வெள்ளி, 21 செப்டம்பர், 2012

பூனையின் தன்மானம்


வீட்டு வளர்ப்புப் பிராணிகளான நாய், பூனை ஆகியவற்றிற்கு பகுத்தறிவோ, சிந்திக்கும் திறனோ இல்லையென்றுதான் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால் பல சமயங்களில் அவைகள் செய்யும் காரியங்களைக் கண்டால் நம் இந்தக் கருத்து சரியானதல்ல என்று புரியும்.

ஆல்ப்ஸ் மலையில் பனிப்புயலில் சிக்கிய பலரை அங்குள்ள பனி நாய்கள் கண்டுபிடித்து காப்பாற்றினதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். வீட்டில் எஜமானர் இல்லாதபோது, அவர்களின் குழந்தைகளை பல விபத்துகளிலிருந்து காப்பாற்றிய நாய்களைப் பற்றியும், பல கதைகளை நாம் கேட்டிருக்கிறோம்.

எங்கள் வீட்டில் நான் கண்ட ஒரு காட்சியை இங்கு கூறுகிறேன், கேளுங்கள்.

வீடுகளில் பூனைகள், அவைகளை யாரும் தனிப்பட வளர்க்காவிட்டாலும், எங்கிருந்தோ வந்து சுற்றிக்கொண்டு இருக்கும். அப்படி ஒரு பூனை எங்கள் வீட்டு வளாகத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும். சமீபத்தில் அது குட்டிகளை ஈன்றது. அதற்கடுத்த நாள் எங்கள் வீட்டு சமையலறையின் வாசலில் என் மனைவி நின்று கொண்டிருக்கும்போது வந்து, மனைவியின் முகத்தைப் பார்த்து, மியா, மியாவென்று கத்தியது. அதற்குப் பசி போலும். ஏதாவது உணவு கிடைக்காதாவென்று அப்படிக் கத்தியிருக்கிறது. என் மனவி வழக்கம்போல் அதை விரட்டி விட்டாள். அது போய்விட்டது.

நான் என் ரூமிலிருந்து பூனையின் சத்தத்தைக் கேட்டு, அந்தப் பூனைக்கு ஏதாவது போடுங்களேன் என்று சொன்னேன்.  அதற்குள் அந்தப் பூனை போய்விட்டது.

அடுத்த நாள் அந்தப் பூனை அந்தப் பக்கமாக வந்த போது மனைவி ஒரு தட்டில் பால் சாதம் வைத்து அதைக் கூப்பிட்டிருக்கிறாள். அந்தப் பூனை மனைவியைச் சட்டை செய்யாமல் போய்விட்டது. இதைக் கேட்ட நான் அந்தப் பூனையின் தன்மானத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

முதல்நாள் அதற்கு ஒன்றும் கொடுக்காமல் விரட்டியடித்த சம்பவம் என் மனதை விட்டு நீங்காமல் உறுத்துகிறது.

13 கருத்துகள்:

  1. விலங்குகளின் செயைகள் சில சமயம் ஆச்சர்யமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. It is nice to see posts like this!

    Animals display emotion.
    video one
    http://www.youtube.com/watch?v=B8ISzf2pryI

    Animals help other animals!
    video two
    http://www.youtube.com/watch?v=g7WjrvG1GMk&feature=plcp

    பதிலளிநீக்கு
  3. விலங்குகளுக்கு இருக்கும் தன்மானம், ஆறறிவு கொண்ட மனிதர்களுக்கு இல்லையே என்பது வருத்தத்திற்குரியது.

    பதிலளிநீக்கு

  4. பொதுவாக விலங்குகள் பசி இல்லாதபோது உணவு தேடுவதில்லை, உண்பதில்லை.

    பதிலளிநீக்கு
  5. பூனைக்கிருக்கும் ரோஷம்கூட மனிதர்களுக்கு இருப்பதில்லை :(

    பதிலளிநீக்கு
  6. ஐயா,
    ஒருவேளை அது ஏற்கனவே எதாவது சாப்பிட்டிருக்கும். விலங்குகள் தேவைக்கு உண்பவை. மனிதனைப் போல் கிடைப்பதை எல்லாம் அரைத்துக் கொண்டிருப்பதில்லை.:))

    // என் மனவி வழக்கம்போல் அதை விரட்டி விட்டாள்.//

    :))

    பதிலளிநீக்கு


  7. ///என் மனவி வழக்கம்போல் அதை விரட்டி விட்டாள்.///

    எல்லா மனைவிகளும் அப்படித்தான் போல!


    ///அந்தப் பூனை மனைவியைச் சட்டை செய்யாமல் போய்விட்டது. இதைக் கேட்ட நான் அந்தப் பூனையின் தன்மானத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.///

    டோட்டலா என்ன சொல்ல வருகிறீர்கள்? கணவர்களுக்கு பூனை மாதிரி தன்மானம் இல்லை என்றா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமாச்சாரங்கள் எல்லாம் இலைமறைவு காய்மறைவாகத்தான் இருக்கணும். இப்படிப் போட்டு நடுச்சந்தியில ஒடைக்கலாமா?

      நீக்கு
  8. புதிதாக உள்ளது தகவல் மிக்க நன்றி.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு