சனி, 19 மே, 2012

தமிழ்நாட்டில் வரலாறு காணாத களேபரம்



இது
 முற்றிலும் ஒரு கற்பனைப் பதிவுமக்கள் நிஜம் என்று நினைத்து ஏமாற வேண்டாம்.


காலையில் தினசரிகளில் வெளிவந்த செய்தியைப் பார்த்து தமிழ்நாட்டின் முதல் மந்திரி அதிர்ந்து போனார்.




---------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்நாட்டில் வரலாறு காணாத களேபரம்
தெருவெங்கிலும் மக்கள் கூட்டம்
தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலும் மக்கள் தெருக்களில் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டு கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இளவஞ்சி ஒழிக, குலசேகரன் ஒழிக, வாசு ஒழிக, நந்தினி ஒழிக என்ற கோஷங்கள் எழும்பிக்கொண்டு இருந்தன. இவர்களின் கொடும்பாவிகளை சில இடங்களில் எரித்துக்கொண்டு இருந்தார்கள்.
போலீஸ் படையினரினால் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------------------------

முதல் மந்திரி, மந்திரி சபையின் அவசரக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார். அனைத்து அரசு இலாக்காக்களின் செயலாளர்களும் உயர் போலீஸ் அதிகாரிகளும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப் பட்டிருந்தார்கள்.


கூட்டம் ஆரம்பிக்கிறது.


முதல் மந்திரி: சட்டம் ஒழுங்கு மந்திரியேஇது என்ன நாடு முழுவதும் குழப்பம்?
சட்டம்-ஒழுங்கு மந்திரிமுதல் மந்திரி அவர்களுக்கு வணக்கம்இது எதிர்க்கட்சி செய்த சூழ்ச்சிநமது தலைமை போலீஸ் அதிகாரி விசாரித்து வருவதற்கு சென்றுள்ளார்இதோஅவரே வந்து விட்டார்உங்கள் விசாரணையில் நீங்கள் அறிந்து வந்ததை விரிவாக எடுத்துச் சொல்லும்.
தலைமை போலீஸ் அதிகாரி: இந்த விவகாரத்தை எனது துறை அதிகாரிகள் முழுவதுமாக விசாரித்ததில் இது முழுவதும் எதிர்க்ட்சியினர் செய்த சூழ்ச்சியே என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளதுஇதோ முழு அறிக்கை.
------------------------------------------------------------------------------------------------------------------------------

இது பல காலத்திற்கு முன்பே எதிர்க்கட்சியினரால் திட்டமிடப்பட்டு இந்த அரசு ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. மக்களை எவ்வாறு மூளைச்சலவை செய்வது என்பதை நிபுணர்கள் உதவியுடன் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின்படி தினமும் இரவு 8 மணியிலிருந்து 9 மணிவரை, அவர்கள் வசமிருக்கும் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து இரண்டு மெகா சீரியல்கள் ஒளி பரப்பப்படும். இந்த சீரியல்களை எல்லோரும் பார்க்க வேண்டுமென்பதற்காக இலவச டிவிக்கள் எல்லோருக்கும் கொடுத்துள்ளார்கள்.
அந்த சீரியல்களில் கதையே ஒன்றும் இருக்காது. மக்களின் அறிவை மழுங்க வைக்கக் கூடிய காட்சிகள் மட்டுமே இருக்கும். எந்த லாஜிக்கும் இந்த சீரியல்களில் இருக்காது. அதைத் தொடர்ந்து பார்க்கும் மக்கள்சீரியலைட்டிஸ்என்னும் வைரஸ் நோயினால் தாக்கப் படுவார்கள். இந்த நோயினால் தாக்குண்டவர்கள் இவ்வாறுதான் வீதிகளுக்கு வந்து தனக்குத்தானே பேசிக்கொண்டும், துணிகளைக் கிழித்துக் கொண்டும் மன நோய் வந்தவர்கள் போல் நடந்து கொள்வார்கள். இந்த இரண்டு வாரமாக மின்வெட்டு இல்லாத காரணத்தால் அநேகம் பேர் இந்த சிரியல்களைப் பார்த்து இந்த நிலைக்கு வந்து விட்டார்கள்.



