வெள்ளி, 9 செப்டம்பர், 2011

அதிக ஹிட்ஸ், ஓட்டுகள், பின்னூட்டங்கள் வேண்டுமா, இங்க வாங்கோ


இவங்க ரொம்ப நல்லா நடிப்பாங்க

என்னுடைய பதிவர்களுக்கு பத்து குறிப்புகள் என்ற பதிவிற்கு, பதிவுலக வரலாறு காணாத அளவில் அன்பும் ஆதரவும் கொட்டிக் கொடுத்த அனைவரது பாதார விந்தங்களுக்கும் அநேகம் கோடி நமஸ்காரங்கள். (இது எப்படி இருக்கு!)

இந்தப் பதிவில் எழுதிய குறிப்புகள் போதாதென்று சிலபல பதிவர்கள் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்தபடியால் அந்தக் குறையை நிவர்த்திக்கும் பொருட்டு இந்தப் பதிவை போடுகிறேன். இந்த உலகத்தில எப்பொழுதும் நல்லதுக்கு காலமில்லைன்னு பெரியவங்க சொன்னது ரொம்ப ரொம்ப உண்மை.
குறை தெரிவித்ததில் ஒரு சேம்பிள்:
//JOTHIG ஜோதிஜி said...
அதற்குண்டான தளங்களுக்குச் சென்று அதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.

அய் அய் இதானே வேண்டாங்றது. நீங்க தான் இந்த பிரச்சனையையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்து (எனக்கு மட்டுமாவது) சொல்லிக்கொடுக்கோணும்//

சரீங்க, நீங்க சொல்றதுனால அதையும் போட்டுடறனுங்க. அதை ஏன் பாக்கி வைக்கோணும்? முட்ட நனைஞ்சதுக்கப்புறம் முக்காடு எதுக்கு?

என்ன, ரொம்பப் பேருக்கு உடம்பெரியும். எரியட்டுமே, நமக்கென்ன? அப்புறம் என்ன, நெறய, மைனஸ் ஓட்டு விழும். விழட்டுமே! நம்ம லெவலுக்கு பிளஸ், மைனஸ் எல்லாம் ஒண்ணுதானுங்களே?

அப்புறம் நான் வாத்தியாருங்க, வகுப்புல எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் கிளாஸ் எடுப்பேன். ட்யூஷன் கிளாஸ் எல்லாம் வைக்கறது கிடையாது.

எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்கோ. இப்ப பாடத்தை ஒழுங்கா கவனியுங்கோ.

1.   உங்கள் பதிவிற்கு, உலகத்தில் இதுவரை யாரும் வைக்காத, பெயர் வைக்கவேண்டும். முடிசூடா மொக்கை மன்னன், கும்மாலக்கிடி கும்மா, சுளுக்கு சுந்தரி, இப்படி நல்லதா ஒரு தலைப்பு தேர்ந்தெடுங்கள். அப்புறம் பதிவருக்கு ஒரு முகமூடி பெயர் வேண்டும். தெருநாய், குப்பைவண்டி, தெருப்பொறுக்கி, ரெட்டைவால் குரங்கு, இந்த மாதிரி பெயர் வைத்துக்கொள்ளுங்கள். உண்மைப் பெயருடன் போட்டோவையும் பதிவில் போடும் தவறை எக்காலத்திலும் செய்யாதீர்கள். அது சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வதற்கு ஒப்பாகும். பிளாக்கில் ஈமெயில் விவரத்தைக் கொடுக்காதீர்கள். அது நிச்சயமாக வீட்டுக்கு ஆட்டோவை வரவழைக்கும்.

2.   ஒரு அரை டஜன் சகாக்களை தயார் செய்யுங்கள். எல்லோரும் கம்ப்யூட்டரே கதி என்று இருப்பவர்களாக இருக்கவேண்டும். ஒவ்வொருவரும் ஆளுக்கு அரை டஜன் email ID தயார் செய்யவேண்டும். ஆக மொத்தம் 36 email ID தயார். இப்போ நீங்கள் பதிவு இடுவதற்கு தகுதி அடைந்து விட்டீர்கள்.

