சனி, 19 ஜனவரி, 2013

காது குடைதல் எப்படி?


ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி இப்படிக் கேட்டு விட்டார்.

"காது குடைவது எப்படி?" என்பது உங்கள் அடுத்த பதிவு என்பதை

எதிர்பார்க்கலாமா சார்?

அவருடைய ஆசையை நிறைவேற்றுவதை விட வேறென்ன வெட்டி முறிக்கப் போகிறேன். ஆதலினால் இந்தப் பதிவு.

காது குடைதலினால் வரும் இன்பம் தெனாலிராமன் சொல்லிய சுகத்திற்கு சிறிதும் குறைந்ததல்ல. அனுபவித்தவர்களுக்குத்தான் இது தெரியும்.

திரு.சக்திவேல் சொல்லுகிறார்:

எஸ் சக்திவேல் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுத்துச் சென்றுள்ளார்"கால் கழுவுவது எப்படி?": 
காது குடைவது ரொம்ப ஆபத்தானது என்று வைத்தியர்கள் கூறுகிறார்கள். 

இது எல்லாம் நிலாவில பாட்டி வடை சுடுகிற கதை. "ஈஎன்டி" வைத்தியர்கள் தங்களுக்கு வரும்படி போய்விடுமே என்பதற்காக கட்டிவிட்ட கதை. எங்கே, காது குடைந்ததால் காது செவிடாய்விட்டது என்பதற்கு ஒரு உதாரணம் காட்ட முடியுமா? முடியாது. ஏனென்றால் இறைவன் காதைப் படைத்ததே, காது குடைவதற்காகத்தான்.

இந்த டாக்டர்கள் இந்தக் காது குடைதலில் உள்ள சூட்சுமம் புரியாமல் பேசுகிறார்கள். யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போல இருக்கிறது இவர்களின் பேச்சு. அது எப்படி என்று கடைசியில் விளக்குகிறேன்.

தேவலோகத்தில் கூட இந்த சுகம் இல்லையென்று நினைக்கிறேன். ஏனென்றால் எந்தப் புராணத்திலும், எந்தக் கடவுளோ அல்லது தேவர்களோ, காது குடைந்ததாக எழுதப் படவில்லை. அது போலவே, தெனாலிராமன் கூறிய சுகமும் அங்கு இல்லையென்று தெரிகிறது. அப்புறம் எதற்காக மக்கள் தேவலோகத்திற்கு (சொர்க்கத்திற்கு) போக ஆசைப் படுகிறார்கள் என்று புரியவில்லை.

இது நிற்க, சப்ஜெக்ட்டுக்கு வருவோம். காது குடைதல் என்றால் என்ன? அவ்வப்போது காதிலே நமைச்சல் உண்டாகும். இது இறைவன் கொடுக்கும் வரம். அப்போது காதுக்குள் எதையாவது விட்டுக் குடைந்தால் மிகவும் சுகமாக இருக்கும். இந்த சுகத்திற்கு ஈடு இணை கிடையாது. அப்படியே மெய்மறந்து போகும்.

இதை சைன்டிபிக்காக எப்படி குடைவது என்று விளக்குவதே இந்தப் பதிவின் நோக்கம்.

காது குடைவதற்கான உபகரணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. அவரவர்கள் சுண்டு விரல் : இதுதான் அவசரத்திற்கு கிடைக்கக் கூடியது. சுண்டு விரலை காதுக்குள் விட்டு குடையலாம். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், காதுக்குள் அதிக தூரம் இந்த விரல் உள்ளே போகாது. அதனால் காது குடைவதின் சுகம் அரைகுறையாகத்தான் இருக்கும்.

2. அடுத்து அவசரத்திற்கு உபயோகப் படக்கூடியது, கார் அல்லது இரு சக்கர வாகனத்தின் சாவி. இது ஓரளவிற்கு காதினுள் புகும். இதனால் குடையும்போது ஓரளவிற்கு சுகமாயிருக்கும்.

3. நீங்கள் அலுவலகத்தில் இருந்தீர்களானால் உங்களுக்கு உடனடியாக கிடைக்கக் கூடியவை, பென்சில் அல்லது பால்பாய்ன்ட் பேனா. இவைகள் நல்லவையே. என்ன, பென்சிலின் கூர் உடைந்திருந்தால் நல்லது. இல்லையென்றால் உடனடியாக டாக்டரிடம் போக வேண்டியிருக்கும்.

4. துண்டு பேப்பர்: இது ஆபீசிலும் வீட்டிலும் தாராளமாகக் கிடைக்கும். இதை ஒரு பக்கத்தில் இருந்து சுருட்டி, கூப்பு வடிவத்திற்கு கொண்டு வந்து, கூராக இருக்கும் முனையை சிறிது மடக்கி விட்டு, உபயோகிக்கலாம். தினசரி காலண்டர் தாளைக் கிழித்தவுடன் அநேகர் செய்யும் முதல் காரியம் இதுதான். இது எந்த விதமான ஆபத்தும் இல்லாதது.

