செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

தமிழ்மணம் தரவரிசையில் என்னுடைய வலைப்பதிவு



இன்று (21-8-2012 காலை 8.00 மணிக்கு) என்னுடைய வலைத்தளத்தின் தமிழ்மணத் தரவரிசை 20 வது ரேங்கில் இருக்கிறது. இது ஒரு நல்ல ரேங்க் என்று நான் நம்புகிறேன்.

Tamil Blogs Traffic Ranking

தமிழ் மணத்தின் ந்த அங்கீகாரத்திற்குப் பொறுப்பாளர்கள் என்னுடைய பதிவுகளைப் படிக்கும் நீங்கள்தான். நீங்கள் படிக்கும் தகுதிக்கு என்னுடைய பதிவுகள் இருக்கிறதென்பது எனக்கு ஒரு மனத்திருப்தியைத் தருகின்றது. நான் எழுதுவது ஒரு வீண்வேலை அல்ல என்பதுவும் எனக்கு தெளிவாகிறது.

இந்தப் பெருமையை எனக்களித்த எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

16 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் .தர வரிசையில் இன்னும் முன்னேறுவீர்கள் அய்யா!

    பதிலளிநீக்கு
  2. தமிழ் மணம் தமிழ் மணம் அப்படின்னு சொல்றாங்களே...அப்படின்னா என்ன..? உங்களுக்கு நம்பர் கொடுத்துட்டாங்களா..? வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரவர எனக்கு தலைல இருக்கற களிமண் சரியா வேலை செய்ய மாட்டேங்கறது. யார் நெஜமாக் கேக்கறாங்க, யார் வெளையாட்டுக்கு கேக்கறாங்கன்னு புரியமாட்டேங்குது.

      இப்ப நீங்க நெஜமாத்தான் கேக்கறீங்களா?

      நீக்கு
  3. வாழ்த்துக்கள்! விரைவில் முதல் இடத்தை அடையவும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, நடனசாபாபதி. முதலிடம் அடைவது சாத்தியமாகலாம். ஆனால் அடைந்த பிறகு அதைத் தக்க வைத்துக்கொள்ள பெரும் பாடு படவேண்டும். அப்படி உழைக்க என்னால் முடியாது. இந்த ரேங்க்கே எவ்வளவு நாள் இருக்கும் என்று தெரியாது. மேலும் இந்த ரேங்க் வந்ததற்குக் காரணம் நன்றாக எழுதிய பலர் பதிவுலகத்தை விட்டு விலகியதுதான் காரணம் என்று கருதுகின்றேன்.

      நீக்கு
  4. வாழ்த்துக்கள் ஐயா!

    இன்று என் தளத்தில்
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
    http://thalirssb.blogspot.in/2012/08/5.html

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள் . தகுதி உடைய கட்டுரைகளை தாங்கள் தரும்போது தங்களை முதல் இடத்தில் பார்ப்பதும் விரைவில்

    பதிலளிநீக்கு