3.   பதிவின் தலைப்பு யாரும் கனவில் கூட நினைத்திராதபடி இருக்கவேண்டும். (உ-ம்) காதல் கன்னியுடன் இரவில் ஜாலி…… தலைப்பு, பார்த்தவுடன் பசங்களை அப்படியே சுண்டி இழுக்கவேண்டும். இதில் எந்த தவறும் கிடையாது. ஒரு கண்ணியமிக்க, பிரபல பதிவரே சமீபத்தில் இந்த மாதிரி தலைப்பு வைத்துத்தான் வாசகர்களை தன் பதிவின் பக்கம் இழுத்தார்.

4.   பதிவில் நடிகைகளின் நல்ல (?) போட்டோக்கள் நாலைந்து கட்டாயம் போடவேண்டும். பதிவின் மேட்டர் எப்படியிருந்தாலும் சரி. இதில் எந்தத் தவறும் கிடையாது. அழகை ஆராதிப்பதில் என்ன தவறு வந்து விடும்?  

இந்த மாதிரி பதிவுகளுக்குத்தான் மொக்கைப் பதிவுகள் என்ற பெயர். இந்தப் பதிவர்களுக்கு “மொக்கைப் பதிவர்கள்” என்ற அடை மொழி உண்டு. இந்தப் பெயர் வாங்குவது மிகக் கடினம். ஆனால் ஒருமுறை இந்தப் பட்டத்தை வாங்கிவிட்டால் ஆயுளுக்கும் உங்களை விடாது.

5.   பதிவு போட்டவுடன் ரன்னிங்க் ரேசில் சொல்வார்களே, அந்த மாதிரி  On your marks, get set, ready, start என்று சொல்ல ஒரு சங்கேத வார்த்தையை முதலிலேயே நண்பர்களுடன் பேசி வைத்துக்கொள்ளுங்கள். பதிவு போட்டவுடன் இந்த சங்கேத வார்த்தையை உங்கள் நண்பர்களுக்கு மெயில் செய்து விடுங்கள். பதிவுகள் பொதுவாக இரவு 11 மணிக்குத்தான் போடவேண்டும்.

6.   திட்டம் என்னவென்றால் இந்த சங்கேத வார்த்தை கிடைத்தவுடன் உங்கள் நண்பர்களெல்லாம் உங்கள் பதிவுக்கு வந்து ஒரு நிமிஷத்துக்கு ஒன்று என்ற ரேட்டில் அவர்களுடைய ஆறு ID யிலிருந்தும் சகட்டு மேனிக்கு பின்னூட்டங்கள் போடவேண்டியது. பதிவுக்கும் பின்னூட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வேண்டியதில்லை. நீங்களும் இரவு முழுவதும் தூங்காமல் வந்த பின்னூட்டங்களுக்கெல்லாம் பதில் போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். விடிவதற்குள் எப்படியும் ஆயிரம் பின்னூட்டங்கள் தேத்தி விடவேண்டும்.

7.   விடிந்து ஆணி பிடுங்கப் போகும் இடத்தில் நண்பர்கள் எல்லாம் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை இந்தப் பதிவுக்குப் போய் ஒவ்வொரு ஐ.டி.யிலும் ஹிட்ஸ் கொடுத்து விட்டு, ஓட்டும் போடவேண்டியது.

8.   ஒரு கம்ப்யூட்டரிலிருந்து ஒரு திரட்டியில் ஒரு முறைதான் ஓட்டுப் போட முடியும் என்பது பதிவுலகின் துர்ப்பாக்கியம். ஆகவே எங்கு புதிதாக கம்ப்யூட்டரைப் பார்த்தாலும் உடனே அதில் புகுந்து ஒரு ஓட்டைப் போட்டுவிடவேண்டும்.

9.   யாராவது ஒரு பதிவர், குறிப்பாக பெண் பதிவர்கள், ஒரு சின்ன விஷயத்தை யதார்த்தமாக எழுதியிருந்தாலும், அதில் நண்பர்கள் எல்லோரும் படையெடுத்து அந்த மேட்டரை ஊதி ஊதி பெரிசாக்கி, பூதாகாரமாகப் பண்ணி, அந்தப் பதிவர் ஊரை விட்டே ஓடும்படியாகச் செய்யவேண்டும்.

10. பிரபலமான பதிவர்களின் பதிவிற்குச் சென்று அவர்களை உசுப்பேற்றி அவர்கள் ஏமாந்து சொல்லும் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு கும்மியடிக்கவேண்டும்.

கைவசம் இன்னும் நிறைய உத்திகள் இருக்கின்றன. இப்போதைக்கு இவை போதும் என்று நினைக்கிறேன். இவைகளைக் கடைப்பிடித்து உங்கள் தளத்தை உலகப் பிரசித்தி பெற்ற தளமாக மாற்ற, என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

வாத்தியார் பேரைக் கெடுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

டிஸ்கி: இந்தப் பதிவில் கொடுத்திருக்கும் எந்தக் குறிப்பும், யாரையும் குறிப்பிடுவன அல்ல. அப்படி யாராவது நினைத்தால் பொது நலம் கருதி அதை மறந்து விடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

       
            இவங்க பெங்கால்ல ரொம்ப பிரபல பாடகி.




புதன், 7 செப்டம்பர், 2011

பதிவர்களுக்கு பத்து குறிப்புகள்


பதிவுலகத்தில் எழுதும் அனைவரும் பதிவர்களே. பதிவுலகத்தின் நெளிவு சுளிவுகளை அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம் அல்லது அவர்களின் பதிவுலகப் பயணத்தில் அறிந்து கொள்வார்கள். ஆகவே பதிவர்களுக்கு அறிவுரை கூற எனக்கு அருகதை இல்லை. தேவையும் இல்லை. ஆனாலும் நான் இந்தப் பதிவை எழுதக் காரணம் என்னவென்றால் நான் கூறப் போகும் குறிப்புகள் நான் என்னுடைய அனுபவத்தில் உணர்ந்தவை. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்.

1.   பதிவுகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு எளிமையாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அவை சீக்கிரம் தரவிறங்கும். பார்வையாளர்களுக்கு பதிவுகளுக்காக அதிக நேரம் காத்திருக்க பொறுமை இருக்காது. வேறு தளத்திற்கு சென்று விடுவார்கள்.

2.   பதிவுகளின் எழுத்துக்கள் பெரிதாகவும், வரிகளுக்கிடையில் உள்ள இடைவெளி போதுமானதாகவும் இருக்கட்டும். இதை மிக எளிதாக செயல்படுத்தலாம். Edit Template  சென்று அதில் Line height 1.2 என்று இருப்பதை 2.0 என்று மாற்றவும். அதே போல்  Font size 110%  என்று இருப்பதை 120 அல்லது 130 என்று மாற்றவும். தவிர வெள்ளை பின்புலத்தில் கருப்பு எழுத்துகள்தான் படிப்பதற்கு மிகவும் எளிதானது.

3.   பதிவுகளின் தலைப்பைப் பார்த்துத்தான் பார்வையாளர்கள் பதிவுக்குள்ளே வருகிறார்கள். ஆகையால் தலைப்பு கவர்ச்சியாக இருப்பது அவசியம். பூக்கடைக்கும் விளம்பரம் தேவைப்படும் காலம் இது.

4.   எல்லோரும் தங்கள் பதிவுகளை அதிகம் பேர் படிக்கவேண்டும் என்கிற ஆவலுடன்தான் எழுதுகிறார்கள். அப்படி எழுதப்படும் பதிவில் ஏதாவது ஒரு உபயோகமான செய்தி அல்லது பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு விஷயம் இருக்கவேண்டும்.

5.   தமிழில் எழுதும் அனைவரும் தமிழை பிழையில்லாமல் எழுத முயல வேண்டும். ற,ர வின் உபயோகம்,  ல,ள,ழ இவைகளின் வித்தியாசம், சந்தி விதிகள், ஆகியவைகளை உணர்ந்து பயன் படுத்தினால் உங்கள் பதிவின் தரம் கூடும்.

6.   பதிவுகளின் எழுத்து நடை சரளமாக, எளிதில் புரிந்து கொள்ளும்படியாக  இருக்கவேண்டும். பதிவை எழுதி முடித்தவுடன் ஒரு தடவைக்கு இரு தடவை படித்துப் பாருங்கள். பிழைகளைக் களைய இது உதவும்.

7.   பதிவுகள் அதிக நீளமாக இருந்தால் படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும். இன்றுள்ள அவசர கதியில் பதிவுகளுக்காக செலவிடப்படும் நேரத்தில் அதிக பதிவுகளைப் படிப்பதற்கே அனைவரும் விரும்புவர்.

8.   போட்டோக்கள் பதிவுகளுக்கு அழகு சேர்க்கின்றன என்பது முற்றும் உண்மை. அதற்காக அதிகப் போட்டோக்களை சேர்த்தால் அனைத்து போட்டோக்களையும் முழுவதுமாக ரசிப்பது சிரமமாகி விடுகிறது.

9.   பதிவர்கள் தங்களுக்குப் பிடித்த தளங்களில் “பின்தொடர்பவர்கள்” ஆகிறார்கள். அவர்களுடைய Dash Board ல் அந்த தளங்களின் பதிவுகள் தானாகவே தெரிகின்றன. ஆகவே தனியாக email அனுப்புவது தேவையில்லை. Word Verification இருப்பது பெரும்பாலான சமயங்களில் பின்னூட்டமிடுபவர்களுக்கு இடைஞ்சலாய் இருக்கிறது.

10. தங்கள் பதிவுகளில் பின்னூட்டங்கள், ஹிட்ஸ்கள், முதலானவை அதிகரிக்கவேண்டும் என்று விரும்புபவர்கள் அதற்குண்டான தளங்களுக்குச் சென்று அதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.

இப்பதிவைப் பார்வையிட்டதற்கு நன்றி. 


திங்கள், 5 செப்டம்பர், 2011

என் பதிவுலக வயிற்றெரிச்சலும் ஆற்றாமையும்



இனிய உளவாக இன்னாத கூறுதல்
கனி இருப்ப காய் கவர்ந்தற்று – குறள் (100)

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு – குறள் (784)

இந்த இரண்டு குறள்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடாகத் தோன்றுகின்றன அல்லவா? தெய்வப்புலவர் தம் நூலில் இவ்வாறு முரண்பாடான கருத்துக்களைக் கூறியிருப்பாரா என்ற கேள்விக்கு தமிழ் அறிஞர்கள்தான் விடை கூற இயலும்.

தமிழ் அஞ்ஞானியான நான் என்ன நினைக்கிறேன் என்றால் அவரவர்களுக்கு பொருத்தமான குறளை அவரவர்கள் கடைப்பிடிக்கலாம் என்பதே. இக்கொள்கைப்படி இடித்துக் கூறுவதே என் இயல்பாகப் போய்விட்டது. இதை மாற்ற கடும் முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறேன். உண்மை எப்போதும் கசப்பாகத்தான் இருக்கும். பொய்தான் இனிக்கும். கசப்பு மாத்திரைக்கு சர்க்கரைப்பூச்சு பூசி கொடுப்பதில்லையா என்று இதைப் படிப்பவர்கள் நினைக்கலாம். நான் அதை “பசப்பு” என்று கருதுகிறேன். “பசப்பு” பத்தினிகளின் குணமாகாது. ஆகவே இடித்துக் கூறுவதே என் இயல்பாகப் போனது. அப்படியிருக்க மற்றவர்கள் இடித்துக் கூறுவதையும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். சந்தோஷமாக  ஏற்றுக்கொள்கிறேன்.

இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் இது தவறு என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. என்னுடைய போன பதிவில் “வயிற்றெரிச்சல்” என்பதற்குப் பதிலாக “ஆற்றாமை” என்று போட்டிருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும். ஆனால் இவ்வளவு பின்னூட்டங்கள் வந்திருக்காது. மேலும் என் பதிவுலக வாழ்வில் முதன் முறையாக தமிழ்மணம் ஓட்டுப் பட்டையில் மைனஸ் ஓட்டுகளும் விழுந்திருக்காது. தவிர, அருமையான பல கருத்துக்கள் ஜனனமாகாமலேயே மரித்துப் போயிருக்கும். அதனால் பதிவுலகத்திற்கு எப்படிப்பட்ட நஷ்டம் ஏற்பட்டிருக்கும்?! ஆகவே எந்த ஒரு கெடுதலிலும் ஒரு நன்மை உண்டென்பது நிரூபணம் ஆகிவிட்டது.

இந்தக் கிழடுகளுக்கே எதையும் குறை கூறத்தான் தெரியும், இன்றைய இளைஞர்களுக்கு ஆக்க பூர்வமாக ஏதாவது அறிவுரைகள் கூறுகிறார்களா? என்று ஒருவர் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார். அது மிகவும் நியாயமான கருத்து. அடுத்த பதிவு இந்த குறிப்புகள்தான். தயை கூர்ந்து பொறுத்திருங்கள்.

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

பதிவுலக நிதர்சனங்களும், என் வயிற்றெரிச்சலும்



பதிவுகளில் எதைப்பற்றி எழுதலாம் என்பதற்கு எந்த வரைமுறைகளும் இருப்பதாகத் தெரியவில்லை. எப்படி எழுதவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. யாரும் யாரைப் பற்றியும் அவதூறாக எழுதக்கூடாது என்கிற நடைமுறை ஒழுங்கெல்லாம் பதிவுலகில் தேவையில்லை.

அவரவர்களுக்குத் தோன்றியதை எழுதலாம். கூகுளாண்டவர் இந்த சுதந்திரத்தை எல்லாப் பதிவர்களுக்கும் வரமருளியிருக்கிறார். ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், பதிவின் தலைப்பு பார்ப்பவர்களின் கவனத்தை சுண்டி ஈர்த்து பதிவுக்குள் கொண்டு வரவேண்டும். அவ்வளவுதான். தலைப்புக்கும் பதிவில் எழுதியிருப்பதற்கும் சம்பந்தம் இருக்கவேண்டிய சட்டம் ஒன்றுமில்லை. தலைப்பு எவ்வளவு கேவலமாக இருக்கிறதோ அந்த அளவு பதிவின் ஹிட்ஸ் கூடும்.


அவதூறு பதிவுகள் போட்டால், அதைப்பற்றி யாரும் வெட்கப்படத் தேவையில்லை. பூக்காரி பதிவை ஞாபகம் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அந்தப் பதிவை படிக்காதவர்கள் அபாக்கியசாலிகள். அத்தகைய பதிவுகள் உங்கள் பதிவுகளுக்கு நல்ல விளம்பரமாக அமையும். எதிர்ப்புகள் அதிகமாக வந்தால் ஒரு மன்னிப்பு பதிவு போட்டுவிட்டால் மேட்டர் முடிந்து விடும்.

பதிவுகளினால் சமூகத்திற்கு என்ன நன்மை என்று அடிக்கடி சில மேதாவிகள் கேட்பதுண்டு. இது ஏதாவது கேட்க வேண்டுமே என்பதற்காக கேட்கப்படும் கேள்விதானே தவிர இதற்கு யாரும் பதிலை எதிர்பார்ப்பதில்லை. பதில் சொல்வாரும் இல்லை.

ஆக மொத்தம் பதிவுகள் எதற்காக எழுதப்படுகின்றன என்று சுருக்கமாகச் சொல்லப்போனால் அவரவர்கள் பெருமை கொள்வதற்காகத்தான். நான் இவ்வளவு பதிவுகள் போட்டிருக்கிறேன், இத்தனை ஹிட்ஸ், etc. etc. என்று அவ்வப்போது அவர்கள் பதிவிலேயே போட்டுக்கொள்வார்கள். இது போக இந்தப் பதிவர்களை ஊக்கப்படுத்தவென்றே சில பதிவுகள் இருக்கின்றன. அவர்கள் இன்னாருடைய பதிவில் சமுதாய சீர்திருத்த சிந்தனைகள் கொட்டிக்கிடக்கின்றன, தேவையானவர்கள் போய் அள்ளிக்கொள்ளலாம் என்கிற மாதிரி எழுதுவார்கள். எல்லாம் இலவசம்தான்.

அபூர்வமாக நல்ல கருத்துகள் அல்லது பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட பதிவுகளும் இருக்கின்றன. அவைகளை எழுதுபவர்களும் படிப்பவர்களும் என்னைப் போன்ற, “காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது” மாதிரி ஆட்கள்தான். மக்களை எப்படியும் ஆண்டவன் அருளுக்கு ஆளாக்கி விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஆன்மீகப் பதிவுகள் சிலர் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வளவு அருள் மழையை தாங்கும் சக்தியை ஆண்டவன்தான் கொடுக்கவேண்டும்.

கம்ப்யூட்டர் இயக்கத் தெரிந்த யார் வேண்டுமானாலும் பதிவு போடலாம். கம்ப்யூட்டர்கள் அவரவர்கள் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வேலை செய்யும் ஆபீசில் இருந்தால் போதும். எப்படிப் பதிவுகள் ஆரம்பிப்பது என்பதற்கே பல பதிவுகள் போடப்படுகின்றன. தினம் மூன்று பதிவுகள் போடும் பதிவர்களிலிருந்து மூன்று மாதத்திற்கு ஒரு பதிவு போடுபவர்கள் வரை பல தரப்பட்ட பதிவர்கள் இருக்கிறார்கள். பதிவு போடுவதோடு நின்று விடாமல் கிடைத்த ஈமெயில் விலாசங்களுக்கெல்லாம் மெயில் தவறாது அனுப்புபவர்களும் உண்டு. யாம் பெற்ற இன்பம் (துன்பம்) எல்லோரும் பெறவேண்டும் என்கிற பரந்த மனப்பான்மை. அதுதான் ஏகப்பட்ட திரட்டிகள் இருக்கின்றனவே! அப்புறம் எதற்கு இந்த வாதனை?

தமிழில் பதிவு எழுதுவதில் ஒரு பெரிய சௌகரியம் என்னவென்றால் தமிழ் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. எப்படிப்பட்ட தப்புகளையும் செய்யலாம். தமிழாசிரியர் படித்தால் தூக்குப்போட்டுக் கொள்ள (கொல்ல)  வைக்கும் அளவுக்கும் எழுதலாம். கேட்பார் யாருமில்லை.

பதிவுகளுக்கு நீள, அகல வரம்புகள் எதுவுமில்லை. நாலு வரி கவிதையும் போடலாம். நாற்பது பக்கம் கட்டுரையும் எழுதலாம். அப்படி எழுத ஒரு தனி அலுவலகம் வேண்டும். கூட, அத்தகைய பதிவுகளில் வரும் போட்டோக்களை எடுப்பதற்கு ஒரு தனி போட்டோகிராபி டீமே வேண்டும். இந்தப் பதிவுகளினால் என்ன வருமானம் வந்து, அலுவலர்களுக்கு எப்படி சம்பளம் கொடுத்து கட்டுப்படியாகிறது என்பதைப்பற்றி யாராவது ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும். அப்படியே மொக்கைப் பதிவு போட்டாலும் முந்நூறு பின்னூட்டங்கள் வரவழைப்பது எப்படி என்பது போன்ற டிப்ஸ்களும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

ஏன் இப்படி திடீரென்று ஞானோதயம் வந்தது என்றால், இத்தகைய பதிவுகளுக்குத்தான் மவுசு கூடுகிறதே தவிர, என்னை மாதிரி நல்ல, தரமான, ஆழ்ந்த கருத்துகளுடன் எழுதும் பதிவுகளை சீந்துவாரைக் காணோம். அந்த வயிற்றெரிச்சல்தானே தவிர, யாருடைய மனதையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. அப்படி யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அமிர்தாஞ்சனம் வாங்கி தடவுங்கள். சரியாகப் போய்விடும்.




ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

உருமாலை கட்டுதல்






 
சீர்கள் செய்வதற்கு சீர்க்காரி வேண்டுமென்று போன பதிவிலசொல்லீர்ந்தனுங்களாஅது யாருன்னாமுழுக்காதங்கூட்டத்துபொம்பளயா இருக்கோணும்தன் குழந்தைகளுக்கு காது குத்திமுழுக்காத சீர்எழுதிங்க சீர் இந்த ரெண்டும்பண்ணீருக்கோணும்கட்டுக்களுத்தியா இருக்கோணும்சிலகல்யாணங்களுக்கு யாராவது இன்னோரு சீர்க்காரி கூட சேர்ந்துசீர் பண்ணி பழகியிருக்கோணும்அப்படிஇருக்கிறவங்களைத்தான் சீர்க்காரின்னு சொல்லுவாங்க.கல்யாணத்துல அவங்கதான் எல்லாச் சீர்களையும்பண்ணோணுமுங்கநம்ம ஊட்டுப்பையனும் (நாசிவன்)தொணைக்கு இருந்து இப்பிடி இப்பிடி செய்யுங்கன்னு வளிசொல்லுவானுங்க.

ஈரோட்டுக்கு கெளக்கே வளிமொறை வேற மாதிரிங்கஅங்கஅருமைக்காரங்க” ன்னு இருப்பாங்கஅவங்கதான் இந்தசீரெல்லாம் செய்வாங்ககோயமுத்தூர்ல முகூர்த்தத்துக்குஅய்யரத்தான் வச்சுக்குவாங்கபொண்ணூட்டு அய்யருதான்முகூர்த்தத்துக்கு வருவாருங்கசேலம் பக்கமெல்லாம் இந்தஅருமைக்காரங்களேதான் முகூர்த்த சமயத்துல தாலியஎடுத்துக்கொடுத்து மாப்பிள்ள தாலி கட்டுவாருங்கஹோமம்வளர்த்தறதுமந்தரம் சொல்றது எல்லாம் இல்லீங்கமுந்திகாலத்துல எல்லாம் இந்த அருமைக்காரங்க சொந்தக்காரங்கள்லஇருப்பாங்கஅவங்க இந்தக்காரியங்களையெல்லாம் ஒறவுமொறைக்காக சும்மாதான் செய்வாங்ககாசு கேக்கறதயெல்லாம்கேவலமா நெனைப்பாங்கஆனாஇப்பெல்லாம் இந்தஅருமைக்காரங்க பணம் ஆயரக்கணக்குல கேக்கறதாசொல்றாங்கஅதோட அவங்க பண்ற ரவுசு இருக்குதுங்களே,அது பொறுக்கமுடியாமெ இருக்கும்காலம் மாறுதுங்கஆனாகோயமுத்தூர்ல சீரு பண்றவங்க யாரும் இந்த மாதிரிகாசெல்லாம் கேக்க மாட்டாங்க.

என்னென்ன சீரெல்லாம் செய்யோணுமுன்னு சொல்லீட்டுவாரனுங்ககொஞ்சம் குனிப்பா பாத்துக்கோணுங்க,தூங்கிப்போயிடாதீங்கமொதல்ல மாப்பிள்ளக்கி உருமாலைகட்ற சீருங்கஇந்த சீரு தாய் மாமன்தான் செய்யோணுமுங்க.பளய காலத்துல மாப்பிள்ள பையனை மாமன் அவங்கஊட்டுக்கே கூட்டிட்டுப்பாயித்தான் இந்த சீரைச்செய்வாங்க.இப்பெல்லாம் கல்யாண ஊட்டுலயே இந்தச்சீரை செஞ்சுடறாங்க.