5. பறவைகளின் இறகுகள்: இவை இயற்கை நமக்குக் கொடுத்த வரம். இதனால் காதைக் குடையும்போது அப்படியே வானத்தில் சஞ்சரிப்பது போல உணர்வீர்கள்.

6. "இயர்பட்ஸ்" (earbuds): இவை ஓரளவிற்கு பாதுகாப்பானவை. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று மெடிகல் ஷாப்புகளில் விற்பது. இது விலை அதிகம். அடுத்தது, வீட்டில் தயார் செய்வது (Home-made). இது ரொம்பவும் செலவில்லாதது. ஊர்க்குச்சியை எடுத்து ஒரு முனையில் கொஞ்சம் பஞ்சை வைத்து திருகினால் "இயர்பட்" தயார்.

ஆனால் ஒரு அக்கிரமம் பாருங்கள், இதையும் டாக்டர்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

இப்படியெல்லாம் காது குடைந்து வரும் சுகத்திற்கு ஏதாவது விலை கொடுக்கவேண்டாமா? இப்படி குடைவதால் காது டிரம்மில் போய் குத்தி, காது செவிடாகிவிடும் என்று டாக்டர்கள் சொல்வதை நம்பாதீர்கள். காது டிரம் இறைவனால் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் வேண்டுமென்றே அதை கெடுக்கவேண்டும் என்றாலும் முடியாது.

பிறகு என்ன நடக்குமென்றால் உள்காதில் எங்காவது காயம் ஏற்படும். அது உடனே உங்களுக்குத் தெரியாது. ஒரு வாரம் பத்து நாள் கழித்து காதில் வலி ஏற்பட்டு சீழ் வடியும். மனிதனுக்கு வரும் வலியில் பல் வலிக்கு அடுத்தபடியாக கொடுமையான வலி இதுதான்.

உடனே "ஈஎன்டி'' டாக்டரிடம் போய்த்தான் ஆகவேண்டும். அவர் பேசாமல் காதைப்பார்த்து வைத்தியம் செய்யவேண்டியதுதானே? பண்ணமாட்டார். காதைப் பார்த்தவுடனே, "காதைக் குடைந்தீர்களா" என்று கேட்பார். இந்தக் கேள்விதான் உலகத்திலேயே மகாக் கொடுமையான கேள்வி. ஆம் என்றும் சொல்ல முடியாது, இல்லையென்றும் சொல்ல முடியாது. எப்படிச்சொன்னாலும் டாக்டர் அர்ச்சனையைக் கேட்டே ஆகவேண்டும்.

வேறு வழியில்லை. எப்படியோ டாக்டரைச் சமாளித்து மருந்து வாங்கிக்கொண்டு வரவேண்டும். மருந்தை நேரம் தவறாமல் காதில் விட்டு, பஞ்சால் காதை மூடிவைக்கவேண்டும். பார்பவர்களுக்கெல்லாம் காதில் என்ன என்று பதில் கூறவேண்டும்.

ஒரு சுகம் வேண்டுமென்றால், ஒரு துக்கத்தை அனுபவித்துத்தானே ஆகவேண்டும். இது உலக நியதிதானே.

இப்படி காது குடைவதினால்  "ஈஎன்டி'' டாக்டர்களுக்கு அதிக வருமானம்தானே தவிர, அவர்களுக்கு எந்த விதத்திலும் நஷ்டம் இல்லையே. பின் ஏன் அவர்கள் காது குடையாதீர்கள் என்று சொல்கிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. ஒரு சமயம் காது குடைவது அவர்களது ஏகபோக உரிமை என்று நினைக்கிறார்களோ, என்னமோ?


23 கருத்துகள்:

  1. நமது கை கால்கள் மற்றும் உடம்பை அடுத்தவர்கள் பிடித்து விடுதல், நமது காதுகளை நாமே ”இயர்பட்ஸ்” மூலம் பட்டும் படாமல் சுத்தம் செய்தல், காலில் வீக்கம் ஏற்பட்டால் (சீதாப் பாட்டியின் அப்புசாமி போல) லேசாக அமுக்கிப் பார்த்தல், நமச்சல் எடுக்கும் இடத்தில் சொறிந்து கொள்ளுதல் – போன்றவற்றில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  2. காது குடைந்து, பின் அதனால் ஏற்படும் தொந்தரவிற்காக கண் மூக்கு தொண்டை வல்லுனர்களிடம் போவதை விட ‘சும்மா இருப்பதே சுகம்’ அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனுசனாப் பொறந்தவன் சும்மா இருக்கமுடியாதுங்க. இது அவன் விதி.

      நீக்கு
  3. நீங்கள் சொன்ன முதல் 3 உபகரணங்கள் தான் எனக்கு பல சமயங்களில் கை/காது கொடுத்துள்ளன..அருமையான பதிவு! நன்றி!!

    -பாலா.

    பதிலளிநீக்கு
  4. கோழி இறகில் கொடைவதில் உள்ள சுகமே தனி.

    பதிலளிநீக்கு
  5. கரெக்ட்... நான் தினமும் காது குடைவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  6. நல்ல பகிர்வு.

    நமக்கு ஊரில் கோழி இறகுதான்... இங்கு பேப்பர்... அது ஒரு சுகம்தான் ஐயா...

    பதிலளிநீக்கு
  7. ஒரு சுகம் வேண்டுமென்றால், ஒரு துக்கத்தை அனுபவித்துத்தானே ஆகவேண்டும்.
    இது உலக நியதிதானே.!!!????

    பதிலளிநீக்கு
  8. என்னுடைய இன்றைய பதிவில் தங்கள் பெயரைத் தங்களின் அனுமதி பெறாமல் குறிப்பிட்டிருக்கிறேன்.

    தவறாகக் கருத மாட்டீர்கள் என நம்புகிறேன்.

    அன்பு கொண்டு பார்வையிடுங்கள்.

    தங்களின் இப்பதிவிற்குப் பாராட்டுகள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பெயரையும் பதிவையும் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம். நீங்கள் நல்ல விஷயத்திற்காகத்தானே உபயோகப் படுத்தியிருக்கிறீர்கள். நியாயமாகப் பார்த்தால் என் பெயரைப் பிரபலப் படுத்தியதற்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். நன்றி.

      நீக்கு
  9. தில்லியில் காது குடைந்து விடுவதையே தொழிலாக செய்பவர்கள் உண்டு! பழைய தில்லியின் பகுதிகளில் இப்போதும் இருக்கிறார்கள் - தலையில் ஒரு சிவப்பு துணியைக் கட்டி சுருட்டி விட்டிருப்பார்கள்..... :)

    பதிலளிநீக்கு
  10. சரி சரி, காது குடைவதில் இவ்வளவு விடயங்கள் இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  11. Sorry to say this, but it was an ENT specialist who punctured the ear drum of my right ear in the name of clearing wax!!

    பதிலளிநீக்கு

  12. எந்த ஒரு கருத்தையும் பதிவாக்கும் உங்கள் திறமைக்கு ஒரு சபாஷ்.!

    பதிலளிநீக்கு
  13. அருமையாக நகைச்சுவையாக எழுதினாலும் காது குடைவது சுகம்தான்! பகிர்வுக்கு நன்றி! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html

    பதிலளிநீக்கு
  14. சோழியை உருட்டி வெல்வது சுகமே,குழலினும்
    யாழினும் இனிய மழலையும் சுகமே, நம்மை
    “வாழிய நீவிர்” வாழ்த்தலும் சுகமே,அதனிலும் சுகமே
    கோழி இறகினால் காதினைக் குடைவது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, ஆர்ஆர்ஆர், எப்படியோ உங்க ஐடியாவில ஒரு பதிவு தேத்தியாச்சு!

      நீக்கு
  15. காது குடைவது சுகம்தான்! ஆனால் கண்டதையும் காதுக்குள்ள விடாதிங்கன்னு டாக்டர்கள் பயமுறுத்துகிறார்களே

    வாகன சாவி,பென்சில்,பேனா காதில் விடுவது ஆபத்தில்லயா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆபத்துதான். நம் வீட்டுக்குள்ளும் வெளியிலும் எத்தனை ஆபத்துகள் இருக்கின்றன. அதையெல்லாம் சமாளித்துக் கொண்டுதானே வாழ்கிறோம். ஏன்? சுகமாக இருப்பதற்காக. அது போல்தான் இதுவும்.

      விளையாட்டை உட்டுடுவோம். விஷயத்திற்கு வருவோம். வேண்டுமென்றே, காது குடையும் சாதனங்களை அதிக ஆழத்திற்கு செலுத்தினால் ஒழிய, காது ஜவ்வு கிழிந்து போகும் அபாயம் இல்லை. அதிக பட்சம் காயங்கள் ஏற்பட்டு, வெகு அபூர்வமாக சீ பிடித்து தொந்தரவு செய்யலாம். அவ்வளவுதான்.

      நீக்கு
  16. ""இதை சைன்டிபிக்காக எப்படி குடைவது என்று விளக்குவதே இந்தப் பதிவின் நோக்கம்” இங்கதான் சார் நீங்க நிக்கிறீங்க"--நட்புடன் செழியன்.

    பதிலளிநீக்கு
  17. மூக்கு சிந்துவது, பல் குடைவது பதிவுகள், காதில் வண்டு, பூச்சி புகுந்தால் எப்படி எடுப்பது போன்ற பதிவுகள் கியூவில் நிற்கின்றன என்பதைக் கவலையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு