திங்கள், 12 செப்டம்பர், 2011

கல்யாண சீர்கள் – பாகம் 2




இனிமேல்தான் கல்யாண சீர்கள்ஆரம்பிக்கப் போகின்றன.ஒவ்வொண்ணாச் சொல்லீட்டுவரனுங்ககவனமாப் பாத்துக்கோங்க.

1.   சிறப்பு எடுத்தல்.
கொங்கு வேளாளர் சமூக அமைப்பின்சிறப்பு என்னவென்றால் ஒரு கிராமத்தின் அங்கத்தினர்கள்அனைவருக்கும் கல்யாணத்திலும் வேறு காரியங்களிலும்ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு இருக்கும்தினசரிவாழ்க்கைக்கு வேண்டிய அனைத்து அத்தியாவசியப்பொருட்களையும் உற்பத்தி செய்யத் தேவையான அனைத்துக்கலைஞர்களும் கிராமத்திலேயே குடியிருந்தார்கள்அந்தத்தொழில் கலைஞர்கள் அனைவரையும் கல்யாணத்தில்இணைத்திருக்கிறார்கள்.
சிறப்பு எடுத்தல் என்பது கல்யாணத்துக்குப் பிறகு அந்தத்தம்பதியருக்கு குடித்தனம் நடத்தத் தேவையான சட்டிபானைகளை வாங்குவதுசிறியதும் பெரியதுமான சட்டிபானைகளை அந்த ஊர் குயவர் கொண்டுவந்து சபையில்வைப்பார்அதற்கும் பூஜை செய்து பிறகு மங்கிலியப்பெண்கள்எடுத்துக் கொண்டுபோய் பொண்ணு ரூமுக்குள்ள வைப்பார்கள்.எல்ல பூஜைகளும் செய்வது போல்அந்த சட்டி பானைகளுக்குமுன்பாக ஒரு சாணிப்பிள்ளையாரைப் பிடித்து வைத்து நீர்விளாவிதூபதீபகற்பூர ஆர்த்தி காட்டுவதுதான் பூஜை.
மாப்பிள்ளை ஊட்லயும் இதே மாதிரி பண்ணுவாங்க.
நான் இப்போ சொல்ற சீர்களெல்லாம் மாப்பிள்ளை ஊட்லயும்பொண்ணு ஊட்லயும் தனித்தனிய பண்றதுங்கஅப்போஎல்லாம் அவங்கவங்க ஊட்லதான் கல்யாணம் நடக்குமுங்கோ.முகூர்த்தம் மட்டும்தான் பொண்ணு ஊட்ல நடக்குமுங்கஎந்தசீர் நடந்தாலும் வண்ணாத்தி தீப்பந்தம் புடிக்கோணுமுங்க.அந்தக்காலத்தில சீரகள் எல்லாம் பொளுதுஉளுந்ததுக்கப்பறம்தான் நடக்குமுங்கஎல்லாரும்விவசாயிங்களாதோட்டங்காட்டில வேலையெல்லாம்முடிச்சுட்டு பொளுதோடதான் ஊட்டுக்கு வருவாங்க.அதுக்கப்புறம்தான் கல்யாணவேலைகளைப் பாப்பாங்க.அப்பெல்லாம் கரண்ட் லைட் ஏதுங்கபந்தத்தோடவெளிச்சத்துலதான் எல்லா சீர்களையும் செய்யோணும்.அதுக்காகத்தான் பந்தம் முடிச்சுருப்பாங்கஅந்த வளக்கத்தைஉடப்படாதுன்னு இப்ப பகல்ல சீர் நடந்தாலும் பந்தம் புடிக்குறதுவளக்கமாயிட்டதுங்க

