"ஆமாம். ..இப்போது உங்களுக்கு கோந்து எதற்கு.?"
என்னுடைய கோந்து பதிவின் பின்னூட்டத்தில் என் நெருங்கிய நண்பர் இந்த மாதிரி கேட்டு விட்டார். அவர் என்னை இந்தக் கேள்வி கேட்டதில் வருத்தமில்லை. ஆனால் அவர் என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் இந்தப் பதிவு எழுதுகிறேன்.
மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் என்று உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றைச் சொல்லுவார்கள். ஆனால் மனிதனுக்கு இந்த அடிப்படைத் தேவைகளுக்கு அப்பாலும் சில தேவைகள் இருக்கின்றன என்பதை அறிவாளிகள் அறிவார்கள். (நான் ஒரு அறிவாளி என்பதை எப்படி சூசகமாகச் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்.) அவைகள்தான் வாழ்க்கையை முழுமையாக்குகின்றன.
மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குத் தெரியாது, ஆனால் எனக்கு கீழ்க்கண்ட ஐட்டங்கள் எனது டேபிளில் இல்லாவிட்டால் என்னால் உயிர் வாழ முடியாது. அதில் முக்கியமானது கோந்து. மற்றவை பற்றி முன்பே ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன். இருந்தாலும் அந்தப் பதிவை என்னாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அந்த லிஸ்ட்டை கடைசியில் கொடுத்திருக்கிறேன்.
கோந்து வேண்டியதற்கான காரணங்களை ஒரு பதிவில் சொல்லி முடியாது. ஆனாலும் முயற்சிக்கிறேன்.
மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவன் கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களே. கட்டுப்பாட்டுடன் வாழும் வாழ்க்கையே ஒழுக்கமான வாழ்க்கை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்கள் மேஜையில் நீங்கள் வைத்த பொருட்கள் அப்படி அப்படியே, நீங்கள் வைத்த மாதிரியே இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? நீங்கள்தான் ஒழுக்கத்தின் சிகரம்.
மேஜையில் நேற்று ஆபீசிலிருந்து வந்தவுடன் வைத்த சாவியை, மறுநாள் காலை வீடு முழுவதும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து தேடுகிறீர்களா, நீங்கள் கொஞ்சம் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் திருத்தவேண்டும்.
நிற்க, கோந்துவிற்கு வருவோம். நீங்கள் ஒரு விடுமுறை நாளில் வீட்டில் நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் புத்தகம் ஒன்றைப் படிக்க எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்தப் புத்தகத்தின் ஒரு பக்கம் பைண்டிங் விட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலானவர்கள் என்ன செய்வார்கள். அந்த குறையைக் கண்டுகொள்ளாமல் படிப்பார்கள்.
என்னால் அப்படி இருக்க முடியாது. அந்த விட்டுப்போன பைண்டிங்கை கோந்து போட்டு ஒட்டி, அது காய்ந்த பிறகுதான் அந்தப் புத்தகத்தைப் படிப்பேன். இது கொஞ்சம் ஓவராகத் தெரிந்தால், நீங்கள் இத்துடன் நிறுத்தி விட்டு வேறு பதிவைப் பார்க்கப் போகலாம்.
அடுத்து நீங்கள் டைரி எழுதும் பழக்கம் உள்ளவரானால் இந்த அனுபவம் உங்களுக்கு வந்திருக்கும். அதாவது ஒரு தேதியில் உங்கள் மனைவி பேரில் உள்ள கோபத்தை நேரில் காட்ட முடியாதாகையால், டைரியில் எழுதி வைப்பீர்கள். அந்தக்கோபம் இரண்டோரு நாளில் தணிந்த பிறகு அந்தப் பக்கத்தை மறைக்க வேண்டி வரும். இல்லாவிட்டால் அது டைம்பாம்ப் மாதிரி என்றைக்காவது ஒரு நாள் உங்கள் சகதர்மிணியில் கண்ணில் பட்டு வெடித்தால் உங்களால் அதை எதிர்கொள்ள முடியாது.
என்ன செய்யலாம்? அந்தப் பக்கத்தை கிழித்தீர்களானால் டைரியின் பைண்டிங்க் நெகிழ்ந்து விடும். இங்குதான் கோந்தின் அவசியம் தெரியும். அந்த வேண்டாத பக்கத்தில் கோந்தைத் தடவி, டைரியை மூடி வைத்து விட்டீர்களானால் இரண்டு நாட்களில் அந்தப் பக்கம் காணாமல் போய்விடும். நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.
தபால் எழுதினால் அந்தக் கவரை ஒட்ட, பிறகு ஸ்டாம்ப் ஒட்ட பலர் சமையலறை நோக்கிப் போவதைப் பார்த்திருக்கிறேன். எதற்கு? நாலு சோற்றுப் பருக்கை வாங்கிக்கொண்டு வந்து கவரையும் ஸ்டாம்ப்பையும் ஒட்டத்தான். இதுவாவது பரவாயில்லை. பலர் அந்தக் கவரையும் ஸ்டாம்ப்பையும் நாக்கால் எச்சில்படுத்தி ஒட்டுவார்கள். அவர்களுக்கெல்லாம் சித்திரகுப்தன் தனி தண்டனை வைத்திருக்கிறான்.
எல்லோரும் கேஸ் உபயோகிக்கிறோம். ஒரு சிலிண்டர் எத்தனை நாள் உபயோகித்தோம் என்பதில் அந்த சிலிண்டரை மாற்றும்போது ஒரு வாக்குவாதம் நடக்கும். புது சிலிண்டரை மாற்றும்பொழுது தினக் கேலண்டரில் இருந்து அன்றைய தேதி தாளைக் கிழித்து சிலிண்டரில் கோந்து போட்டு ஒட்டிவிட்டால் பிரச்சினை தீர்ந்தது.
கடிகாரங்களில் செல் மாற்றும்போது, இப்போதுதானே மாற்றினேன், அதற்குள் தீர்ந்துவிட்டதா என்று புலம்பாதவர்கள் இருக்கமாட்டார்கள். புது செல் போடும்போது ஒரு சிறிய பேப்பரில் அந்த தேதியை எழுதி அந்த செல்லில் ஒட்டிவிட்டால் போதுமே. எவ்வளவு நாள் உழைத்தது என்று செல் மாற்றும்போது சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
லைப்ரரியில் இருந்து லவட்டிக்கொண்டு வந்த புத்தகம், நண்பர்களிடமிருந்து வாங்கி வந்த புத்தகம் இவை எல்லாம் நம்முடையதே. இருந்தாலும் அதில் லைப்ரரி சீல் அல்லது நண்பர்களின் கையெழுத்து இருக்கும். அவற்றின் மேல் உங்கள் பெயர் எழுதின ஒரு துண்டுக் காகிதத்தை கோந்து போட்டு ஒட்டி விட்டால் பிரச்சினை இல்லை. இல்லாவிட்டால் உங்கள் நணபர் எப்பொழுதாவது உங்கள் வீட்டுக்கு வந்து அந்தப் புத்தகங்களைப் பார்த்தால் திருப்பி எடுத்துக்கொண்டு போய்விடுவார்.
இப்படி எவ்வளவோ விஷயங்களுக்கு உபயோகப்படும் கோந்தை என் நண்பர் துச்சமாக எடை போட்டுவிட்டாரே என்று நினைக்கும்போது நெஞ்சு வெடித்துவிடும்போல் இருக்கிறது. கோந்து இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்கக் கூட என்னால் இயலவில்லை.
ஒருவர் வாழ்க்கையில் இன்றியமையாதவை:
பென்சில்
பென்சில் ஷார்ப்னர்
ரப்பர்
குண்டூசி
ஜெம் கிளிப்
பரீட்சை கிளிப்
செல்லோடேப் + டிஸ்பென்சர்
கலர் பென்சில்கள்
துண்டுக் காகித பேட்கள்
டபுள் பன்ச்
சிங்கிள் பன்ஞ்
பேப்பர் கத்தி
சாதா கத்தி
கத்தரிக்கோல்
டாகுமென்ட் பைல்கள்
பல கலர்களில் பால்பாயின்ட் பேனா
பவுன்டன் பேனா
பவுன்டன் பேனா இங்க்
ரப்பர் ஸ்டாம்ப் பேட்
" " " இங்க்
ஊசி, நூல் - பல சைஸ்களில்
ரப்பர் பேண்ட்
காது குடையும் பட்
என்னுடைய கோந்து பதிவின் பின்னூட்டத்தில் என் நெருங்கிய நண்பர் இந்த மாதிரி கேட்டு விட்டார். அவர் என்னை இந்தக் கேள்வி கேட்டதில் வருத்தமில்லை. ஆனால் அவர் என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் இந்தப் பதிவு எழுதுகிறேன்.
மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் என்று உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றைச் சொல்லுவார்கள். ஆனால் மனிதனுக்கு இந்த அடிப்படைத் தேவைகளுக்கு அப்பாலும் சில தேவைகள் இருக்கின்றன என்பதை அறிவாளிகள் அறிவார்கள். (நான் ஒரு அறிவாளி என்பதை எப்படி சூசகமாகச் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்.) அவைகள்தான் வாழ்க்கையை முழுமையாக்குகின்றன.
மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குத் தெரியாது, ஆனால் எனக்கு கீழ்க்கண்ட ஐட்டங்கள் எனது டேபிளில் இல்லாவிட்டால் என்னால் உயிர் வாழ முடியாது. அதில் முக்கியமானது கோந்து. மற்றவை பற்றி முன்பே ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன். இருந்தாலும் அந்தப் பதிவை என்னாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அந்த லிஸ்ட்டை கடைசியில் கொடுத்திருக்கிறேன்.
கோந்து வேண்டியதற்கான காரணங்களை ஒரு பதிவில் சொல்லி முடியாது. ஆனாலும் முயற்சிக்கிறேன்.
மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவன் கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களே. கட்டுப்பாட்டுடன் வாழும் வாழ்க்கையே ஒழுக்கமான வாழ்க்கை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்கள் மேஜையில் நீங்கள் வைத்த பொருட்கள் அப்படி அப்படியே, நீங்கள் வைத்த மாதிரியே இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? நீங்கள்தான் ஒழுக்கத்தின் சிகரம்.
மேஜையில் நேற்று ஆபீசிலிருந்து வந்தவுடன் வைத்த சாவியை, மறுநாள் காலை வீடு முழுவதும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து தேடுகிறீர்களா, நீங்கள் கொஞ்சம் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் திருத்தவேண்டும்.
நிற்க, கோந்துவிற்கு வருவோம். நீங்கள் ஒரு விடுமுறை நாளில் வீட்டில் நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் புத்தகம் ஒன்றைப் படிக்க எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்தப் புத்தகத்தின் ஒரு பக்கம் பைண்டிங் விட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலானவர்கள் என்ன செய்வார்கள். அந்த குறையைக் கண்டுகொள்ளாமல் படிப்பார்கள்.
என்னால் அப்படி இருக்க முடியாது. அந்த விட்டுப்போன பைண்டிங்கை கோந்து போட்டு ஒட்டி, அது காய்ந்த பிறகுதான் அந்தப் புத்தகத்தைப் படிப்பேன். இது கொஞ்சம் ஓவராகத் தெரிந்தால், நீங்கள் இத்துடன் நிறுத்தி விட்டு வேறு பதிவைப் பார்க்கப் போகலாம்.
அடுத்து நீங்கள் டைரி எழுதும் பழக்கம் உள்ளவரானால் இந்த அனுபவம் உங்களுக்கு வந்திருக்கும். அதாவது ஒரு தேதியில் உங்கள் மனைவி பேரில் உள்ள கோபத்தை நேரில் காட்ட முடியாதாகையால், டைரியில் எழுதி வைப்பீர்கள். அந்தக்கோபம் இரண்டோரு நாளில் தணிந்த பிறகு அந்தப் பக்கத்தை மறைக்க வேண்டி வரும். இல்லாவிட்டால் அது டைம்பாம்ப் மாதிரி என்றைக்காவது ஒரு நாள் உங்கள் சகதர்மிணியில் கண்ணில் பட்டு வெடித்தால் உங்களால் அதை எதிர்கொள்ள முடியாது.
என்ன செய்யலாம்? அந்தப் பக்கத்தை கிழித்தீர்களானால் டைரியின் பைண்டிங்க் நெகிழ்ந்து விடும். இங்குதான் கோந்தின் அவசியம் தெரியும். அந்த வேண்டாத பக்கத்தில் கோந்தைத் தடவி, டைரியை மூடி வைத்து விட்டீர்களானால் இரண்டு நாட்களில் அந்தப் பக்கம் காணாமல் போய்விடும். நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.
தபால் எழுதினால் அந்தக் கவரை ஒட்ட, பிறகு ஸ்டாம்ப் ஒட்ட பலர் சமையலறை நோக்கிப் போவதைப் பார்த்திருக்கிறேன். எதற்கு? நாலு சோற்றுப் பருக்கை வாங்கிக்கொண்டு வந்து கவரையும் ஸ்டாம்ப்பையும் ஒட்டத்தான். இதுவாவது பரவாயில்லை. பலர் அந்தக் கவரையும் ஸ்டாம்ப்பையும் நாக்கால் எச்சில்படுத்தி ஒட்டுவார்கள். அவர்களுக்கெல்லாம் சித்திரகுப்தன் தனி தண்டனை வைத்திருக்கிறான்.
