சனி, 24 செப்டம்பர், 2011

மங்கல வாழ்த்து பாடல் – வசனமும் பாடலும்



கொங்கு வெள்ளாளக்கவுண்டர்களின் கல்யாண முறைகள்.
மங்கல வாழ்த்து பாடல்  வசனமும் பாடலும்
வெள்ளாளக் கவுண்டர்களின் கல்யாணங்களில் முக்கியமானது மங்கலவாழ்த்து. இதைப்ற்றி போன பதிவில் விளக்கமாக எழுதியுள்ளேன்.அதற்கு வந்த பின்னூட்டங்களில் தெய்வசுகந்தி அவர்கள் இந்தப்பாடலை திரு.நா.கணேசன் அவர்கள் தொகுத்து அவருடைய பதிவில்போட்டிருப்பதாக சொல்லியிருந்தார்கள்.
அந்தப் பாடலை கல்யாணங்களில் எப்படிப் பாடுவார்களோ, அதேமாதிரியாக ஒரு குடிப்பையனைப் பாட வைத்து அதை சி.டி. யாககோவையில் வெளியிட்டுள்ளார்கள். இந்த பாட்டானது வட்டத்துக்கு வட்டம் சிற்சில மாறுதல்களுடன் பாடப்படுகிறது. ஆதலால் திரு.கணேசன் அவர்களின் தொகுப்புக்கும் பாட்டுக்கும் வேறுபாடுகள் இருக்கலாம். நான் அதை இன்னும் ஒப்பு நோக்கவில்லை.
இரண்டாவது, அந்தப் பாடல் 19 ½ நிமிடம் பாடப்படுகிறது. அவ்வளவுநீளப் பாட்டை யூட்யூப்பில் ஏற்றமுடியாது என்பதால் அதை இரண்டுபாகமாக ஏற்றியுள்ளேன். விருப்பமுள்ளவர்கள் அதைத் தரவிறக்கிஒன்றாக இணைத்துக்கொள்ளலாம்.
அடுத்ததாக கல்யாணப்படங்கள் போதிய அளவில் கிடைக்காததால் ஒரே  படத்தைப் போட்டு இருக்கிறேன். படிப்பவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.



இத்துடன் கொங்கு வேளாளர்களின் பழக்கங்கள் பற்றிய தொடர் முடிகிறது. இத்தொடரில் நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப வார்த்தைப் பிரயோகங்கள் இருந்தன. அவை தற்கால சமுதாயக் கோட்பாடுகளுக்கு ஏற்புடையதாக இல்லாமலிருக்கலாம். ஆனால் அவை நடைமுறையில் இருப்பவை. அவைகளை மாற்றினால் இந்தத் தொடர் செயற்கையாக இருக்கும் என்று நான் கருதியதால் அவைகளை அப்படியே பிரசுரித்தேன்.

தவிர இவை மீள் பதிவுகள் ஆனதால் அவைகளை நான் திருத்த விரும்பவில்லை. எந்தக் கருத்துக்கும் மாற்றுக்கருத்துகள் இருந்தே தீரும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று நம்புகிறவன் நான். ஆகவே எப்படிப்பட்ட மாற்றுக் கருத்துகளுடன் பின்னூட்டங்கள் வந்தாலும் அவைகளை பிரசுரிக்கவே விரும்புகிறேன் (அவை ஆபாசமாக இருந்தால் தவிர).










11 கருத்துகள்:

  1. அருமையான தகவல் ஐயா! வீடியோவும் சேர்த்தது சிறப்பு!

    பதிலளிநீக்கு
  2. நல்லதோர் பகிர்வு ஐயா.
    எம்மைப் போன்றோருக்கு இப் பதிவு புதிய தகவலையும். நான் இதுவரை அறிந்திராத கல்யாண வாழ்த்துப் பாடலையும் சொல்லி நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  3. இதிலுள்ள வீடியோ லிங்க் வேலை செய்யலையே ,தவிர போஸ்ட் பேஜ் சாம்பல் நிறத்தில் இருக்கு :-) ஒரு வேளை எனக்கு மட்டும்தான் இப்படி தெரியுதா :-)

    பதிலளிநீக்கு
  4. //ஜெய்லானி said...
    இதிலுள்ள வீடியோ லிங்க் வேலை செய்யலையே ,தவிர போஸ்ட் பேஜ் சாம்பல் நிறத்தில் இருக்கு :-) ஒரு வேளை எனக்கு மட்டும்தான் இப்படி தெரியுதா :-)//

    யாரோ சூன்யம் வச்சுட்டாங்க ஜெய்லானி, கேரள மந்திரவாதியைக் கூப்பிட்டு வந்து அதை நீக்கினேன். இப்ப சரியா இருக்கா பாருங்க.

    பதிலளிநீக்கு
  5. இன்று மாலை கண் டாக்டரிடம் போகலாமுன்னு இருந்தேன் .தப்பிச்சுது ஊர் பணம் 1000 ரூபாய் ஹி..ஹி...:-)

    இப்போது சரியா தெரிகிறது .சரி செய்ததுக்கு நன்றி :-)

    பதிலளிநீக்கு
  6. வாசகர்களுக்கு,
    இந்த புது பிளாக்கர் முகப்புப் பக்கம் இன்னும் முழுமை பெறவில்லை என்று நினைக்கிறேன். சில தொந்திரவுகள் வருகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  7. //ஜெய்லானி said...
    இன்று மாலை கண் டாக்டரிடம் போகலாமுன்னு இருந்தேன் .தப்பிச்சுது ஊர் பணம் 1000 ரூபாய் ஹி..ஹி...:-)

    இப்போது சரியா தெரிகிறது .சரி செய்ததுக்கு நன்றி :-)//

    பாருங்க,ஜெய்லானி, பட்ட காலிலேயே படும்கிறது சரியாகத்தான் இருக்கிறது. இப்பத்தான் ஒரு பிளாக்குக்கு இறுதிக் கடன்கள் செய்து முடித்தேன். இப்ப இந்த பிளாக் செத்துப் போன பிளாக்குக்கு அனுதாபம் தெரிவிக்கிறதுக்காக ஹர்த்தால் பண்ணுது. இதுகளே இப்படிப் பண்ணுனா, மனுசங்கள எப்படி சமாளிக்கறதுன்னு தெரியல!!

    பதிலளிநீக்கு
  8. அருமையான பாடல்.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. பதிவு முழுக்க மழைத் துஸறல் பட்ட மண்வாசனை போல் கமழ்கிறதே... நன்றீங்க..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

    பதிலளிநீக்கு
  10. நிறைய புதிய விஷ்யங்கள் அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அட இன்னா பாஸ் நீங்க?
    நம்ம சைட்டுக்கு வாங்க!
    கருத்து சொல்லுங்க!!
    நல்லா பழகுவோம்!!!

    பதிலளிநீக்கு