புதன், 14 டிசம்பர், 2016

உலகில் பணமே பிரதானம்


பணம் என்று ஒன்றை மனிதன் கண்டு பிடித்த நாளிலிருந்து இன்று வரை பணத்தினால் மயங்காதவர்கள் யாரும் இல்லையென்றே சொல்லலாம். இல்லறத்தானில் இருந்து முற்றும் துறந்த துறவி என்று சொல்கிறவர்கள் வரை இந்தப் பணம் பிரதானமாய் விளங்குகிறது.

காரணம் என்னவென்றால் பணத்தைக் கொண்டு எதையும் சாதிக்க முடியும். யாரையும் விலைக்கு வாங்க முடியும். எந்த குற்றமும் செய்து விட்டு தண்டனையில்லாமல் திரியலாம்.

ஆகவேதான் பணத்தின் மீதான மனிதனின் ஆசைக்கு அளவே இல்லை. ஆனாலும் இந்தப் பணத்தில் ஒரு சிக்கல். இதை தன் உபயோகத்திற்காக பயன்படுத்தத்  தெரியாதவர்களின் கையில் இது ஒரு விலங்கேயாகும்.

பழங்காலத்து ராஜாக்கள் முதல் இந்நாளைய அரசியல்வாதிகள் வரை பணம் சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இதை எப்படி சேர்த்துவது என்பதற்கு வரையறை எதுவும் இல்லை. பணம் சேரவேண்டும், அவ்வளவுதான். யார் சாப்பிட்டால் எனக்கென்ன, சாப்பிடாவிட்டால் எனக்கென்ன? என்கிற கொள்கைதான் இன்று ஆட்சி புரிகிறது.

தமிழ்நாட்டில் இன்று அரசியல்வாதிகளை ஆட்டுவிப்பது பணம், பணம் மட்டும்தான் என்று அனைவரும் புரிந்திருப்பீர்கள். பணம் முட்டாளையும் அறிவாளியாகக் காட்டும். அரசியலுக்கு சம்பந்தமில்லாதவர்களை அரசியலுக்கு வரவழைக்கும். பணம்  இருந்தால்  பதவி தானாகத் தேடி வரும். பணம் படைத்தவர்களை  அனைவரும் போற்றுவார்கள்.

ஆகவே, மக்களே, எப்படியாவது பணம் சேருங்கள். அப்போதுதான் உங்களை ஒரு மனிதன் என்று அனைவரும் போற்றுவார்கள்.

8 கருத்துகள்:

  1. "ஓரிடந்தனிலே நிலையில்லாதுலகினிலே உருண்டோடிடும் பணம் காசென்னும் உருவமான பொருளே!" என்ற பாடலை நான் சிறுமியாக இருக்கும்போது அபிநயத்தோடு சொல்லிக் கொடுத்தார்கள் - அந்தப் பாடல் தான் ஞாபகம் வந்தது!!
    //தமிழ்நாட்டில் இன்று அரசியல்வாதிகளை ஆட்டுவிப்பது பணம், பணம் மட்டும்தான் என்று அனைவரும் புரிந்திருப்பீர்கள். பணம் முட்டாளையும் அறிவாளியாகக் காட்டும். அரசியலுக்கு சம்பந்தமில்லாதவர்களை அரசியலுக்கு வரவழைக்கும். பணம் இருந்தால் பதவி தானாகத் தேடி வரும். பணம் படைத்தவர்களை அனைவரும் போற்றுவார்கள்.// உண்மையான பொன்னான வரிகள்!!

    பதிலளிநீக்கு
  2. ’பணம் என்னடா .... பணம் .... பணம் ....
    குணம் தானடா நிரந்தரம்’ன்னு ஒரு சினிமா பாடல் உண்டு.

    இந்தப்பாடலை யாரோ பணத்துக்காகவே எழுதிக்கொடுத்து,

    மற்றொருவர் பணத்துக்காகவே இந்தப்பாடலுக்குக் குரல் கொடுத்துப்பாடி,

    நாமெல்லாம் பணம் கொடுத்து அந்தப்படத்தைப் பார்த்துள்ளோம் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது, இப்போதுதான் இந்தப் பதிவினைப்படித்த பிறகுதான் புரிகிறது.

    ‘காசேதான் கடவுளடா .... அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா’ன்னு இன்னொரு திரைப்படப் பாடலும் நினைவுக்கு வருகிறது.

    அனைவரும் ’மனிதன் என்று பிறரால் போற்றப்பட வேண்டி’ விழிப்புணர்வு கொடுத்துள்ள பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள், ஐயா.

    பதிலளிநீக்கு
  3. "பணம் இருந்தால் பதவி தானாகத் தேடி வரும்" - வராது சார். பணமிருப்பவர்கள்தான் அந்தப் பணத்தின் துணைகொண்டு பதவியையும் அரசியலையும் நோக்கி நடைபோடுவார்கள். அரசியல்ல இருந்தா, பணத்தைப் பாதுகாக்கமுடியும். சக அரசியல்வாதி தன்கிட்ட டொனேஷன், அல்லது தன்னுடைய நிறுவனத்தைக் கேட்காம இருக்கணும்னா, தானும் அரசியல்வாதியாகிவிட வேண்டியதுதான்.

    மத்தபடி இடுகையின் காரணம் புரிந்தது. தற்போதைய அரசியல் சூழல் அப்படி இருக்கிறது.. என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  4. /ஆகவே, மக்களே, எப்படியாவது பணம் சேருங்கள். அப்போதுதான் உங்களை ஒரு மனிதன் என்று அனைவரும் போற்றுவார்கள்./ என்னை மனிதனாகச் போற்ற மாட்டார்கள். எப்படியாவது என்றால் எப்படி தெரியவில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வயதில் அந்த "எப்படியாவதை" தெரிந்து பயனில்லை. அது எல்லாம் 40 வயதில் கடைப்பிடித்திருக்க வேண்டியவை.

      நீக்கு
  5. பணம் தான் எல்லாவற்றிற்கும் தேவை! அரசியலும் விதிவிலக்கல்ல....

    பதிலளிநீக்கு