2.   சீர்தண்ணி கொண்டு வருதல்.
கல்யாணத்தில் நடக்கும் எல்லா சீர்களுக்கும் சீர்க்கார அம்மாஒரு சொம்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வருவாங்கசாமிகும்பிடறப்போ நீர் விளாவுவது என்பது ஒரு முக்கியமானசடங்குகோயில்களில் பூஜை செய்யும்போது அய்யர் ஒருசெம்புக்கரண்டியில் நீர் எடுத்து பூஜை சாமான்களைச் சுற்றிப்போடுவதைப் பாத்திருப்பீங்கஅதே மாதிரிதான் இங்கயும்புள்ளாரைச்சுத்தி தண்ணி சுத்திப்போடுவாங்கஇதுக்கு சுத்தமானதண்ணி தனியாக் கொண்டு வருவாங்க.
ஒரு அஞ்சு மங்கிலியப் பொம்பளைங்க ஆளுக்கு ஒரு கொடம்எடுத்துக்கிட்டு பளைய காலத்துல கெணத்துக்குப் போவாங்க.இப்பக் கல்யாணம் மண்டபத்துல நடக்கறதாலெமண்டபத்துலஒரு பைப்கிட்டப் போயி அந்தக்கொடங்கள்ல தண்ணி புடுச்சுதலைல சும்மாடு கூட்டி அது மேல வச்சு கொண்டு வந்துசபைல வைப்பாங்கஅப்பறம் அந்தக் கொடங்களுக்கும் சாமிகும்பிட்டுஅந்தக்கொடங்களை எடுத்துட்டுப்போயிபொண்ணுரூமில வச்சிருக்கிற பெரிய பானைல ஊத்தி பூடி வச்சுருவாங்க.இந்தப்பானைல இருந்துதான் சீர்க்காரம்மா ஒவ்வொரு சீருக்கும்சொம்பில தண்ணி எடுத்துட்டு வருமுங்க.

3.   முகூர்த்தக்கால் பிடித்தல்.
அந்தக்காலத்துல கல்யாணத் தன்னிக்குத்தான் ஊட்டுக்குமுன்னால பந்தல் போடுவாங்கஎங்கஎப்பவும் பந்தல்போடறதுன்னாஅதுக்கு ஒரு சடங்குதான் முகூர்த்தக்கால்போடறதுவடகிழக்கு மூலைல மொத பந்தக்காலை நல்லநேரம் பார்த்து பூஜை போட்டு நடவேண்டும்அதற்கப்புறம்தான்பந்தல் போடுவாங்கஆனா இன்னிக்கு கூட்டம் பெருகிப்போச்சு.ஊட்ல கல்யாணத்தை வச்சுக்கறதுக்கு எடம் பத்தல.மண்டபங்கள் பெருகிப்போச்சுஆனாலும் சடங்கு என்கிறமுறையில் இந்த முகூர்த்தக்கால் போடுவது என்கிற சீரைஎல்லோரும் செய்து வருகிறார்கள்.
மூணு கிளை இருக்கிற பாச்சாங்கோல்மாவிலை,வாழைக்கன்றுசெம்மண்சுண்ணாம்புகாய்ச்சாத பசும்பால்,ஒரு முழ நீள ஒரு ஜாண் அகல புது மஞ்சத்துணிநவதான்யம் ஆகிய இவைகள் மற்ற பூஜை சாமான்களுடன் தேவை.பாச்சாங்கோல் நாவிதர் கொண்டு வந்து விடுவார்மண்டபத்தின்வடகிழக்கு மூலையில் ஒரு இடத்தில் சாணி போட்டு வளிச்சு(மெழுகிஅங்க ஒரு சாணிப்பிள்ளையார் புடிச்சு வைக்கோணும்.அந்தப் புள்ளையாருக்கு முன்னாடி பூஜை சாமான்கள் எல்லாம்எடுத்து வைக்கோணும்பூஜை சாமான் லிஸ்ட் மறந்திருக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன்எதுக்கும் இன்னொரு தடவைசொல்றனுங்கஎண்ணை ஊத்திதிரி போட்டு ரெண்டுகுத்துவிளக்குஒரு தட்டம்சொம்புல தண்ணீருவிபூதி,சந்தனம்குங்குமம்ஊதுபத்திசாம்பிராணிதூபக்கால்கற்பூரம்,வெத்திலைபாக்குநிறைநாழி (ஒரு படில நெறைய நெல்லுநெரப்பி அதுக்குள்ள நூல் சுத்தின ஒரு கதிருகுத்தியுருக்கோணும்), சின்னதா கொளவிக்கல்லுதேங்காய்,ரெண்டு வாழப்பழம்கொடுவாள் இதெல்லாம் வேணுமுங்க.வண்ணான் பந்தம் புடிக்கோணும்சீர் கொறைமையெல்லாம்சொல்றதுக்கு நாசிவன்இவுங்க ரெண்டு பேரு இல்லாம ஒருசீரும் பண்ண முடியாதுங்க.
முகூர்த்தக்கால் புடிக்கிறப்போமொதல்ல குத்து வெளக்குரெண்டையும் ஏத்தோணுமுங்கஇதை மங்கிலியப்பொம்பளைங்கதான் பண்ணோணுமுங்க.  பாச்சாங்கோலைஎடுத்து தண்ணீர்ல நல்லா கழுவீடணுங்கஅப்புறம் அதுக்குசுண்ணாம்பு பூசணும்அப்புறம் மூணு எடத்துல செம்மண்ணுலமூணு விரல்ல காப்பு கட்டணுங்கஅப்புறம் அதுல மேல் பக்கம்(கிளைகள் இருக்கும் பக்கம்அந்த மஞ்சள் துணியிலநவதான்யத்தை வச்சுக்கட்டி அதையும்ஒரு கொத்துமாவிலையையும் கட்டணுமுங்கஇதை புள்ளாருக்கு முன்னாடிவச்சுடணுமுங்கபங்காளிகள்தாயாதிகள் எல்லாத்தையும்கூப்பிட்டுக்கோணும்புள்ளாருக்கு திண்ணீரு பூசி,சந்தனப்பொட்டு வச்சு குங்குமம் வைக்கோணுங்க.பாச்சாங்கோலுக்கும் திண்ணீரு வச்சுசந்தனப்பொட்டு வச்சு,குங்குமம் வைக்கோணுமுங்ககொளவிக் கல்லுக்கும்,நிறைநாழிக்கும் இதேமாதிரி திண்ணீரு வச்சுசந்தனம்,குங்குமம் வைக்கோணுமுங்க.
அப்பறம் தேங்காயை ஒடைச்சு புள்ளாருக்கு முன்னால வச்சு.பக்கத்துல ரண்டு வாழப்பழம் வைக்கோணுமுங்கரண்டுதேங்காய் மூடிக்கு நடுவில நாலு வெத்தலைவெத்தலைக்குநடுவில நாலு பாக்கு வைக்கோணுமுங்கவாழப்பழத்தைநுனியில கிள்ளி வைக்கோணுமுங்கவெத்தலைல காம்பையும்நுனியையும் கிள்ளீடணுமுங்கஇதையெல்லாம் குனுப்பமாகவனிச்சு செய்யோணுமுங்கஇல்லீன்னாபெரியவங்க “என்னசீரு செய்யறான் பாருன்னு” சொல்லிப்போடுவாங்க.
தட்டத்துல நடுவில ஓரளவுக்கு திண்ணீரு போட்டுஅதுலநாலஞ்சு கற்பூரத்தை வச்சு அதெப் பத்தி வைக்கோணுமுங்க.தட்டு ஓரத்துல கொஞ்சம் கற்பூர வில்லைகளைவச்சுருக்கோணுமுங்ககற்பூரம் எரிஞ்சு தீர்ந்திடும்போலஇருந்தா இன்னும் ரெண்டு வில்லைகளை எடுத்து எரிகிறவில்லைகளோட சேர்த்தீடணுமுங்கஅதாவது பூசை முடிந்துஎல்லோரும் கற்பூரத்தீபத்தை கும்பிட்டு முடிகிற வரையில்கற்பூரம் அணையாமல் எரிஞ்சுட்டு இருக்கோணுமுங்கஅப்புறம்சொம்பில இருந்து வலது கையில கொஞ்சம் தண்ணியஎடுத்துட்டுபுள்ளாருஅதுக்கு முன்னாடி இருக்கற சாமானம்எல்லாத்துக்கும் சேத்தி வலது பக்கமா (அதாவது பிரதக்ஷணமா)மூணு தடவை சுத்திப்போடோணுமுங்கஅப்புறம் சாம்பிராணிய,கொளவிக்கல்லநெறநாழிய எல்லாம் இதேமாதிரி மூணு தடவசுத்தோணுமுங்க.  அப்புறம் கற்பூரத்தட்டத்தை இதே மாதிரிமூணு தடவை சுத்தோணுங்கஅப்பறம் திருப்பியும் வலதுகையில தண்ணிய எடுத்து மூணு தடவை சுத்திப்போடணுமுங்கஅப்பறம் அந்த பாச்சாங்கோலை எடுத்து அதைசாம்பிராணிக்கு மேலயும் கற்பூரத்துக்கு மேலயும் மூணுதடவை சுத்தோணுமுங்கஅப்புறமா எல்லாரும் கற்பூரத்தெதொட்டுக்கும்பிட்டுட்டு திண்ணீரு எடுத்து நெத்தீலவச்சுக்கோணுமுங்க.
அப்புறம் அந்தப் பாச்சாங்கோலை அஞ்சு பேரு ஒண்ணாச்சேர்ந்துபுடிச்சு பக்கத்துல இருக்கிற கம்பமோஜன்னலோ அதுல ஒருவாழைக்கம்பத்தையும் சேர்த்திக் கட்டீடணமுங்கஅஞ்சு பேர்லஆம்பிளைகளும் பொம்பளைகளும் சேர்ந்து இருக்கோணுங்க.எல்லோரும் குடும்பஸ்தரா இருக்கோணுமுங்கஇதைத்தான்முகூர்த்தக்கால்னு சொல்றதுங்கஅப்பறம் இதுக்கும்சாம்பிராணிகற்பூரம் காட்டி சாமி கும்புட்டுவிட்டுபால் ஊத்தணுமுங்கபாலை ஒரு டம்ளரில் எடுத்துக்கொண்டு அதை முகூர்த்தக்காலின் மேல்புரத்தில் அந்த நவதானிய முடிச்சு நனையுமாறு கொஞ்சமாகமூணு முறை ஊற்ற வேண்டும்.பங்காளிகள்தாயாதிகள்மாமன்மச்சான்மாப்பிள்ளை மொறைக்காரர்கள் எல்லோரும் தவறாமல் இதைச் செய்யவேண்டும்பால் ஊற்றிய நவதானியம் முளைப்பது போல தம்பதியரின் வாழ்வும் சிறக்க வேண்டும் என்பது தாத்பரியம்.
இந்த முகூர்த்தக்கால் சீரை மண்டபமாக இருந்தால்முதலில் மாப்பிள்ளை வீட்டாரும் பிறகு பொண் வீட்டாரும் செய்வார்கள்.வீடாக இருந்தால் அவரவர்கள் சௌகரியம்போல் செய்துகொள்வார்கள்.  (தொடரும்….)
பின் குறிப்புபட்டினிச்சீரில் ஒரு குறிப்பு விட்டுப்போயிற்றுஇந்த வழக்கம் ரொம்பகாலத்துக்கு முன்பே நின்று போய்விட்டபடியால் ஞாபகத்திற்கு வரவில்லை.
அதாவது மாப்பிள்ளைக்கு முகவேலை செய்யறதுன்னு ஒரு சடங்குஅதாவதுஅந்தக்காலத்துல பசங்களுக்கு 19 வயசுக்குள்ள கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்கஅந்தவயசுல பையன் மாடு மேய்த்துக்கொண்டுதலை முடியை வெட்டாமலும்முகசவரம்செய்யாமலும்தாடி மீசையுடனும் இருப்பான்பட்டினி சீர் செய்வதற்கு முன்பாகநாவிதன் இவனுக்கு முடி திருத்திமுகசவரம் செய்து பார்ப்பதற்கு மாப்பிள்ளை மாதிரிஆக்கிவிடுவான்முகசவரம் செய்யும்போது முதலில் கொஞ்சம் பால் எடுத்து முகத்தில்தடவி விட்டு பிறகுதான் சவரம் செய்வான்அநேகமாக இவன் முகசவரம் செய்வதுஇதுதான் முதல் தடவையாக இருக்கும்நாவிதனுக்கு இதற்காக தனி சன்மானம்உண்டு

2 கருத்துகள்:

  1. பல வழக்கங்களையும் அறிந்துகொண்டேன்.

    தொடர்ந்து இதுபோன்ற பல இடுகைகளை வெளியிடுங்கள்.

    இதுபோன்ற பதிவுகள் காலத்தின் தேவை.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சார்! மிகவும் வித்தியாசமான கலியாண முறைகள்! ஒவ்வொன்றும் அர்த்தம் உள்ளவை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு