வியாழன், 8 ஜனவரி, 2015

மூடத்தனமான பதிவுகள்

சமீபத்தில் நான்  "குடும்பப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை" என்பதைப் பற்றி ஒரு பதிவு எழுதியது பதிவுலக நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

பதிவுலகில் சில எழுதாத கோட்பாடுகள் உண்டு. இது அந்தந்தப் பதிவர்கள் தாங்களாகவே கடைப்பிடிக்கவேண்டியவை. நான் கடைப்பிடிக்கும் சில கோட்பாடுகள்.

1. பதிவில் எழுதும் கருத்துகள் அந்தந்தப் பதிவரின் சொந்தக் கருத்தானாலும், இரவல் கருத்தானாலும், அந்தக் கருத்துகளுக்கு அவர் பொறுப்பாளி ஆகிறார். அதற்கு எதிராக யாராவது பின்னூட்டம் போட்டால் அதற்கு பதிலளிக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு அவருக்கு உண்டு.

2. பதிவில் எழுதப்பட்ட அனைத்தும் பொதுச் சொத்தாகிறது. ஏனென்றால் இது ஒரு பொது வெளி. ஒருவர் தனக்குத் தோன்றியதை எல்லாம் எழுதிவிட்டு, இது என் சொந்தக் கருத்துகள். இதைப் பற்றி விமரிசிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்லக்கூடாது.

2. அது மாதிரியே அந்தப் பதிவில் பின்னூட்டம் எழுதுபவர்களும் அவர்கள் கூறும் கருத்துகளுக்குப் பொறுப்பாளி ஆகிறார்கள். 

நான் எழுதிய "குடும்பப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை" என்ற பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம்.

எவ்வளவு மூடத்தனமான குறிப்புகள். வாசல் எங்கே இருக்கிறது , சாணம் தெளிக்க? பொட்டில்லாமல் இருக்கக் கூடாது சரி, அப்படியானால் கணவனை இழந்தோர்? தயவு செய்து அறிவியல் ரீதியான விஷயங்களை தாருங்கள்.
--
இந்தப் பின்னூட்டம் எனக்கு கோபத்தை வரவழைத்தது. (கோபம் வருவது குற்றம் அல்ல என்று நான் நினைக்கிறேன்.) அதனால் அந்தப் பின்னூட்டத்திற்கு நான் கொடுத்த பதில்.

  1. //தயவு செய்து அறிவியல் ரீதியான விஷயங்களை தாருங்கள்.//

    அது தெரியாத மூடனாக இருப்பதால்தானே இப்படிப்பட்ட பதிவுகள் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

    அறிவியல் ரீதியான விஷயங்களைத் தருவதற்குத்தான் உங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்களே?
    நீக்கு
  2. இந்தப் பதிலில் நான் யாரையும் குறை கூறவில்லை. இதைப் பார்த்து விட்டு திரு. தருமி அவர்கள் எழுதிய பின்னூட்டமும் அதற்கு நான் எழுதிய பதிலும்.
  3. மன்னிக்கவும் திரு கந்தசாமி. எனக்கும் மேலே பொன்னியின் செல்வன் கருத்து தான் இப்பதிவைப் படித்ததும் ஏற்பட்டது. அதனால் தான் உ’உள்குத்தோடு’ ஒரு பின்னூட்டம் முதலில் இட்டேன்.
    இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால், பின்னூட்டம் இட்ட பலரும் இப்பதிவில் உள்ளவைகளைப் பொன்வாசகங்களாக ஏற்றுக் கொண்டு விட்டார்களே என்பது தான்!
    உங்களுக்கும் இதைப் பற்றிக் கூறியதும் கோபம் வந்து விட்டது. உங்கள் படிப்பு, அறிவு, வயது வைத்துப் பார்க்கும் போது நீங்கள் எப்படிங்க அறிவியல் தெரியாத ....க இருக்க முடியும்!!??
    நீக்கு
  4. நண்பரே, அறிவியல் என்பதுவும் ஒரு மக்கள் இனத்தின் கலாச்சாரமும் வேறு வேறு என்று நான் கருதுகிறேன். ஒரு இனத்தின் கலாச்சாரத்தை அழியாமல் காக்கவேண்டும் என்பதில் நமக்குள் வேறுபாடுகள் இல்லை என்று நான் நம்புகிறேன். கலாச்சாரம் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் அந்தந்த இனங்களின் பழக்க வழக்கங்கள்தான். அவை அறிவியலுடன் ஒத்துப்போகவேண்டும் என்று எதிர் பார்ப்பதுதான் மூடத்தனம். அந்தப் பழக்க வழக்கங்கள் அழிந்து விட்டால் அந்த இனம் அழிந்து போகும். இதுதான் நான் உலக வரலாற்றிலிருந்து அறிந்து கொண்ட பாடம்.

