திங்கள், 12 மார்ச், 2012

கல்யாண வீட்டில் நான் செய்த திருட்டு


ஒரு கப் காபியோ அல்லது ஒரு கப் பாயசத்துடன் வந்துவிடலாமே. " மெடிக்கல் ட்ரீட் மென்டில் இருக்கிறேன் கட்டாயபடுத்தாதீர்கள்" என்று சொல்லிவிடுங்கள். 


மேற்படி பின்னூட்டம் நான் கல்யாண விருந்துகளில் நடக்கும் சமையலைப் பற்றி எழுதிய பதிவுக்கு வந்திருந்தது.


கக்கு-மாணிக்கம் சொன்ன யோசனை நல்ல யோசனையாகவும் நடைமுறைக்கு ஒத்து வருவதாகவும் தோன்றியது. இதை உடனே பரிசோதித்துப் பார்க்க ஆவலுற்றேன்.


பழங்காலத்தில் கல்யாண மண்டபங்களின் அமைப்பு எப்படியென்றால் மண்டபத்தின் முகப்பில் வாசல் இருக்கும். அதன் வழியாகத்தான் வுருந்தினர்கள் எல்லோரும் உள்ளே போக முடியும். வெளியே வருவதென்றாலும் அதே வாசல் வழியாகத்தான் வரவேண்டும். ஆகவே கல்யாணக்காரர்களுக்குத் தெரியாமல் கல்யாணத்திலிருந்து வர முடியாது. அப்போது சாப்பிடாமல் வந்தால் மாட்டிக்கொள்ள நேரிடும்.

இப்போது கல்யாண மண்டபங்கள் மிகவும் முன்னேறியுள்ளன. உள்ளே போகும் வழியில் சென்று கல்யாணக்காரர்களிடம் ஆஜர் கொடுத்துவிட்டு உள்ளே போனால் ஜனங்கள் அமரும் ஹால். அங்கு இரண்டொருவர்களைப் பார்த்துப் பேசிவிட்டு உள்ளே போனால் டைனிங்க் ஹால். முன்பெல்லாம் விருந்தினர்களை சாப்பிட வாருங்கள் என்று யாராவது அழைப்பார்கள். இப்போதெல்லாம் அப்படி யாரும் அழைப்பதில்லை. சாப்பிடவேண்டுமென்றால் சாப்பிடலாம். இல்லையென்றால் அப்படியே வெளியில் வந்தால் கார் பார்க்கிங்க் வந்துவிடும். வண்டியை எடுத்துக்கொண்டு அப்படியே எஸ் ஆகிவிடலாம்.

நான் இந்த டெக்னிக்கைக் கடைப்பிடித்து அரை கப் டீ மட்டும் குடித்து விட்டு வந்தேன். மொத்தமாக அரை மணி நேரம்தான் ஆகியது. வீட்டிற்கு வந்து இரண்டு தோசை சாப்பிட்டு விட்டுப் படுத்து விட்டேன். ஆரோக்யமாக இருந்தது.

இந்த யோசனை சொன்ன கக்கு-மாணிக்கத்திற்கு மிக்க நன்றி.


18 கருத்துகள்:

  1. யார் சொன்னது ப்ளாக் எழுதுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று!

    பதிலளிநீக்கு
  2. நல்ல யோசனையையை பதிவாக்கி
    எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  3. ஐடியா அருமை. நெருங்கிய உறவினர், நண்பர்கள் கல்யாணம் என்றால் இப்படித் தப்பிக்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்ப எல்லாம் மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே அழைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். கூட்டம் ஆயரக்கணக்கில் சேருகிறது. நண்பர்களாகட்டும் உறவினர்களாகட்டும் வருகிற விருந்தினர்களை முழுவதுமாக கவனிக்க முடிவதில்லை.

      நீக்கு
  4. நல்ல யோசனைதான்.... இங்கே பெரும்பாலான கல்யாணங்கள் இரவில் நடப்பதால் இன்னும் சுலபமாக வெளியேறமுடியும்.... நானும் முயற்சிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  5. அதெல்லாம் சரிதான், கல்யாணத்துக்கு போனபோது பழசாகவும், திரும்பி வீட்டிற்க்கு வரும் போறது
    புதுசாகவும் விளங்கும் அந்த காலணிகள் ???

    எப்பா சாமிகளா.....எனக்கு அந்த பழக்கமே இல்லை. கல்யாண வீட்டிற்கு சென்றே பல வருடங்கள் ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியெல்லாம் காலை வாரப்படாது. ஐடியா கொடுத்ததே நீங்கதான். அப்புறம் இப்படி போட்டுக்கொடுத்தால் எப்படி?

      நீக்கு
  6. நல்ல ஐடியா தான் சார். தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அருமையான டெக்னிக். ஆனா நாங்கல்லாம் கல்யாண வீட்டுக்கு போறதே அதுக்குத்தானே... ஹி ஹி

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் சொல்வது போல ஒப்பந்த சமையல்காரர்கள் யாரும் சுத்தமாக இருப்பதில்லை. அவர்களுக்கு எந்த விதமான மருத்துவ சோதனைகளும் செய்யப்படுவதில்லை. பெரும்பாலும் அவர்களுக்கு Amoebiasis இருக்கும்.

    விருந்துகளில் அரை வயிறுதான் சாப்பிடவேண்டும். எனக்கு டயபடிஸ் இருந்தாலும், சூடான கோதுமை அல்வா அல்லது கேசரி சாப்பிட்டு விடுவேன். மசாலா, குருமா தவிர்க்க வேண்டும். தயிர் சாதம்(தயிர் மட்டுமே,மோரல்ல, எங்கும் நல்ல மோர் தருவதில்லை)சாப்பிடலாம். வீட்டிற்கு வந்ததும் மறக்காமல் Tablet.Ciprofloxin with Tinidazole அரை மாத்திரை இரண்டு வேளை மூன்று நாட்கள் சாப்பிட்டால் வயிற்றுத் தொல்லை இருக்காது.

    பதிலளிநீக்கு