----------------------------------------------------------------------------------------------------------------------------


முதல் மந்திரி: சுகாதார அமைச்சர் இந்த நோயைக் கட்டுப் படுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?
சுகாதார அமைச்சர்: இதோசுகாதார டைரக்டர் இது பற்றி விவரமாகக் கூறுவார்.
சுகாதார டைரக்டர்: இந்த வியாதியைப் பற்றிய முழு விவரமும் இப்போதுதான் கிடைத்துள்ளதுஇந்த வைரஸ் இரண்டு வகைப்படும்ஒன்று “செல்வமைடிஸ்”. இரண்டாவது “தங்கமைடிஸ்”. மாலை 8 மணி முதல் 9 மணி வரை ஒரு குறிப்பிட்ட டிவி சேனல்களை பார்ப்பவர்களை மட்டுமே இந்த வைரஸ் தாக்கியுள்ளது. இந்த இரண்டு வைரஸ்களும் ஒன்றாகவோதனித்தனியாகவோ தாக்கலாம்இந்த நோய்க்கான வைத்தியம் எல்லா அரசு மருத்துவ மனைகளிலும் மனோதத்துவப் பிரிவில் போர்க்கால அடிப்டையில் செய்வதற்கான உத்திரவு மதிப்புற்குரிய மந்திரியின் ஒப்புதலுக்காக வைக்கப் பட்டுள்ளது.
இது தவிர அரசு செய்யவேண்டிய இன்னொரு செயலையும் இங்கே பரிந்துரைக்கிறேன்தமிழ்நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை கட்டாய மின்வெட்டை அமுல் படுத்தினால் இந்த நோய் விரைவில் கட்டுக்குள் வந்து விடும்.


முதல் மந்திரி: மின் வெட்டு உடனடியாக அமுலுக்கு வருகிறதுசுகாதார மந்திரி நோய்த்தடுப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக செயல்படுத்த ஆணையிடுகிறேன்.

இத்துடன் கூட்டம் முடிவுற்றது



13 கருத்துகள்:

  1. நல்ல வேளை தப்பித்தோம் - மின் வெட்டு வரட்டும்...

    பதிலளிநீக்கு
  2. அருமையான கற்பனை ஆசிரியரே

    பதிலளிநீக்கு
  3. மக்களைக் காக்கவந்த கற்பனை மின்வெட்டுக்கு பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. //இது முற்றிலும் ஒரு கற்பனைப் பதிவு. மக்கள் நிஜம் என்று நினைத்து ஏமாற வேண்டாம்.


    இது நிஜமாக இருந்தால் மிகுந்த சந்தோசம்

    பதிலளிநீக்கு
  5. இந்த சீரியலிஸம் நோய்க்கு ஏதேனும் மருந்திருக்குமா

    பதிலளிநீக்கு
  6. வாழ்க மின்வெட்டு!
    டிவி ஆஃப் ஆனதினால் தான், நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்!
    டி.வி. இருந்தால், டிவியிலிருந்து கண்கள் மீளவே மீளாது!

    பதிலளிநீக்கு
  7. நன்றாக எளியமையாக எழுதுகிறீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. தமிழ் நாட்டில் தமிழனாப் பொறந்துட்டு இது கூட தெரியலைன்னா கேவலமில்லைங்களா?

      நீக்கு
  8. திருநேல்வேல்லிக்கே அல்வா மாதிரி! கொங்கு நாட்டானிடமே குசும்பா? அப்பா அம்மா ஈரோடு என்றாலும், எனக்கு ஈரோடைப் பற்றி ஒன்றும் தெரியாது! ரயிலில் செல்லும் போது பார்த்திருக்கிறேன். அவ்வளவு தான். நானும் தமிழ்நாட்டில் - சென்னையில் பிறந்தேன். இருந்தாலும் கொங்கு குசும்பு ரத்தத்தில் ஊரினது தானே!

    ஏன் இதை சொல்லுகிறேன் என்றால், "தமிழ் நாட்டில் தமிழனாப் பொறந்துட்டு இது கூட தெரியலைன்னா கேவலமில்லைங்களா?" என்று நீங்கள் சொல்வது "நீயும் தான் தமிழ் நாட்டில் பிறந்துட்டு அசிங்கமா தமழில் எழுதிகிராய்," என்று என்னைப் பார்த்து சொல்வது போல் உள்ளது! குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயையோ, உங்களைப் போய் அப்படியெல்லாம் சொல்லுவனுங்களா? தப்பு, தப்பு, கன்னத்தில போட்டுக்கிறனுங்க. நேரில வந்தீங்கன்னா பெரிய கும்புடாப் போட்டுறனுங்க.

      நீக்கு