    நான் அறிவியல் பூர்வமாக கடவுள் என்று ஒன்று இல்லை என்பதை உணர்கிறேன். ஆனாலும் தினமும் குளித்தவுடன் கடவுள் படத்திற்கு முன் நின்று விபூதி பூசிக்கொள்கிறேன். இது இரட்டை வாழ்வு அல்லது ஆஷாடபூதித்தனம் என்று பலர் நினைக்கலாம். ஆனால் வாழ்க்கையை இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்த பிறகு, வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அறிவியல் விளக்கம் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். மனித மூளைக்கு அப்பாலும் ஏதோ ஒன்று இருக்கிறது, அது நம் வாழ்வோடு பிணைந்து இருக்கிறது என்றும் நம்புகிறேன்.

    கணவனை இழந்தவர்கள் தாங்கள் விதவைகள் என்று காட்டிக்கொள்ள விரும்பினால் காட்டிக்கொள்ளலாம். அது அவரவர்கள் விருப்பம்.

    தங்கள் கருத்தோடு ஒத்துப்போகாதவர்களை அறிவு இல்லாதவர்க்ள என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? என் கருத்துக்களை ஒத்துக் கொள்பவர்களுக்கு அறிவு இல்லை என்று அர்த்தமல்ல. அவர்களும் இனக் கலாச்சாரத்தைப் பேணுவதில் ஆர்வமுள்ளவர்கள் என்றுதான் அர்த்தம்.

    "...க" என்பதை மசக்கவுண்டன் என்று பொருள் கொள்ளவா? அல்லது அதற்கு வேறு ஏதாவது பொருளுடன் கிறிப்பிட்டீர்களா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    ஒருவனை இன்னொருவன் அறிவில்லாதவன் என்று கூற அவனுக்கு உரிமை இல்லை. அப்படிக் கூறினால் கூறப்பட்டவனுக்கு கோபம் கொள்ள அதிகாரம் உள்ளது.
    நீக்கு
  5. திருத்தம் "கிறிப்பிட்டீர்களா" இதை "குறிப்பிட்டீர்களா" என்று திருத்தி வாசிக்கவும்.
    நீக்கு
  6. //"...க" என்பதை மசக்கவுண்டன் என்று பொருள் கொள்ளவா? //

    நீங்களே சொன்னீர்களே .. தெரியாத மூடனாக இருப்பதால்தானே .. அதைத் தான் நான் சொன்னேன். ஆனால் நீங்கள் //.."...க" என்பதை மசக்கவுண்டன் ..// என்றீர்களே... அது என்னங்க? ஏதோ சாதிப் பெயர் சொல்லி திட்ற மாதிரி இருக்கே... அப்படி எதுவும் மோசமாவா சொல்லியிருக்கப் போறீங்க..? இருக்காது .. இல்ல?
    நீக்கு
  7. //ஒரு இனத்தின் கலாச்சாரத்தை அழியாமல் காக்கவேண்டும் //

    ஆஹா! இது ரொம்ப நல்லா இருக்கே... பால்ய விதவைக்குத் தலை மழித்து மூலையில் உட்காரவைக்க வேண்டும். ஆம்பள பயலுக அப்படி ஆனா அடுத்ததைக் கட்டிக்கலாம். இதுவும் நம்ப கலாச்சாரம். பொம்பிளை விரதம் இருக்கணும்னா புருஷங்கிட்ட அனுமதி வாங்கணும். ஆம்பள தண்ணியடிக்க அதெல்லாம் தேவையில்லை. இதுவும் நமது கலாச்சாரம்...இப்படியே ‘நம்ப’ கலாச்சாரத்திற்குப்பெரிய பட்டியலே சொல்லலாம். ஆனா நீங்க சொல்றீங்க ...//இந்தப் பழக்க வழக்கங்கள் அழிந்து விட்டால் அந்த இனம் அழிந்து போகும்// அப்டின்றீங்க.... இது சரியான்னு கேட்டா கோபம் வரக்கூடாது; பதில் தான் தரணும்மய்யா.