எல்லோரும் கேஸ் உபயோகிக்கிறோம். ஒரு சிலிண்டர் எத்தனை நாள் உபயோகித்தோம் என்பதில் அந்த சிலிண்டரை மாற்றும்போது ஒரு வாக்குவாதம் நடக்கும். புது சிலிண்டரை மாற்றும்பொழுது தினக் கேலண்டரில் இருந்து அன்றைய தேதி தாளைக் கிழித்து சிலிண்டரில் கோந்து போட்டு ஒட்டிவிட்டால் பிரச்சினை தீர்ந்தது.
கடிகாரங்களில் செல் மாற்றும்போது, இப்போதுதானே மாற்றினேன், அதற்குள் தீர்ந்துவிட்டதா என்று புலம்பாதவர்கள் இருக்கமாட்டார்கள். புது செல் போடும்போது ஒரு சிறிய பேப்பரில் அந்த தேதியை எழுதி அந்த செல்லில் ஒட்டிவிட்டால் போதுமே. எவ்வளவு நாள் உழைத்தது என்று செல் மாற்றும்போது சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
லைப்ரரியில் இருந்து லவட்டிக்கொண்டு வந்த புத்தகம், நண்பர்களிடமிருந்து வாங்கி வந்த புத்தகம் இவை எல்லாம் நம்முடையதே. இருந்தாலும் அதில் லைப்ரரி சீல் அல்லது நண்பர்களின் கையெழுத்து இருக்கும். அவற்றின் மேல் உங்கள் பெயர் எழுதின ஒரு துண்டுக் காகிதத்தை கோந்து போட்டு ஒட்டி விட்டால் பிரச்சினை இல்லை. இல்லாவிட்டால் உங்கள் நணபர் எப்பொழுதாவது உங்கள் வீட்டுக்கு வந்து அந்தப் புத்தகங்களைப் பார்த்தால் திருப்பி எடுத்துக்கொண்டு போய்விடுவார்.
இப்படி எவ்வளவோ விஷயங்களுக்கு உபயோகப்படும் கோந்தை என் நண்பர் துச்சமாக எடை போட்டுவிட்டாரே என்று நினைக்கும்போது நெஞ்சு வெடித்துவிடும்போல் இருக்கிறது. கோந்து இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்கக் கூட என்னால் இயலவில்லை.
ஒருவர் வாழ்க்கையில் இன்றியமையாதவை:
பென்சில்
பென்சில் ஷார்ப்னர்
ரப்பர்
குண்டூசி
ஜெம் கிளிப்
பரீட்சை கிளிப்
செல்லோடேப் + டிஸ்பென்சர்
கலர் பென்சில்கள்
துண்டுக் காகித பேட்கள்
டபுள் பன்ச்
சிங்கிள் பன்ஞ்
பேப்பர் கத்தி
சாதா கத்தி
கத்தரிக்கோல்
டாகுமென்ட் பைல்கள்
பல கலர்களில் பால்பாயின்ட் பேனா
பவுன்டன் பேனா
பவுன்டன் பேனா இங்க்
ரப்பர் ஸ்டாம்ப் பேட்
" " " இங்க்
ஊசி, நூல் - பல சைஸ்களில்
ரப்பர் பேண்ட்
காது குடையும் பட்
நாங்கள் நினைப்பதெல்லாம் 'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?
1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF
• தனி படுக்கையில் அல்ல, அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
• புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததில்லை.
• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்nkட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை
• எங்களுக்கு நல்ல கதை சொல்ல அன்பான தாத்தா பாட்டி இருந்தார்கள். கலாச்சாரத்தை கெடுக்கும் மெகா சீரியல்கள் டஹ்ரும் டிவி பெட்டிகள் இல்லை
• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
• சிறு விளக்கு (குண்டு பல்புதான், மண்ணெண்ணெய் விளக்குதான்) வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
• உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம். ஆமாம் பேப்பர் காத்தாடிகள் தீப்பெட்டி ரயில்கள் பாண்டி விளையாட்டு கில்லி தாண்டல் போன்றன ஆனால் இன்றோ அனைத்தும் ப்ரொவிசனல் ஸ்டோர்களிலும் வீடியோ கேம்ஸ்களிலும். எனவே எங்கள் ஜிம்கள் எல்லாம் எங்கள் வீதிகளிலிலேயே இருந்தன (காசு பறிக்காமல்)
• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை .
• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.
• இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.
• முக்கியமாக பெண்களை நம் தாயாக மற்றும் கூட பிறந்தவர்களாக நினைக்கும் நல்ல பழக்கம் இருந்ததால் டெல்லி நியூஸ் போன்றவற்றை படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது
• இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்
குருச்சந்திரன்