சனி, 23 ஜூன், 2012

ஆழ்குழாய் கிணற்றுக்குள் 4 வயது குழந்தை


டில்லிக்கு அருகில் ஒரு கிராமத்தில் நான்கு வயது குழந்தை, வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த ஒரு ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்து, இரண்டு நாட்களாய் வெளியில் எடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நினைத்தால் மனது பதறுகிறது. சோகத்திலும் மகா சோகம். ஒரு குழந்தையை உயிருடன் பலி கொடுப்பதென்பது மகாக் கொடுமை.

இந்த வேதனை கோபமாக உருவெடுக்கிறது. வீட்டிற்குப் பக்கத்தில் இத்தகைய ஆபத்தை வைத்துக்கொண்டு அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

இரண்டாவது அந்த நாலு வயது குழந்தை ஆழ்குழாயில் இரவு 11 மணிக்கு விழுந்தது என்கிறார்கள். அப்போது அந்தக் குழந்தையின் அம்மா என்ன செய்து கொண்டிருந்தாள்? ஒரு 4 வயது குழந்தையை 11 மணிக்குள் தூங்க வைக்க மாட்டார்களா? பெற்றுப்போட்டு விட்டு எக்கேடோ கெட்டுப்போ என்று தண்ணி தெளித்து விட்டுவிட்டார்களா?

இந்தக் கேள்விகளுக்கு யார் பதில் சொல்வார்கள்?

9 கருத்துகள்:

  1. மனித உயிர்களுக்குன்னு இல்லை எல்லா உயிர்களுமே இந்தியாவில் மதிப்பிழந்து போயிருச்சு:(

    பதிலளிநீக்கு
  2. அந்த குழந்தை பரிதாபமாக இறந்து விட்டது! குழந்தை குழாயில் விழுந்தது என்று ஊடகங்களில் வெளி வந்ததும் நிர்வாகத்துக்கு பொங்கி வந்த அக்கறை முதலிலேயே இருந்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம்! இராணுவம், போலிஸ், டாக்டர்ஸ், ஆம்புலன்ஸ் என அமர்க்களப்பட்ட அக்கறைக்கு பதிலாக - குழாய் தோண்டினால் பாதுகாப்பு வளையம் கட்டாயம் அமைக்க வேண்டும் என முன்பே உத்தரவு பிறப்பித்து, அதை நடைமுறை படுத்தி இருந்தால் இழப்பை தவிர்த்திருக்கலாம்...

    பதிலளிநீக்கு
  3. நன்றாகச் சொன்னீரகள் கார்த்திக். எல்லோரையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என்கிற வெறி வருகிறது.

    பதிலளிநீக்கு
  4. இது தொடர்கதையாகப் போய்கொண்டு இருக்கின்றதே :((

    பதிலளிநீக்கு