    நீங்க ஏறக்குறைய காந்தி மாதிரியே பேசுறீங்க. அவர் சொன்னது இந்த மேற்கோள் :”சாதிகளை ஒழித்து, மேற்கத்திய சமுதாயக் கருத்துகளை நாம் மேற்கொண்டால் பிறப்பின் அடிப்படையினால் ஒவ்வொரு சாதியினரும் பரம்பரையாகத் தொடரும் வேலை அமைப்பினை விட்டொழிக்க வேண்டும். ஆனால் இதுவே சாதிகளின் அடிப்படை. பரம்பரையாக வரும் இவ்வழக்கம் அழிக்க முடியாத நிலையான ஒன்றாகும். இதனை மாற்றுவதால் எல்லாமே முரண்பட்டுப் போகும்”.
    நீக்கு

  8. திரு.தருமி ஒரு மூத்த பதிவர். எனக்கு நன்கு அறிமுகமானவர். 
  9. அவர் எழுதிய 
  10. நீங்கள் எப்படிங்க அறிவியல் தெரியாத ....க இருக்க முடியும்!!?? 
  11. என்கிற வாக்கியத்திற்கு எனக்கு இன்னும் பொருள் தெரியவில்லை.

  12. இரண்டாவதாக அவர் செய்யும் வாதத்தில் குறிப்பிட்டவை. நான் எழுதாதவற்றை எல்லாம் சொல்லி என்னை கொம்பு சீவி விடுகிறார்.

  13. உதாரணம்.
  14. 1. பால்ய விதவைக்குத் தலை மழித்து மூலையில் உட்காரவைக்க வேண்டும். ஆம்பள பயலுக அப்படி ஆனா அடுத்ததைக் கட்டிக்கலாம்
  15. 2. ஆம்பள தண்ணியடிக்க அதெல்லாம் தேவையில்லை.
  16. இந்த வார்த்தைகளை நான் என் பதிவில் எங்கும் சொல்லவில்லை. இப்படி சொல்லாத வார்த்தைகளை ஒருவர் வாயில் போட்டு பிடுங்குவதுதான் கொம்பு சீவும் உத்தி.
  17. இந்த கொம்பு சீவும் உத்தி காலம் காலமாக வருவதுதான். அந்த வலையில் பலரும் விழுந்து தங்கள் நடுநிலையை இழந்து வேண்டாத வார்த்தைகளை சொல்லிவிடுவார்கள். கொம்பு சீவுபவர்கள் எதிர்பார்ப்பது இதைத்தான்.
  18. அதன் பிறகு விவாதம் திசை மாறி, முதலில் எதற்காக விவாதம் ஆரம்பிக்கப்பட்டதோ அதை விட்டு வெகு தூரம் போய்விடும்.
  19. முக்கிய குறிப்பு:
  20. இந்த வாதங்களை நான் ஒரு தனிப்பதிவாகப் போடுவதன் காரணம், இந்தப் பதிவுலகில் உள்ள ஒரு குறைபாடுதான். பதிவுகளையும் பின்னூட்டங்களையும் அதை எழுதியவர்கள், எழுதிய பிறகு அழித்து விடமுடியும். நான் அப்படி எழுதவேயில்லை என்று பின்னாளில் சொல்லவும் முடியும். அதனால் இந்த வாதங்களை யாரும் அழிக்காமல் என் நினைவில் வைத்துக் கொள்வதற்காகவும், மற்ற பதிவர்கள் பதுவுலகில் என்னென்ன நடக்கின்றன என்று தெரிந்து கொள்ளவும்தான்.

11 கருத்துகள்:

  1. கலாசாரம்னா எவ்வளவு பழைய காலத்துக்கு உள்ள நடைமுறைகளை தொடர்வீர்கள்? நமக்கு ஒத்துவர்றவரைக்கும்தான் கலாசாரம். தருமி ஐயா தங்களை “மூடனாக” என்று சொல்ல விரும்பாததால்தான் ”க” என்று சொல்லியிருப்பதை தாங்கள்தான் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. "புலவர்களுக்குள் விவாதம் இருக்க வேண்டியதுதான். ஆனால் அது சண்டையாக மாறக்கூடாது.... புலவர்களே சமாதானமாகப் போங்கள்!"

    ஹிஹிஹி... இது திருவிளையாடல் தருமி காட்சியில் இடம்பெறும் வசனம்தான்!

    பதிலளிநீக்கு
  3. கலாச்சார நடைமுறையும் அறிவியல் கருத்துக்களும் பல இடங்களில் ஒத்துப் போனாலும் சில இடங்களில் முரண்படுவதுண்டு. நீங்கள் சொன்னது போல் நாம் இரட்டை வாழ்வு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அறிவியலுக்கு ஒவ்வாதவை காலப்போக்கில் நிச்சயம் மாறும். மாறிக்கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.எனவே உங்கள் கருத்தை நீங்கள். சொல்லுங்கள்.அதோடு ஒத்துப்போகாதவர்கள் தங்கள் கருத்தை சொல்லட்டும். I agree to disagree with you என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்வோம்

    பதிலளிநீக்கு
  4. வர வர உங்கள் மன அலைகள் சாலமன் பாப்பையா பட்டி மன்றம் போல் ஆகிறது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  5. //8. உணவிற்கு இலை போடுமுன் இலைக்கு கீழே பசும்சாணம் அல்லது வெறும் ஜலத்தால் நாலுமூலை சதுரமாக சுத்தம் செய்யவேண்டும்.//

    yuck...buy better floor cleaner instead...

    பதிலளிநீக்கு
  6. அய்யா அவர்களுக்கு வணக்கம். உங்களது இந்த பதிவு சம்பந்தமாக, நான் எனது வலைத் தளத்தில் “மறைந்த பதிவரின் பெயரில் கேள்வியும் - பதிலும் என்ற தலைப்பினில் http://tthamizhelango.blogspot.com/2015/01/blog-post_9.html ஒரு பதிவினை எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  7. கந்தசாமி சார்,

    நீங்க ஒரு பி எச் டி வாங்கியவர். அதை வெளியில் அப்பட்டமாகவும் சொல்லிக் கொண்டு இருப்பவர். அப்படிப்பட்ட ஒருவரிடம் இருந்து இதுபோல் ஒரு பதிவை எதிர்பார்க்க முடியாது என்பது உண்மை.

    தருமி சார் ஒரு நாத்திகர், மேலும் ரொம்பப் படித்தவர். அவர், உங்களையும் அவர் போல் சிந்திப்பவர் என்று நினைத்து இருக்கலாம். (இதில் யாரு சிந்தனை சரி என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை) ஆனால் நீங்க விஞ்ஞானத்தை ஒரு கண்ணிலும், கடவுள், கலாச்சாரம் போன்றவற்றை இன்னொரு கண்ணிலும் பார்ப்பவர் என்பதை உணராமல் இருந்து இருக்கிறார்..

    The following is my response in that "earlier post"!

    -----------------
    ****தருமிபுதன், 7 ஜனவரி, 2015 ’அன்று’ 8:55:00 முற்பகல் IST

    மன்னிக்கவும் திரு கந்தசாமி. எனக்கும் மேலே பொன்னியின் செல்வன் கருத்து தான் இப்பதிவைப் படித்ததும் ஏற்பட்டது. அதனால் தான் உ’உள்குத்தோடு’ ஒரு பின்னூட்டம் முதலில் இட்டேன்.
    இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால், பின்னூட்டம் இட்ட பலரும் இப்பதிவில் உள்ளவைகளைப் பொன்வாசகங்களாக ஏற்றுக் கொண்டு விட்டார்களே என்பது தான்! ****

    :-)))))))))))))))

    -------------------

    கார்த்திக அம்மா ஆனஸ்ட்டா அவரங்க உணர்வுகளை வெளியே சொல்லீட்டாங்க போல! பேசாமல் "சிறப்பான பதிவு"னு வாயளவில் சொல்லீட்டு, தான் சொன்ன கருத்தை மனநாக்கில் பேசி முடித்து இருக்கணும். கந்தசாமி ஐயா வுக்கும் கோபம் வந்து இருக்காது.

    என்னவோ போங்க!

    ---------------------------

    Please dont get mad at me too! It is very hard to understand your separate "scientific" and "cultural" views for anyone like me! It may be my ignorance but I have to tell you my ignorance here so that you can understand lots of "ignorant people" around here. Not just Karthik ammA or, dharumi sir.. There are many more..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கார்த்திக் அம்மாவிற்கான என் பதில்.

      நீங்க்ள சுட்டிக் காட்டியுள்ள கேள்வி ஒரு பெண்மணி கேட்டது என்று தெரிந்திருந்தால் என் பதில் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அதுவும் கமனை இழந்த ஒரு தாய் என்றால் அவர்கள் கேட்கும் கேளவிகளை வேறு ஒரு தளத்தில் இருந்து பார்க்கவேண்டும். இந்த விவரங்கள் எனக்குத் தெரியாததால் தவறான பதில்கள் வெளிப்பட்டு ஒரு வேண்டாத விவாதத்தைத் துவங்கி விட்டது. நிகழ்வுகளுக்காக நான் வருந்துகிறேன். அந்த சகோதரிக்கு என் வருத்தங்களைத் தெரிவிக்கிறேன்.

      நீக்கு
  8. *****அறிவியல் தெரியாத....க ஆக இருக்க முடியும்.***

    Let me try fill the blank.. :)))

    அறிவியல் தெரியாத "முனைவர் கந்தசாமி" ஆக இருக்க முடியும்னு எடுத்துக் கோங்க!

    உங்க சாதி எல்லாம் என்னைமாதிரி ஒரு சிலருக்குத்தான் தெரியும். தருமி சாருக்கெல்லாம அது தெரியாதுனு நெனைக்கிறேன். அதனால நீங்க நினைப்பதை அவர் நினைத்து இருக்கமாட்டார். :)))

    பதிலளிநீக்கு