செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

இயற்கை விவசாய ஆர்வலர்களுக்கு ஒரு நற்செய்தி



நேற்றைய தினத்தந்தியில் வந்த செய்தி. இந்தியாவில் இயற்கை விளை பொருட்கள் விற்பனை ரூ. 1000 கோடியாக உயர்வு. மேலும் விபரங்கள்.

தனியார் துறையைச் சேர்ந்த “யெஸ் பேங்க்” அண்மையில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. இவ்வங்கியின் “இந்திய இயற்கை உணவுப் பொருள்கள் சந்தை” என்ற ஆய்வறிக்கையில் நம் நாட்டில் இயற்கையான முறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மற்றும் தயாரிப்புகள் பெருகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் நாட்டில் இச்சந்தை 22 சதம் சராசரி வளர்ச்சி கண்டு வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இது ஒரு நல்ல அறிகுறி. மக்கள் மத்தியில் இயற்கை விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்பதற்கு இந்த செய்தி நல்ல ஆதாரம். என்னென்ன பயிர்களில் இந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதென்றால், தேயிலை, பாசுமதி அரிசி, பருப்பு, பருத்தி, நறுமணப்பொருள்கள், எண்ணை வித்துக்கள் ஆகிய பயிர்களில் ஏற்றுமதி ஆகும் பொருள்கள் இந்த விழிப்புணர்வின் கீழ் வருகின்றன.

ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் நல்ல விலை கிடைக்கும் என்பது தெரியும். அது மட்டுமல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்கள் என்றால் நிச்சயம் கூடுதல் விலை கிடைக்கும். இந்த ஊக்கத்தினால்தான் இந்தப் பொருள்களின் உற்பத்தி அதிகரித்து இருக்கிறது.

எப்படியோ, விவசாயிகளுக்குப் பயன் கிடைத்தால் மகிழ்ச்சியே. இந்தியாவில் வசிப்பவர்களுக்கு நேரடியாக இந்த விற்பனை அதிகரிப்பால் பயன் ஏதும் இல்லை. நாம் வழக்கம்போல் செயற்கை விவசாயத்தில் விளைந்த நச்சு கலந்த உணவைச் சாப்பிடுவோம்.

4 கருத்துகள்:

  1. //நாம் வழக்கம்போல் செயற்கை விவசாயத்தில் விளைந்த நச்சு கலந்த உணவைச் சாப்பிடுவோம்//

    அதானே....!

    பதிலளிநீக்கு
  2. படிக்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  3. எப்படியோ, விவசாயிகளுக்குப் பயன் கிடைத்தால் மகிழ்ச்சியே.

    பதிலளிநீக்கு