புதன், 12 நவம்பர், 2014

பதிவுலகில் ஏற்படும் அவலங்கள்.

பதிவுலகில் ஏற்படும் அவலங்கள்.
இன்று ஒரு பதிவரின் புலம்பல் பதிவை வாசித்தேன். அவரின் புலம்பல் என்னவென்றால் அவருடைய ஒரு பதிவை அப்படியே காப்பி எடுத்து இன்னொரு பதிவர் தன் தளத்தில் போட்டிருக்கிறார் என்பதே.
அந்த இரு பதிவுகளையும் இங்கே கொடுத்திருக்கிறேன். அவைகாப்பி ரைட்பெற்றவையல்ல. ஆகவே அவைகளை இங்கு பயன் படுத்தியிருக்கிறேன். பதிவர்கள் பெயர் இங்கு தேவையில்லை என்பதால் அவைகளை விட்டு விட்டேன்.
இப்படி ஒருவர் பதிவை அடுத்தவர் காப்பியடிக்கலாமா, கூடாதா என்பதைப்பற்றி எனக்குத் தெரியவில்லை. பதிவர்கள் தாங்களே ஒரு கருத்துக்கு வரலாம்.


Nov.12, 2011

கடவுளோடு ஒரு உரையாடல்....

                               கடவுளோடு ஒரு உரையாடல்..
                              --------------------------------------------
(
கனவொன்று கண்டேன்.அதில் கடவுளைக் கண்டேன். 
 
அவருடன் உரையாடினேன். விழித்துப் பார்த்தேன். கண்டது 
 
அனைத்தும் தெளிந்தும் தெளியாமலும் உள்ளத்தில் ஓட, 
 
காகிதத்தில் எழுதி வைத்தேன்.உங்களிடம் பகிர்கிறேன். ) 


கடவுள்:-என்னைக் கூப்பிட்டாயா.?

நான் :-    கூப்பிட்டேனா.? இல்லையே...யார் நீங்கள் .?

கடவுள்:-நான் தான் கடவுள். உன் வேண்டுதல்கள் எனக்குக்
                  கேட்டது.உன்னுடன் கொஞ்சம் உரையாடலாமே
                  என்று வந்தேன்.

நான்:-    நான் அவ்வப்போது வேண்டுவது உண்டு. வேண்டும்
                போது மனம் லேசானதுபோல் தோன்றும். இப்போது
                 நான் மும்முரமாய் ( BUSY )இருக்கிறேன்


கடவுள்:-நீ எதில் மும்முரமாய் இருக்கிறாய்.? எறும்புகளும்தான்
                  வேலையில் மும்முரமாய் இருக்கின்றன..

நான்:-    தெரியவில்லை. ஆனால் எனக்கு நேரம் கிடைப்பது
                 இல்லை. வாழ்க்கை எப்போதும் ஒரே ஓட்டமாய்
                 இருக்கிறது

கடவுள்:-உண்மைதான். செயல்பாடுகள் (ACTIVITIES )உன்னை
                 மும்முரமாக்கும். பயன்பாடுகள் (PRODUCTIVITY )பலனை
                 தரும்.செயல்பாடுகள் நேரத்தைக் குடிக்கும். பயன்பாடு
                 அந்தத் தளையிலிருந்து விடுவிக்கும்.

நான்:-    புரிகிறார்போல் இருக்கிறது. இருந்தாலும் பூராவும்
                 விளங்க வில்லை. எப்படியானாலும் நீங்கள் பேசவருவீர்.
                கள் என்று நான் எண்ணவில்லை.

கடவுள்:-உன் நேரத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தீர்வு
                 காணவும்,சில தெளிவுகளைச் சொல்லவும் வந்துள்ளேன்

நான்:-    வாழ்க்கை ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது.?

கடவுள்:-முதலில் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்வதை நிறுத்து.
                  வாழ்க்கையை வாழ். அதை ஆராய்ச்சிசெய்வதே அதை
                  சிக்கலாக்கும்.

நான்:-    ஏன் வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாக இல்லை.?

கடவுள்:-உன்னுடைய இன்று பற்றி, நேற்றின் நாளையாய் இருந்த
                  போதேஆராயத் தொடங்கி விட்டாய்.ஆராய்ந்து கவலைப்
                  படுவதே உன் வாடிக்கையாகிவிட்டது அதுவே நீ மகிழ்ச்சி
                  யாக இல்லாததன் காரணம்.

நான்:-     இவ்வளவு நிச்சயமில்லாத்தன்மை இருக்கும்போது
                  எப்படிக் கவலைப்படாமல் இருக்க முடியும்.?

கடவுள்:-நிச்சயமின்மை தவிர்க்க இயலாதது. கவலை தேவை
                  இல்லாதது; தேடிக்கொள்வது.

நான்:-     நிச்சயமின்மை வலி தருகிறதே.

கடவுள்:-வலி தவிர்க்க முடியாதது; ஆனால் வேதனையாக
                  எண்ணுவது நாமே தேடுவது. ( PAIN IS INEVITABLE. BUT
                  SUFFERING IS OPTIONAL )

நான்:--  வேதனையால் வாடுவது நாம் தேடுவதென்றால் ஏன்
                 எப்போதும் நல்லவர்கள் கஷ்டப் படுகிறார்கள்.?

கடவுள்:-வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது,மின்னாது.
                  தங்கம் நெருப்பில் புடம் போடாமல் புனிதமாகாது.
                  நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள்,ஆனால்
                  வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள்
                 அவர்களை சிறப்பிக்கும். கசப்பிக்காது.

நான்:-    இந்த வெதனைகளும் சோதனைகளும் உதவும் என்று
                 சொல்கிறீர்களா.?

கடவுள்:-அனுபவம் ஒரு ஆசான். அவன் முதலில் தேர்வு வைத்து
                  பின் அதன் மூலம் பாடம் கற்பிக்கிறான்.

நான்:-    இருந்தாலும் நாம் ஏன் இந்த சோதனைகளுக்கு உட்பட
                 வேண்டும். ?இவற்றிலிருந்து விடுபட முடியாதா.?

கடவுள்:-சோதனைகள் என்பது, மனோதிடத்தை அதிகரிக்க 
                 
உதவும் ,விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும் 
                 
பாடங்களே. போராட்டங்களிலும் சகிப்பிலுமே மன
                  வலிமை வரும். சோதனைகள் இல்லாதபோது அல்ல.

நான்:-    உண்மையில், இவ்வளவு வேதனைகளுக்கு உள்ளாகியும்
                 எங்குதான் போகிறோம் என்பதே புரிவதில்லை.

கடவுள்:-புறமே தேடினால் போகுமிடம் தெரியாது. உன் அகத்தில்
                  தேடு. வெளியே தேடினால் கனவாய்த் தெரியும். உள்ளே
                  தேடினால் காட்சிகள் விரியும். கண்களால் காண்பது
                  பொருட்களின் காட்சி. இதயக் கண் காட்டும்
                  பொருண்மையின் மாட்சி.

நான்:-     நேரான வழியில் செல்வதைவிட, வேகமாக வெற்றி
                  கிடைக்காதிருப்பதே நோகிறது. இதற்கு என்ன செய்ய.?

கடவுள்:-வெற்றி என்பது மற்றவர் தரும் குறியீடு. கடக்கப்போகும்
                   பாதையை உணர்ந்து, நீ நிர்ணயிக்கும் திருப்தி எனும்
                  வெற்றியின் அளவுகோல் கடந்துவந்த பாதையினால்
                  ஏற்பட்டதைவிட சிறப்பாக இருக்கும்.நீ திசைமானியை
                  உபயோகி. மற்றவர்கள் கடிகாரத்தை உபயோகிக்கட்டும்.

நான்:-     கஷ்ட காலங்களில் எப்படி திசை நோக்கி நிற்பது.?

கடவுள்:-கடக்கப்போகும் பாதையைவிட கடந்து வந்த பாதையை
                  கணக்கில் கொள்.உனக்குக் கிடைத்த வரங்களை
                  எண்ணில் கொள்.கிடைக்காததையும் தவறவிட்டதையும்
                  நினைத்துத் தளராதே.

நான்:-     மக்களிடம், உன்னை ஆச்சரியப் படுத்துவது எது.?

கடவுள்:-கஷ்டங்களை அனுபவிக்கும்போது ஏன் எனக்கு
                  என்பவர்கள் வளர்ச்சி யடைகையில்எனக்கு ஏன் என்று
                  கேட்பதேயில்லை. உண்மை அவர்கள் பக்கம் இருப்பதை
                  விரும்புவோர் அநேகர். உண்மையின் பக்கம் இருப்பதை
                  விரும்புவோர் சிலரே.

நான்:-   சில நேரங்களில் நான் யார்.? நான் ஏன் இங்கிருக்கிறேன்?
                 என்று கேள்வி எழுகிறது. பதில்தான் கிடைப்பதில்லை.

கடவுள்:- நீ யார் என்று கேள்வி கேட்டு வீணாகாதே. நீ யாராக
                   வேண்டும் என்று தீர்மானி. ஏன் வந்தேன் என்று
                   கேட்காதே. காரணத்தை ஏற்படுத்து. வாழ்க்கை என்பது
                   கண்டுபிடிப்புகளின் ( DISCOVERY ) தொகுப்பல்ல.
                  தோற்றுவிப்பின் செயல்பாடே. (WORK OF CREATION.)

நான்:-      வாழ்வில் ஏற்றமளிக்க ,பலன் கிடைக்க என்ன செய்ய
                   வேண்டும்.?

கடவுள்:-கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்.
                 
நிகழ் காலத்தை ஊக்கத்துடன் அணுகு. வருங்காலத்தை
                  தைரியமாக எதிர்கொள்.

நான்:-     கடைசியாக ஒரு கேள்வி சில நேரங்களில் என் வேண்டு
                 தல்களுக்கு விடை கிடைப்பதில்லை என்று
                 உணர்கிறேன்.

கடவுள்:-விடை கிடைக்காத பிரார்த்தனைகள் என்று சொல்வதை
                  விட, விடை இல்லை என்பதே பதிலாயிருக்கும்.

நான்:-    உங்கள் வரவுக்கும் அறிவுரைக்கும் நன்றி.புதுப்பொலி
                வுடன் ஒவ்வொரு புது நாளையும் எதிர் கொள்வேன்.

கடவுள்-நன்று. பயத்தைக் களை. நம்பிக்கையை தக்கவை.
                  சந்தேகங்களை நம்பாதே. நம்பிக்கையை
                  சந்தேகிக்காதே.
                  -----------------------------------------------------------------------      



Feb 29,2012

கடவுளுடன் ஒரு உரையாடல்

கடவுளுடன் ஒரு உரையாடல்
கடவுள்: ஹலோ! என்னை கூப்பிட்டாயா?
மனிதன்: கூப்பிட்டேனா? உன்னையா? இல்லையே? யார் நீ?
கடவுள்: நான்தான் கடவுள். உன் பிரார்த்தனை காதில் விழுந்தது; பேசிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்.
மனிதன்: நீ சொல்லுவது சரி. நான் தினமும் பிரார்த்தனை செய்கிறேன். அது என் மனதுக்கு பிடித்திருக்கிறது; இப்போது எனக்கு பேச அவகாசமில்லை; வேலையில் மும்முரமாக இருக்கிறேன்.
கடவுள்: எறும்பு கூடத்தான் வேலையில் மும்முரமாக இருக்கிறது.
மனிதன்: எறும்பு ஈயைப் பற்றி எனக்குத் தெரியாது; எனக்கு இப்போது உன்னுடன் பேச அவகாசம் இல்லை; வாழ்க்கை மிகவும் அவசரமானதாகி விட்டது; எப்போதுமே அவசரம் தான்; எப்போதும் நெருக்கடி தான்.
கடவுள்: உண்மைதான். ஏதாவது செய்து கொண்டே இருந்தால் வாழ்க்கை மும்முரம் தான். செயல்பாடு உன்னை மேலும் மேலும் உழைக்கச் செய்கிறது; உழைப்பினால் கிடைக்கும் பலன் உனக்கு நல்ல முடிவுகளைக் கொடுக்கிறது. உழைக்கும்போது நேரத்திற்கு அடிமையாகும் நீ, பலனை அனுபவிக்கும் போது அந்த அடிமைத்தனத்தில் இருந்து  விடுபடுகிறாய்.
மனிதன்: நீ சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனாலும் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று சரிவர புரிவதில்லை. அது இருக்கட்டும்; இணையதள உடனடி தகவல் chat-ல் நீ என்னைக் கூப்பிடுவாய் என்று எதிர்பார்க்கவில்லை.
கடவுள்: என்ன செய்வது? நீ நேரத்துடன் போராடிக்கொண்டு இருப்பதைப் பார்த்து உதவலாம் என்று வந்தேன். சில விஷயங்களை தெளிவுபடுத்த ஆசைப் பட்டேன். இது இணையதளத்தால் செய்யப்பட உலகம் ஆகிவிட்டது. இணையதளத்தை விட்டுப் பிரியாமல் இருக்கும் உன்னை இணையதளம் மூலமாக சந்திக்க வந்தேன்.
மனிதன்: சரி, என் கேள்விகளுக்கு பதில் சொல்லு. ஏன் வாழ்க்கை சிக்கலாக இருக்கிறது?
கடவுள்: முதலில் வாழ்க்கையை அலசி அலசிப் பார்ப்பதை நிறுத்து. வாழ்க்கையை வாழ கற்றுக் கொள். ரொம்பவும் அலசுவதால் தான் வாழ்க்கை சிக்கலாகிறது.
மனிதன்: நாங்கள் ஏன் எப்போதுமே வருத்தத்தில் இருக்கிறோம்? சந்தோஷம் என்பதே இல்லையா?
கடவுள்: நேற்று நீ கவலைப் பட்ட நாளை என்பது தான் இன்று இந்த நாள். இந்த நாளை வாழாமல் நாளையைப் பற்றிக் கவலைப் படுவதே உன் வழக்கமாகிவிட்டது. அதனால் வருத்தமே வாழ்க்கை ஆகிவிட்டது.
மனிதன்: ஆனால் வாழ்க்கை என்பதே நிச்சயமில்லாத போது வருத்தப் படாமல் என்ன செய்வது?
கடவுள்: நிச்சயமின்மை என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. ஆனால் வருத்தப் படுவது நீ தெரிவு செய்வது.
மனிதன்: நிச்சயமின்மையால் வாழ்வில் எத்தனை வலிகள்……
கடவுள்: வலிகள் தவிர்க்கமுடியாதவை; அதனால் ஏற்படும் துன்பம் தவிர்க்கப்பட வேண்டும்.
மனிதன்: துன்பம் தவிர்க்கப் படவேண்டுமானால்  மக்கள் ஏன் துன்ப படுகிறார்கள்?
கடவுள்: வைரத்தை உரசாமல் மின்ன வைக்க முடியாது; தங்கத்தை நெருப்பில் புடம் போடாமல் சுத்தப் படுத்த முடியாது. நல்லவர்கள் வாழ்க்கையில் சோதனைக்கு ஆட்படுவார்கள். ஆனால் துன்ப பட மாட்டார்கள். சோதனைகள் அவர்கள் வாழ்க்கையை  வளமாகும். நலிவடையச் செய்யாது.
மனிதன்: இந்த வருத்தப் பட வைக்கும் அனுபவங்கள் எங்களுக்குத் தேவையா?
கடவுள்: ஆமாம். அனுபவம் ஒரு தேர்ந்த ஆசிரியை. முதலில் பரீட்சை வைப்பாள். பிறகு பாடம் கற்றுத் தருவாள்.
மனிதன்: ஆனால் நாங்கள் ஏன் இப்படிப்பட்ட சோதனைகளுக்கு ஆளாக  வேண்டும். கவலைகளில் இருந்து விடுதலை அடைய முடியாதா?
கடவுள்: வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையும் உனக்கு பயன் தரக் கூடியவை. பாடம் புகட்டக் கூடியவை. அவை உன்னைப் புடம் போட்டு உன்னை எல்லா வகையிலும் மேம்படச் செய்கின்றன. மனவலிமை படைத்தவனாக ஆக்குகின்றன. மன வலிமை போராட்டங்களிலிருந்தும், சகிப்புத் தன்மையிலிருந்தும் வருகிறது. உனக்கு பிரச்சினைகள் இல்லாத போது இவை உனக்குக் கிடைப்பதில்லை.
மனிதன்: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இத்தனை பிரச்சினைகளுக்கு நடுவில் நாங்கள் எங்கே போகிறோம் என்பதே புரியவில்லை.
கடவுள்: நீ உனக்கு வெளியில் பார்த்தால், நீ எங்கே போகிறாய் என்று தெரியாது. உனக்கு உள்ளே பார். வெளியில் பார்ப்பது கனவு காண்பது போல. உள்ளே பார்ப்பது உனக்குள் ஒரு விழிப்பை ஏற்படுத்தும். கண்கள் பார்வையைக் கொடுக்கும். மனம் விழிப்புணர்வை உண்டாக்கும்.
மனிதன்: சில சமயங்களில் சரியான பாதையில் போகிறோமா என்பதை விட, சீக்கிரம் வெற்றி பெறவில்லையே என்பது மிகவும் வலிக்கிறது.
கடவுள்: வெற்றி என்பது பிறர் உன்னைப் பற்றி அறிய உதவும்  ஒரு அளவுகோல். திருப்தி என்பது உன்னால் தீர்மானிக்கப் படுகிறது. நீ போகும் பாதையைத் தெரிந்து கொள்ளுவது உனக்கு அதிகத் திருப்தியைக் கொடுக்கும். நீ திசை காட்டியை வைத்துக் கொண்டு வேலை செய். மற்றவர்கள் கடியாரத்தை வைத்துக் கொண்டு வேலை செய்யட்டும்.
மனிதன்: கடினமான நேரத்திலும் நான் எப்படி உற்சாகம் குறையாமல்  இருப்பது?
கடவுள்: எப்போதும் நீ எத்தனை தூரம் பயணித்து இருக்கிறாய் என்று பார். இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்று யோசிக்காதே. உனக்குக் கிடைத்த நல்லவற்றை எண்ணிப் பார். எதையெல்லாம் இழந்தாய் என்று எண்ணாதே.
மனிதன்: நான் எதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேனோ அதையே சொல்லுகிறாய். மனிதனின் எந்த குணம் உனக்கு வியப்பூட்டுகிறது?
கடவுள்: கஷ்டங்கள் வரும்போது எனக்கு ஏன் என்று சொல்லுபவர்கள் சுகப் படும் போது எனக்கு ஏன் என்று கேட்பதே இல்லை. ஒவ்வொருவரும் தன் பக்கத்தில் உண்மை இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்களே தவிர உண்மையின் பக்கத்தில் அவர்கள் இருக்க ஆசைப் படுவதில்லை.
மனிதன்: வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை எப்படி அடைவது?
கடவுள்: நடந்து போனவைகளைப் பற்றி வருந்தாதே. இன்றைய நாளை தைரியமாக எதிர் கொள்; இன்றைய நாள் நல்ல நாள் என்ற நம்பிக்கை இருக்கட்டும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் இல்லாமல் வரப் போகும் வாழ்க்கைக்கு உன்னை தயார் செய்து கொள்.
மனிதன்: கடைசியாக ஒரு கேள்வி: சிலசமயங்களில் ஏன் பிரார்த்தனைகளுக்குப் பதில் கிடைப்பது இல்லையே, ஏன்?
கடவுள்: பதில் கிடைக்காத பிரார்த்தனை என்று எதுவுமே இல்லை. சில சமயங்களில் பதில் இல்லைஎன்றும் இருக்கலாம்;
மனிதன்: உனக்கு பல கோடி வந்தனங்கள். உன்னுடன் பேசிக் கொண்டே ஒரு புது நாளைத் தொடங்குகிறேன். ஒரு புதிய உற்சாகம் பிறந்திருக்கிறது.
கடவுள்: நல்லது. நம்பிக்கையை வளர்த்துக் கொள். பயத்தை விட்டுவிடு. உன்னுடைய சந்தேகங்களை நம்பாதே. நம்பிக்கைகளை சந்தேகப் படாதே.வாழ்க்கை என்பது புதிர் அல்ல; விடுவிப்பதற்கு. பிரச்சினையும் அல்ல, விடை  கண்டுபிடிக்க. என்னை நம்பு. வாழ்க்கை என்பது மிக அழகானது அதை வாழத் தெரிந்தவர்களுக்கு!
published in oorooo.com



20 கருத்துகள்:

  1. சில மாறுபாடுகள் இருக்கின்றன. என்றாலும் தொடக்கம் ஒன்றாக இருக்கிறது. பல இடங்களில் ஒற்றுமை இருக்கிறது. இதில் இருந்து எடுத்துத்தான் எழுதி இருக்கிறார் என்பது தெரிகிறது. கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் புதிதாகவே எழுதி இருக்கலாம். ஒருவேளை கடவுள் மனிதன் உரையாடல் கான்செப்ட் பிடித்திருந்தால் தான் படித்த பதிவை வெளிப்படையாக குறிப்பிட்டுவிட்டு தன்னுடைய கருத்தை உட்புகுத்தி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. இது தொடர்பாக தேடிப் பார்த்ததில் பல பதிவுகள் கிடைக்கின்றன. 2007 இலேயே ஒருவர் இதே உரையாடலை மாறுபட்ட நடையில் எழுதி இருக்கிறார் . அவர் இதை ஆங்கில மூலத்தில் இருந்து எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஒரு ஆங்கிலம் என்று கூறியுள்ளார் . யார் எழுதியது என்பது தெரியாமல் ஏராளமான கதைகள் ஆங்கிலத்தில் உள்ளன. அவற்றை தமிழ் படுத்தி தங்கள் சொந்தக் கருத்துக்கள் கொஞ்சம் சேர்த்து எழுதுவது வழக்கமாக உள்ளது

    பதிலளிநீக்கு
  3. திருட்டில் மிகவும் கணமானது எண்ணத் திருடல்களே

    பதிவுத் திருட்டு தப்பு தப்பு தப்பு

    பதிலளிநீக்கு
  4. இதுபோன்ற எவ்வளவோ சுவாரஸ்யமான சிறுகதைகள், நீதிக்கதைகள், சம்பாஷணைகள், கற்பனைகள், உரையாடல்கள், நகைச்சுவைகள் போன்றவை முதன்முதலாக யார் எழுதியது என்றேகூடத் தெரியாமல் பரவலாக பலருக்கும் ஆங்கிலம் போன்ற வேற்று மொழிகளில் மின்னஞ்சல் மூலம் வந்து கொண்டே இருக்கின்றன.

    அவ்வாறு வெவ்வேறு காலக்கட்டங்களில் வந்தவற்றை இவரும் அவரும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான வாய்ப்புகளும் இதில் அதிகம் உண்டு என்பது என் தனிப்பட்ட கருத்து.

    ஒருவேளை இதுவும்கூட அதுபோல ஏற்பட்டிருக்கலாமோ என்னவோ !

    பதிலளிநீக்கு
  5. ஒருவனின் குழந்தையை தத்து எடுத்தாலும் பரவாயில்லை... கடந்திக் கொண்டு போகும் களவானிகள் ஐயா இவர்கள்...

    பதிலளிநீக்கு
  6. ஐயா இன்னொருவரின் கருத்தை அல்லது அவரது பதிவையே அப்படியே எடுத்து தன் பதிவில் போட்டு பக்கத்தை நிரப்புவது சிலரின் தற்போதைய பொழுதுபோக்கு. எவ்வளவு சொன்னாலும் இந்த நபர்கள் திருந்த மாட்டார்கள். இவர்களை கண்டுகொள்ளாமல் விடுவதே சிறந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய தனிப்பட்ட கருத்து. நாம் பிறந்தபோது நம் மூளையில் எந்தக் கருத்தும் இருக்கவில்லை. பிற்காலத்தில் சேர்ந்த அனைத்துக் கருத்துகளும் பிறருடையதே. நாம் ஏதோ அதில் நமக்குப் புரிந்த மாதிரி அதை மாற்றியிருக்கலாம். ஆகவே அனைத்தும் வெளியிலிருந்து பெறப்பட்டதே. இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை.

      நீக்கு
  7. ஐயா
    புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் வாசித்து பாருங்கள்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறு வயதிலேயே படித்திருக்கிறேன். இந்த இரண்டு பதிவுகளும் அந்க்கதையை ஒட்டி எழுதப்பட்டவைதான். ஆகவே புதுமைப் பித்தன்தான் இதை ஆட்சேபிக்கவேண்டும்.

      நீக்கு
  8. சுய விளம்பரத்திற்காகவும் பார்வையாளர்கள் அதிகம் பெறவும் இந்த தவறை செய்கிறார்கள் .அப்படியே செய்தாலும் நன்றி என்று பெயருடன் போடுவது நாகரிகம்.

    பதிலளிநீக்கு
  9. ஐயா வணக்கம் . என் புலம்பலைப் பதிவிலிட்டு இன்னும் பலரது கருத்துக்களை வெளியிடச் செய்ததற்கு நன்றி. நான் என் பதிவில்குறிப்பிட்டு இருந்தபடி வாழ்க்கையில் கற்றதையும் கேட்டதையும் கோர்வையாக ஒரு வித்தியாசமான கோணத்தில் கொடுக்க முயன்றிருக்கிறேன். என் எழுத்தை தொடர்ந்து படித்து வருபவர்களுக்குத் தெரியும் இக்கருத்துக்கள் என் பதிவுகளில் அங்கும் இங்கும் விரவிக் கிடக்கும் இன்றானது நேற்றின் திட்டமிடப் படாத நாளை என்பதைப்பலரும் பல இடங்களில் படித்திருக்கலாம் அதேபோல் வலியையும் வேதனையையும் குறிப்பிடும் போது நான் எழுதிய வார்த்தைகள் என் அனுபவத்தின் வெளிப்பாடு. எனக்கு மட்டும் ஏன் என்று குறிப்பிடுபவர்கள் எங்கும் இருக்கிறார்கள் இந்த மாதிரியான அனுபவத் தேடலே இந்தப் பதிவு. உன்னில் தேடு என்பதும் பல இடங்களில் பிரயோகப் படுத்துவது.கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் நான் படித்ததில்லை. ஏதாவது ஒற்றுமைஇருந்தால் அதற்கு நான் குறிப்பிட்ட காரணங்கள் தெளிவு படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன். என் புலம்பலின் காறணம் வெளிப்படுத்திய எண்ணங்களில் அல்ல. பல இடங்களிலும் என் வார்த்தைகளையே பதிவாக்கி இருந்த்தால்தான். சொல்லிக் கேட்ட அனுபவித்து உணர்ந்த எண்ணங்களே நான் எழுதியவை. தனபாலன் கூறியது போல் இதுவும் கடந்து போகும்

    பதிலளிநீக்கு
  10. நீங்களாவது இந்தப் பதிவுகளுக்கு Link கொடுத்திருக்கலாமே..!

    சொந்தச் சரக்கு இல்லாதவர்கள் சில காலம் கழித்து தாங்களாகவே கழன்று விடுவார்கள், விடுங்கள்

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவர்களிடையே இத்தகைய உரிமைப்போராட்டங்களை பார்க்கும்பொழது வானத்தையே சொந்தங்கொண்டாடுபவர்கள் போன்ற பிரமிப்புத்தான் எஞ்சி நிற்கிறது. இந்த வம்பெல்லாம் வேண்டாம் என்றுதான் நான் என் வலைப்பதிவினை ஆரம்பித்தபொழுது கீழ் காண்பதை பதிவுசெய்தேன்.
    , நான் பதிவு செய்யப்போகும் கதைகள் பல உங்களுக்கு தெரிந்ததாகவிருக்கும்,ஏனெனில் இவைகளின் மூலம் ஒன்றுதான்.படைப்பாளிகள்தான்,பலர், நானும் அவர்களில் ஒருவன்,எனக்குப்பிடித்த,உங்களுக்கும் பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையில்,மேற் கூறிய என்றும் சுவை மாறா களஞ்சிய கதைகளை அவ்வப்போது உங்களுக்கு என் நடையில் வழங்கவிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  12. இந்தப் பதிவிற்கு நான் அனுப்பிய பதிலை ஏன் இன்னும் வெளியிடவில்லை? நீங்கள் உங்களுடைய ஆதங்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது நானும் பதில் சொல்லவேண்டும், அல்லாவா? நான் பதில் சொல்லியிருக்கிறேன் என்று எல்லோருக்கும் தெரிய வேண்டும். அதற்காகவே திரு gmb அவர்களுக்குக் கொடுத்த பதிலை இங்கும் கொடுத்தேன்.
    உங்கள் பதிவில் என் பதில் வரவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திருமதி ரஞ்சனி அவர்களுக்கு,

      உங்கள் பதிலை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஏதும் பதில் வரவில்லையே. தயவு செய்து உங்கள் பதிலை உடனே அனுப்பவும். ஒரு தனி பதிவாக விளக்கமாக போட்டுவிடுகிறேன். இரு பதிவுகளும் ஏதோ ஒரு மூலத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்று புரிகிறது.

      உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

      அன்புள்ள,
      பழனி. கந்தசாமி.

      நீக்கு
  13. திரு gmb அவர்களுக்கு அன்றே இந்த பதிலை எழுதினேன். அதையே உங்களுக்கும் பதிலாக இங்கே கொடுத்திருந்தேன். இதோ எனது பதில்.

    அன்புள்ள திரு ஜிஎம்பி அவர்களுக்கு,
    வணக்கம்.

    இன்று காலையிலிருந்தே 'கடவுளுடன் ஒரு உரையாடல்' பதிவினை நிறைய பேர் படித்திருப்பதாக என் வலைப்பதிவின் புள்ளிவிவரம் கூறிக் கொண்டிருந்தது. திடீரென இரண்டு வருடத்திற்கு முன் எழுதிய இந்தப் பதிவு எப்படி முன்னணிக்கு வந்தது என்று வியப்பாக இருந்தது.

    இப்போதுதான் இந்த பதிவைப் பார்த்தேன். நான் உங்கள் பதிவைத் திருடிவிட்டேன் என்று நீங்களும் இன்னும் பலரும் சொல்லியிருப்பது மிகவும் வருத்தத்தைக் கொடுக்கிறது.

    உண்மையில் இந்த பதிவு எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலின் தமிழாக்கம். நான் இதை எழுதி ஒரு மின்னிதழிலும் வெளியாகியிருக்கிறது. இதையும் நான் அந்தப் பதிவின் முடிவிலேயே எழுதியிருக்கிறேன். நிஜத்தில் நீங்கள் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். என்னுடையது மிகவும் சாதாரணமான தமிழாக்கம். அந்த மின்னஞ்சலை வெகு விரைவில் தேடி உங்களுக்கு அனுப்புகிறேன்.

    எனக்கு இந்த விஷயத்தில் என்ன மிகவும் வருத்தம் என்றால் என்னை உங்களுக்கு நன்றாகத் தெரியும். நான் காப்பி அடித்திருப்பதாக உங்களுக்குத் தெரிந்தவுடன் எனக்கு எழுதியிருக்கலாமே. என் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பதிவுகளின் இணைப்புகளை தவறாமல் அனுப்பி வருகிறீர்களே.

    திரு கந்தசாமி ஐயா அவர்களுக்கும் என்னைத் தெரியும். அவராவது எனக்கு எழுதிக் கேட்டிருக்கலாம். நீங்கள் இருவரும் ஏன் இப்படிச் செய்யவில்லை என்று புரியவில்லை.


    உங்களது மொழியாக்கம் என்னுடையதை விட பலமடங்கு சிறப்பாக இருக்கிறது. உங்கள் தமிழ் புலமையை நான் எட்டவே முடியாது.

    நிச்சயமாக நான் உங்கள் பதிவைத் திருடவில்லை. நான் என் சிற்றறிவுக்கு எட்டிய அளவில் சாதாரணமாக எழுதியிருக்கிறேன்.

    இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் எழுதியவர்கள் எல்லோருக்குமே என்னைத் தெரியுமே. ஏன் ஒருவர் கூட நான் என் பாணியில் எழுதியிருக்கிறேன்; நீங்கள் உங்கள் பாணியில் எழுதியிருக்கிறேன் என்று சொல்லவில்லை?

    எல்லோருமே என்னை திருடி என்று நினைத்துவிட்டார்களே. திருட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று யாருமே எழுதவில்லையே.

    திரு வை. கோ சொல்லியிருக்கவில்லை என்றால் எனக்கு நீங்கள் திருடிப் பட்டம் கொடுத்ததே தெரியாமல் போயிருக்கும்.

    நன்றியுடன்,
    ரஞ்சனி

    பதிலளிநீக்கு
  14. DEAR SIR,

    TODAY I HAVE SENT YOU AN ARTICLE BY MAIL, WRITTEN BY MR. V. IRAIYANBU, I.A.S., DUING THE YEAR 2010 ITSELF ON THIS VERY SAME SUBJECT & TOPIC.

    VGK 18.11.2014

    பதிலளிநீக்கு