் 1 1/2 மணி நேரம் வரை பேசினார்கள். 15 நிமிடம் கழித்து பிரதம மந்திரி மணி அடித்துப் பார்த்தார். ஒரொவரும் அந்த நேரத்திற்குள் பேச்சை முடிக்கவில்லை. முன் அனுபவம் காரணமாக அவர் இரண்டாவது தடவை மணி அடிக்கவில்லை.

காலை 11 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரையில் ஏழு முதல் மந்திரிகள் மட்டுமே பேசி முடித்தார்கள். நான் பிரதம மந்திரியிடம் சொன்னேன். அனைத்து மாநில முதலமைச்சர்கள் பேசி முடிக்கும் வரை மகாநாடு தொடரட்டும் என்றேன். அவரும் சரியென்றார். இப்படியாக மகாநாடு நான்கு நாட்கள் நடந்து அனைத்து முதல் மந்திரிகளும் பேசி முடித்தார்கள். அவர்கள் பேசியது முழுவதும் அரசியல்தானே ஒழிய விவசாயத்தைப் பற்றி ஒன்றும் இல்லை.

இதைப் பார்த்த நான் அன்று இரவு நான்கைந்து விவசாய நிபுணர்களையும் பத்து விவசாயிகளையும் தனியாக அழைத்துப்போய், இந்த முதல் அமைச்சர்கள் பேசிக்கொண்டிருக்கட்டும். அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. நீங்கள் தனியாக உட்கார்ந்து என்ன தீர்மானங்கள் போடலாம் என்று விவாதித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். அவைகளை மகாநாட்டுத் தீர்மானங்களாக நிறைவேற்றி விடுவோம் என்றேன். அவர்களும் சரியென்று அவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள ரூமுக்குப் போய்விட்டார்கள்.

ஐந்தாம் நாள் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் நாள். என்னென்ன தீர்மானங்கள் நிறைவேறின என்று அடுத்த பதிவில் பார்க்கவும்.


சனி, 23 மார்ச், 2013

9. சில புரட்சித் திட்டங்கள்

(இந்தப் பதிவைப் படித்து யாரும் பீதியடையவேண்டாம். எல்லாம் என் கனவில் நடந்தவை)


அடுத்த வாரம் அதே நாள் சரியாகப் பத்து மணிக்கு மூவரும் வந்தனர். நிதி அமைச்சர் நான் செய்த நிதி உதவிக்கு நன்றி தெரிவித்தார். நான் சொன்னேன், "என் தாய் நாட்டிற்கு இது கூடச் செய்யாவிட்டால் நான் என்ன மனிதன்? இதற்கெல்லாம் நன்றி எதற்கு" என்று சொன்னேன். நிதி அமைச்சர், "இருந்தாலும் இவ்வளவு பெரிய உதவி செய்ய ரொம்பப் பெரிய மனது வேண்டும்" என்றார்.

அது இருக்கட்டும், மேற்கொண்டு இந்தியாவை முன்னேற்ற என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்றேன். நிதி அமைச்சர் சொன்னார், நாம் எவ்வளவு நல்ல திட்டங்களைப் போட்டாலும் அவைகள் மக்களைப் போய் சேருவதில்லை. போகும் வழியில் பல ஓட்டைகள். அவைகளை எப்படியாவது அடைக்கவேண்டும் என்றார்.

நீங்கள் ஒத்துக் கொண்டால் நான் ஒரு ஐடியா சொல்லுகிறேன். இந்திய நாட்டை இப்போது முன்னேற விடாமல் தடுப்பது இரண்டே விஷயங்கள்தான். ஒன்று லஞ்சம், இரண்டு கருப்புப் பணம். இந்த இரண்டையும் ஒழித்தால் நாடு வேகமாக முன்னேறும் என்றேன். மூவரும் இதை ஒத்துக்கொண்டு, "இந்த இரண்டையும் ஒழிக்க நீங்கள் என்ன திட்டம் சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறோம்" என்றார்கள்.

அப்படியானால் நான் சொல்வதைச் செய்யுங்கள். நமது நாட்டில் கருப்புப் பணம் புழங்குவதற்கு முதல் காரணம் வரிகள்தான். அதிலும் குறிப்பாக வருமான வரிதான் கருப்புப் பணத்தை உண்டாக்குகிறது. ஆனால் உலகெங்கிலும் வருமான வரிகள்தான் அரசை நடத்துவதற்கான பணத்தைக் கொடுக்கிறது. நாம் என்ன செய்யவேண்டுமென்றால், வரி ஏய்ப்பைத் தடுக்கவேண்டும்.

அதற்கு நான் ஒரு வழி வைத்திருக்கிறேன். என்னிடம் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் இருக்கிறது. அது என்னுடைய கன்ட்ரோல் ரூமில் இருக்கும். அதில் இந்திய நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருடைய வரவு செலவு கணக்குகளும் தெரியும். எல்லோருக்கும் அடையாள எண்கள் கொடுக்கப்பட்டு விட்டதல்லவா? அதை வைத்து அந்த கம்ப்யூட்டர் அதுவாகவே ஒவ்வொருவருடைய வருமான வரியையும் கணக்குப் போட்டு அவர்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளும். வருட முடிவில் அவர்களுக்கு ஸ்டேட்மென்ட் போய்விடும்.

அது தவிர லஞ்சமாக வாங்கும் பணத்தை கணக்கில் காட்ட முடிவதில்லை. ஏனெனில் இப்பொழுது லஞ்சம் சட்ட விரோதமாக இருக்கிறது. இதனாலும் கருப்பு பணம் அதிகமாகிறது. நீங்கள் என்ன செய்யுங்கள், லஞ்சத்தை சட்டபூர்வமானது என்று அறிவித்து விடுங்கள்.

"ஐயையோ, அப்புறம் கவர்ன்மென்டை எப்படி நடத்த முடியும்? ஊழலை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்" என்று மூன்று பேரும் ஒரே குரலில் அரற்றினார்கள். கவலைப் படாதீர்கள், அதற்கு வழி வைத்திருக்கிறேன். இனிமேல் லஞ்ச வரி என்று புதிதாக ஒரு வரி போட்டுவிடுங்கள். லஞ்சம் வாங்குவதைப் போல் ஐந்து மடங்கு வரி கட்டினால் போதும் என்று சட்டம் போட்டு விடுங்கள், என்றேன்.

நிதி மந்திரி திருதிருவென்று விழித்தார். பிரதம மந்திரிதான் முதலில் சுதாரித்தார்.  இது நல்ல திட்டமாக இருக்கிறது. ஆனால் எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்றார். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். வரி வசூலை எங்கள் ஆட்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றேன். எப்படி என்றார்?

இதற்காக தனியாக ஒரு கன்ட்ரோல் ரூம் ஏற்படுத்துவோம். அதில் இந்த சூப்பர் கம்ப்யூட்டர் மாதிரி இன்னொன்று நிறுவப்படும். அதில் இந்தியாவில் யார் எங்கு லஞ்சம் வாங்கினாலும் ஸ்கிரீனில் தெரிந்துவிடும். அந்த நபர் பணம் எங்கு வைத்திருந்தாலும் அந்த லஞ்சப்பணத்தைப் போல் ஐந்து மடங்கு எங்கள் பேங்கிற்கு வந்து விடும். அதை அப்படியே அவ்வப்போது அரசு கஜானாவில் போட்டு விடுகிறோம் என்றேன். அவர்களுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. குதித்து கூத்தாடினார்கள்.

ஏற்கெனவே இந்த முறையை உபயோகித்து ஸ்விஸ் பேங்கில் இந்தியர்கள் வைத்திருந்த கறுப்புப் பணம் முழுவதையும் எடுத்துவிட்டோம். நேற்று உங்களுக்குக் கொடுத்தது முழுவதும் அந்தப் பணம்தான். இன்னும் கூட மிச்சம் இருக்கிறது. எப்போது தேவைப்பட்டாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றேன்.

அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இன்னும் பல திட்டங்கள் இருக்கின்றன. இப்போது நான் சொல்லும் திட்டங்களை கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள்.

இப்போது அயல்நாட்டு உள்நாட்டுக் கடன்களை எல்லாம் தீர்த்து விட்டபடியால் இனி மேல் நாம் யாருக்கும் தலை வணங்க வேண்டியதில்லை. வெளிநாட்டு மூலதனம் இனி நம் நாட்டுக்குள் எவ்வகையிலும் நுழையக்கூடாது. எந்த விதப் பொருட்களும் அயல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது. நம் தொழில்களுக்கு வேண்டிய கச்சாப் பொருட்களை மட்டும்தான் இறக்குமதி பண்ணலாம். இங்கு இருக்கும் அயல்நாட்டுக் கம்பெனிகளை எல்லாம் (குறிப்பாக கோக்கோ கோலா, பெப்சி, KFC, McDonald) மூட்டை முடிச்சுடன் அவரவர்கள் ஊருக்கு திருப்பியனுப்புங்கள்.

பெரிய பெரிய கம்பெனிகள், பணக்காரர்கள் எல்லாம் பேங்குகளில் கோடிக்கணக்காக கடன் வாங்கிக்கொண்டு, பல ஏமாற்று வேலைகள் செய்து அந்தக் கடன்களை கட்டுவது இல்லை என்று கேள்விப்பட்டேன், அது உண்மையா? என்று கேட்டேன். நிதி மந்திரி, அது உண்மைதான், என்றார். அந்த கடன்கள் எவ்வளவு இருக்கும் என்றேன். அந்தக் கடன்கள் எல்லாம் வசூலானால் ஒரு ஐந்து வருட இந்திய பட்ஜெட்டுக்குப் போதும் என்றார். அப்படியா, இன்று இரவு அந்தக் கடன்கள் மொத்தமாக வசூலாகி ரிசர்வ் பேங்கில் சேர்க்கப்படும், என்றேன். அது மாதிரியே அன்று இரவு செய்தேன்.

தவிர இந்தியா முழுவதிலும் இலவசம் என்பது எங்கும் எந்த ரூபத்திலும் இருக்கக் கூடாது. வேலையில்லாமல் ஒருவரும் இருக்கக் கூடாது. அரசியல் கட்சிகள் நன்கொடை வாங்கக் கூடாது. தகுதிக்கு மீறி சொத்து வைத்திருப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டு விடுங்கள். அவர்கள் பினாமி பெயரில் வைத்திருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யுங்கள். இதற்காக நான் இங்கு ஒரு கன்ட்ரோல் ரூம் வைத்திருக்கிறேன். அதில் எல்லா விவரங்களும் பதிவு ஆகியிருக்கின்றன. நீங்கள் ஏதாவது தில்லு முல்லு செய்தால் அப்புறம் விளைவுகள் மோசமாக இருக்கும். ஜாக்கிரதை.

மாநிலத்திற்கு மூன்று டி.வி.ஸ்டேஷன்கள் தவிர மற்ற எல்லா டி.வி.ஸடேஷன்களையும் மூடிவிடுங்கள். இவைகளில் விளம்பரத்திற்காக பல கம்பெனிகள் செலவு செய்து விட்டு. அந்தச் செலவை மக்கள் மீது திணிக்கிறார்கள். இப்படி மூடப்பட்ட டி.வி.க்காரர்களின் சொத்துக்களை-  யெல்லாம் அரசு எடுத்துக் கொள்ளட்டும். நடந்து கொண்டிருக்கிற டி.வி.க்கம்பெனிகளின் அளவுக்கு மீறின சொத்துக்களையும் பறிமுதல் செய்யுங்கள்.

தொழிற்சங்கங்கள், வேலை நிறுத்தங்களை, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள்,  அனைத்தும் தடை செய்யப்படுகின்றன. மோட்டார் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தனியார்மயமாகிறது. பெட்ரோல, டீசல் விலை இன்னும் ஐந்து வருடங்களுக்கு மாறக்கூடாது. ஆட்டோக்கள், டாக்சிகள் மீட்டர் கட்டணத்திற்கு மேல் வாங்கினால் அப்போதே யமகிங்கரர்களால் தண்டிக்கப்படுவார்கள்.

இந்தியா முழுவதும், குறிப்பாக மும்பய்யில் உள்ள அனைத்து தாதாக்களும் கட்டைப் பஞ்சாயத்துதாரர்களும், புரோக்கர்களும் இப்போதிலிருந்து யமகிங்கரர்களால் நீக்கப்படுவார்கள். பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் இந்த விநாடியிலிருந்து மூடப்படுகிறது. அனைத்துக் கம்பெனிகளின் அனைத்து ஷேர்களும் கேன்சல் செய்யப்படுகின்றன.

இந்தியா முழுவதும் மதுவிலக்கு உடனடியாக அமுலுக்கு வருகிறது. அதற்கு உபயோகமான எத்தனாலை எவ்வளவு சதம் பெட்ரோலில் கலக்க முடியுமோ அத்தனை சதம் கலந்து விற்பனையாகட்டும். குடிமகன்கள், தனியாக கவுன்சிலிங்க் மூலம் நல்ல குடிமகன்களாக மாற்றப்படுவார்கள்.

ரயில்கள் நேரத்திற்கு ஓடவேண்டும். எல்லா இலவச பாஸ்களும் இந்த நிமிடம் முதல் ரத்து செய்யப்படுகின்றன. எந்த ரயிலிலும் டிக்கட் வாங்காமல் ஒருவரும் பயணம் செய்யக்கூடாது. அப்படி பயணம் செய்பவர்களையும் அவர்களை அனுமதிக்கும் டிடிஆர் களையும் உடனடியாக தண்டிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். டிடிஆர் களுடன் சண்டைக்குப் போகும் பயணிகள் அப்போதைக்கப்போது என்னுடைய யமகிங்கரர்களால் அப்புறப்படுத்தப்படுவார்கள்.

விமானப் போக்குவரத்தில் யாருக்கும் இலவசப் பாஸ்கள் கூடாது. யாருக்கும் தனி விமானங்கள் கிடையாது. விமான ஊழியர்களின் சம்பளம் தவிர அனைத்து இதர சலுகைகளும் ரத்து செய்யப்படுகின்றன. அரசு சம்பந்தப்பட்ட யாரும் வெளிநாடு செல்லவேண்டாம். உள்நாட்டிலும் அவசியமில்லாமல் பயணம் செய்யக்கூடாது.

இங்கிருந்து போனவுடன் வெடிகுண்டு தயாரிப்பாளர்களுக்கு ஒரு அறிக்கை விடுங்கள். இந்தியாவில் எந்த இடத்துல் யார் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டாலும் அந்த குண்டுகள் அங்கேயே வெடித்து அந்த குண்டுகள் தயார் செய்பவர்கள் மட்டும் இறந்து போவார்கள். இந்த டிபார்ட்மென்டை நான் நேரடியாக கன்ட்ரோல் செய்து கொள்கிறேன்.

தவிர கொலை, கொள்ளை, வழிப்பறி, ஏமாற்றுகள், பாலியல் பலாத்காரங்கள் யாவும் இந்த விநாடியிலிருந்து தடை செய்யப்படுகின்றன. அப்படி இந்தக் குற்றங்களில் யார் ஈடுபட நினைத்தாலும் அந்த விநாடியே அவர்கள் யம- கிங்கரர்களால் அப்புறப்படுத்தப்படுவார்கள்.

அரசு வேலைகள் அனைத்தும் ஜரூராக நடக்கவேண்டும் எதிலும் சுணக்கம் இருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அனைவருக்கும் சுற்ற்றிக்கை அனுப்பிவிடுங்கள். அப்புறம் இன்னொரு விஷயம். அரசு அதிகாரிகள் தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்திருக்கும் அனைத்து சொத்துக்களும் இன்றிரவு அரசு கஜானாவிற்கு வந்து விடும்.

டில்லி, கொல்கத்தா, மும்பாய், சென்னை ஆகிய நகரங்களில் இன்று இரவு, 50 கி.மீ. தூரத்தில் சேடலைட் நகரங்கள் உருவாகிவிடும். மயனைக் கூப்பிட்டு இதைச் செய்யுமாறு சொன்னேன். அவன் தலையை ஆட்டிவிட்டுச் சென்று விட்டான். அனைத்து அரசு அலுவலகங்களும் அங்கு சென்று விடவேண்டும். நகர மையத்தில் எந்த விதமான டிராபிக் இடையூறுகளும் இருக்கக் கூடாது.

எல்லா மெட்ரோ நகரங்களிலும் மெட்ரோ ரயில் உடனடியாக அமைக்கப்பட்டு உபயோகத்திற்கு வருகிறது. இன்றிரவு மயன் அந்த வேலையை முடித்துவிடுவான்.

இந்தியாவில் உள்ள கார்பரேட் சாமியார்களின் அனைத்துச் சொத்துகளும் இன்றிரவு பறிமுதல் செய்யப்பட்டு அரசு கஜானாவில் சேர்க்கப்படும். அவர்களின் ஆசிரமங்கள் கல்லூரிகளாக செயல்படும். அந்த சாமியார்கள் எல்லோருக்கும் இமய மலையில் ஒரு ரிசார்ட் உருவாக்கப்பட்டு அங்கு எல்லா வசதிகளுடனும் வசிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் பணிவிடை செய்யத் தேவையான தேவலோக அப்ஸரஸ் மங்கையர்கள் ஏற்பாடு செய்யப்படுவார்கள்.

அதேபோல் அனைத்து கோவில் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும். கோவில்களை நடத்த தேவையான பணம் தனி பட்ஜெட் மூலம் ஒதுக்கப்படும்.

இந்த மாறுதல்களுக்குத் தேவையான அனைத்து நடைமுறை உத்திரவுகளையும் இன்றிரவே பிறப்பித்து இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு கொண்டு வந்து விடுங்கள் என்று பிரதம மந்திரியிடம் சொன்னேன். அவர் சரி என்றார்.

அப்புறம் ஒரு விஷயம் என்றேன், என்ன? என்று கேட்டார்கள்.

என்னைக் கேட்காமல் எந்த புது திட்டத்தையோ பாலிசி மேட்டரையோ அமல்படுத்தக்கூடாது. என்னுடைய திட்டங்களையெல்லாம் மறுப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும். இதில் எந்த மாற்றமும் கூடாது என்றேன். அடுத்த வாரம் சந்திப்போம். சரியென்று ஒப்புக்கொண்டு டில்லி கிளம்பினார்கள்.