மாப்பிள்ளப் பையனைக் குளிப்பாட்டி புதுத் துணி குடுத்துகட்டுக்கச்சொல்லிஊட்டுக்குள்ளு ஆஜாரத்துல ஒருசேரைப்போட்டு பையனை உக்கார வைப்பாங்கநல்ல பெரியதுண்டு உருமாலை கட்றதுக்குன்னு வாங்கியிருப்பாங்கஅந்ததுண்டுல ஒரு மூலைல ஒரு ரூபாய் காசெ முடிஞ்சுஉடுவாங்கமாமன்காரன் அதை எடுத்து பையன் தலைலஉருமாலை (முண்டாசுகட்டி உடுவாருங்கஅந்த உருமாலைலஒரு மொழம் மல்லிகைப்பூவ சொருகி உடுவாங்கஅப்பறம்நெத்திக்கு திண்ணூறு பூசிசந்தனப்பொட்டு வச்சுசெகப்புபொட்டும் வைப்பாங்கஅப்பறம் மாப்பிள்ளைப்பையன் மாமன்கால்ல உளுந்து ஆசீர்வாதம் வாங்கீப்பானுங்கஅப்பமாமன்மாரன் அவஞ்சக்திக்கு தகுந்தாமாதிரி பணமோஇல்லேன்னா ஏதாச்சும் மோதிரமோசங்கிலியோபோடுவாருங்கஅப்பறம் ஏதாச்சும் கோயில் பக்கத்துல இருந்தாஅங்கெ போயி சாமி கும்பிட்டுட்டு வருவாங்கஇல்லைன்னாஊட்டுல இருக்கற சாமிய கும்பிட்டுக்குவாங்கஇல்லைன்னாஒவ்வொருத்தரு பையன் உக்காந்திருக்கற சேருக்குமுன்னாலயேஒரு புள்ளாரைப் புடிச்சு வச்சு அங்கயே சாமிகும்பிட்டுக்குவாங்கஇதுதாங்க உருமாலைக்கட்டு சீருங்க.

அப்பறம் கூப்பிட்டு இருக்கற ஒரைம்பரக்காரங்க எல்லாரும்உக்காந்து விருந்து சாப்புட்டுட்டு பையனைக் கூப்பிட்டுட்டுப்போய் அவன் ஊட்டுல உட்டுட்டு வருவாங்க.

இந்த சமயத்துல கல்யாண ஊட்டுல வேலைகள் எல்லாம்மும்முரமா நடந்துக்கிட்டு இருக்குமுங்கபந்தல் போட்டு பச்சஓலையெல்லாம் காட்டிடுவாங்கஅந்தப்பந்தல் ஓரத்திலகொசவன் சின்னசின்னதா பொம்மை செஞ்சு வச்சிருப்பானுங்க,அதைக்கட்டி உடுவானுங்கபண்ணயத்து ஆளுங்கவாசலுக்கெல்லாம் சாணி போட்டு வளிச்சு வுடுவாங்கஅந்தஊரு ஆசாரி வந்து மர அகப்பை சேத்துவானுங்கஎத்தன பேருமர அகப்பை பாத்திருப்பீங்கன்னு தெரியலைங்கஅப்பெல்லாம்இப்பத்த மாதிரி பெரிய கரண்டி எல்லாம் கெடயாதுங்க.தேங்காய்த்தொட்டியில சைடுல சின்னதா ரெண்டு ஓட்டைபோட்டு அதில நீளமா ஒரு மூங்கக்குச்சிய சொருகுனா,அதுதான் மர அகப்பைங்ககொளம்புமொளசாறுவைக்கறப்பவும்எடுத்து ஊத்தறப்பவும் இந்த மரஅகப்பையைத்தான் உபயோகிப்பாங்கஇந்த வேலைகள்எல்லாம் கனஜோரா நடந்துட்டு இருக்குமுங்க.

மறுச்சு நாளு அதாவது கல்யாணத்தண்ணிக்கு பந்தல்லவாளைமரம்எளனிதேங்காய்ப்பாளை எல்லாம் மொகப்புலகட்டுவாங்கஅக்கம் பக்கத்து ஊட்டுல இருந்துசாமான்செட்டுகள் இருக்கறதெயெல்லாம் கொண்டுவந்துருவாங்ககாய்கறியெல்லாம் சொந்தக்காரங்க கொண்டுவந்துருவாங்கமுகூர்த்தத்திற்கு முந்தின நாள் பொளுதோடஇருந்து சீர்களெல்லாம் பண்ணுவாங்கஅந்தப்பொளுதுக்குகல்யாணம்னு எங்கூர்ல சொல்லுவாங்கமறுச்சு நாளு தாலிகட்டறத முகூர்த்தம்னு சொல்றதுங்கஎல்லாரும் நேரத்தோடகல்யாணத்துக்கு வந்துடுங்க.
தொடரும்….